ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மூணாவது வார்டுக்கு உட்பட்ட சதக்கத்துல் ஜாரியா நடுநிலைப் பள்ளியில் எதிர்ப்புற சந்தில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பாதை உள்ளது . இப்பாதை இரவு நேரங்களில் இருளடைந்து காணப்படுவதால் பெண்களும் குழந்தைகளும் அவ்வழியில் செல்வதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் வயதானவர்கள் அவ்வழியில் பலமுறை விழுந்ததாகவும் சொல்லப்படுகிறது . நகர்மன்ற உறுப்பினர் கண்டும் காணாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அப்பகுதியில் நீண்ட காலமாக பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி நிதியிலிருந்து சூரிய ஒளி மின்விளக்கு பொருத்தப்பட்டு பொதுமக்களுக்கு பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது . கீழக்கரை நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தி மக்கள் பயன்படும் வகையில் அப்பகுதியில் மின்விளக்கு பொருத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சார்பாகவும் சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் வேண்டுகோள் விடப்படுகிறது.
Category:
மாவட்ட செய்திகள்
செய்திகள்கவுன்சிலர்கீழக்கரை செய்திகள்கீழக்கரை மக்கள் களம்நகராட்சிநிர்வாகம்பிரச்சனைமாநில செய்திகள்மாவட்ட செய்திகள்
காங்கேயம் அருகே ஓலப்பாளையத்தில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவத்தில் காங்கேயம் அரசு மருத்துவமனையில் இறந்த 5 பேர் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்பு அவருடைய சொந்த ஊரான திருப்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
திருப்பூர், நல்லிக்கவுண்டர் நகர், புது நகர் 7வது வீதியை சேர்ந்த சந்திரசேகரன் சித்ரா தம்பதியினர் தங்களது 60வது திருமண விழவிற்கு மகன்கள் சசிதரன் 30, இளவரசன் 26 மற்றும் மருமகள் ஹரிவிவித்ரா 30.பேத்தி ஷாக் ஷி (3 மாதம்) குழந்தையுடன் திருக்கடையூர் சென்றுவிட்டு திருப்பூர் திரும்பி வரும்போது வெள்ளகோவிலை அடுத்த ஓலப்பாளையம் அருகே எதிரே வந்த அரசு பேருந்து கார் மீது மோதி விபத்து ஏற்ப்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த 6 பேரில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் மூத்த மகன் சசிதரன் படுகாயங்களுடன் மேல்சிகிச்சைக்கு கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
வெள்ளகோவில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காங்கேயம் அருகே நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில் 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவரை வனத்துறையினர் கைது செய்தனர்..
by Askar
written by Askar
கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவரை வனத்துறையினர் கைது செய்தனர்..
கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை.
கடலூர் தென்னம்பாக்கம் பகுதியில், 2 நாட்களுக்கு முன் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, தங்கர் பச்சான் கிளி ஜோசியம் பார்த்தார்.
கிளி ஜோசியத்தில், அழகுமுத்து அய்யனார் படம் வந்ததால், வெற்றி பெறுவீர்கள் என கூறிய கிளி ஜோசியக்காரர்.
தங்கர் பச்சான் கிளி ஜோசியம் பார்த்த வீடியோ வைரலான நிலையில், ஜோசியரை கைது செய்த வனத்துறை.
கிளியை கூண்டில் அடைத்து வைத்து ஜோசியம் பார்ப்பது சட்டப்படி குற்றம் – வனத்துறை.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அதிகாலையில் கோர விபத்து; பேருந்து லாரி மீது மோதியதில் நடத்துனர் உயிரிழந்த சோகம்..
written by Abubakker Sithik
கடையநல்லூர் அருகே அதிகாலையில் கோர விபத்து; அரசு பேருந்து லாரி மீது மோதி நடத்துனர் உயிரிழந்த சோகம்..
