தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரை ஆதரித்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.
முல்லைபெரியாறு அணை கட்டுவதற்கு கேரள அரசு தடையாக உள்ளதாகவும், அதற்கு ஜல்லி, மணல் கட்டுமானப் பொருட்கள் எதுவும் கொண்டு செல்லமுடியவில்லை எனவும், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தப்படும் என்று கூறியுள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்படாத போது முதல்வர் பழனிச்சாமி டின்டி அரசானை மற்றும் பெருங்காமநல்லூர் வீரத்தீயாகிகளுக்கு மணிமண்டபம் கட்டுவது, 58கால்வாய் திட்டம் போன்ற திட்டங்களுக்கு அரசானை வெளியிட்டு நிறைவேற்றப்படும் என வாக்குறுதிகளை அளித்திருந்தார். ஆனால் வெளியிட்ட அரசானையை மீண்டும் வாக்குறுதிகளாக முதல்வர் கூறியதால் உசிலம்பட்டி மக்கள் குழப்பம் அடைந்தனர்.
You must be logged in to post a comment.