செய்திகள்
ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டையில் குழந்தை கழுத்தை அறுத்து… தந்தை தூக்கிட்டு தற்கொலை..
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை பகுதியில் வசித்து வருபவர்கள் தங்கமனி- முனீஸ்வரி தம்பதியினர் இவர்களுக்கு திருமணம் ஆகி ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் சேடபட்டி அருகில் உள்ள தனியார் நூர்பாலையில் வேலை செய்துவருகின்றர். இரவு வேலைமுடிந்து சுமார் இரவு 11.30 மணியளவில் வீட்டிற்கு வந்தநிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கணவர் தங்கமனி (வயது 30) மனைவியை சுத்தியலால் தலையில் பலமாக அடித்ததில் முனீஸ்வரி மயக்கமடைந்துள்ளார். இதை பயன்படுத்தி மகள் ஹரினி (வயது 3) பெண்குழந்தையை தான் வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். குழந்தை ஹரினி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தது. இதனை அறிந்து அருகாமையில் வசித்துவரும் முனீஸ்வரியின் உறவினர்கள் தங்கமனியை பிடிக்க முற்பட்டபோது அவர்களிடம் இருந்து தப்பித்து ஒளிந்துகொண்டார். இரவு நேரம் என்பதால் அவரை பிடிக்க முடியாமல் உறவினர்கள் சென்றபிறகு மீண்டும் அதேஇடத்திற்க்கு திருப்பி வந்த தங்கமனி (வயது 30) ஆஸ்பிட்டாஸ் சீட் போடப்பட்டுள்ள இரும்பு பைப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பட்டி காவல்துறையினர் குழந்தை ஹரினி – தங்கமனி இருவர் உடலையும் உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிதோடு பலத்த காயத்துடன் இருந்த முனிஸ்வரி என்பவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி சுத்தியலை கைப்பற்றி கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (05/04/2019) ஸ்ரீரங்கம் சென்ற தனியார் பேருந்து வாகன எண் TN49BZ0334(MJP) ஓட்டுனர் கடுமையான நெரிசல் பகுதியில் செல்போனில் பேசிக்கொண்டே பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். இதை கவனித்த சமூக ஆர்வலர் ஓருவர் வீடியோ எடுத்ததை கூட பொருட்படுத்தவில்லை.
மேலும் போக்குவரத்து நெரிசல் நேரத்தில் மிகவும் அஜாக்கிரதையாக செல் போனை பயன்படுத்தி வாகனத்தை இயக்கியது பயணிகளிடையே மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து காவல் துறையும் சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து நிர்வாகமும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
செய்தி வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேங்காய் நாரில் கூடுகளை அமைத்து சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் வழக்கறிஞரின் குடும்பம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
“அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை” யின்தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல்..
தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளது, பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக 110 டிகிரியை தொட்டுள்ளது
வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் நோயிலிருந்து ஒவ்வொருவரும் கோடை காலங்களிலும் நீரினை தாகம் எடுக்கும் போதெல்லாம் தேவையான அளவு பருக வேண்டும் என்பதை முன்னிட்டு அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை, திருச்சி புத்தூர் பிஷப் குளத் தெருவில் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் அமைத்துள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட நீரினை மண்பானையில் 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் வைத்துள்ளனர். இது பொதுமக்கள் மற்றும் பள்ளி சென்று வரும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளது.
யோகா ஆசிரியர் விஜயகுமார் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் கீர்த்தனா உள்ளிட்டோர் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் ஏற்பாட்டினை செய்து குடிநீரினை வழங்கி வருகிறார்கள். இது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
செய்தி: திருச்சி விஜய்
——————————
*✅ VOTE 💯%* *ELECTION DATE-18.04.2019*
——————————
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து 16 பேர் உயிரிழந்த நூறாண்டு நினைவு தினம் :தலைவர்கள் அஞ்சலி . உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் -மறைக்கப்பட்ட வரலாறு .
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யும் 2ஆம் கட்ட பணிகள் தொடக்கம்..
