Home செய்திகள் உசிலம்பட்டி – பால் விலை உயர்வின் தொடர்ச்சியாக டீ, காபியின் விலையும் வெகுவாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் வேதனை

உசிலம்பட்டி – பால் விலை உயர்வின் தொடர்ச்சியாக டீ, காபியின் விலையும் வெகுவாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் வேதனை

by mohan

தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு பால்விலையை உயர்த்தியுள்ளதால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் டீ, காபி விலை வெகுவாக உயர்ந்துள்ளது.8 ரூபாய்க்கு விற்பனை செய்த டீ 10 ரூபாய்க்கும், 10 ரூபாய்க்கு விற்பனை செய்த காபி 12 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் தினமும் 3 வேளை, 4 வேளை டீ, காபி குடிக்கும் பிரியர்களும், பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.பாலின் விலை உயர்ந்துள்ளதால் தற்போது டீ, காபி விலையை உயர்த்தியுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!