அரக்கோணம் பாராளுமன்ற திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் ஆதரவு. கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆர்.காந்தி இல்லத்தில் வேட்பாளர் ஜெகத்ரட்சகனை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற மாநில துணைச் செயலாளர் ஜி.எம். கலிம் வேலூர் மாவட்ட செயலாளர் டீட்டா சரவணன், தலைவர் என்எஸ் கேபத்ரி பொருளாளர் சசிக்குமார் மற்றும் மன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
Category:
செய்திகள்
திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய தலைமை காவலர் சந்திரசேகர் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி இயற்கை எய்தினார். அவருடைய குடும்பத்தாருக்கு நகர் மேற்கு காவல் நிலையம் சார்பாக ரூபாய் 80 ஆயிரத்தை ஆய்வாளர் குமரேசன், சார்பு ஆய்வாளர் தாமரைக்கண்ணன், சிறப்பு சார்பு ஆய்வாளர் மணி முருகேசன் மற்றும் காவலர்கள் முன்னிலையில் சந்திரசேகரின் மனைவியரிடம் கொடுத்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அமமுகவில் இருந்து வி.பி.கலைராஜன் திடீர் நீக்கம் – டிடிவி தினகரன் அறிவிப்பு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து வி.பி.கலைராஜனை நீக்கி டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அதிமுகவின் சென்னையின் மாவட்டச் செயலாளராகவும் சட்டப்பேரவை உறுப்பினராகவும் செல்வாக்காக வலம் வந்தவர் வி.பி. கலைராஜன்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் வி.பி.கலைராஜன் டிடிவி தினகரன் அணியில் இணைந்தார். இந்நிலையில் சமீப காலமாக கட்சியின் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். கலைராஜனின் நடவடிக்கைகள் கட்சிக்கு விரோதமாக இருந்ததாக கட்சித்தலைமை கருதியதால் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: “கட்சியின் கொள்கைக் குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் வி.பி.கலைராஜன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.
கட்சி உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” இவ்வாறு டிடிவி அறிவித்துள்ளார்.
வி.பி.கலைராஜனுக்கு பதில் வி.சுகுமார் பாபு தென் சென்னை வடக்கு மாவட்டச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பு வருமாறு:
“தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில், வி. சுகுமார் பாபு இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அவர் இதுவரை வகித்துவந்த அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
புதியதாக நியமிக்கப்பட்டுள்ள தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளருக்கு கட்சி உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” இவ்வாறு டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். வி.பி.கலைராஜன் சமீப காலமாக திமுக பக்கம் நெருக்கம் காட்டி வருவதாகவும், ஸ்டாலினை சந்திக்க உள்ளதாகவும் எழுந்த தகவலின்பேரில் அவர் நீக்கப்பட்டிருக்கலாம் என அமமுக வட்டார தகவல் தெரிவிக்கிறது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
20.03.2019 ம் தேதி E2-மதிச்சியம் (ச&ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.கருணாநிதி என்பவர் ரோந்து பணியில் இருந்தபோது அவருக்கு கிடைத்த இரகசிய தகவலை பெற்று மதுரை டவுன் வைகை வடகரை அருகில் இரண்டு நபர்கள் கஞ்சா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடம் விசாரணை செய்த போது மதுரை மாநகர் ஆழ்வார்புரத்தை சேர்ந்த மூன்று நபர்களான முருகன் என்பவரது மகன் குமார் 23/19, சாகுல் ஹமீது மகன் மைதீன்கனி 21/19, மற்றும் சுப்பையா சேர்வை என்பவரது மகன் அஜித்குமார் என்ற கூல் அஜித் 23/19, என விசாரணையில் தெரிய வந்தது. எனவே அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய TN 01 AC 7816 – பல்சர் இருசக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டது.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ., கட்சி சார்பில் அமமுக., கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
எஸ்டிபிஐ., கட்சி சார்பில் இராமநாதபுரத்தில் நடந்த அறிமுக விழாவிற்கு இந்த கூட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சி தேர்தல் பணிக்குழு தலைவர் எம்.ஐ. நூர் ஜியாவுதீன் தலைமை வகித்தார். முஹமது இஸ்ஹாக் வரவேற்றார். தேர்தல் பணிக்குழு செயலர் ஏ.அப்துல் வஹாப், எஸ்டிபிஐ, கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் எஸ். அப்பாஸ் அலி ஆலிம், பைரோஸ் கான் ஆகியோர் செயலாக்க உரை பேசினார்.