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் கணினி பிரிவில் 04.4.2019 அன்று மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ்
தலைமையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் நரேந்திர சிங் பர்மார், பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பொது பார்வையாளர் ஆனந்த் ஸ்வரூப், ஆகியோர் முன்னிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களை சட்டமன்ற தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்வதற்கான இரண்டாம் கட்ட பணி நியமன ஒதுக்கீடு நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான பொதுத்தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றை சுமுகமான முறையில் நடத்துவதற்காக மாவட்ட நிர்வாகத்தில் மூலம் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொறுத்தவரையில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 23 வேட்பாளர்களும், பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 13 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தேர்தல் வாக்குப்பதிவு பயன்படுத்துவதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்வதற்கான முதற்கட்ட கணிணி முறை ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் வள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 1,364 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் சாய்வு தள வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,615 வாக்குச்சாவடி அலுவலர்கள், திருவாடானை சட்டமன்ற தொகுதியில் 1,504 வாக்குச்சாவடி அலுவலர்கள், இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் 2,169 வாக்குச்சாவடி அலுவலர்கள், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2,060 வாக்குச்சாவடி அலுவலர்கள் என 7,348 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேவை என கணக்கிடப்பட்டு வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களை ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக வாக்குச்சாவடி தலைமை அலுவலர் வாக்குச்சாவடி அலுவலர் 1, 2, 3 என முறையே பணி நிர்ணயம் செய்வதற்கான முதற்கட்ட கணினி முறை பணி ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக மேற்குறிப்பிட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களை அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து பணி ஒதுக்கீடு செய்வதற்கான இரண்டாம் கட்ட கணினி ஒதுக்கீடு 04.4.2019 அன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் கணினி பிரிவில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில்ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் நரேந்திர சிங் பர்மார், பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பொது பார்வையாளர் ஆனந்த் ஸ்வரூப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்வாறு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 07.04.2019 அன்று இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி 17.4.2019 அன்று மூன்றாம் கட்ட தேர்தல்
பயிற்சி நடைபெறவுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி,தேர்தல் வட்டாட்சியர் திரு.முருகேசன் உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு கல்லூரி விழா…
முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு கல்லூரி விழா இன்று (05.04.2019) காலை 10.00 மணி அளவில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வை ஆங்கிலத் துறையைச் சார்ந்த முதலாமாண்டு மாணவி s.பாத்திமா மரியம் இறைவணக்கத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் Dr. A.R.நாதிரா பானு கமால் அனைவரையும் வரவேற்று, மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் கூறியும் கல்லூரி ஆண்டு அறிக்கை வாசித்தும் வரவேற்புரை ஆற்றினார்.
முகம்மது சதக் நிறுவனத்தின் சார்பாக சிறப்பு விருந்தினர் S.நாகூர் அலி ஜின்னா, நிதி ஆலோசகர், நிதித்துறை, தமிழ்நாடு அரசு. அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் மாணவிகளிடம் இறைவனையும், பெற்றோரையும், நண்பர்களையும் நேசிக்குமாறும், “படைத்தவனை யாசி படைக்கப்பட்டவனை நேசி” எனக் கூறி சிறப்புரை ஆற்றினார்.
மேலும் கல்லூரியில் நடைப்பெற்ற கலை மற்றும் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றிப் பெற்ற மாணவிகளுக்கும் பேராசியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அனைத்து ஊழியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. J.முகம்மது ஜகாபர் முகம்மது சதக் பொறியியல் கல்லூரி டீன், J.அப்பாஸ் முகைதின் முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர், திரு. ரஜபுதின், செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர், திரு.நந்தக்குமார், முகம்மது சதக் தஸ்தகிர் பள்ளி முதல்வர், திருமதி.ஆலியா முகம்மது சதக் கபீர் CBSC பள்ளி, A.பாத்திமத்துல் ஜின்னா ஆகியோர் விழாவில் கலந்துக் கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
கல்லூரி விழாவினை அலுவலக மேற்பார்வையாளர் குத்புதீன் சிறப்பாக ஒருங்கிணைத்தார். இறுதியாக கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர் அன்வர் ரொ.சாஹின் நன்றியுரையை தொடர்ந்து, அரபித் துறைத் தலைவர் M.ரெய்ஹானத்தில் அதவியா தூஆவுடன் இந்நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எப்பொழுது தீரும் இந்த தண்ணீர் பஞ்சம் என கண்ணீர் வடிக்கும் கிராம மக்கள்…
நெல்லை மாவட்டம் கண்ணநல்லூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வில்வனம்புதூர் காலணியில் பொதுமக்கள் தண்ணீர் இன்றி மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியில் பல மாதங்களாகவே தண்ணீர் இல்லாத அவல நிலை காணப்படுகிறது.
