மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி மெயின்ரோட்டில் உள்ள தனியார் (கல்யாணி ஓட்டல் ) உணவகத்தில் சப்ளையராக பணிபுரிந்து வருபவர் முத்துமணி (25) . இவர் வழக்கம் போல் உணவகத்தில் வேலைபார்த்துகொண்டிருந்த போது 5 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து மு;ததுமணியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடினர். கண்இமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தால் உணவகத்தில் சாப்பிட்டுகொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். தகவலறிந்து சம்பவஇடத்திற்கு நேரில் சென்ற உசிலம்பட்டி காவல்துறை துணைகண்காணிப்பாளர் ராஜா, மற்றும் போலீசார் முத்துமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பிவைத்தனர்.முதற்கட்ட விசாரணையில் முத்துமணி மதுரை கீரைத்துறையைச் சேர்ந்தவர் என்பதும் இவர் மீது பல கொலை வழக்குகள் உள்ளதாகவும் முன்விரோதத்தால் யாரேனும் கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது.
Category:
மாவட்ட செய்திகள்
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 148 வது பிறந்தநாள் விழா : வ.வு. சி. சிலைக்கு மாலை அணிவித்து அரசியல் கட்சியினர் மரியாதை
by mohan
written by mohan
தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக,அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் அவரது சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.சுதந்திர போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 148வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ மாலை வஉசி சிலைக்கு அணிவித்தார். இதில், பொதுக்குழு உறுப்பினர் என்பி ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணைச் செயலாளர் ஆறுமுகம், இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன்,துணை அமைப்பாளர் பிரதீப், வழக்கறிஞர் ஆனந்த கபேரியல், உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் மாவட்ட செயலாளர் பி.ஏ ஆறுமுகநயினார் தலைமையில் அதிமுகவினர் வ.உ.சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் நகர செயலாளர் ஏசாதுரை, முன்னாள் நகரமன்ற தலைவர் மனோஜ்குமார், நகர சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் மைதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அதிமுக அமைப்புச் செயலாளர் சித.செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுகவினர் வ.வு.சிதம்பரனார் சிலைக்குமாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பிடிஆர் ராஜகோபால, அதிமுக நிர்வாகிகள் கேடிசி சங்கர், அந்தோணி, மில்லர்புரம் ராஜா, சகாயராஜ்,அன்புலிங்கம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ் முரளி தரன் தலைமையில் வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் டேவிட் பிரபாகரன், கோபால்,அருள்வளன், ஏசுதாஸ், சம்சுதீன், ஐஸ்வர்யா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநில துணைத் தலைவர் எம்ஆர் காந்தி மாலை அணிவித்தார். இதில்,மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்தனகுமார், நிர்வாகிகள் விஎஸ்ஆர் பிரபு, இசக்கிமுத்து, சிவராமன்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமையில் வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் கிழக்குப் பகுதி செயலாளர் எட்வின் பாண்டியன், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் கிழக்குப் பகுதிச் செயலளார் எட்வின் பாண்யன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதிலும் அக்கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா இன்று நடந்தது. தலைமை ஆசிரியை எஸ்தர் வேணி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.சோமசுந்தரம் தலைமை வகித்தார். ஆசிரியை (ஓய்வு) கஸ்தூரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.ஓய்வு ஆசிரியை கஸ்தூரிக்கு மாணவர் மாணவியர் பூங்கொத்து கொடுத்து கரஒலி எழுப்பி வரவேற்றனர். கஸ்தூரிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர், ஆசிரியைகள் வாழ்த்தினர்.6, 7, 8 ம் வகுப்பு மாணவர்கள் ஆசியர் வேடமிட்டு பாடம் நடத்தினர். பேச்சு, ஓவிய போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பள்ளி ஆசிரியைகள் கவுரவிக்கப்பட்டனர். பள்ளி மேலாண் குழு தலைவர் பர்வீன், பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் நாராயணன், ஆசிரியைகள் ராமேஸ்வரி, பாமா, விஜயகுமாரி, மீனா, மேகலா, சீனிவாசகன், ஞானசவுந்தரி, பவானி, சுந்தரி, முத்துலட்சுமி கலந்து கொண்டனர்.ஆசிரியை தௌலத் நிஷா பேகம் நன்றி கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு செப்.5 ஆசிரியர் தினத்தில் மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இதன்படி நடப்பு கல்வி ஆண்டில் தமிழகத்தில் தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 375 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் தமிழக அரசு பள்ளி கல்வித் துறை சார்பில் இன்று நடந்த ஆசிரியர் தின விழாவில் புதுமடம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் டேனியல், சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ், பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கணபதி, பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் பெரோஸ்கான், திருவரங்கம் திரு இருதயம் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் லாசர், முள்ளுவாடி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை உஷா, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியைகள் பீட்டர் ஜோஷ்வா (நாரையூரணி), கங்கா ( லட்சுமிபுரம்), சாந்தா (மாதவனூர்), முகாம்பிகை (கருங்குளம்), ராமநாதபுரம் ஹவுஸிங் போர்டு மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை உஷா ஆகியோருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையான் வழங்கி பாராட்டினார் . இவ்விழாவில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு மற்றும் கல்வி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர்காட்பாடி அருகே 2 சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் பெண் பலி.. 2 பேர் படுகாயம்..