எஸ்டிபிஐ., மாநில செயலாளர் அப்துல் ஹமீது, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.எம்.ரபீக் அஹமது பேசினார. இக்கூட்டத்தில் அமமுக ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வ.து.ந.ஆனந்த் அறிமுகப்படுத்தப்பட்டார். அமமுக., அமைப்பு செயலர் ஜி.முனியசாமி, மாவட்ட துணை செயலர் செல்வம், மாவட்ட வர்த்த அணி செயலர் தவமுனியசாமி, ஒன்றிய செயலர்கள் முத்தீஸ்வரன் (ராமநாதபுரம் ), ஸ்டாலின் (மண்டபம்), நகர் செயலர்கள் ரஞ்சித் குமார் (ராமநாதபுரம் ) களஞ்சிய ராஜா (மண்டபம்) உள்பட . பலர் கலந்து கொண்டனர். ஐ.அஜ்மல் சரீப் நன்றி கூறினார். இராமநாதபுரம் லோக் சபா தொகுதி தேர்தல் அமமுக வேட்பாளர் வ.து.ந ஆனந்த் கூறுகையில், ராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த எனது வெற்றி எளிதாக்கப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் அமமுக வென்று ஒற்றை ஆளுமை டிடிவி தினகரன் கரத்தை வலுப்படுத்துவோம். சின்னம் என்பது எங்களுக்கு முக்கியமல்ல. ஜாதி, மதம், கட்சி ஆகியவற்றை கடந்து பொதுவான வேட்பாளராக அமமுக., வை மக்கள் அங்கீகரித்துள்ளதால், நாங்கள் வெல்வது உறுதி. துணை பொதுச் செயலர் டிடிவி தினகரன் ராமநாதபுரத்தில் ஏப்., 14 அல்லது 15ல் பிரசாரம் செய்கிறார். 1972 முதல் என் தந்தை (தமிழக தொழிலாளர் நலத் துறை முன்னாள் அமைச்சர் வ.து நடராஜன்) அதிமுகவில் பணியாற்றினார். அதிமுக., நிர்வாகிகள் தவிர தொண்டர்கள் அனைவரும் அமமுக., விற்கு வாக்களிப்பர். எந்த சின்னம் கிடைத்தாலும் 10 நிமிடத்தில் வீடு, வீடாக சென்று மக்களிடம் கொண்டு சேர்த்து 2 .50 லட்சம் ஓட்டுகள் வெற்றி பெறுவது உறுதி. தினகரன் கை காட்டுபவரே பிரதமராவார். என்னை வெற்றி பெற வைத்தால், சென்னை – ராமேஸ்வரம் இடையே பகல் நேர ரயில் இயக்கவும், வட மாநில தொலை தூர ரயில்கள் ராமநாதபுரத்தில் நின்று செல்லவும் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன். ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். இந்திய, இலங்கை நாடுகளின் சர்வதேச கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தொந்தரவின்றி மீன்பிடி தொழில் செய்ய நிரந்தர நடவடிக்கை எடுப்பேன்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் கச்சத்தீவு மீட்பு விவகாரம் கடந்த காலங்களைப் போல் தேர்தல் வாக்குறுதியாக இருக்காது. நிரந்தர தீர்வு காண நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை சிறை பிடித்துச் செல்லும் தமிழக படகுகளுக்கு இலங்கை அரசு விதிக்கும் அபராதத்தை குறைக்க இந்திய வெளியுறவுத்துறையிடம் வலியுறுத்துவேன். விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரத்தில் பல்வேறு இடங்களில் ரூ.4.47 லட்சம் மற்றும் பொருட்கள் பறிமுதல்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதி பறக்கும் படை அலுவலர் அருள் முனியப்ப தாஸ், சிறப்பு எஸ் ஐ ., இளங்கோவன் தலைமையில் குழுவினர் ராமநாதபுரம் பட்டணம் காத்தான் சோதனை சாவடியில் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ராமேஸ்வரம் சென்ற கேரள பதிவெண் சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்த திருவனந்தபுரம் மூந்தூரா பகுதி கலீல் என்பவர் எடுத்துச் சென்ற ரூ.1.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர். கேரளா மார்க்கெட்டில் வியாபாரத்திற்காக பாம்பனில் மீன் வாங்க வந்ததாக கூறினார்.