இதற்கு காரணம் மின் மோட்டார் பழுதடைந்து இருப்பதே என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இது குறித்து இப்பகுதி கிராம மக்கள் பஞ்சாயத்திடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது பற்றி பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கேட்டால் இப்பொழுது எல்லா செயல்பாடும் வள்ளியூர் யூனியன் அலுவலகத்தில் தான் பொறுப்பு உள்ளது என்று கூறியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்திட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை அரசு மருத்துவமனையில் அழையா விருந்தாளியாக உலா வரும் தெரு நாய்கள்…
தென்மாவட்டங்களின் மிக முக்கிய அரசு மருத்துவமனைகளில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையும் ஒன்று என்பதை யாவரும் அறிந்ததே. இங்கு மதுரை மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர
பல நோயாளிகள் தங்களுக்கு உாிய முறையிலும்,நல்ல முறையிலும் சிகிச்சை கிடைக்கும் என நம்பி இம்மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இங்கு நடமாடும் நாய்களால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மட்டுமில்லாமல் அவர்களை சந்திக்க வரும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இது மாதிரியான செயல்களுக்கு மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகம் எந்த ஒரு முயற்சியும் எடுப்கதாக தெரியவில்லை என புலம்புகின்றனர் சமூக ஆர்வலர்கள். மேலும் நோய்க்கு வைத்தியம் பார்க்க வரும் இடத்தில் நாய் கடித்து கூடுதலாக சிகிச்சை பெற வேண்டிய நிலையாக உள்ளது, யாரிடம் முறையிடுவது என தெரியாமல் புலம்பி தவிக்கின்றனர் நோயாளிகளும், பொதுமக்களும்.
.நடவடிக்கை எடுக்குமா மருத்துவமனை நிர்வாகமும்..?மாவட்ட நிர்வாகமும்?…மாநகராட்சி நிர்வாகமும்..???
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் ஊழல் அரசு அகற்றப்பட்டே ஆக வேண்டும் – பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு..
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பிரசார பொதுக்கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதாகரன், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சின்னத்துரை ஆகியோரை ஆதரித்து, கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
கீழை நியூஸுக்காக.. ஒளிப்பதிவாளர், அந்தோணி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் இன்று (05/04/2019) ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் பெரும்பாலும் பல இடங்களில் வேலை செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் பணம் செலுத்தவும், பணம் எடுக்கவும் பெரும் சிரமத்துக்குள்ளார்கள். மேலும் நேரடியாக பணம் செலுத்துவதற்கு பணம் பிடித்தம் செய்கிறார்கள்.
மேலும் பல இடங்களில் நான்கு ஐந்து மிஷின்கள் இருந்தாலும் ஒன்று மட்டுமே வேலை செய்யும் நிலையே உள்ளது. இதனால் மிகவும் சிரமத்திற்கு ஆளான பொதுமக்கள் இதை சரி செய்ய வங்கி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவனை சரமாரியாக பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு..வீடியோ..
கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியில் 7 வயது சிறுமி கடந்த 25-ஆம் தேதி மாலை விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போனதை அடுத்து காவல் துறையினர் விடிய விடிய சிறுமியை தேடியுள்ளனர்.