கடையநல்லூர் அருகே அரசு பேருந்து நினாறு கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் நடத்துனர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மற்றும் இடைகால் இடையே சையது காட்டன் மில்ஸ் அருகில் அதிகாலை நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. திருப்பூரில் இருந்து செங்கோட்டைக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை சுந்தர பாண்டியபுரத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் ஓட்டி வந்தார். இந்த பேருந்தில் செங்கோட்டை மேலூரைச் சார்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் நடத்துனராக உள்ளார். அதிகாலை நேரம் மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூரில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சையது காட்டன் மில்ஸ் முன்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.
அப்போது செங்கோட்டையை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியதில் பேருந்தின் நடத்துனர் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிக அளவு காயம்பட்டிருந்த பொட்டல்புதுரைச் சார்ந்த பிர்தவுஸ் மற்றும் தென்காசி மேலகரத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தென்காசி மாவட்ட அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் சிறு சிறு காயங்களுடன் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கடையநல்லூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாட்டை காப்பாற்ற ராணுவத்தில் சேர வேண்டாம், பாஜகவிற்கு ஓட்டு போடாமல் இருந்தால் போதும்! சீமான் சீற்றம்..
by Askar
written by Askar
சேலம் கோட்டை மைதானத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தர்மபுரி, சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்பரையில் ஈடுபட்டார்.
இந்த கூட்டத்தில் சீமான் பேசியதாவது;
கிரகணம் வரும்போது சூரியனை பார்த்தால் கண் கெட்டுப்போகும். சூரியனுக்கு ஓட்டு போட்டால் நாடே கெட்டு போகும்.நாட்டை காப்பாற்ற ராணுவத்தில் சேர வேண்டாம். பாஜகவிற்கு ஓட்டு போடாமல் இருந்தால் போதும்.இந்திய நாட்டை பாஜக தான் ஆள வேண்டும் என மோடிக்கு பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளதா?நாட்டை நாங்களும் ஆட்சி செய்யலாம்.
அதிமுக, திமுக, பாஜக, காங்கிரசுக்கு ஒட்டு போட்டால் ஒரு கஷ்டமும் தீராது. மக்களுக்காக போராட சீமான் வேண்டும். ஆனால் ஓட்டு மட்டும் வேறு ஒருவருக்கு. ஊழலும், லஞ்சமும் தேசியமயமாக்கப்பட்ட ஒன்றாக மாறியிருக்கிறது. ஓட்டுக்கு காசு கொடுப்பதில் இருந்துதான் ஊழல், லஞ்சத்திற்கான விதையே பிறக்கிறது. கோடிகளைக் கொட்டி வென்று வருபவர்கள் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வருவார்களா? இல்லை, நான்கு மடங்கு சம்பாதித்துக்கொள்ள வருவார்களா?
வழக்கம்போல எல்லா தேர்தல்களைப் போலவும் இந்த தேர்தலையும் கடந்து போகாதீர்கள். ஆழ்ந்து சிந்தித்து வாக்களியுங்கள். இப்படியே விட்டால் இந்தி பேசும் இன்னொரு மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடும்.கிளி போன்று கூண்டுக்குள் சிக்காமல் எதிர்காலத்தை பற்றி அனைவரும் சிந்தியுங்கள்.உரிமை இருந்தும் திமுக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காதது ஏன்?ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிக்கியவர்கள் வீட்டிற்கு செல்வார்கள் என்பது நாங்கள் சாதித்தோம்.
10 ஆண்டுகளாக ஆண்ட மோடி என்ன செய்து விட்டார்? ஏழ்மையை ஒழிப்போம் என ஏழைகளை கொன்று விடுவார்கள்.எந்த மாநிலத்திற்கும் காங்கிரஸ், பாஜக தேவையில்லை.பாபர் மசூதியை இடிக்க அனுமதித்தது காங்கிரஸ்.பாஜகவிடம் ஓட்டு பெட்டி, நோட்டு பெட்டி என 2 பெட்டிகள் உள்ளது.சின்னத்தை மாற்றி சீமானை சிதைக்க முடியாது.