பரமக்குடி மரிச்சுக்கட்டி போலீஸ் சோதனைச் சாவடியில்
பரமக்குடி சட்டசபை தொகுதி பறக்கும் படை தேர்தல் அலுவலர் சண்முகவேல், சிறப்பு எஸ்.ஐ., சந்தவழியான் அடங்கிய குழு அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர் . அதில் ரூ.17,490 மதிப்பில் ஆண்கள் அணியும் 72 ரெடிமேடு சட்டைகள் எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. வியாபாரத்திற்காக வாங்கிக் கொண்டு காரில் வந்ததாக கூறிய சாத்தான்குளம் சபீர் அலியிடம் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
சாயல்குடி -புல்லந்தை விலக்கு ரோட்டில்முதுகுளத்தூர் தொகுதி பறக்கும் படை அலுவலர் அமர்லால், சிறப்பு எஸ். ஐ.. குமரேசன் தலைமையிலான குழுவினர் அதிகாலை சோதனை செய்தனர். அப்போது அது வழி சென்ற டிஎன் 31 பதிவெண் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். லாரியில் பயணித்த ஆந்திரா கடப்பா ஜில்லாவைச் சேர்ந்த ரவீந்திர ரெட்டி ரூ.1.40 லட்சம் எடுத்துச் சென்றது தெரிந்தது. தூத்துக்குடியில் ஜிப்சம் வாங்குவதற்கு பணத்துடன் வந்ததாக கூறினார்.
இராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் கருப்பையா, சிறப்பு எஸ்.ஐ., நாகராஜன், தலைமை காவலர் திருநாகசுந்தரம் ஆகியோர் கொண்ட குழுவினர் ராமநாதபுரம் வாலாந்தரவை அருகே வழுதூர் விலக்கு ரோட்டில் இன்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நெல்லை பதிவெண் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சென்ற நெல்லை கருங்குளம் சங்கர தங்கபாண்டி ஆவணமின்றி எடுத்து வந்த ரூ 1.54 லட்சத்தை பறிமுதல் செய்தனர். முத்துப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி கட்டுமான பணிக்கு பொருட்கள் வாங்க பணம் கொண்டு வந்ததாக கூறிய தங்கபாண்டியிடம் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் தங்கப்பா நகர் முத்துராமலிங்கம் மகன் மணிகண்டன், 29. டிப்ளமோ பயின்ற ராமநாதபுரம் ரயில் ஸ்டேஷன் அருகே தண்டவாளத்தில் தலை வைத்து இன்று காலை தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடலை ரயில்வே போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனை அனுப்பினர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க ஆலோசனை கூட்டம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் அறிவுரையின்படி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் காவல் துணை ஆணையர் திரு. சசிமோகன் IPS., (சட்டம் மற்றும் ஒழுங்கு), காவல் துணை ஆணையர் திரு. செந்தில்குமார் TPS., (குற்றப்பிரிவு) , காவல் துணை ஆணையர் திரு. மகேஷ் IPS., (தலைமையிடம்), காவல் துணை ஆணையர் திரு. அருண்பாலகோபாலன் IPS., (போக்குவரத்து), காவல் துணை ஆணையர் திரு.முருகேசன் TPS.,(ஆயுதப்படை) மற்றும் மதுரை மாநகர காவல் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
காவல் ஆணையர் இக்கூட்டத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான இழைக்கப்படும் பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காக மதுரை மாநகரில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிட்டார். மேலும் பாலியல் தொந்தரவு தொடர்பாக புகார்கள் வந்தால் உடனடியாக வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்து அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து கடுமையான தண்டனை வாங்கி கொடுக்கவேண்டும் என்றும் கலந்தாய்வு கூட்டத்தில் உத்தரவு பிறப்பித்தார்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நேற்று (19.03.19) C3 S.S.காலனி சார்பு ஆய்வாளர் திரு.ஆதீஸ்வரன் மற்றும் காவலர்களுடன் மதுரை கோச்சடை மெயின்ரோடு, பாஸ்போர்ட் ஆபிஸ் முன்பாக வாகன சோதனையில் இருந்தபோது TN 69 E 9036 என்ற லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அரசு அனுமதியின்றி லாரியில் மணல் ஏற்றிவந்த இருவரை கைது செய்தனர்.