பின்னர் 26ஆம் தேதி காலை அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே டீசர்ட் ஒன்றில் சுற்றப்பட்டு சிறுமியின் சடலம் போலீஸாரால் மீட்கப்படடு பிரேத பரிசாதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து சிறுமியின் உறவினர்களின் புகாரின் பேரில் அந்த ஊரை சேர்ந்த சந்தோஷ்குமார் உள்ளிட்டோரை விசாரணை நடத்தினர். இதில் சந்தோஷ்குமார் மட்டுமே அந்த சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
கோவை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக பாலியல் குற்றவாளி சந்தோஷ்குமாரை காவல்துறையினர் அழைத்து வந்தனர். இந்நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் பாலியல் குற்றவாளியை சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வரும் ஏப்ரல் 18, மோடிக்கு கெட் அவுட்” – தூத்துக்குடி பிரச்சார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து திரைப்பட நடிகர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் “வரும் ஏப்ரல். 18ம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலில் மோடியை கெட் அவுட் செய்வோம்
நவம்பர் 2016ம் ஆண்டு இரவு ஊரே தூங்கிகொண்டு இருந்தபோது மோடிக்கு தூக்கம் வராமல் 500,1000,நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார் புதிய இந்தியா பிறக்கபோவதாக தெரிவித்தார் பிறந்ததா என்று மக்களை பார்த்து கேள்வி எழுப்பிய அவர் மேலும் தூத்துக்குடி திமுக தேர்தல் வாக்குறுதியில் ஸ்டெர்லைட் ஆலை போன்ற நச்சு ஆலைகள் வர அனுமதிக்க மாட்டோம் உப்பள,தீப்பட்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் நலன்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் திரேஸ்புரம் பகுதியில் தூண்டில் பாலம் சீரமைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யபட்டும் என்றார். காங்கிரஸின் தேர்தல் அறிக்கையே பார்த்து இந்தியாவின் கதாநாயகன் என்கின்றார்கள் கதாநாயகன் என்று ஒருவர் இருந்தால் வில்லன் என்று ஒருவர் இருப்பார் அவர்தான் மோடி .
100-வது நாளில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிப் பேரணியாகச் சென்ற மக்கள் மீது இந்த எடப்பாடி அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியது. மக்கள் போராட்டத்தில் அப்பாவி மக்களில் 13 பேரை பட்டப் பகலில் காக்கா, குருவியைச் சுட்டுக் கொல்வது போல சுட்டுக் கொன்றார்கள். இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாமா? மக்கள் போராட்டத்தில் திட்டமிட்டே கொலை செய்திருக்கிறது இரக்கமற்ற எடப்பாடி அரசு.
துப்பாக்கிச்சூடு குறித்து மீடியாக்களின் கேள்விக்கு, “ஆயிரம் பேரைக் கலைப்பதற்கு 13 பேரைச் சுட்டால் தவறில்லை. எங்கள் ஆட்சியில்தான் 35 ஆயிரம் போராட்டங்கள் நடந்துள்ளன. வேறு ஆட்சியில் இப்படிக் கிடையாது என்கிறார் இது ஒரு சாதனையா?” இப்படி, மனசாட்சி இல்லாமல் பதில் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி ஒரு முதல்வரா? ஜி.எஸ்.டி., வரி அமலாக்கம், நீட் தேர்வு, பணமதிப்பிழப்பு ஆகியவைதான் முந்தைய பா.ஜ.க., ஆட்சியின் சாதனை. மோடியின் இந்தச் சாதனைகளைச் சொல்லி பா.ஜ.க., வேட்பாளரான தமிழிசை மக்களிடம் ஓட்டு கேட்கமுடியுமா?
கனிமொழியை எதிர்த்துப் போட்டியிடும் தமிழிசை டெபாசிட் இழக்க வேண்டும். வரும் ஏப்ரல் 18, மோடிக்கு கெட் அவுட்”
திமுக, காங்கிரஸ் கூட்டணி 40தொகுதிகளிலும் வெற்றி பெரும்,ராகுல் காந்தி நிச்சயம் பிரதமராக வருவார் என்று கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
“உலகத்திலேயே 11கோடி உறுப்பினர்களை கொண்ட பெரிய கட்சியின் தலைவர் அமித்ஷா தூத்துக்குடி வருகை தந்தது தூத்துக்குடி மக்களுக்கு பெருமை” தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி.
தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளபட்டி,தருவைகுளம் போன்ற மீனவர் பகுதிகளில் தூத்துக்குடி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் வாக்குகள் சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது வெள்ளபட்டி பகுதியில் உள்ள தேவாலயத்தில் கிருஸ்துவ பாதிரியாரிடம் ஆசி பெற்றார்,
பின்னர் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார் , அப்போது அவர் கூறுகையில் தாமரை கடலில் மலருவதாக கூறுகிறார் ஆனால் நான் படித்தவரையிலும் கேட்டவரையிலும் தாவிரவியல் அறிவியலில் கூட இதுவரை தாமரை கடலில் பூத்ததாக கேள்விபட்டது இல்லை என்ற திருச்சி சிவா கூறியதற்கு பதில் தெரிவித்த தமிழிசை கடல்தாமரை என்று நாம் எவ்வளவு கேள்விபட்டுள்ளோம் இவர்கள் எதையெல்லாம் முடியாது என்றே சொல்லி கொண்டு இருக்கின்றார்களோ அதெல்லாம் என்னால் முடியும், இவர்கள் முடியாது என்று சொல்லகூடியதை நான் செய்து காட்டுவேன், அதே போல் தாமரை மலர முடியாது என்கின்றார்கள் மலரும் என்பதை நான் சொல்லுகின்றேன் கடற்கரை மக்களிடம் கேளுங்கள் என்றார்
அப்போது பேசிய மீனவ பெண் ஒருவர் தாமரை கடலில் ஜொலிக்கபோவதாகவும் அதை எல்லோரும் பார்க்க போவதாகவும் தெரிவித்தார், பின்னர் பேசிய தமிழிசை “திமுகவுக்கு நான் பதில் சொல்லுவதை விட கடற்கரை மக்கள் பதில் சொல்ல ஆரம்பித்து விட்டனர்” என்றார்
தாமரை கடலில் மலரப் போவதைப் பார்த்து அவர்கள் பயத்துடன் இருப்பதாகவும் தமிழிசை தெரிவித்தார். மேலும் எனக்கு தூத்துக்குடி புதிது இல்லை கனிமொழி வேண்டுமானால் புதிதாக இருக்கலாம், அமித்ஷா 11கோடி உறுப்பினர்களை கொண்ட உலகத்திலேயே பெரிய கட்சியின் தலைவர் அவர தூத்துக்குடிக்கு வந்தது தூத்துக்குடி மக்களுக்கே பெருமை சேர்த்தது என்றார்.
பேட்டியின் போது “தாமரை சாக்கடையிலும் மலரும் ” என தமிழிசைக்கு அருகிலிருந்த மீனவப் பெண் உணர்சி வசப்பட்டு கூறியது, தமிழிசைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தூத்துக்குடியில் இறந்து கரை ஒதுங்கிய திமிங்கல சுறா(WHALE SHARK) , மீனவர்கள் அச்சம் !?..
தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரையில் உடலில் காயங்களுடன் நேற்று இரவு பெண் திமிங்கல சுறா (WHALE SHARK) ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. கடலில் இருக்கும் மீன் வகைகளில் மிகப் பெரியது திமிங்கல சுறா. இது அதிக பட்சமாக 60 அடி நீளம் வரை வளரக்கூடியது, கடற்கரையோர மீனவர்கள் இதனை அம்மனி உளுவை என அழைக்கின்றனர்.
இது நேற்றிரவு உடலில் காயங்களுன், குற்றுயிராய் கரை ஒதுங்கியுள்ளது, இந்த தகவல் அறிந்த வனத் துறையினர் அந்த மீனை மீண்டும் கடலில் கொண்டு சென்று விட்டனர். இந்த நிலையில் மீண்டும், இன்று அதிகாலையில் இறந்த நிலையில் அந்த மீன் கரையொதுங்கியது. தகவல் அறிந்ததும் மீண்டும் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று, இறந்த மீனனைப் பார்வையிட்டனர். 5.47 மீட்டர் நீளம் (சுமார் 17.5 அடி) உள்ள இந்த பெண் மீன் சுமார் 11/2 டன் எடை கொண்டது.
