தேசிய செய்திகள்
மிரட்டலுக்கு நான் வளைந்து கொடுக்கமாட்டேன் – 63 குழந்தைகளைக் காப்பாற்றிய டாக்டர் கபீல்கான் ஆவேசம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமேஸ்வரம் துறைமுகத்தில் மீன்துறை அதிகாரிகளுக்கும் படகு உரிமையாளர்களுக்கும் வாக்குவாதம் படகுகளின் ஆய்வு பல மணி நேரம் நிறுத்தம்..
தமிழகத்தில் மீன்பிடி தடைக் காலம் நிறைவடைய சில தினங்களே உள்ள நிலையில் இராமேஸ்வரத்தில் மீன்துறை அதிகாரிகளுக்கும், படகு உரிமையாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு படகுகளின் ஆய்வு பணிகள் நிறுத்தப் பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது
கடல் மீன்பிடிப்புள்ள பகுதிகளில் மீன்கள் இனப் பெருக்கத்துக்காக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துகுடி, நாகை, தஞ்சை, சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட நீலாங்கரை முதல் குளச்சல் வரையிலான கிழக்கு கடற்கரை துறை முகங்களில் தமிழகத்திலுள்ள 13 மீன்பிடி மாவட்டங்களில் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்பரல் 15ம் தேதி துவங்கியது. இந்த தடை காலம் வரும் 14 ந் தேதி நள்ளிரவில் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில் இன்று இராமேஸ்வரம் பாம்பன், மண்டபம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து துறைமுகங்களிலும் சென்னை, நாகை, கன்னியாகுமரி, திருச்சி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு மீன்துறை உதவி இயக்குநர்கள் தலைமையில் 55 பேர் கொண்ட அதிகாரிகள் குழு படகுகளில் ஆய்வு மேற்கொண்டனர். படகுகளில் பொருத்தியுள்ள இயந்திரங்களின் குதிரைத்திறன் (HP ) படகின் நீளம் அகலம், படகுகளின் திறன், புதுப்பிக்கப்பட்ட படகு ஆவணங்கள், காப்பீடு ஆவணங்கள் மற்றும் ஒளிரும் மையால் எழுதப்பட்டுள்ள படகின் பதிவு எண் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்துவந்தனர்.
இந்நிலையில் ராமேஸ்வரம் துறைமுகத்தில் ஆய்வுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை படம் பிடித்துள்ளனர். இதனையடுத்து படகு உரிமையாளார்கள் அதிகாரிகளை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், அங்கு ஏற்பட்ட பதட்ட நிலைமையால் படகுகளின் ஆய்வு பல மணி நேரமாக நிறுத்தப்பட்டது.
இதனால் ராமேஸ்வரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மீன்பிடி தடையில்லா சான்றிதழ்கள் வழங்குவதில் சிக்கல் நீடித்து வருவதால் திட்டமிட்டபடி வரும் 16 ந் தேதி மீன்பிடிக்க அனுமதி சீட்டு வழங்கப்படுமா? என மீன்பிடி தொழிலாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை வடக்குத் தெரு பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பொது குடி நீர் குழாயில் கேடு உண்டாகி, நீர் வீணாகியது, பின்னர் பலமுறை தொடர்பு கொண்டு புகார் அளித்த பின் தற்காலிக முறையில் பிளாஸ்டிக் குழாய்களை வைத்து சரி செய்யப்பட்டது. மீண்டும் தற்பொழுது குடிநீர் கசிவு ஏற்பட்டு தெருக்களில் ஓடிய வண்ணம் உள்ளது.
அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்தை அழைத்து புகார் அளித்த பொழுது, இப்பணி தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, விரைவில் சரி செய்யப்படும் என்ற பதிலே வருகிறது. மக்கள் அதிகாரிகளிடம் தான் புகார்களை தெரிவிக்க முடியும், தனியாரிடம் அல்ல..
நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மக்களின் குறையை தீர்க்குமா?? நான்கு மாதங்களுக்கு முன்னர் கீழைநியூசில் இதே இடத்தில் குழாய் கேடான பொழுது வெளியிட்ட செய்தி..