by mohan
written by mohan
காட்பாடி அடுத்த மேட்டுக் காலணி பகுதியில் ஆந்திராவிலிருந்து வேலூர் நோக்கி வந்த காரும் கரசமங்கலத்திலிருந்து கண்டிப்பேடு பகுதிக்கு கட்டிட்ட வேலைக்கு சென்ற (2 சக்கர வாகனத்தில்) வர்கள் மீது மோதியதில் அல்லி முத்து என்பவரின் மனைவி சுமத்ரா (35) இறந்தார். 2 சக்கரத்தை ஓட்டி வந்தவரும் கார் ஓட்டி வந்தவரும் படுகாயம் அடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனா்.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முன்னாள் தமிழ் துறை தலைவர் பழனி ரகுலதாசன் ஆசிரியர் தின உரை நிகழ்த்தி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.அவர் பேசும்போது , ஆசிரியர்கள் அனைவரும் தினமும் படிக்க வேண்டும்.மாணவர்களின் கண்களை திறப்பவர்கள் ஆசிரியர்களே.பள்ளிகள்தான் கோவில்.ஆசிரியர்கள்தான் கடவுள்.பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் தினமும் நடந்ததை,உண்மையானதாக எழுத கற்று கொள்ளவேண்டும்.உங்களால் முடிந்த உதவியை மற்றவருக்கு செய்யுங்கள் என்று பேசினார்.நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தி வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சென்னையில் நடைபெற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழாவில் நல்லாசிரியர் விருது பெற்ற மதுரை ரூபி மெட்ரிகுலேஷன் பள்ளியின் முதன்மை ஆசிரியர் வெங்கடேசன்க்கு பள்ளிகள் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விருதுகளை வழங்கி கவுரவித்தனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருநெல்வேலி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம்கள் ஒவ்வொரு பகுதியிலும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக (6.09.19) நாளை அம்மா திட்ட முகாம் கீழ்கண்ட பகுதிகளில் ஐந்தாம் கட்டமாக நடைபெறுவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதிஷ் தெரிவித்துள்ளார்.மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பின் படி அம்பாசமுத்திரம் வட்டம் ஊர்காடு, சாத்துப்பத்து மற்றும் பாளையங்கோட்டை மேலப்பாட்டம், அவினாப்பேரி ஆகிய இடங்களில் அம்மா திட்ட முகாம் முகாம் நடைபெறுகிறது.
நாளை 06.09.19 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த அம்மா திட்ட முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை மற்றும் நிறுத்தம் செய்யப்பட்ட முதியோர் உதவித்தொகை மறுபரிசீலனை விண்ணப்பம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, நிலத்தாவாக்கள், சாலை வசதி, குடிநீர் வசதி தொடர்பாக மனுக்களை அளித்து பொதுமக்கள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியரின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
.மதுரை மாநகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 226 விநாயகர் சிலைகளை நேற்று 04.09.19 மாலை விளக்குத்தூண் விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக நான்கு மாசி வீதிகள் வழியாக எடுத்துச்செல்லப்பட்டு பேச்சியம்மன் படித்துறை அருகில் நல்ல முறையில் வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது..
மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி பாதுகாப்பு பணிக்கு 1500 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள், 200 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் மற்றும் 300 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் வெகு சிறப்பாக பாதுகாப்பு பணிபுரிந்த காவல்துறையினரை காவல் ஆணையர் பாராட்டினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி – பால் விலை உயர்வின் தொடர்ச்சியாக டீ, காபியின் விலையும் வெகுவாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் வேதனை
by mohan
written by mohan
தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு பால்விலையை உயர்த்தியுள்ளதால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் டீ, காபி விலை வெகுவாக உயர்ந்துள்ளது.8 ரூபாய்க்கு விற்பனை செய்த டீ 10 ரூபாய்க்கும், 10 ரூபாய்க்கு விற்பனை செய்த காபி 12 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் தினமும் 3 வேளை, 4 வேளை டீ, காபி குடிக்கும் பிரியர்களும், பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.பாலின் விலை உயர்ந்துள்ளதால் தற்போது டீ, காபி விலையை உயர்த்தியுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாபெரும் கபடி போட்டி..
