மதுரை மாவட்டம் தல்லாகுளம் காவல் நிலையத்தில் உட்பட்ட பகுதியில் தடைசெய்யப்பட்ட வெளி மாநில 200மது பாட்டில்கள் (பாண்டிச்சேரி) மதுபானம் பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடா்பாக அய்யர் பங்களாவைச் சோ்ந்த சுப்பையா முன்னதாக கைது செய்யப்பட்டு அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Category:
செய்திகள்
முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தொடங்கி வைத்த அம்மா திட்ட முகாம், தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு கிராமங்களில் நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது, இதன் ஒரு பகுதியாக ஆத்தூர் வட்டம் அம்பாத்துறை கிராமம் மேலக்கோட்டை சமுதாய கூடத்தில் நடைப்பெற்றது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, ரேசன் கார்டு, முதியோர் உதவித் தொகை, மற்றும் அரசு சார்ந்த உதவிகளுக்கு மக்களிடத்தில் மனுக்கள் பெறப்பட்டன.
அம்மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வும் காணப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் சுரேஷ் குமார், தேர்தல் துணை வட்டாட்சியர் ஜெயப்பிரகாஷ்,ஆத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுகந்தி, வருவாய் ஆய்வாளர் மதிவானி, அம்பாத்துறை கிராம நிர்வாக அலுவலர் சாகிரா பானு, கீழக் கோட்டை கிராம நிர்வாக அலுவலர் ராஜலெட்சுமி, N.பஞ்சம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், கலிக்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கோகுல குமார், உதவி தோட்டக் கலை அலுவலர் கலையரசன், அதிமுக ஊராட்சி செயலர் துளசி, அம்பாத்துறை கிராம உதவியாளர் ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டு மனுக்களை பெற்றுக் கொண்டனர்.இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நூறு நாள் வேலை வாய்ப்பில் சம்பளம் வழங்க கோரி செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
by mohan
written by mohan
செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நூறு நாள் வேலை வாய்ப்பில் சம்பளம் வழங்க கோரியும் 100நாள் வேலை அட்டை வைத்திருந்த அனைவருக்கும் வேலை வழங்க கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் மாநில பொருளாளர் சங்கர் தலைமையில் மாவட்ட செயலாளர் பாண்டியன் மாவட்ட தலைவர் உமாமகேஸ்வரன் மாவட்ட பொருளாளர் காசி ஒன்றிய தலைவர் மலைச்சாமி சி பி எம் முருகன் மற்றும் செல்லம்பட்டி ஒன்றிய நிர்வாகிகள் பெண்கள் கலந்து கொண்டனர் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் சரஸ்வதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடித்து வைத்தனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆரிய பட்டி கிராம பொதுமக்கள் குடிநீர் கேட்டு செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
by mohan
written by mohan
செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆரிய பட்டி கிராம பொதுமக்கள் குடிநீர் கேட்டு செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை ஆரிய பட்டியல் கடந்த இரண்டு மாதங்களாக சரியான குடிநீர் வழங்கப்படாததால் போர்வெல்லில் தண்ணி இல்லாததால் புதிய போர்வெல் அமைக்க கோரி செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக அமர்ந்து முற்றுகையிட்டனர் இதில் ஆரிய பட்டி கிராம் ஆண்கள் பெண்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சரஸ்வதி வள்ளி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதனைத் தொடா்ந்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
போளூர் ஊராட்சி ஒன்றிய மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்
by mohan
written by mohan
போளூர் ஊராட்சி ஒன்றிய மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. உதவி திட்ட அலுவலர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். சிறப்பு பயிற்றுனர் கலா வெங்கடசுப்பிரமணியன் வரவேற்றார்.இதில் எலும்பு முறிவு மருத்துவர் நடராசன், காது மூக்கு தொண்டை மருத்துவர் பழனிவேல்ராஜன், கண்மருத்துவர் சரண்யா, குழந்தைகள் நலமருத்துவர் ரேவதி, மனநல மருத்துவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் மாற்றுத்திறன் குழந்தைகளை ஆய்வு செய்து அவர்கள் ஊனத்தின் தன்மைக்கேற்ப அடையாள அட்டைக்கு தேர்வு செய்தனர்.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், மாவட்ட கல்வி அலுவலர் கருணாகரன் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர்.இதில் புள்ளியியல் அலுவலர் ராமமூர்த்தி, வட்டார கல்வி அலுவலர் மோகன், அரசினர் பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி, ஆசிரிய பயிற்றுநர்கள் சுகந்தி, விஜயலட்சுமி, ரவிக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேனி பிசி பட்டி பேருந்து நிலையத்திலிருந்து வீரபாண்டி அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் தினமும் நுாற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.
