தென்காசி மாவட்டத்தில் குழந்தைகளின் கல்வி அறிவை வளர்க்கும் வகையில் தனது சொந்த செலவில் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு 100க்கும் மேற்பட்ட மாணவர்களை அழைத்துச் சென்ற தென்காசி நகர்மன்ற தலைவருக்கு மாணவ, மாணவிகள் பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தனர். மதுரையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தென்காசி 10வது வார்டு பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி அறிவை வளர்க்கும் வகையில் குழந்தைகளை மதுரை நூற்றாண்டு நூலகத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் தென்காசி நகர் மன்ற தலைவர் நகர செயலாளர் சாதிர் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து 100 மாணவ மாணவிகள் தென்காசியில் இருந்து மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு தங்கள் கல்வி பயணத்தை மேற்கொண்டனர்.
கல்வி பயணத்தை தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசுகையில், முன்னதாக உலகமே வியக்கும் வகையில் தமிழக அரசால் மதுரையில் பிரம்மாண்ட நூலகம் திறக்கப்பட்டுள்ளது. எனவே மாணவ மாணவிகள் இந்த கல்வி பயணத்தின் மூலம் தங்களுக்கான அறிவு பாதையை தேடி செல்லுங்கள் என நகர் மன்ற தலைவர் மாணவ மாணவிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். தனது சொந்த செலவில் கல்வி பயணத்தை ஏற்பாடு செய்த நகர் மன்ற தலைவருக்கு மாணவ மாணவிகள் பூங்கொத்து கொடுத்து தங்களது நன்றியை தெரிவித்தனர். இந்நிகழ்வில் நகர பொருளாளர் சேக்பரீத், துணை செயலாளர் பால்ராஜ், பால் துரை, சுலைமான், ஜபருல்லா, சண்முகநாதன், முகைதீன் பிச்சை, ரிசவு மைதீன்,மைதீன், சன் ராஜா, சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.