அதே போல் மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத்தெருவைசேர்ந்த கமலகண்ணன் 35/19 மற்றும் C3 S.S.காலனி சார்பு ஆய்வாளர் திரு.சரவணன் மற்றும் காவலர்களுடன் மதுரை கோச்சடை மெயின்ரோடு செவன்த்டே ஸ்கூல் முன்பாக வாகன சோதனையில் இருந்தபோது TN 57 W 8601 என்ற TATA ACE வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அரசு அனுமதியின்றி லாரியில் மணல் ஏற்றிவந்த மதுரை அச்சம்பத்தைச்சேர்ந்த மாணிக்கம் 43/19 ஆகிய இரண்டு நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு லாரிகள் மற்றும் மணல் பறிமுதல் செய்யப்பட்டு இன்று (20.03.2019) இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாடாளுமன்ற தேர்தலையொட்டி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
சென்னை அம்பத்தூர் காவல் மாவட்டம் சார்பில் துணை ராணுவம் மற்றும் காவல்துறையினர் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் இணைந்து அம்பத்தூர் பேருந்து நிலையம் முதல் வடக்கு பூங்கா சாலை வழியாக அம்பத்தூர் நகரின் மிக முக்கிய பிரதான சாலை புதூர் வழியாக ராக்கி திரையரங்கம் வரை சுமார் 4 கிலோமீட்டர் வரை பிரமாண்ட அணிவகுப்பு 20.03.19 இன்று சிறப்பாக நடைபெற்றது.
அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் திரு. D. ஈஸ்வரன் அவர்களின் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த கொடி அணிவகுப்பில் அம்பத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி பொற்கொடி கலந்து சிறப்பித்தார்.
இந்த அணிவகுப்பில் 100 க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் மற்றும் 50 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேடசந்தூரில் பாலித்தீன் பைகள் மறுசுழற்ச்சி மூலப்பொருள்கள் தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கோவில் ரோட்டில் அமைந்துள்ள சவடமுத்து என்பவருக்கு சொந்தமான பழைய பாலிதீன் பைகளை வாங்கி மறு சுழற்சி முறையில் பாலிதீன் பைகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை தயார் செய்து வரும் கம்பெனி உள்ளது.
இந்த கம்பெனியில் காலை நான்கு மணி அளவில் மின்கசிவால் தீ பிடித்து பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் முழுமையாக தீயில் கருகி சேதமடைந்தன. வேடசந்தூர் தீயணைப்பு துறை மற்றும் திண்டுக்கல் தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர் இதுகுறித்து வேடசந்தூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கோத்தகிரி அருகே உள்ள எஸ்.கைகாட்டி, சன்ஷைன் நகர், கஸ்தூரிபா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மூன்று கரடிகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
எஸ்.கைகாட்டி பகுதியில் கடந்த இரு மாதத்திற்கு முன் ஜெகதீஷ் என்பவருக்கு சொந்தமான பேக்கரியின் கதவை உடைத்து மூன்று முறை உள்ளே புகுந்த கரடிகள் அங்கிருந்த பண்டங்களையும், பொருட்களையும் சேதப்படுத்தின.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு எஸ்.கைகாட்டி பகுதியில், கோடநாடு செல்லும் சாலை ஓரத்தில் உள்ள கக்குளா மாரியம்மன் கோவிலின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கரடிகள் அங்குள்ள பொருட்களை வீசிவிட்டு சென்றன. மேலும் விளக்குகளில் இருந்த எண்ணெயையும் குடித்து விட்டு சென்றன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கரடிகள் தாக்கி பொதுமக்களுக்கோ அல்லது தொழிலாளர்களுக்கோ ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் நடத்தப்போவதாகவும் தெரிவித்திருந்தனர்.
பொதுமக்களின் இந்த அறிவிப்பை தொடர்ந்து கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன், வனவர் சக்திவேல், வனக்காப்பாளர்கள் முருகன், தருமன், வீரமணி மற்றும் வினோத் உள்பட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததுடன், கரடிகள் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.