இவா்கள் பள்ளி செல்லும் குறிப்பிட்ட வழித்தடத்தில் பேருந்துகள் நிற்பது கிடையாது.ஒரு சில பேருந்துகள் நின்றாலும் கூட்டமாக இருப்பதினால் மாணவ மாணவியா் படியில் தொங்கிக் கொண்டே ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனா்.எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் அப்பகுதியில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை தாலுகா பொற்குணம் மதுராகாரப்பள்ளம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. தி.மு.க. எம்.எல்.ஏ. கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் ஸ்ரீதேவி வரவேற்றார். முகாமில் 1,014 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.முகாமில் கலெக்டர் கந்தசாமி பேசியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மழைநீரை நாம் சேமிப்பதில்லை. கிராமங்களில் உள்ள குளம், குட்டை, ஆறுகள் தான் உங்களின் பலம். அதை அழித்தால் பலவீனம். சமுதாயத்திற்கு பலன் தருவதை நாம் அழித்தால் முன்னேற முடியாது. நம் முன்னோர்கள் நமக்கு வழங்கியதை நாம் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு வழங்க வேண்டும். இல்லை என்றால் கிராமங்கள் அழியக்கூடிய சூழ்நிலை உருவாகும்.தற்போது குடிமராமத்து திட்டம் மூலம் ஏரி, குளங்கள், ஊரணிகள் புனரமைக்கப்பட்டு வருகிறது. கிராமங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ள பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை ஏற்படவில்லை. கிராமங்களை வாழ வைப்பதும், அழிப்பதும் உங்களிடம் தான் உள்ளது. வாழ்வதற்கு உகந்த இடமாக கிராமங்களை நாம் தான் உருவாக்க வேண்டும்.விவசாயத்திற்காக 70 சதவீதம் நீர் செலவிடப்படுகிறது. விவசாயத்தில் தற்போது பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அதிகமாக சொட்டு நீர் பாசனம் பயன்படுத்தும் மாவட்டமாக திருவண்ணாமலை திகழ்கிறது. நிலத்தடி நீர் உயருவதற்கு மழை நீரினை நாம் அனைவரும் சேமிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக கலெக்டர் கந்தசாமி முகாம் நடைபெற்ற பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டார். அதைத் தொடர்ந்து வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகம் ஆகிய துறைகளின் மூலம் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார்.
இதனையடுத்து பொற்குணம் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். பின்னர் நார்த்தாம்பூண்டி ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கன்னியாகுமரி மாவட்டம் 23.08.2019 , அன்று சிதறால் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார் . இவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்பாக ஷர்மி என்ற பேராசிரியரை ஷாஜின் என்பவர் கொலை செய்த வழக்கில் சாட்சியாக இருந்து அவருக்கு ஆயுள் தண்டனை வாங்கி கொடுத்துள்ளார். இந்த பகை காரணமாக ஷாஜினின் நண்பனான பிரபல ரவுடி சுனில் (28) ஆனந்த் (27) , சஜிக்குமார் (24), சஜீன்(30) ஆகியோர் சேர்ந்து சாந்தகுமாரை கடத்தி சென்று 2 லட்சம் பணம் கேட்டு அவரது மனைவிக்கு செல்போனில் மிரட்டியுள்ளனர். செய்வது அறியாது திகைத்த அவரது மனைவி ராதா (36) மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் .சிவ சங்கர் தனிபடையினர் விரைந்து செயல்பட்டனர். குற்றவாளிகளுக்கு முதற்கட்டமாக 50,000 ரூபாய் சாந்தகுமாரின் மனைவியை வைத்து கொடுப்பது போல அவர்களை ஆலுவிளை பகுதியில் வரவழைத்து 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். கடத்தப்பட்ட 5 மணி நேரத்திற்குள்ளாக சாந்தகுமார் மீட்கப்பட்டார். குற்றவாளிகள் நான்கு பேரையும் மார்த்தாண்டம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தார். கடத்தப்பட்ட நபரை 5 மணி நேரத்திற்குள்ளாக மீட்ட காவல் துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
செய்தி வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கன்னியாகுமரி மாவட்டத்தில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக காவலர் நிறை வாழ்வு பயிற்சி ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது . அதில் 29-வது கட்ட பயிற்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ஸ்ரீநாத் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயபாஸ்கர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள்.