by mohan
written by mohan
உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள குப்பணம்பட்டியில் 20ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவினையொட்டி கிராமத்தினர் சார்பாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டி நடைபெற்றது
இந்த கபடி போட்டி 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது. சிறுவர்களுக்கு ஒரு பிரிவு, பெரியவர்களுக்கு ஒரு பிரிவான தனித்தனியாக நடத்தப்பட்டது.இந்த கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பாரம்பரிய விளையாட்டான இந்த கபடி போட்டியில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.போட்டி தொடங்குவதற்கு முன்னதாக விநாயகருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசு ஓய்வூதியதாரர்களின் குறைதீர்ப்பு கூட்டம்
by mohan
written by mohan
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசு ஓய்வூதியதாரர்களின் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு சென்னை ஓய்வூதிய இயக்குநரக இணை இயக்குநர் இளங்கோவன் தலைமை தாங்கினார். வேலூர் சார் ஆட்சியர் மெகராஜ் கலந்து கொண்டு மாவட்டத்திலிருந்து வந்திருந்த ஓய்வூதியதாரர்களின் குறைகளை கேட்டறிந்தார். உதவி இயக்குநர்கள் மதிவாணன் .வேலாயுதம் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) சிலுப்பன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் ஆக்கிடாவலசை ஆரம்பப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. தலைமை ஆசிரியர் என்.கோமகன் தலைமையில் நடந்தது. ஆசிரியர் திருமேனி நாயகம் முன்னிலை வகித்தார். ராதா கிருஷ்ணன் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கட்டுரைப் போட்டியில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்கள் பி.ஹரிதா ஷினி, க. தருண் பாலன், ம.ஜெயபிரகாஷ் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. சத்துணவு அமைப்பாளர் தங்கம், அங்கன்வாடி பணியாளர் ராதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கப்பலோட்டிய தமிழன் வஉசி திருவுருவசிலைக்கு அந்தணர் முன்னேற்ற கழகம் மாலைஅணிவித்து மரியாதை …
by mohan
written by mohan
கப்பலோட்டிய தமிழன் .வ.உ.சிதம்பரனார் 148வது பிறந்தநாளை முன்னிட்டு அந்தணர் முன்னேற்ற கழகம் சார்பாக தூத்துகுடியில் வஉசி அவர்களின் திருவுருவசிலைக்கு அந்தணர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் ரா முத்துசிவம் ஆன்மீகஅணி செயலாளர் இளைஞரணி செயலாளர் உள்ளிட்டோர் மாலைஅணிவித்து மரியாதைசெய்தனர்..உடன் வழக்கறிஞர் ராஜாளி சீ ஜெயபிரகாஷ் நிறுவனர் தலைவர்.மாங்காடு பாலாஜி ஆத்ரேயா பொதுசெயலாளர் தூத்துகுடி மாவட்ட ரா.முத்து சிவம் மாவட்ட செயலாளர் ஆகியோா் கலந்து கொண்டனா்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆசிரியர் தினத்தையொட்டி மதுரை அருகே வலையங்குளத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் இன்று (5.9.19) தனது ஆசிரியை தனலட்சுமிக்கு தாங்கள் சேமித்து வைத்திருந்த சில்லரை நாணயங்களை அன்பு பரிசாக கொடுத்து வாழ்த்து தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
வி.காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நமது செய்தி எதிரொலி மதுரை மாடக்குளம் மெயின் ரோடு 75 மற்றும் 76 வது வார்டு சர்ச் அருகே மற்றும் பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு கடந்த ஐந்து நாட்களாக தெரு விளக்கு எரியவில்லை என நமது தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.. அதன் எதிரொலியாக இன்று அனைத்து பகுதிகளும் மின்விளக்கு எரிய தொடங்கியது ..தொடர்ந்து முயற்சி எடுத்த கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை நாளிதழுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இயற்கை வளத்தை மீட்டெடுக்க மாணவர்களுக்கு 2000 மரக்கன்று…! – சேலம் இளைஞர்கள் அசத்தல்
by mohan
written by mohan
சேலம் அருகே, நீராதாரத்தை பெருக்கி இயற்கை வளத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக, பள்ளி மாணவ – மாணவியருக்கு இரண்டாயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.சேலம் மாவட்டம் தப்பக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒருங்கிணைந்து, ‘நம்மாழ்வார் வழி இயற்கை மீட்டெடுப்பு குழு’ எனும் பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர்.கடந்த மாதம் இந்த அமைப்பினர், ஏரிகளில் வளர்ந்திருந்த சீமைக் கருவேல மரங்களை அகற்றி அங்கு பனை உட்பட இரண்டாயிரத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டனர்.