இப்பகுதியில் தொடர்ந்து கரடிகள் நடமாடி வருவதால் அவற்றை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்தனர். இதனையடுத்து நேற்று மாலை கோத்தகிரியில் இருந்து கரடிகளை பிடிப்பதற்காக கூண்டு கொண்டு வரப்பட்டு எஸ்.கைகாட்டி பகுதியில் உள்ள கோவில் அருகே வைக்கப்பட்டது. இந்த கூண்டிற்குள் கரடிகளுக்கு பிடித்த பழ வகைகள், தேன் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டன.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், எஸ்.கைகாட்டி குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வரும் கரடிகளை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. இரவு, பகலாக கூண்டு வைக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கரடிகள் பிடிபட்டவுடன் அவற்றை அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் கரடிகள் பிடிபடும் என நம்புவதாகவும் அவர்கள் கூறினார்கள்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை காங்கிரஸ் நகர் அலுவலகத்திற்கு தேசிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி வருகை புரிந்தார். அவரை நகரத் தலைவர் கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் அஜ்மல்கான், இளைஞர் அணிச் செயலாளர் இன்ஜினியர் நஸீர், ஒருங்கிணைப்பாளர் மஹ்மூது நெய்னா உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்று பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலா தேவி பெண்களை பாலியல் செயலுக்கு வற்புறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 340 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தார்.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. எனினும் அவரை ஜாமீனில் எடுக்க யாரும் வராததால் கடந்த சில நாட்களாக சிறையிலேயே இருந்தார். இந்நிலையில் அவரது சகோதரர் இன்று (20/03/2019) உத்தரவாதம் வழங்கி அவரை ஜாமீன் பெற்றுள்ளார். மேலும் நீதிமன்றம் நிர்மலா தேவி எக்காரணத்தைக் கொண்டும் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்களை தடை விதித்துள்ளது.
செய்தி வி.காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடையநல்லூரில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி- கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்பு…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் வாக்காளரிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திட உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கடையநல்லூர் தாலுகா அலுவலகம் சார்பில், கடையநல்லூர் அருகே பண்பொழி சாலையில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் 18.03.19 நேற்று காலை மாவட்ட உதவி ஆட்சியர் பயிற்சி சுகபுத்திரா இ.ஆ.ப தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் வேலம்மாள், வட்டாச்சியர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில், வாக்குப்பதிவு தினமான 18.04.19 அன்று மாணவ, மாணவியர் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அதன் பின்னர் மாதிரிவாக்கு பதிவு இயந்திரத்தில் வாக்குகளை மாணவ மாணவியர்கள் பதிவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து நடத்தப்பட்ட கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் துணைதாசில்தார் ஏசுராஜன், மனோகரன், ஆய்குடி வருவாய் ஆய்வாளர் மல்லிகா, கடையநல்லூர் வருவாய் ஆய்வாளர் முருகன், இடைகால் கிராம நிர்வாக அலுவலர் மகேஷ்வரி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் ஆனந்த்,பவுல் மகேஷ், மாரியம்மாள், முருகன், துரைலிங்கம் , மரகதகோமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் தாமிரபரணி கலைக்குழுவின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமேஸ்வரத்தில் இருந்து சுவாமி தரிசனம் முடித்து விட்டு தென்காசி சென்ற ஆம்னி கார் மீது செங்கல் ஏற்திச் சென்ற லாரி மோதியது. நெல்லை மாவட்பம் தென்காசி அனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 7 பேர் ராமேஸ்வரம் கோயிலுக்கு சுவாமி கும்பிட காரில் நேற்று வந்தனர். தரிசனம் முடித்து விட்டு தென்காசி திரும்பினர். உச்சிப்புளி அருகே சாத்தக்கோன் வலசை பகுதியில் சென்றபோது, தினைகுளத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு செங்கல் ஏற்றிச் சென்ற லாரியும் மோதியது.
இந்த விபத்தில் காரில் சென்ற தென்காசி இசக்கி மகன்கள் குட்டி (26), மஹாராஜா (25) சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதில் படுகாயம் அடைந்த 5 பேர் இராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்..
.இது தொடர்பாக லாரி டிரைவர் புத்தேந்தல் மாதவனை உச்சிப்புளி போலீசார் கைது செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த இரண்டு ஆட்டோ டிரைவர்கள் கைது..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்கா தனக்கன்குளம் பகுதியில் வசித்து வரும் அங்குசாமி மகள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி. அம்மாணவி தினமும் ஆட்டோ மூலமாக பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.