வலிமை மிக்க வாக்கு எனும் ஆயுதத்தை அநீதிக்கு எதிராக ஏந்துங்கள்.இந்த நாட்டில் யாரும் சிறுபான்மை, பெரும்பான்மை கிடையாது.நரிகளுக்கு இடம் கொடுத்து நதிநீர் உரிமை உள்பட எல்லா உரிமையையும் இழந்தோம் என கூறியுள்ளார்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சித்திக் ரினாஃப் ஹஸ்ஸ் ஃபௌண்டேஷன் சார்பாக ரமலான் மாதத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு வீட்டில் உபயோகம் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னால் நகர்மன்ற உறுபினர் மற்றும் தெற்குத்தெரு ஜாமாத் முன்னால் செயலாளர் லாஹிதுகான் , முன்னால் நகர்மன்ற உறுப்பினர் மற்றும் சமூக ஆர்வலருமான ஆனா மூனா காதர் சாகிப் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் நெய்னா அசாருதீன் ஹபீப் மரைக்கா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் சித்திக் ரினாஃப் ஹஸ்ஸ் ஃபௌண்டேஷன் தலைவர் ஜாஃபர் ஜலாலுதீன் நன்றி தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாலியல் புகார் எதிரொலி; திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் பொறுப்பில் இருந்து மகுடீஸ்வரன் நீக்கம் செய்து உத்தரவு..
by Askar
written by Askar
திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் பொறுப்பில் இருந்து மகுடீஸ்வரன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாலியல் தொல்லை புகாரில் திண்டுக்கல் மாவட்ட பாஜக செயலாளர் மகுடீஸ்வரனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பழனி அருகே சாமிநாதபுரம் கிராமத்தில் அரசுப் பள்ளியில் காலை உணவுத் திட்ட பொறுப்பாளராக உள்ள பெண்ணிடம், மதுபோதையில் பாலியல் தொந்தரவு அளித்ததாக பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள மகுடீஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர். இவரது மனைவி செல்வராணி புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்ய வந்துள்ளேன் எனக்கூறி மதுபோதையில் பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றதாக பெண் புகார் அளித்துள்ளார். கட்சியின் உறுப்பினராக உள்ள மகுடீஸ்வரனை நீக்குமாறு அண்ணாமலையை கேட்டுக் கொள்கிறேன் என திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், காலை உணவுத் திட்ட பெண் பணியாளரிடம் மதுபோதையில் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் மகுடீஸ்வரனின் பதவியை பறித்து கட்சி மாவட்ட தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து கட்சி மாவட்ட தலைவர் அறிக்கையில் கூறியதாவது; திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய பார்வையாளரும், மாவட்ட செயலாளருமான மகுடீஸ்வரன் என்பவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து விடுவிக்கிறேன்.
எனவே பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் அவரிடம் கட்சி சம்பந்தமாக எந்தவித தொடர்பும் வைத்துகொள்ள வேண்டாம் என இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து விடுவிக்கும்படி மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை கேட்டுக் கொள்கிறேன். என்று கூறப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பழனி அருகே பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க மாவட்ட செயலாளர்! பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
by Askar
written by Askar
பழனி அருகே பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க மாவட்ட செயலாளர்! பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலை பள்ளியில் பள்ளியில் 30 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழக அரசின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு சமையல் செய்வதற்காக கலை செல்வி (38) என்ற பெண் பணியாற்றி வருகின்றார். இவர் காலை வழக்கம் போல் சமையல் செய்வதற்காக பள்ளிகூடத்திற்கு சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணியின் கணவரான பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மகுடிஸ்வரன் என்பவர் சமையல் செய்யும் இடத்தில் கணக்கு பார்க்க வேண்டும் என கூறி இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றிருக்கிறார் அப்போது சமையல் கூடத்தில் இருந்த பொருட்களை எடுத்துக்காட்டி கொண்டிருக்கும் போது அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார் . இதனையடுத்து அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்த கலைச்செல்வி சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மகுடிஸ்வரன் மீது மானபங்கம் செய்தல் ,வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவின் கிழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனி அருகே அரசு காலை உணவு திட்டத்தின் கீழ் பணியாற்றிய பெண்ணை ஊராட்சி மன்ற தலைவரின் கணவரும் , பாஜக மாவட்ட செயலாளர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமறைவான பாஜக மாவட்ட செயலாளர் மகுடிஸ்வரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பழனி -ரியாஸ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் த.ம. மு.க. தலைவர் ஜான் பாண்டியனை ஆதரித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரம்..