http://keelainews.com/2018/02/21/drinking-water-wastage/
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உலக பெருங்கடல் நாள் எனும் இந்நாளை ஒவ்வொரு வருடமும் ஜூன் 8ம் தேதி உலக நாடுகள் முலம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மாபெரும் தினத்தை 1992ம் ஆண்டு பிரேசிலின் இரியோ டி செனிரோ நகரில் இடம்பெற்ற பூமி உச்சி மாநாட்டில் முதன்முறையாக கனடா இத்தினத்திற்கான கோரிக்கையினை முன்வைத்ததை அடுத்து உலகெங்கும் அதிகாரபூர்வமற்ற வகையில் உலக கடல் தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் ஐக்கிய நாடுகள் 2008ம் ஆண்டு எங்களின் சமுத்திரங்களும் எங்களின் பொறுப்புகளும் “Our Ocean, Our resoonsibiliy” எனும் கருப்பொருளை அடிப்படையாக கொண்டு இத்தினத்தை அதிகாரபூர்வமாக அங்கிகரித்து அறிக்கையினை வெளியிட்டது. இதனது அடிப்படையில் உலக நாடுகள் அனைத்தும் இத்தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றது.உலகபெருங்கடல் தினம் கொண்டாடாடுவதில் தமிழர்கள் முக்கியமானவர்கள் என்று ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர். உலகம் முழுவதும் சுமார் 10 கோடி பேர் உணவு மற்றும் வருவாய்க்கு கடலை நம்பி உள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமேஸ்வரம் தனுஸ்கோடியில் கடல் சீற்றம் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடந்த வாரம் முதல் அனைத்து முன்னனி ஊடகங்களிலும் பாரதிய ஜனதா கட்சிதான் அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கப்ப போகிறது அதுவே 73 சதவீத மக்களின் விருப்பமாக உள்ளது என ஒட்டுமொத்த இந்திய மக்களின் கருத்து போல் ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கி வருகின்றனர்.
இந்திய பெருநாடு என்பது 1.324 பில்லியன் மக்கள் தொகையுடன் 29 மாநிலம் மற்றும் 7 யுனியன் பிரதேசத்துடன் 22 அதிகாரபூர்வமான மொழிகளை உள்ளடக்கியது. ஆனால் இந்த கருத்துக் கணிப்போ 9 மொழிகள் பேசக்கூடிய வட மாநிலங்களில் அதுவும் இன்டெர்ன்ட் வசதி உடைய மொத்தம் 8.4 லட்சம் மக்களிடம் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. இது மொத்த இந்திய மக்கள் தொகையில் 1% சதவீதம் கூட கிடையாது என்பதை மறைத்து ஒரு பிம்பத்தை உருவாக்கி வருகிறார்கள். “’PULSE OF NATION’ “ என்ற பெயரில கருத்துக் கணிப்பை ஒட்டு மொத்த நாட்டின் கருத்தாக ஒளிபரப்பி வருகின்றனர் இந்த ஊடகங்கள். அதிலும் நம் தமிழ் தொலைக்காட்சிகளான NEWS7 போன்றவைகள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்ப செய்து தங்களுடைய எஜமானர் விசுவாசத்தை தெளிவாக காட்டி வருகிறார்கள்.
சமீபத்தில் கோப்ரா எனும் பத்திரிக்கை, 136 பத்திரிக்கைகளின் காசுக்கு விலைபோன வண்டவாளங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியதும், இது போன்ற போலித்தனமான கருத்துக் கணிப்புகளை ஊடகங்கள் வெளியிடுவதும் ஊடகத்தின் பித்தலாட்டத்தை உறுதிப்படுத்துகிறது.
மேலும் இந்த போலியான கருத்துக் கணிப்பில் கூட மோடி அரசால் மிகவும் தோல்வியடைந்த திட்டம் வேலைவாய்ப்பு தான் என்பதை மக்கள் கருத்தாக வெளிப்படுத்தியுள்ளார்கள். ஆனால் அதை மக்கள் மத்தியில் காட்டாமல் தங்களுக்கு சாதமாக மறைத்துள்ளார்கள். இடைத் தேர்தல்களும் 2019ம் ஆண்டில் வர இருக்கும் பொதுத் தேர்தலையும் கருத்தில் கொண்டு இப்பொழுதே ஆளும் வர்க்கம் ஊடகங்களை விலைபேச ஆரம்பித்து விட்டர்கள் என்பது தெளிவாகிறது. பொதுமக்கள் இந்த சதி வலைக்குள் சிக்கி விடாமல் நாட்டின் நலன் கருதி சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை நகராட்சி நிர்வாகமும் சுகாதாரத்துறையும் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாம் தமிழர் கட்சி சார்பாக சுட்டுக்கொல்லப்பட்ட மாவீரர்களுக்கு வீர வணக்கம்…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கீழக்கரை மற்றும் தமிழகம் முழுவதும் கருப்பு பட்டை அணிந்து துப்பாக்கி சூட்டை கண்டித்து கண்டனம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தூத்துக்குடி அராஜகம் – பிரஸ் மற்றும் மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன் தலைவர் கண்டனம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிபா வைரஸ், மிகவும் கொடூரமான வைரஸ் ஒன்று சத்தம் காட்டாமல் இந்தியாவிற்குள் நுழைந்து பல உயிர்களை பலி வாங்கியுள்ளது. இதுவரை கேரளாவில் மட்டும் நிபா வைரஸ் தாக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்து விட்டனர்.
