இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டார அளவிலான தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் மண்டபம் பேரூராட்சி மகாலில் இன்று நடந்தது. தமிழக சுகாதாரத் துறை சார்பில் நடந்த முகாமை ராமநாதபுரம் சுகாதார நலப்பணிகள் துணை இயக்குநர் குமரகுருபரன் தொடங்கி வைத்தார். மண்டபம் வட்டார மருத்துவ அலுவலர் சுரேந்திரன் தலைமை வகித்தார். மண்டபம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பாக்யநாதன் வரவேற்றார். டாக்டர் ஜான் (குழந்தை மருத்துவம்), டாக்டர் கிளாரட் (பொது மருத்துவம்), டாக்டர் ராஜசேகர பாண்டியன் (தோல் சிகிச்சை), ஸ்டபனோ (இருதய மருத்துவம்)டாக்டர் பிரஷாந்த் (எலும்பு தேய்மானம், மூட்டு சிகிச்சை),டாக்டர்கள் சினேகா, ஹஸினா, சுகந்தா, சுகா (குழந்தைகள் மற்றும் மகளிர் நலம்) ஆகியோர் சிசிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கினர். 157 ஆண்கள், 40 ஆண் குழந்தைகள், 185 பெண்கள், 51 பெண் குழந்தைகள் என 423 பேருக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, இசிஜி, ஸ்கேன், ரத்தம் உள்ளிட்ட பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளித்து இலவச மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது. பெண்களுக்கு மார்பக புற்று நோய், கர்ப்ப வாய் புற்று நோய் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. கண் மருத்துவ உதவியாளர் டேனியல் ஜோசப் கண் பரிசோதனை செய்து பார்வை திறன் குறைந்தோரை உரிய சிகிச்சைக்கு டாக்டரிடம் பரிந்துரைத்தார். உயர் சிகிச்சைக்காக 3 பேர் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். தோல், காச நோய் சிகிச்சை, டெங்கு தடுப்பு, ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தன. சித்தா பிரிவு சார்பில் நில வேம்பு குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கரு.மகேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் மெய்.ராமச்சந்திரன் -மண்டபம், கோபிநாத் – தாமரைக்குளம் நகப்புறம், அம்பேத்கர் – தாமரைக்குளம் ஊரகம், கேசவன் – உச்சிப்புளி, நாகேந்திரன் – புதுமடம், தியாகராஜன் – பாம்பன், வைரவ சுந்தரம் – தங்கச்சிமடம் , பாலு – ராமேஸ்வரம் நகர், மருந்தாளுநர் நந்தகோபால் (சித்த மருத்துவம்), வட்டார சுகாதார தலைமை செவிலியர் மாலதி மற்றும் வட்டார செவிலியர்கள் மருத்துவ முகாம் ஏற்பாடுகளை செய்தனர்.
Category:
செய்திகள்
சுகாதார சீர்கேட்டால் மாணவர்கள் அவதி : தொற்றுநோய் பரவும் முன் நடவடிக்கை மேற்கொள்வார்களா?
by mohan
written by mohan
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள காந்திநகர் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகின்றது. பட்டியல் இனத்தைச் சார்ந்த ஏழை எளிய மக்களின் குழந்தைகள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி அருகில் பொதுக் கழிப்பறை உள்ளது. இவை சுத்தமாக இல்லாததால் இப்பள்ளி அருகில் திறந்த வெளியில் பலரும் மலம் கழித்து வருகின்றனர். மேலும், இப்பகுதியில் சாக்கடை கழிவு நீர் தேங்கியுள்ளது.இப் பள்ளிக்கூடத்தின் அருகே பாம்பாற்று ஓடை செல்கின்றது. இந்த ஓடையில் கழிவுகள், கழிவுநீர், குப்பைகள் கொட்டப்படுவதனால் அதிக அளவில் துர்நாற்றம் வீசுவதோடு , சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மாணவர்கள் மற்றும் இப்பகுதி பொதுமக்களை தொற்று நோயில் இருந்து காக்கும் வகையில் தாமரைக்குளம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
சாதிக்பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரியலூரில் வனவியல் விரிவாக்க மையத்திற்கு சுற்றுசுவர் அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்திட சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
by mohan
written by mohan
வனவியல் விரிவாக்க மையம் அரியலூர் – பெரம்பலூர் சாலையில் சித்தளியில் இயங்கி வருகிறது.காடுகளில் மரம் வளர்ப்பவர்களுக்கு இங்கே மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. இந்த வனவியல் காப்பகத்துக்கு உள்ளே மான்கள் அதிகமாக உள்ளன .இந்த வனவியல் காப்பகம் முன்பு நுழைவாயில் இருபுறமும் கம்பி வேலி இருந்து வந்தது. அவைகள் போதிய பராமரிப்பு இல்லாததால் அனைத்தும் மக்கி மண்ணாகி விட்டன . தற்பொழுது நுழைவாயிலுக்கு பாதுகாப்பற்ற முறையில் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த பகுதிகளில் மான்கள் உள்ளே இருந்து வெளியே வந்து சாலையில் அடிபட்டு இறப்பதும் வாடிக்கையாக உள்ளது.