by Askar
written by Askar
தென்காசி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் த ம மு க தலைவர் ஜான் பாண்டியனை ஆதரித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரம்..
பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவு ஏற்று ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இங்கு வந்துள்ளேன். இப்பகுதியில் முக்கிய தலைவரான ஜான்பாண்டியன் வெற்றி பெற்றால், உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவார்.
தேசிய ஜனநாயக கூட்டணி பாரத நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறது. இண்டியா கூட்டணி, அவர்களின் குடும்பத்தின் வளர்ச்சிக்காக ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா சொல்லுவதை உலக நாடுகள் கேட்கவில்லை. ஆனால் மோடி பிரதமராக வந்த பின், பாரத தேசம் என்ன சொல்கிறது என்பதை உலகமே உற்றுநோக்கி கொண்டிருக்கிறது. இதுதான் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு காங்கிரசுக்கும் உள்ள வேறுபாடு.
காங்கிரஸ் ஆட்சியில் உலகப் பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது உலக அளவில் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்துள்ளது. மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வரும்போது, 2027ல் உலக அளவில் 3வது பெரிய பொருளாதார நாடக இந்தியா உருவெடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பிரதமர் நரேந்திர மோடியின் சங்கல்பமான 2047ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாறுவதற்கும், உலகின் சூப்பர் பவராக மாறுவதற்கும் ஜான்பாண்டியன் வெற்றி அவசியமாகிறது.
கடந்த காலங்களில் பாரத நாட்டின் மீது அண்டை நாடுகள் தாக்குதல் நடத்தி வந்தன. இன்று இந்தியாவின் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிரி நாடுகள் அச்சப்பட்டு கொண்டிருக்கிறது. ஜான் பாண்டியனை வெற்றி பெற வைத்து மக்களவைக்கு நீங்கள் அனுப்பினால், நன்றி சொல்வதற்காக உங்களை பார்க்க மீண்டும் வருவேன், இவ்வாறு அவர் பேசினார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பெண்கள் நினைத்தால் உலகில் எதையும் சாதிக்கலாம்! ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி பேச்சு..
by Askar
written by Askar
பெண்கள் நினைத்தால் உலகில் எதையும் சாதிக்கலாம்! ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி பேச்சு..
மதுரை அடுத்துள்ள பூவந்தி சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரியின் 25 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் எஸ். அண்ணாமலை தலைமை தாங்கி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் விசுமதி ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் அசோக் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசினை வழங்கி சிறப்புரை ஆற்றினார் அப்போது அவர் பேசியதாவது;
இன்றைக்கு ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகிறார்கள் ஒவ்வொரு மாணவியரும் ஐந்து வருடத்தில் நாம் என்னவாக வேண்டும் என்ற கனவை மனதில் நிலை நிறுத்தி செயலாற்றினால் அவர்கள் நினைத்த குறிக்கோளை அடைய முடியும். இன்று ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல்வேறு துறைகளில் போட்டி போட்டுக் கொண்டு சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்களை நாம் அடக்கி ஆளக்கூடாது. ஒவ்வொருவரும் லட்சியத்தை நோக்கி பயணம் செய்யும் போது தடை கற்கள் வரும்.அதை நாம் படிக் கற்களாக கொண்டு முன்னேற வேண்டும். இவ்வாறு ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி பேசினார். அவரை கல்லூரி தமிழ் துறை தலைவர் முனைவர் பூங்குழலி அறிமுகம் செய்து பேசினார்.
நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வரதராஜன், சிவக்குமார், சிவகாசி நாடார்கள் உறவின்முறை செயலாளர் கோடீஸ்வரன் பொருளாளர் ஸ்ரீதர், ராமேஸ்வரி அண்ணாமலைஉட்பட பலர் பங்கேற்றனர். கல்லூரி மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆண்டு விழாவிற்கான ஏற்பாட்டினை கல்லூரி தலைவர் அண்ணாமலை, செயலாளர் அசோக் உட்பட பலர் செய்திருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை சோழவந்தான் அருகே மு.க.அழகிரியின் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி! போலீசார் விசாரணை..
by Askar
written by Askar
மதுரை சோழவந்தான் அருகே மு. க. அழகிரியின் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி! போலீசார் விசாரணை..
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் விக்கிரமங்கலம் ரோட்டில் நாகமலை அடிவாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரிக்கு சொந்தமான 24 ஏக்கர் தென்னந்தோப்பில் பங்களா உள்ளது. விசேஷ நாட்களில் மற்றும் வார இறுதி நாட்களில் மு. க. அழகிரி குடும்பத்துடன் இங்கு வந்து தங்கி இப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு உதவிகள் செய்வது வழக்கம். மேலும் முக்கிய தினங்களிலும் குடும்பத்துடன் இங்கு வந்து பொழுதை கழித்து செல்வார். இந்த நிலையில் நேற்று இரவு பங்களாவில் புகுந்த மர்ம நபர்கள் அங்குள்ள அறைகளின் கதவை உடைத்து திருட முயற்சித்துள்ளதாக தெரிகிறது. இரவு காவலர் பணியில் இருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பண்ணை வீட்டின் மேலாளர் குட்டி என்பவர் காடுபட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எதிர்மறைச் சிந்தனைகளைக் கடந்து நேர்மறைச் சிந்தனையோடு வாக்களிக்க வேண்டும்; கவிஞர் பேரா பேச்சு..
written by Abubakker Sithik
நாடாளுமன்ற தேர்தலில் எதிர்மறைச் சிந்தனைகளைக் கடந்து நேர்மறைச் சிந்தனையோடு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என நெல்லை இலக்கிய விழாவில் கவிஞர் பேரா பேசினார். நெல்லையில் 07.04.2024 அன்று பொருநை இலக்கிய வட்டத்தின் 2059-ஆவது வார நிகழ்வு நடந்தது. இலக்கிய ஆர்வலர் நசீர் தலைமை வகித்தார். மீனாட்சிநாதன் இறைவணக்கம் பாடினார். பொருநை இலக்கிய வட்ட இளைய புரவலர் தளவாய் இரா.திருமலையப்பன் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் கோதைமாறன், சண்முகசுந்தரம், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் அய்யாக்குட்டி, முத்துகுமாரசாமி ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநர் கவிஞர் பேரா பேசினார். அவர் பேசுகையில் “நடக்க இருக்கும் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். எதிர்மறைச் சிந்தனைகளைக் கடந்து நேர்மறைச் சிந்தனையோடு வாக்களிக்க வேண்டும். படித்தவர்கள் மத்தியில் வாக்களிக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது. கடந்த காலங்களில் இவர்களின் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாகவே இருப்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். இந்த நிலை வருத்தமாக இருக்கிறது. அதுபோல கிராம மக்களை விட நகர மக்களின் வாக்குப் பதிவும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக நகரங்களின் விரிவாக்கப் பகுதியில் வாக்குப் பதிவு குறைவாகவே இருக்கிறது. இந்நிலை மாறிட அனைவரும் வாக்களிப்போம். வாக்களிக்க வைப்போம் என்று பேசினார். நிகழ்ச்சியில் 80-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் கோதை மாறனுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. கவிஞர் பாமணி நன்றி கூறினார். நிகழ்வில் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு உதவியுடன் தீவிர சோதனை..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு உதவியுடன் காவல் துறையினர் தீவிர சோதனை..
