தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளபட்டி,தருவைகுளம் போன்ற மீனவர் பகுதிகளில் தூத்துக்குடி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் வாக்குகள் சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது வெள்ளபட்டி பகுதியில் உள்ள தேவாலயத்தில் கிருஸ்துவ பாதிரியாரிடம் ஆசி பெற்றார்,
பின்னர் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார் , அப்போது அவர் கூறுகையில் தாமரை கடலில் மலருவதாக கூறுகிறார் ஆனால் நான் படித்தவரையிலும் கேட்டவரையிலும் தாவிரவியல் அறிவியலில் கூட இதுவரை தாமரை கடலில் பூத்ததாக கேள்விபட்டது இல்லை என்ற திருச்சி சிவா கூறியதற்கு பதில் தெரிவித்த தமிழிசை கடல்தாமரை என்று நாம் எவ்வளவு கேள்விபட்டுள்ளோம் இவர்கள் எதையெல்லாம் முடியாது என்றே சொல்லி கொண்டு இருக்கின்றார்களோ அதெல்லாம் என்னால் முடியும், இவர்கள் முடியாது என்று சொல்லகூடியதை நான் செய்து காட்டுவேன், அதே போல் தாமரை மலர முடியாது என்கின்றார்கள் மலரும் என்பதை நான் சொல்லுகின்றேன் கடற்கரை மக்களிடம் கேளுங்கள் என்றார்
அப்போது பேசிய மீனவ பெண் ஒருவர் தாமரை கடலில் ஜொலிக்கபோவதாகவும் அதை எல்லோரும் பார்க்க போவதாகவும் தெரிவித்தார், பின்னர் பேசிய தமிழிசை “திமுகவுக்கு நான் பதில் சொல்லுவதை விட கடற்கரை மக்கள் பதில் சொல்ல ஆரம்பித்து விட்டனர்” என்றார்
தாமரை கடலில் மலரப் போவதைப் பார்த்து அவர்கள் பயத்துடன் இருப்பதாகவும் தமிழிசை தெரிவித்தார். மேலும் எனக்கு தூத்துக்குடி புதிது இல்லை கனிமொழி வேண்டுமானால் புதிதாக இருக்கலாம், அமித்ஷா 11கோடி உறுப்பினர்களை கொண்ட உலகத்திலேயே பெரிய கட்சியின் தலைவர் அவர தூத்துக்குடிக்கு வந்தது தூத்துக்குடி மக்களுக்கே பெருமை சேர்த்தது என்றார்.
பேட்டியின் போது “தாமரை சாக்கடையிலும் மலரும் ” என தமிழிசைக்கு அருகிலிருந்த மீனவப் பெண் உணர்சி வசப்பட்டு கூறியது, தமிழிசைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.