மான்களைப் பாதுகாக்கவும் வனவியல் விரிவாக்க மையம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும் , உடனடியாக போர்கால நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் அல்லது தரமான கம்பி வேலிகள் அமைக்க வேண்டும் இதனால் விபத்துக்கள் பெருமளவில் தடுக்கப்படும்.மேலும் இந்தப் பகுதியை முழுமையாக பாதுகாக்கப்பட்ட மான்களின் சரணாலயமாக ஒரு மாற்றம் செய்யப்பட்டு பெரம்பலூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவர்களுக்கு இந்த சரணாலயத்தில் அழைத்துச் செல்ல வழிவகை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் பாதை அமைப்பின் சார்பில் சமூக ஆர்வலர் வெண்மணி வரதராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செந்தமிழ் நகரில் பிரியாணி கடை உள்ளது. அந்த கடையில் விறகுக்கு பதிலாக டயர்களை வைத்து அடுப்பு எரித்து பிரியாணி செய்கின்றனர். இதனால் பிரியாணி சாப்பிடுவர்களுக்கு பல விதமான நோய்களுக்கு ஆளாகின்றனர். இந்த பிரியாணியைத்தான் பேரூராட்சி அதிகாரிகளும் கடைநிலை ஊழியர்களும் ஓசியில் சாப்பிடுகின்றனர்.உடன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை .விடுத்தனா்.
செங்கம் எபிநேசர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக மருத்துவ சான்றிதழ் வழங்க வேண்டும்-TARATDAC சார்பில் கோரிக்கை
by mohan
written by mohan
திண்டுக்கல் மாவட்டத்தில் ஓவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறுகிறது.இம்முகாமில்பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளை ஊனத்தோடு தொடர்புடைய மருத்துவர் பரிசோதித்து ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப மருத்துவ சான்றிதல் வழங்குவார். இவ்வாறு வழங்கும் சான்றிதழில் நிரந்தர ஊனம் அல்லது தற்காலிக ஊனம் என குறிப்பிட்டு அடையாள அட்டை வழங்கப்படும்.மருத்துவத்தின் மூலமாக குணப்படுத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு ஆண்டுகள் அல்லது மூன்று ஆண்டுகள் என காலவரையறை நிர்ணயித்து அடையாள அட்டை வழங்கினால் பரவாயில்லை.
கால் துண்டிக்கப்பட்டவர்கள், குணப்படுத்த முடியாத நிரந்தர ஊனம் உடையவர்கள், முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் என பலருக்கும் இரண்டு ஆண்டு, ஐந்து ஆண்டு என கால நிர்ணயம் செய்து மருத்துவ சான்றிதழில் மருத்துவர்கள் கையொப்பமிடுகிறார்கள்.இதனால், ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் மாற்றுத்திறனாளிகள் மீண்டும் மீண்டும் அடையாள அட்டையை புதுப்பிக்க மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் வர வேண்டிய தேவை ஏற்படுகிறது. மிகுந்த பொருட்செலவு ஏற்படுவதோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திண்டுக்கல்லை நோக்கி வருகைதர உடல் ரீதியாக பல்வேறு இன்னல்களையும் சந்திக்க வேண்டியுள்ளது.
உதாரணமாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியம் கொம்பேரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி கோபிக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை எப்படி குணப்படுத்துவது என தெரியாமல் மருத்துவதுறைக்கே சவால் விட்டுவரும் நிலையில் கோபிக்கு இரண்டு ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் அடையாள அட்டையை வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.
மீண்டும் கோபி தனது அடையாள அட்டையை புதுப்பிக்க 2000 ரூபாய் வரை செலவழித்து காரில் பலரது உதவியோடு மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வந்து புதுப்பிப்பது என்பது இயலாத காரியம்.முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் தினத்தை அனுசரிக்கும் இந்த நாளில் மேலும் மேலும் கொடுமைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே, மாவட்ட நிர்வாகம் குணப்படுத்த முடியாத மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நிரந்தர அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் வேறு வழியின்றி எங்களது சங்கத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளை திரட்டி திண்டுக்கல் அரசு மருத்துவமனையை முற்றுகையிட வேண்டிய நிலை ஏற்படும் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் P.செல்வநாயகம் – மாவட்ட தலைவர்S.பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லை தாம்பரம் விரைவு ரயிலுக்கு அமோக வரவேற்பு-மகிழ்ச்சி வெள்ளத்தில் ரயில் பயணிகள்
by mohan
written by mohan
நெல்லை-தாம்பரம் இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயிலுக்கு கடையம் ரயில் நிலையத்தில் 05.09.19 வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. திருநெல்வேலியிருந்து அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக தாம்பரத்திற்கு வியாழக்கிழமைகளில் விரைவு ரயில் இயக்கப்பட்டது.இந்த ரயில் கடையம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து தென்மண்டல ரயில்வே பொதுமேலாளர் ராகுல் ஜெயினை சந்தித்து சா.ஞானதிரவியம் கோரிக்கை விடுத்தார். இதை அடுத்து இந்த ரயில் கடையத்தில் நின்று செல்ல உத்தரவிடப்பட்டது.இதனால் மகிழ்ச்சியடைந்த பயணிகள் வியாழக்கிழமை மாலை ரயில் பயணிகள் சங்க மாவட்ட நிர்வாகி அந்தோணி தலைமையில் இனிப்பு வழங்கி வரவேற்றனர். இந்நிகழ்வில் நிலைய கண்காணிப்பாளர் கணேசன்,நிலைய அலுவலர் ராஜலிங்கம் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவணம்பட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் உமாதேவி(45) என்பவர், இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக உத்தப்பநாயக்கனூர் அரசு பாலிடெக்னிக் அருகே உள்ள மொட்டமலையில் கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இந்த வழக்கில் தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் மேகிழார்பட்டியைச் சேர்ந்த மகாலிங்கம்(51) என்பவனை பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் கிணற்றுக்குள் தள்ளி தான் கொலை செய்ததாக ஒத்துக் கொண்டான்.மேலும் இவ்வழக்கு தொடர்பாக ஆட்டோ டிரைவர் அருண்குமார்(20) ஆகிய இருவர் மீது படி வழக்குப் பதிவு செய்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் கைது செய்தனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஜெயவேலு ஆசிரியருக்கு நினைவு பரிசு வழங்கினார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிரேத பரிசோதனை அறைக்கு அருகே உள்ள கழிவுநீர் தொட்டியில் பசுமாடு ஒன்று மேலே நடந்து சென்றபோது கழிவுநீர் தொட்டி உடைந்து அதன் உள்ளே பசுமாடு விழுந்தது .