51
இராமநாதபுரம், ஆக.7- இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் சின்னாண்டிவலசை ஊராட்சி தோரையன் வலசை, செட்டி தோட்டம் பகுதியில் 80 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 2009 ஆம் ஆண்டு வரை கிராம மக்கள் பயன்படுத்திய பொது பாதை ஒருவருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது பாதைக்கு ஒதுக்கிய
அரை சென்ட் நிலத்தை தனி நபர் ஒருவர் சுவர் எழுப்பி ஆக்கிரமித்துள்ளார். இதனால், இறந்தோர் உடலை எடுத்துச் செல்லவும், திருவிழா காலங்களில் மக்கள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர். இது சம்பந்தமாக கலெக்டர், தாசில்தார் ஆகியோரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை இல்லை. பொதுப்பாதையை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.
You must be logged in to post a comment.