நாடாளுமன்ற தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு உதவியுடன் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை கருத்தில் கொண்டு பொது இடங்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள், சந்தேகத்துக்குரிய நபர்கள், அதிகம் மக்கள் கூடும் இடங்கள் மற்றும் உள்ளூர், வெளியூர் வாகனங்களை தேர்தல் தனிப்படை அமைத்து வெடிகுண்டு கண்டறியும் கருவி மூலம் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு உதவியுடன் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையம், மக்கள் கூடும் முக்கிய இடங்கள் உட்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் காவல்துறை வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு சோதனை செய்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு; மாவட்ட ஆட்சியர் ஆய்வு..
தென்காசி மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024 ஐ முன்னிட்டு தேர்தலில் பணிபுரிய உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024. ஐ முன்னிட்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பணிபுரிய உள்ள 1820 தலைமை வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் (Presiding officer), 1820 முதல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் (Polling officer 1), 1820 இரண்டாம் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் (Polling officer 2), 1820 மூன்றாம் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் (Polling officer 3), 190 நான்காம் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் (Polling officer-4) வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் 07.04.2024 அன்று 37-தென்காசி (தனி) நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு அருள்மிகு கலசலிங்கம் பொறியியல் கல்லூரியிலும், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு பி.ஏ. சின்னராஜா நினைவு மேல்நிலைப் பள்ளியிலும்,
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு புளியங்குடி வீராச்சாமி செட்டியார் பொறியியல் கல்லூரியிலும், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்வியியல் கல்லூரியிலும், தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு தென்காசி எம்.கே.வி.கே மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்ற பயிற்சி வகுப்புகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்கினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஜெயலலிதா மகள் என்ற ஒரே காரணத்திற்காக ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும், பிரச்சாரம் செய்யவிடாமல் தடுப்பதாக ‘ஜெயலட்சுமி’ குற்றச்சாட்டு..
by Askar
written by Askar
ஜெயலலிதா மகள் என்ற ஒரே காரணத்திற்காக ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் என்னைப் பிரச்சாரம் செய்யவிடாமல் தடுத்து வருவதாக தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஜெயலட்சுமி குற்றம்சாட்டியுள்ளார்.
தேனி நாடாளுமன்றத் தொகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் பிரேமா என்கிற ஜெயலட்சுமி சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டி கொடுத்த ஜெயலட்சுமி பேசியதாவது:
தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி பெற தேர்தல் ஆணையம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள செயலி வேலை செய்யவில்லை. இது குறித்து நேரில் சென்று கேட்டாலும் எங்களுக்கு முறையான பதில் கொடுக்காமல் அலைக்கழிக்கிறார்கள்.
அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் வாக்காளர்களுக்கு 500 முதல் 1000 ரூபாய் கொடுக்க உள்ளதாக தகவல் வருகிறது. எங்களைப் போல் நேர்மையாக நின்று வெற்றி பெற வேண்டும் இல்லை என்றால் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிப்பேன்.
பிரச்சாரம் செய்வதற்கும் மக்களை சந்திப்பதற்கும் எனக்கு அனுமதி கொடுக்க மறுக்கின்றனர். மற்ற கட்சியினருக்கு பிரச்சாரம் செய்ய 30 முதல் 40 வாகனங்கள் அனுமதி கொடுக்கின்றனர். ஆனால் எங்களுக்கு மூன்று வாகனங்கள் கூட அனுமதி கொடுப்பதில்லை.