பொதுமக்கள் அதை மீட்க கடுமையாக போராடினார்கள். எனினும் மீட்க முடியவில்லை. பின்னர் தல்லாகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து தீயணைப்பு துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பசுமாட்டை உயிருடன் மீட்டனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சேடபட்டி காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட காளப்பன்பட்டி பகுதியில் சேடபட்டி போலீசார் ரோந்து சென்றபோது சட்டவிரோதமாக கஞ்சா விற்று கொண்டிருந்த கமலாபட்டியை சேர்ந்த அல்லிக்கொடி (எ) வன பிச்சை(45) மற்றும் காசிமாயன்(45) ஆகிய இருவர்களையும் கைது செய்து 200 கிராம் கஞ்சாவை கைப்பற்றி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் ஆண்டார்கொட்டாரம் காதவனேந்தல் அம்மச்சியம்மன் கோவில் அருகே கருப்பாயூரணி போலீசார் ரோந்து சென்றபோது சட்டத்துக்கு புறம்பாக பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்த நவமணி (34), பிரபு(34), முனியசாமி(45) என்பவர்களை கைது செய்தும், மேற்படி நபர்கள் சீட்டு விளையாட பயன்படுத்திய சீட்டுகள்- 52 , பணம் ரூ- 600 பறிமுதல் செய்து, கருப்பாயூரணி போலீசார் மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த நபர் மற்றும் உடந்தையாக இருந்த அவரின் தாயும் கைது
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் கீழவளவு அருகே பூதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணுக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த சத்யராஜ்(24) பாலியல் தொந்தரவு செய்ததாக கீழவளவு போலீசில் புகார் அளிக்கப்பட்டதன்பேரில் உடந்தையாக இருந்த அவரது தாயார் செல்வம்(44) ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்ட ரேஷன் கடை பணியாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனா்.தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க தேர்தல் மாநில துணை தலைவர் வி.பி தினகரன், மாநில இணை செயலர் எஸ். மாரிமுத்து ஆகியோர் தலைமையில் நடந்தது . இராமநாதபுரம் மாவட்ட தலைவராக வி.பி. தினகரன்,மாவட்ட செயலராக பி. ஞனசேகரன்மாவட்ட பொருளாளராக டி. பி.செல்வம், துணை தலைவர் களாக பி. பழனீஸ்வரன், கே.கோவிந்தன் இணை செயலராக எஸ். மாரிமுத்து, என்.ஜெகன் குமார், பொதுக்குழ உறுப்பினர்களாக எம்.ஆறுமுகம்,பி.பஞ்சராஜ்,ராமகிருஷ்ணன்,எஸ்.செய்யது இபுராஹீம் வி.செல்வ முருகன், பி.வாசு,வி.ஜான்சிராணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மது குடிக்க பணம் தர மறுத்த மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை இராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு
by mohan
written by mohan
இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உடையநாதபுரத்தைச் சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுநர் சதீஷ்குமார்,36. இவரது மனைவி சண்முகசுந்தரி,24. இவர்களுக்கு 13 வயது மகள் உள்ளார். கடந்த 24.01.2012 மாலை ரமேஷ்குமார், மது குடிக்க சண்முகசுந்தரியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். பணம் தர மறுத்த சண்முகசுந்தரி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து, வீட்டை பூட்டிவிட்டுச் தப்பினார். சண்முகசுந்தரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக ரமேஷ்குமார் மீது அபிராமம் போலீசார்கொலை வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இன்று நடந்த இறுதி விசாரணையில், சண்முகசுந்தரியை எரித்துக் கொன்ற ரமேஷ்குமாருக்குஆயுள் தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி டி.பகவதியம்மாள்தீர்ப்பு அளித்தார் அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்த மாண்புமிகு நீதிபதி மற்றும் அகில இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் சி.கே. பிரசாத் “தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்” மாநிலத் தலைவரை தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார், அதனை அடுத்து சங்கத்தின் தலைவர் தலைமையில் பல்வேறு நிர்வாகிகள் சென்று சந்தித்து பேசினர்.அப்போது பல விஷயங்கள் பேசப்பட்டது மட்டும் அல்லாமல் சங்கத்தின் சார்பாக பல கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டது.