நேற்று (18/03/2019) பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது ஆட்டோ டிரைவர் விஜயகுமார் மற்றும் அவரது நண்பர் பிரதாப் ஆகியோர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்துள்ளனர். மாணவி கூச்சலிட்டு தன் காரணமாக அவரை வீட்டில் இறக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
பின்பு மாணவி மற்றும் அவரது அப்பா அங்கு சாமி கொடுத்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விஜயகுமார் மற்றும் பிரதாப்பை காவல்துறையினர் கைது செய்தனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக கழிப்பறை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 19/03/2019 அன்று 11.30 மணியளவில் கழிப்பறை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வு கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிராபானு கமால் அவர்கள் தலைமையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வாணி கிராமம், இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் S.பரமேஸ்வரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
பின்பு முதலாமாண்டு மாணவி கணிதவியல் துறையைச் சார்ந்த அபிநயாவும், வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறையைச் சார்ந்த V.ஜனனியும் கழிப்பறையின் பயன்களைப் பற்றியும், அதனை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் பற்றியும் மாணவ மாணவிகளுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தனர். மேலும், “அகமும், புறமும் வாய்மை காப்போம். உள்ளும், வெளியும் தூய்மை காப்போம். எங்கள் வீடு, எங்கள் வீதி, எங்கள் நாடு, எங்கள் தூய்மை, எங்கும் பசுமை காண்போம்” என்று உறுதி மொழி எடுத்தனர். இறுதியாக தமிழ்துறை உதவிபேராசிரியை Dr.H.பாத்திமா நன்றியுரை வழங்க இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் ஐக்கிய ஜமாத் மற்றும் சமூக அமைப்புகள் பங்கு பெற்ற மாபெரும் கூட்டம்….
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை எட்டு ஜமாஅத் கூட்டமைப்பு,சமூக மற்றும் சமுதாய அமைப்புகள் சார்பாக நேற்று மாலை 7 மணியளவில் ஹூசைனியா மஹாலில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம்கள் நிறைவேற்றப்பட்டது:-
1)கீழக்கரை நகராட்சி சார்பாக மனு கொடுத்த அனைத்து பொதுமக்கள்,ஜமாஅத்தார்கள் மற்றும் சமூக இயக்கங்களை அழைத்து பேசி வரி உயர்வுவை குறைக்கும் வரை வரி கட்டுவதை காலதாமதம் செய்வது என்றும்,இது சம்பந்தமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2)கீழக்கரை நகராட்சிக்கு உடனடியாக ஆணையரை நியமிக்க அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3)இராமேஸ்வரம்,கீழக்கரை பேரூராட்சிகள் ஒரே நேரத்தில் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் இரண்டும் கடற்கரை சார்ந்த பகுதியாக இருந்து இராமேஸ்வரம் சுற்றுலா தளமாக நிலையில் அங்கு ஐம்பது சதவீதம் வரி உயர்த்தப்பட்டு உள்ளது.ஆனால் கீழக்கரை நகராட்சி மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் தன்னிச்சையாக வரி விதிப்பு செய்ததை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4)இரண்டரை கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள கீழக்கரை பகுதியை எந்த அடிப்படையில் A B C என்று தரம் பிரிக்கப்பட்டது.அதன் எல்லைகள் பற்றிய விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கீழக்கரை நகராட்சியை கேட்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5)கீழக்கரை நகராட்சி வரி விதிப்பை எதிர்த்து சமூக அமைப்புகள் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கலந்துரையாடல் நிகழ்வில் அனைத்து ஜமாஅத் பிரதிநிதிகள்,சமூக மற்றும் சமுதாய அமைப்புகள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பயிற்சி முகாம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலைய உட்புறத்தில் பொதுமக்கள் வாக்களிக்கும் முறைää வாக்கு இயந்திரங்களை கையாளுவது மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு முகாமில் வாக்குப்பதிவு யாருக்கு செய்தோம் என்பதும் யாருக்கு வாக்களித்தோம் என்பதும் உடனடியாக வாக்காளருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சி உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் உதவி அலுவலர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மேலும் தாசில்தார்கள் செந்தாமரை, ஆனந்தி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் அரசு அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.