செய்தி வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த டி.கே.புரம் கிராமத்தை சேர்ந்த நரேந்திரன் (20) என்ற இளைஞர் மாட்டு வண்டி ஓட்டி செல்லும் போது தவறி விழுந்து அதே வண்டி சக்கரத்தில் சிக்கி பலியானார். இப்பகுதியில் கள்ளத்தனமாக மணல்தொடர்ந்து கடத்தப்படுவதாக குற்றம் சாட்டி அப்பகுதி மக்கள் அவ்வழியாக வந்த அரசு பஸ்ஸை சிறை பிடித்தனர். விசாரிக்க வந்த விருதம்பட்டு எஸ்.ஐயிடம் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். பின்பு போலீசார் சமாதானம் செய்த பின்புபோக்குவரத்து சீரானது.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் பயணி மீது டிரைவர், கண்டக்டர் தாக்குதல்.. போலீசார் விசாரணை…
by mohan
written by mohan
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜய் (35). மருத்துவ பிரதிநிதி. இவர் திண்டுக்கல் பஸ் நிலையத்தில், தேனி செல்லும் அரசு பஸ்சில் ஏறி நேற்று29.08.19 மாலை 4 மணிக்கு அமர்ந்து இருந்தார். அப்போது கண்டக்டர் அலெக்ஸ், டிக்கெட் கேட்டுள்ளார். ‘‘பஸ் எப்போது கிளம்பும்’’ என விஜய் கேட்டுள்ளார். இதற்கு கண்டக்டர், ‘‘இன்னும் 10 நிமிடத்தில் கிளம்பி விடும்’’ என கூறினார். ‘‘அதற்குள் டிக்கெட் போட வேண்டுமா’’ என விஜய், கண்டக்டர் அலெக்ஸ் மற்றும் டிரைவர் தினகரனை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த கண்டக்டரும், டிரைவரும் விஜயை தாக்கி பஸ்சில் இருந்து கீழே தள்ளினர். பின்பு பஸ்சில் இருந்து இறங்கி வந்தும் டிரைவரும், கண்டக்டரும் விஜயை தாக்கினர். பஸ் ஸ்டாண்டில் ஏராளமான பயணிகள் மத்தியில் பயணி ஒருவரை டிரைவர், கண்டக்டர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் குறித்து டிரைவர், கண்டக்டர் மீது விஜய், திண்டுக்கல் நகர் போலீசில் புகார் அளித்தார். தாக்குதலில் காயமடைந்த விஜய், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதே போல கண்டக்டர் அலெக்ஸ், டிரைவர் தினகரன் தங்களை விஜய் தாக்கியதால், காயமடைந்ததாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களும் விஜய் மீது போலீசில் அளித்துள்ளனர். திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் இருதரப்பு புகார் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தடை செய்யப்பட்ட மருத்துவ கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி எரிப்பதால் பொதுமக்கள் எதிர்ப்பு
by mohan
written by mohan
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கும்மனூர் கிராமத்தில் நடராஜ் (70) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அவருடைய அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக அதே கிராமத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகி ராஜகோபால் (35) என்பவர் கர்நாடகா மாநிலம் பெங்களுர் மருத்துவமனைகளிலிருந்தும், ஓசூர் பகுதியில் உள்ள மருத்துவமனைகளிலிருந்தும் மருத்துவ கழிவுகள் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்திய உபகரணங்கள் கழிவுகள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றை லாரியின் மூலம் கொண்டு வந்து தரம் பிரித்து எரிப்பதால் சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்களுக்கு தலைசுற்றல் மூச்சு தினறல் மற்றும் பல்வேறு உடல் கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன.
வழக்கம் போல் இன்று காலை மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரியை அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனர் பஞ்சப்பள்ளி காவல் ஆய்வாளரிடம் தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி பொதுமக்களை கலைந்து போக சொன்னதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல் ஆய்வாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் தகவலறிந்த பாலக்கோடு தாசில்தார் வெங்கடேஷ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் தனபால், துனை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உடனடியாக சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடந்தினர் 2 நாட்களில் அங்கு கொட்டி வைத்துள்ள மருத்துவ கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர் ..அதனையடுத்து மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது இச்சம்பவம் இப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டம். காட்பாடியில் மணல் வண்டி ஓட்டி வந்த இளைஞர் உயிரிழப்பு…காட்பாடி விருதம்பட்டு டி.கே.புரம் பகுதியை சேர்ந்த நரேந்திரன்(20) என்பவர் பாலாற்றில் இருந்து மணல் மாட்டுவண்டி ஓட்டிவரும் போது …வண்டியில் இருந்து தவறி விழுந்து வண்டி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு…இது குறித்துவிருதம்பட்டு காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனா்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக 15-வது பட்டமளிப்பு விழா ஆளுநர் தலைமையில் நடந்தது.