அதில் முக்கியமாக சில மாநிலங்களில் இருப்பது போல் தமிழகத்திலும் பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம் அமைக்க பட வேண்டும் என்ற கோரிக்கை. அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டு நிச்சயமாக அதற்கான முயற்சிகள் செய்வோம் என்று கூறினார். மேலும் மாண்புமிகு சி.கே.பிரசாத் கூறும்போது தமிழகத்தில் இருந்து தமக்கு இரண்டே இரண்டு புகார்கள் மட்டுமே வந்ததாகவும் (அன்பழகன் மற்றும் கார்ட்டூனிஸ்ட் பாலா சம்பந்தமாக) மேலும் பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டது சம்பந்தமாக தன்னிடம் புகார் அளிக்கப்படும் பட்சத்தில் தகுந்த முறையில் நடவடிக்கை என்றும் கூறினார். WJUT எப்போது சங்க நிகழ்ச்சி நடத்தினாலும் தாம் அவசியம் வந்து கலந்து கொள்வதாகவும் கூறியுள்ளார். இந்த சந்திப்பின் போது மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ், மாநிலப் பொதுச் செயலாளர் ஆர். சந்திரிகா, மாநில இணைச் செயலாளர்கள் லட்சுமி ராஜாராம், சன் டிவி ரமேஷ், ஜெய் சங்கர், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ரவிச்சந்திரன், காந்தி, பொதுக் குழு உறுப்பினர் மலையப்பன், தலைமை நிலைய இணைச் செயலாளர் வல்லரசு,சென்னை மாவட்ட செயலாளர் இஸ்மாயில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுலைமான், மாவட்ட துணைத் தலைவர்கள் ஆண்டனி செல்வா, ராஜ் டிவி சாலமன் மாவட்ட இணைச் செயலாளர் பபிதா மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
போளூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் போளூர் நகரம் அத்தீமூர் பெரியகரம் மண்டகொளத்தூர் ராந்தம் பெலாசூர் கலசபாக்கம் மற்றும் போளூர் நகரை சுற்றிஉள்ள கிராமங்களுக்கு நாளை 7-09-2019 காலை 9.00 மணிமுதல் மாலை 5.00மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட்டும் போளூர் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொட்டும் மழையில் சாலை மறியல் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் ப.சிதம்பரம் கைது கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 50 பேர் கைது
by mohan
written by mohan
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணா பேருந்து நிலையத்தில் ப.சிதம்பரம் கைது செய்ததை கண்டித்து மத்திய அரசு பழிவாங்கும் போக்கை கைவிட கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் திடீரென பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொட்டும் மழையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 காங்கிரஸ் தொண்டர்களை கைது செய்து போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரசு செட் டாப் பாக்ஸ் செயல்படுத்தாத ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் அறிவிப்பு
by mohan
written by mohan
மத்திய அரசின் தொலைத்தொடர்பு அமைச்சகம் நாடு முழுவதும் டிஜிட்டல் ஒளிபரப்பு மூலம் மட்டுமே டிவி சேனல்களின் ஒளிபரப்பை கண்டுகளிக்க ஆணையிட்டு அதன்படி நாடு முழுவதும்
பழைய முறையிலான “அனலாக்” முறை ஒளிபரப்பு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மத்திய அரசுடன் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் பெற்று கட்டுப்பாட்டு அறை அமைத்து 1.9.2017 முதல் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை வழங்கி உயர் தொழில் நுட்பத்தில் துல்லிய (டிஜிட்டல்) முறையில் டிவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமறை ஆணையம் (டிராய்) விதிமுறைகளின்படி “அனலாக்” முறையில் சிக்னலில் ஒளிபரப்புவது செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டு, சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அனலாக் முறையில் ஒளிபரப்பு செய்யும் ஆபரேட்டர்கள் உடனடியாக ஒளிபரப்பை நிறுத்தம் செய்து சந்தாதாரர்களுக்கு டிஜிட்டல் முறையில் மட்டுமே ஒளிபரப்பு செய்ய வேண்டும். மீறினால் சட்டப்படி ஆபரேட்டர்களது ஒளிபரப்பு உபகரணங்களை பறிமுதல் செய்து,கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் கேபிள் டிவி ஆபரேட்டர், அஞ்சலக உரிமம் ரத்து செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது அரசு கேபிள் டிவி நிறுவனம் மாதக்கட்டணத்தொகையான ரூ.154 (வரிகள் உட்பட) என நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.