தேர்தல் அலுவலகத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் தான் கட்சி அலுவலகம் வைத்துள்ளேன் ஆனால் 100 மீட்டருக்குள் கட்சி அலுவலகம் வைத்திருப்பதாக கூறி அலுவலகத்திற்கு அனுமதி அளிக்க மறுக்கின்றனர். ஜெயலலிதா மகள் என்பதால் ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் என்னை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர்.
நான் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் என்னிடத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றனர். நீங்கள் எவ்வளவு பணம் கொடுக்கப் போகிறீர்கள் என்று என்னிடம் கேட்கிறார்கள்.
வாக்குக்கு பணம் கொடுப்பதை கண்காணிக்க எங்கள் தரப்பில் 100 பேர் கேமராவுடன் கண்காணித்து வருகிறோம். அதையும் மீறி பணம் கொடுப்பவர்கள் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்து தேர்தலை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கஞ்சா போதையில் கொலை வெறித் தாக்குதல் ! தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் !! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை !!!
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அதிகாலை பஜர் தொழுகை முடித்து விட்டு வந்த முஸ்லிம்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் ஆர் .அப்துல் கரீம் செய்தி குறிப்பில் தெரிவிக்கையில் :-கீழக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா பழக்கங்களும் அதிகமாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகப்பெரும் அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். கஞ்சா போதையில் உள்ளவர்களால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. கஞ்சா குடித்து விட்டு வீதியில் செல்லும் பெண்களை கிண்டல் செய்கிறார்கள். இதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. பெண் குழந்தைகளின் பெற்றோர் கடுமையான மன உளச்சலில் உள்ளனர். இவை அனைத்தும் அறிந்தும் காவல்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதால் பொதுமக்கள் அச்சம் கொண்டு வருகின்றனர். இன்றைய தினம் பள்ளிவாசலில் தொழுதுவிட்டு வந்தவர்கள் மீது கஞ்சா விற்பனை செய்யக் கூடியவர்களும், கஞ்சா பயன்படுத்தக்கூடியவர்களும் கொலை வெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அதிகமான இரத்தம் வெளியேறியதால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பெரும் கவலை அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு இதில் உடனடியாக தலையிட்டு கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிந்து கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம். தமிழகத்தில் பல பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாகி வருவதால் பொதுமக்கள் நிம்மதி இழந்து விட்டனர். இதை கருத்தில் கொண்டு கஞ்சா விற்பனையை தடுப்பதற்கான முழு முயற்சியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் எப்போது சொல்வார்!- எடப்பாடி பழனிச்சாமி கேள்வி..
by Askar
written by Askar
திருவள்ளூர் தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;
பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மாநில கட்சிகளை புறக்கணிக்கின்றன. தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்தால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அதனால், ஓட்டுபோட்ட மக்களுக்கு விசுவாகமாக இருந்து நாடாளுமன்றத்தில் செயல்படுவதற்கு, தமிழ்நாட்டின் உரிமையை காப்பதற்கு, தேவையான திட்டங்களை பெறுவதற்கு, நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக நமது கருத்துக்களை எடுத்து சொல்வதற்கு நாம் கூட்டணியில் இருந்து விலகி வந்து அதிமுக தலைமையில் வலிமையான கூட்டணியை அமைத்துள்ளோம்.
2019- நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார். திமுக கூட்டணியில் உள்ள 38 எம்.பி.க்கள் தமிழகத்திற்காக ஒன்றும் செய்யவில்லை. தான் முதல்-அமைச்சராக இருந்து செயல்படுத்தியதை கூறி மக்களிடம் ஸ்டாலின் வாக்கு கேட்க வேண்டும். ஆனால் பிரசாரத்தில் என்னைப் பற்றியே அதிகம் பேசுகிறார். என்னைப்பற்றி பேசி என்ன கிடைக்கப்போகிறது.
