13
தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு பால்விலையை உயர்த்தியுள்ளதால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் டீ, காபி விலை வெகுவாக உயர்ந்துள்ளது.8 ரூபாய்க்கு விற்பனை செய்த டீ 10 ரூபாய்க்கும், 10 ரூபாய்க்கு விற்பனை செய்த காபி 12 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் தினமும் 3 வேளை, 4 வேளை டீ, காபி குடிக்கும் பிரியர்களும், பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.பாலின் விலை உயர்ந்துள்ளதால் தற்போது டீ, காபி விலையை உயர்த்தியுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
You must be logged in to post a comment.