இதனை பார்வையிட்ட கால் நடை மருத்துவர்கள், சந்தோஷ் முத்துகுமார், ஜோல்ராஜ், அபிராமி ஆகியோர் குழு பிரதே பரிசோதனை செய்தனர். பின்னர் கடற்கரை மணலில் புதைக்கப்பட்டது. இது குறித்து அப்பகுதி மீனவ மக்கள் கூறுகையில் ” கடல் பரப்பில் ஏற்படும் மாற்றம் காரணமாகவே இந்த வகை மீன்கள் இறந்து கரையொதுங்கும், இதனால் சுனாமி போன்ற ஆபத்துக்கள் வரலாம் என்பது எங்களின் நம்பிக்கை, ஆகவே இதை நாங்கள் கெட்ட சகுனமாக பார்க்கிறோம், ஆனால் இந்த மீனைப் பொறுத்தவரை கப்பலில் அடிபட்ட காயங்கள் இருப்பதால் அது போன்று எதுவும் நிகழ வாய்ப்பில்லை, இது எங்களுக்கு அச்சத்தை நீக்கி ஆறுதல் அளிக்கிறது” என்றனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் தற்போது தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்தை தீவிர படுத்தி உள்ளனர். நெல்லை மாவட்டம் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் திமுக கட்சியை சார்ந்த தனுஷ் குமார் போட்டியிடுகிறார்.
அதே நேரத்தில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இந்நிலையில் திமுக வேட்பாளர் தனுஷ் குமார் கடந்த சில நாட்களாக தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதிமுக சார்பில் பிரச்சாரம் மிகவும் மந்தமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் கிருஷ்ணசாமி நேற்று முதல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நேற்று மாலை 5 மணிக்கு அமைச்சர் ராஜலெட்சுமி, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஆகியரோடு இனைந்து கிருஷ்ணசாமி சுரண்டை பகுதியில் பிரச்சாரம் தொடங்கி திருசிற்றம்பலம், சுந்தரபாண்டியபுரம், கீழப்புலியூர், தென்காசி நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கீழப்புலியூர், தென்காசி நகர் பகுதிகளில் மாலை 7 மணி முதல் கூட்டணி கட்சி தொண்டர்கள் கூடி இருந்தனர்.
இந்நிலையில் 10 மணி வரை அவர் வரததால் தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இது அவர்களிடையே சிறிது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கூட்டணி கட்சிகளின் பிரச்சாரமோ பெரும் மந்தமாகவே உள்ளது. உரிய நேரத்தில் வராமால் வாக்காளர்களை ஏமாற்றி இருப்பது கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அதிமுக கூட்டணியில் கட்சியினரிடையே முழுமையான ஒத்துழைப்பு இல்லாமல் தகவல்கள் பரிமாற்றமின்றி தவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் தென்காசி தேர்தல் அலுவலகத்தில் நேற்று மாலை 5மணிக்கு ஆலோசனைக்கூட்டம் என்று அறிவித்த நிலையில் அனைத்து கட்சியினரும் திரண்டு வந்து வேட்பாளரும் இரவு 7.30 மணி வரை வரவில்லை. சட்டமன்ற உறுப்பினரும் வரவில்லை அதன் பின்னர் வேட்பாளரும், சட்டமன்ற உறுப்பினரும் வந்து பிறகே கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஆலோசனைகள் நடக்காமல் சட்டமன்ற உறுப்பினரின் சாதனையைத்தான் அவர் பேசினார். பல்வேறு குழப்பங்களை தாண்டி அதிமுக கூட்டணியினர் இரட்டை இலையை வெற்றிபெற வைக்க கடுமையாக போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலை தொடரும் பட்சத்தில் நோட்டாவே அதிமுக கூட்டணியை விட அதிக வாக்குகளை பெறும் என்பதில் ஐயமில்லை.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த தந்தை மற்றும் மகன் கைது …
நேற்று(03.04.19) D2-செல்லூர் ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி.வசந்தி அவர்கள் மதுரை தத்தனேரி அருகே ரோந்து பணியில் இருந்தபோது மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த பாலு சேர்வை என்பவரின் மகன் முத்துக்குமார் 46/19 மற்றும் முத்துகுமார் மகன் சௌந்திரபாண்டி 19/19 ஆகிய இருவரும் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே அவர்கள் இருவரையும் நேற்று கைது செய்து அவர்களிடமிருந்து 2.200 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சென்னை சென்ட்ரல் – பெங்களுரூ , கோயம்புத்தூர் மங்களூரு ரயில்கள் நாளை (05/04/2019) முதல் ரத்து..