நீட் தேர்வை திமுகவும் காங்கிரசும் கொண்டுவந்தது. இன்று ரத்துசெய்வோம் என்று சொல்வதும் காங்கிரசும் திமுகவும் தான். இது வேடிக்கையாக உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் எப்போது சொல்வார்.” இவ்வாறு அவர் பேசினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாஜக வேட்பாளர்களில் 4-ல் ஒருவர் வேறு கட்சியின் இருந்து பாஜகவுக்கு வந்தவர்கள்;!வெளிவந்த அதிர்ச்சி தகவல்..
by Askar
written by Askar
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதன் காரணமாக அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜகவும் பல்வேறு கட்டங்களாக தங்கள் வேட்பாளர்களை அறிவித்தது. ஆனால், பாஜக அறிவித்த சில வேட்பாளர்கள் போட்டியிட மறுத்து விலகினர். இது பாஜகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இதுவரை பாஜக அறிவித்துள்ள 417 வேட்பாளர்களில் 116 வேட்பாளர்கள் வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பாஜகவின் வேட்பாளர்களில் 4-ல் ஒருவர் பிற கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்தவர்கள்.
பாஜக ஆட்சிக்கு வந்ததும் புலனாய்வு அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ, எம்.பி.களை தங்கள் கட்சியில் இணைத்து வருகிறது. அதன் பின்னர் அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்தி அந்த பகுதியில் தங்கள் செல்வாக்கை அதிகரித்து வருகிறது.
அதிலும் நாடு முழுவதும் செல்வாக்கை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் 37 பேருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற 6 பேருக்கு சீட் வழங்ப்பட்டுள்ளது. இதன் மூலம் பிறரின் செல்வாக்கிலே பாஜக இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் சின்ன கடை தெரு பகுதியில் அமைந்துள்ள அல் சுமத் அறக்கட்டளை மற்றும் சின்ன கடை சஹர் கமிட்டி சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இப்தார் நோன்பு திறந்து மகிழ்ச்சி அடைந்தனர்.நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் பாரூக் டாக்டர் நசார், தொழிலதிபர் அரபாத் தலைமை இமாம் அப்துல் காதர் சிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை தலைவர் அப்சல் ஹயாத் செயலாளர் கதியதுல்லா பொருளாளர் சதா தௌபிக் ஆகியோர்கள் செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் உரிமம் இல்லாத இருசக்கர வாகனங்கள் பறிமுதல் ! இரவு முழுவதும் ரோந்து பணியில் கீழக்கரை காவலர்கள் !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 18 வயதிற்கு கீழ் உள்ள இளைஞர்கள் சிறுவர்கள் அதிகமாக இரு சக்கர வாகனங்களில் செல்வதாகவும் , அதிக சத்தம் கொண்ட வாகனத்தை இயக்குவதாகவும் இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்: அதனைத் தொடர்ந்து கீழக்கரை காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு அனைத்து இருசக்கர வாகனங்களையும் சோதனை செய்யப்பட்டதில் நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களையும் முறையாக ஆவணங்கள் இல்லாத வாகனங்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கொண்டு சென்றனர். மேலும் இளைஞர்கள் அதிகமானோர் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கி வருவதாகவும் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் அரசு விதித்த விதிமுறைகள் படி நம்பர் பிளேட் பயன்படுத்தாமல் செயல்பட்டு வருவதாகவும் காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார் . மேலும் சட்ட விரோதமான செயலில் ஈடுபடுபவர்கள் தான் இது போன்ற தவறுகளை செய்வார்கள் என்றும் பெற்றோர்கள் இன்றைய இளைஞர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இரவு 12 மணிக்கு மேல் இளைஞர்கள் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். கீழக்கரை காவல் நிலைய காவலர்கள் செயல்பாடுகளை கண்டு சமூக ஆர்வலர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.