மேலும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் செட்டாப் பாக்ஸ்களை பெற்றுக் கொண்ட ஒரு சில ஆப்ரேட்டர்கள், அரசு செட்டாப்பாக்ஸ்களை செயலாக்கம் செய்யாமல் தனியார் நிறுவனங்களிடம் செட்டாப் பாக்ஸ்களை பெற்று ஒளிபரப்பு செய்து வருகின்றனர். இவர்கள், உடனடியாக அரசு செட்டாப் பாக்ஸ்களை செயலாக்கம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அரசால் வழங்கப்பட்ட விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை பயன்படுத்தாமல் வைத்திருப்பின் அதனை ஆபரேட்டர்கள் மூலம் செயலாக்கம் செய்ய வேண்டும். தாங்கள் குடியிருப்பு வீட்டை காலி செய்து விட்டு, வேறு பகுதிக்கு செல்லும் போது,அல்லது வேறு இணைப்பிற்கு மாறினாலோ தாங்கள் பெற்ற அரசு செட்டாப் பாக்ஸை ஆப்ரேட்டரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சந்திரயான்-2 விண்கலம் விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையில் இறங்க வேண்டி காலை இறைவணக்க கூட்டத்தில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் மாணவர்கள் ,ஆசிரியர்கள் அனைவரும் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.விட முயற்சியுடன் ,நம்பிக்கையுடன் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க உள்ள சந்திராயன் -2 யை வடிவமைத்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் ,தலைவர் சிவன் அவர்களது கூட்டு முயற்சிக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமேஸ்வரத்தில், மகளின் திருமண வரவேற்பு விழாவுக்கு வந்த அனைவருக்கும் தாம்பூலப் பையுடன் விதைப் பந்துகளை வழங்கிய அரசு அதிகாரியின் செயல், அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.ராமேஸ்வரம் காளவாய் தெருவைச் சேர்ந்தவர் ராமநாதன். இவர், மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் பகவதி என்ற ஜனனிக்கும் கோவை சூலூரைச் சேர்ந்த கெளதம் ராஜுக்கும் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து, ராமேஸ்வரத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியவர்களுக்கு, மணமகள் வீட்டின் சார்பில் துணியிலான தாம்பூல பை வழங்கப்பட்டது. அந்தப் பைக்குள் இருந்த அட்டைப்பெட்டியில் புங்கன், வேம்பு, பூவரசு, சரக்கொன்றை, நெல்லி, நாவல் போன்ற விதைப் பந்துகள் இருந்தன.அத்துடன், ‘இது, இயற்கை அன்னையை காப்பதற்கான எங்களின் சிறு முயற்சி. இந்த முயற்சியை வெற்றி ஆக்குவதும் மேலும் தொடர்வதும் உங்கள் கைகளில்’ என்ற வாசகமும் தாம்பூலப் பையில் பொறிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து ராமநாதன் கூறுகையில், “கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பின்போது நிவாரணப் பணிகளை மேற்கொள்ள புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அலுவலக ரீதியாக அனுப்பப்பட்டேன். அங்கு, கஜா புயல் ஏற்படுத்திய தாக்குதலினால் மரங்கள் வேருடன் வீழ்ந்து கிடந்த சம்பவம் என்னை வெகுவாகப் பாதித்தது.அப்போதே, ‘வீழ்ந்து கிடக்கும் மரங்களுக்கு பதிலாக நம்மால் முடிந்த அளவு மரங்களை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்’ என மனதில் நினைத்தேன். இதையடுத்து, எனது மகளின் திருமண விழாவில் பங்கேற்பவர்களுக்கு விதைப் பந்துகளை வழங்கிட முடிவு செய்தேன்.அதற்காக, அவினாசி பகுதியிலிருந்து 6,000க்கும் அதிகமான விதைப் பந்துகளை வாங்கி வந்து ஒவ்வொரு பாக்கெட்டிலும் 6 விதைப் பந்துகளை வைத்து வழங்கினேன்” என்றார்.
You must be logged in to post a comment.