திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அரசு வங்கி அதிகாரி திரு பட்டாபிராமன் அவர்களது மகள் திருமண விழா திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
திருமணத்திற்கு வந்திருந்த அனைத்து நபர்களுக்கும் தாம்பூல பை உடன் துளசி விதை பந்து இணைத்து கொடுக்கப்பட்டது. அத்துடன் துளசி விதையின் நன்மைகளும், பயன்களும் அச்சிடப்பட்ட அட்டையுடன் உற்றார் உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுக்கப்பட்டது.
துளசி நன்மை பற்றி அனைவருக்கும் தெரியும், அதை உணர்ந்து அவர் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது போல் அனைவரும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் வழங்குவதாக கூறினார்.
மேலும் இதே போல் ஒவ்வொருவரை சுற்றுப்புற சூழலை காக்கும் வண்ணம் செயல்பட்டால் நல்லது.
செய்திகள் வி.காளமேகம்
You must be logged in to post a comment.