இந்நிலையில், தப்பக்குட்டை, எளம்பிள்ளை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பயிலும் மாணவ – மாணவியருக்கு கொய்யா, நாட்டுநெல்லி, மரநெல்லி போன்ற விட்டமின் சத்து தரும் தலா 2 மரக்கன்றுகள் வீதம் மொத்தம் இரண்டாயிரம் மரக்கன்றுகள் வழங்கினர்.இதுகுறித்து அந்த அமைப்பினர் கூறுகையில், “அதிக மரம் வளர்ப்பதனால் கிராமங்கள் பசுமையடைந்து, நீராதாரம் பெருகும். மற்ற பகுதி இளைஞர்களும் இதுபோல் செயல்பட்டால் இயற்கை வளத்தை உறுதியாக மீட்டெடுக்க முடியும்” என்று தெரிவித்தனர்.
நம்மாழ்வார் வழி இயற்கை மீட்டெடுப்பு குழுவினரின் இந்த முயற்சியை, சேலம் மாவட்ட பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றர்.
– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மரணத்தை தேடி செல்லும் கல்லூரி மாணவர்கள்.. கண்டுகொள்ளாத அரசு போக்குவரத்து நிர்வாகம் ..
by mohan
written by mohan
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கீழப்பட்டி செல்லும் அரசு பேருந்து அதிக அளவிலான மாணவர்களை ஏற்றிக்கொண்டு செல்கிறது. மாணவர்கள் படிகளையும் ஜன்னல்களையும் தொங்கிக் கொண்டு பயணம் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது .. தினம் தினம் மரணத்தை கையில் பிடித்துக்கொண்டு கல்லூரி செல்லும் மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகவே உள்ளது..
இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் கல்லூரி நேரங்களில் அதிக அளவு பேருந்துகளை விட்டு கல்லூரி மாணவர்களின் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டுமென பெற்றோர்களும் மாணவர்களும் பொது மக்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர் ..அதிக ஆட்களை ஏற்றிச் சென்றால் அபராதம் விதிக்கும் காவல்துறை இதுபோன்ற பேருந்துகளில் அதிக அளவு ஆட்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
வி செய்தியாளர் காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இறந்த பின்பும் மாற்றுத்திறனாளிக்கு தானமாக மோட்டார் பைக் வழங்கிய TARATDAC-சங்க உறுப்பினர்
by mohan
written by mohan
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா அ.கலையம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த சங்க உறுப்பினர் மாற்றுத்திறனாளி ராமகிருஷ்ணன் கடந்த மாதம் இயற்கை எய்தினார்.மேலும் அவர் உயிருடன் இருந்த காலத்தில் சங்கத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் கொஞ்சமும் தயக்கமின்றி தொடர்ந்து செய்து வந்தார். இந்நிலையில் அவரது மறைவுக்கு பின்னர் மாற்றுத்திறனாளிகளின் மேல் அளவுகடந்த பாசம் கொண்டிருந்த ராமகிருஷ்ணன் பயன்படுத்திய மூன்று சக்கர மோட்டார் வாகனத்தை மற்றொரு மாற்றுத்திறனாளிக்கு தானமாக அளிக்க அவரது குடும்பத்தார் முடிவு செய்தனர். இந்த தகவலை TARATDAC-யிடம் அவரது குடும்பத்தார் தொலைபேசி மூலம் தெரிவித்தனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியம் பாலக்குறிச்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கருப்பையா மிகவும் வறிய நிலையில் கஷ்டப்பட்டு வாழ்ந்துவரும் நிலையில் சுயமாக தொழில் செய்து பிழைக்க வசதியாக பைக் இருந்தால் அனைத்து இடங்களுக்கும் சென்றுவர ஏதுவாக இருக்கும். எனவே, சங்கத்தின் மூலமாக தனக்கு பைக் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து இருந்தார்.அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு அவருக்கு பைக் வழங்க இயலாது என்பதால் தனியாரிடமிருந்து பைக் பெற்று தருகிறோம் என வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் 03.09.19 அன்று ராமகிருஷ்ணன் பயன்படுத்திய மோட்டார் பைக்கை கருப்பையாவின் வீட்டிற்கே சென்று சங்கத்தின் மாவட்ட செயலாளர் பகத்சிங் மூலமாக தானமாக வழங்கப்பட்டது.
இறந்த துக்கம் மாறாத நிலையிலும் மாற்றுத்திறனாளிக்கு உதவிய ராமகிருஷ்ணன் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் S.பகத்சிங் – மாவட்ட செயலாளர் நன்றி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வாக்காளர் பெயர் மற்றும் திருத்தம் சரிபார்ப்பு சம்பந்தமாக வாக்காளர் விழிப்புணர்வு முகாம்
by mohan
written by mohan
திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி கிராமம் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணை படி வாக்காளர் பெயர் மட்டும் திருத்தம் சரிபார்ப்பு சம்பந்தமாக வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இவற்றில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர், தேர்தல் துணை வட்டாட்சியர் மற்றும் அங்கு விலாஸ் பள்ளி தலைமையாசிரியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
You must be logged in to post a comment.