- பெங்களூரு – சென்னை சென்ட்ரல் (12608) ரயில் ஏப்ரல் 5 முதல் 14-ம் தேதி வரை காட்பாடி – சென்னை இடையே ரத்து.
கோயம்பத்தூர் – சென்னை சென்ட்ரல் அதிவிரைவு (12680) ரயில் ஏப்ரல் 5 முதல் 14ம் தேதி வரை காட்பாடி இடையே ரத்து.
பெங்களூரு – சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் ( 12610) ஏப்ரல் 5 முதல் 14-ம் தேதி வரை காட்பாடி – சென்னை இடையே ரத்து.
சென்னை சென்ட்ரல் – பெங்களூரு அதிவிரைவு ரயில் (12609) ஏப்ரல் 5 முதல் 14-ம் தேதி வரை சென்னை – சோளிங்கபுரம் இடையே ரத்து.
சென்னை சென்ட்ரல் – கோயம்பத்தூர் அதிவிரைவு ரயில் (12679) ஏப்ரல் 5 முதல் 14-ம் தேதி வரை சென்னை சென்ட்ரல் – காட்பாடி இடையே ரத்து.
சென்னை சென்ட்ரல் – பெங்களூரு அதிவிரைவு ரயில் (12607) ஏப்ரல் 5 முதல் 14-ம் தேதி வரை சென்னை – சோளிங்கபுரம் இடையே ரத்து.
வாஸ்கோடகாமா- சென்னை சென்ட்ரல் விரைவு (17312) ரயில் ஏப்ரல் 4 மற்றும் 11-ம் தேதிகளில் ஜோலார்பேட்டை – சென்னை இடையே ரத்து.
மங்களுரு – சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (22638) ஏப்ரல் 4 முதல் சித்தேரி – சென்னை இடையே ரத்து.
சென்னை சென்ட்ரல் – வாஸ்கோடகாமா விரைவு ரயில் (17311) ஏப்ரல் 5 மற்றும் 12-ம் தேதி சென்னை – ஜோலார்பேட்டை இடையே ரத்து.
இவ்வாறு தென்னக ரயில்வே தனது செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளது.
கே.எம்.வாரியார், வேலூர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலக்கோட்டை சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் மேற்பார்வையாளர் தலைமையில் அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம்..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 18-ஆம் தேதி நடக்கிறது. தேர்தலுக்காக வருவாய் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இதனை பார்வையிடுவதற்காக மணிப்பூரிலிருந்து தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் மேற்பார்வையாளர் ஜோசப் பவுலிங் கம்சன் வருகை தந்தார்.
அவர் தலைமையில் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள், தற்போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜீனத்பானு முன்னிலை வகித்தார்.. நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.. கூட்டத்தில் தற்போ தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் அனைவரும் தேர்தல் ஆணையம் விதிகளுக்கு தகுந்தார் போன்று தகுந்த ஒத்துழைப்பு கொடுக்கும் படியும், ஒரு வேட்பாளர் பிரச்சாரம் செய்யும் போது மற்றொரு வேட்பாளர் வந்து விட்டாலோ அல்லது வருவது தெரிந்தாலும் தேர்தல் அதிகாரி கொடுத்த நேரத்திற்குள் முடித்து ஒத்துழைப்பு கொடுக்கும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டது..
கூட்டத்தில் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக செங்கோட்டையைச் சேர்ந்த புரட்சிமணி என்பவர் போட்டியிடும் தேர்தல் மேற்பார்வையாளர் ஜோசப் பவுலிங்
கம்சனிடம் ஒரு புகார் மனுவை கொடுத்தார். அந்த புகார் மனுவில் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணி புரியும் சேகர் என்பவர் தி.மு.க. வேட்பாளர் சௌந்தரபாண்டியன் என்பவருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதாக தெரிவித்திருந்தார்.
You must be logged in to post a comment.