by mohan
written by mohan
காட்பாடி ஆக்சிலியம் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி 204 பேருக்கு பட்டங்களை வழங்கினார். துணைவேந்தர் தாமரைச்செல்வி வரவேற்றார். உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் பல் கலைக் கழக பதிவாளர் பெருவழுதி மற்றும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தினர் கலந்து கொண்டனர்.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டம் சுரண்டை காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு பற்றியும்,சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கிலும் அரசு வகுத்துள்ள சட்டங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் பொதுமக்களை சென்றடையும் வகையில் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு பேரணியை காவல் ஆய்வாளர் மாரீஸ்வரி துவக்கி வைத்தார். மேலும் எஸ்.ஐ-க்களான உமா மகேஸ்வரி, ஜெயராஜ், கல்யாண சுந்தரம், எஸ்எஸ்ஐ செய்யது இப்ராகிம் மற்றும் காவலர்கள்,பொதுமக்கள்,ஆகியோர் ஹெல்மெட் அணிந்து மாடசாமி கோவிலிருந்து கிளம்பிய விழிப்புணர்வு பேரணி பஸ்ஸ்டாண்ட் ரோடு, மற்றும் முக்கிய சாலைகள் வழியாக தினசரி மார்க்கெட் வந்தடைந்தது.
பேரணியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம், ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ 1000 அபராதம், இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டினால் ரூ 1000 அபராதம், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ 10000 அபராதம், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ 5000 அபராதம் மற்றும் சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்பது பற்றிய அறிவுறுத்தல்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.தொடர்ந்து ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டியவர்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டப்பட்டு விழிப்புணர்வு பேரணி இனிதே நிறைவுற்றது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஏழை அந்தண சமுதாய மாணவனுக்கு அந்தணர் முன்னேற்ற கழகம் சார்பாக கல்விஉதவிதொகையை மாநில மகளிரணிசெயலாளர் உமா கனேசன் சாஸ்த்திரிகள் வழங்கினார் உடன் மகளிரணி சென்னை மாவட்ட நிர்வாகிகள்..வழக்கறிஞர் ராஜாளி சீ ஜெயபிரகாஷ் நிறுவனர் தலைவர்.அந்தணர் முன்னேற்ற கழகம்.மாங்காடு பாலாஜி ஆத்ரேயா பொதுசெயலாளர். ஆகியோர் கலந்து கொண்டனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பல்வேறு விருதுகளைப் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வரும் நடிகரும் சமூக ஆர்வலருமான டாக்டர் அபி சரவணன்.!
by mohan
written by mohan
தற்போது மலேஷியாவின் தேசம் ஊடக சாதனையாளர் விருது விழாவில், அகில உலக அளவிலான நடிகர்களில் சிறந்த சமூக சேவகர் விருது பெற்றார்.!மலேஷியா மண்ணின் முன்னணி பத்திரிகை நிறுவனமாகத் திகழும் “தேசம் ஊடகம்” நடத்திய 2018, 2019 ம் ஆண்டிற்கான தேசம் சாதனையாளர் விருது விழாவில் பல்வேறு சாதனையாளர்களுக்கு மொத்தம் 130 விருதுகள் வழங்கி வரலாற்றில் முத்திரை பதித்துள்ளது.மலேசியா சாதனையாளர் புத்தகத்தில் பெயர் பதித்த தேசம் விருது விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 8 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.தேசம் பத்திரிகை நிறுவனர் குணாளன் மனியம் தலைமையில் கடந்த 24/08/2019 அன்று மலேசியா தலைநகரமான கோலாலம்பூரில் இந்த விருதுகள் வழங்கப்பட்டது.
