ஜாக்டோ ஜியோ போராட்டம் தமிழகமெங்கும் தற்போது நடைபெற்று வருவதால் ஆசிரியர்கள் அனைவரும் விடுப்பில் உள்ளனர். இந்நிலையில் சங்கரன் கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேப்பன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நெல்லை மாவட்ட ஆட்சியர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ்.இ.ஆ.ப அவர்கள் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் உள்ளதால் மாணவ மாணவிகளுக்கு தாமே ஆசிரியராக மாறி பாடம் நடத்தினார். இதனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியரின் இந்த செயல் பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் என அனைவரையும் கவர்ந்துள்ளது.
செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.