இந்த தேசம் சாதனையாளர் விருது விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் பிரபல நடிகருமான டாக்டர் அபி சரவணன் அகில உலக அளவிலான நடிகர்களில் “சிறந்த சமூக சேவகருக்கான” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.சமீப காலங்களில் தமிழகத்தில் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரிடையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்று எவ்வித பிரதிபலனும் பாராமல் தமது சொந்த பணத்தை கொண்டு உதவிகள் செய்ததும்,அதே போல் தேனி குரங்கனி மலை தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்தது, சமீபத்தில் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்தது, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் பயணம் செய்து விவசாயிகளுக்கு ஆடு மாடுகள் வழங்கியது, ஒடிசா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்தது, மிகவும் முக்கியமாக அண்மையில் அஸ்ஸாம் மாநிலத்தில் கடும் மழை வெள்ளத்தால் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் கூட செல்ல முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டு பல நூறு கிராம மக்கள் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி தவித்து வந்த நிலையில் தமிழகத்தில் இருந்து டாக்டர் அபி சரவணன் லட்சக்கணக்கான அத்தியாவசிய பொருட்களுடன் நேரிடையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து உணவு, உடை, தண்ணீர், போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார், இதன் காரணமாகவே டாக்டர் அபி சரவணன் அகில உலக அளவிலான நடிகர்களில் சிறந்த சமூக சேவகர் என்ற உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்த விருதை மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் சிவக்குமார் வழங்கி கௌரவித்தார்.நடிகர்கள் பலர் பணம் ஒன்றே குறிக்கோளாக வைத்து செயல் பட்டு வரும் நிலையில் நடிகர்களில் இப்படியும் ஒரு சமூக ஆர்வலரா என்று அந்த அரங்கில் குழுமியிருந்த அதிகாரிகளும் பொது மக்களும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வரும் அபி சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி பாராட்டி மகிழ்ந்தனர்.மேலும் டாக்டர் அபி சரவணன் பல்வேறு வகையான சாதனைகளுக்காக பல விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.”மண்ணின் மைந்தன்””தங்க மகன்””அகில உலக அளவிலான நடிகர்களில் சிறந்த சமூக சேவகர்”இன்னும் பல்வேறு வகையான விருதுகளைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமேஸ்வரத்தில் ரயில் மறியலுக்கு முயன்ற மீனவர்கள் முயற்சியை போலீசார் முறியடித்தனர்.
by mohan
written by mohan
தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் மீன் தூள், மீன் எண்ணெய் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரியை ஜூலை 1, 2017-முதல் செலுத்த வேண்டும் என தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும், இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த தமிழக படகுகளை நாட்டுடமையாக்கக் கூடாது, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் ஆக. 24 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன் தொடர்ச்சியாக இன்று (ஆக.29), ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவ சங்க நிர்வாகிகள் போஸ், தேவதாஸ், சேசு ராஜா, சகாயம் ஆகியோர் தலைமையில் ரயில் மறியலுக்கு ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு பேரணி சென்றனர்.ராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் போலீசார் ரயில் மறியலுக்கு முயன்ற மீனவர்களை அரசு மருத்துவமனை அருகே தடுத்து நிறுத்தினர். மறியலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால்,அரசு மருத்துவமனை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக நகர் செயலாளர் கே.இ.நாசர் கான், காங்கிரஸ் நகர் தலைவர் ராஜா மணி, தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்க மாநில செயலர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர் .
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளை & சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை இணைந்து நடத்திய தொலைக்காட்சி சீரியல்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் வங்கி மற்றும் அஞ்சலகங்களில் சேமிக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு
by mohan
written by mohan
29.8.2019 அன்று வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளை & சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை இணைந்து நடத்திய தொலைக்காட்சி சீரியல்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் வங்கி மற்றும் அஞ்சலகங்களில் சேமிக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் களஞ்சியம் நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ களஞ்சிய முனீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு வில் மெடல்ஸ் நிறுவனர் தலைவர் Dr.கலைவாணி முன்னிலை வகித்தார்.முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.சேவியர் ராஜப்பா அவர்கள் தொலைக்காட்சி சீரியல்கள் குறித்த விழிப்புணர்வு உரையாற்றினார்.சிறுசேமிப்பு குறித்த தகவல்களை வழங்கினார்கள்SBI LIFE INSURANCE கிளை மேலாளர் அஸ்மத் எடுத்துரைத்தார்.இந்நிகழ்வில் பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் தங்கள் சந்தேகங்களுக்கும் தெளிவான பதில்களை கேட்டு அறிந்துகொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள தானிப்பாடி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஹேமசித்ரா தலைமையில் தனிப்படை அமைத்து ஒரே நாளில் தானிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள 5க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 11 கள்ளச்சாராய வியாபாரிகளை அதிரடியாக கைது செய்து அவர்களிடம் இருந்த ஆயிரம் லிட்டர் கள்ள சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது
You must be logged in to post a comment.