இந்த நிபா வைரஸ் என்பது என்ன அது எப்படி பரவுகிறது என்றும் அதனை எப்படி தடுக்கலாம் என்றும் தற்போது பார்க்கலாம். புனேயில் உள்ள வைரஸ் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் மையம் கேரளாவில் நிபா வைரஸ் பரவியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிபா வைரஸ் விலங்குகள் மற்றும் மனிதர்களை கடுமையாக தாக்கும் வல்லமையை கொண்டது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு பத்து பேர் உயிரிழந்த நிலையில், மக்கள் அனைவருக்கும் முதற்கட்ட சோதனை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. நிபா வைரஸ் தொடர்பாக தீவிர ஆய்வில் மத்திய அரசு சார்பாக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் பயப்பட வேண்டாம் எனவும் கேரள சுகாதாரதுறை செயலாளர் ராஜீவ் சதானந்தன் கூறியுள்ளார். மேலும் இதேபோன்று நிபா வைரஸ் காய்ச்சல் வங்கதேசத்திலும் பரவியதாகவும், அப்போது அதனை அந்நாட்டு அரசு லாவகமாக கையாண்டு, மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் காப்பாற்றியதையும் ராஜீவ் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிபா வைரஸ் விலங்குகள் மற்றும் மனிதர்களை கடுமையான தாக்கும் ஒரு நோய் கிருமி என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இது முதன் முதலில் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் 1998-1999 ஆம் ஆண்டுகளில் பன்றிகளில் இருந்து மனிதர்களிடம் பரவியது. இதனைத்தொடர்ந்து நிபா வைரஸின் தாக்குதலால் 265 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எத்தனை பேர் இறந்தனர் என்ற தகவல்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லை. இதேபோன்று ஆஸ்திரேலியாவில் இந்த வைரஸ் குதிரையிலிருந்து மனிதர்களுக்கும், சில குறிப்பிட்ட வகை வௌவால்களிலிருந்தும் பரவியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நிபா வைரஸின் முக்கியமான அறிகுறிகள்:
லேசான காய்ச்சலுடன் இந்த வைரஸ் பாதிக்கும். பிறகு, மூச்சுவிடுவதில் சிரமம், கடினமான தலைவலி , மயக்கம், சோர்வு, மனக்குழப்பம், கோமா, ஏற்பட்டு அது மூளைக் காய்ச்சலாக மாறும். இந்த வைரஸ் தாக்கினால், 75 சதவிகிதம் இறப்பு உறுதி எனக் கூறப்படுகிறது.
தடுப்பு மருந்துகள் கிடையாது:
நிபா வைரசுக்கு என்று தனிப்பட்ட மருந்துகளோ தடுப்பூசிகளோ கிடையாது. ஆனால் இந்த வைரஸை தரமான நோய்த்தடுப்பு கட்டுப்பாட்டு நடைமுறைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். அதாவது நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பன்றிகளிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்றும், திறந்தவெளி குடிநீரை குடிக்க கூடாது என்றும் மரத்தில் இருந்து கீழே விழும் பழங்களை உண்ண கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா உண்டியல்களுக்கு வக்பு வாரியம் சீல் வைப்பு…
இராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. அதைத் தொடர்ந்து வக்பு வாரியத்தில் உள்ள குளறுபடிகளை களையவும், வக்பு வாரிய ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு வஃபு வாரிய மாநில உதவி செயலாளர் பசிர்அகமது தலைமையில் ஏர்வாடி தர்ஹாவில் உள்ள உண்டியில்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இச்சம்பவத்திற்கு முன்னர் தர்ஹாவில் உள்ள அனைத்து கதவுளையும் அங்குள்ளவர்கள் மூடினர். ஆனால் RDO சுமன் தலைமையில் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த உண்டியல்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைத்தனர்.
இந்த செயலை கண்டித்து தர்ஹாவின் நிர்வாகத்தினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமாக காணப்பட்டது. இச்சம்பவத்தின் போது கீழக்கரை காவல் துறை துணை கண்காணிப்பாளர் ரவிசந்திரன் தலைமையில் 100கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா தமிழகத்தில் உள்ள தர்ஹாக்களில் அதிகமான வசூல் ஆகும் இடங்களில் ஒன்றாகும், ஆனால் வக்பு வாரிய சட்டதிட்டங்களுக்கு உட்படாமல் தனி அமைப்பாகவே கால காலமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதே போல் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களிடம் “அடிமைச் சீட்டு” என்ற பெயரில் அங்குள்ளவர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு துண்டு சீட்டை உண்டியல் போடுவது போன்ற குற்றச்சாட்டும் உண்டு.
இந்த நடவடிக்கை ஏர்வாடி தர்ஹா போன்ற இடங்களில் சீல் வைப்பதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தில் பல சமூக விரோதிகளாலும், அரசியல் மற்றும் பிற அமைப்புகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய சமுதாய மக்களின் எதிர்பார்ப்பு.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மருத்துவமனை உள்ளே மருந்து கடை. நிர்பந்திக்கப்படும் நோயாளிகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்….
மருத்துவ மனைகளுக்குள்ளேயே மருந்துக்கடை வைத்துக் கொண்டு நோயாளிகளை அங்கேயே மருந்து வாங்கியாக வேண்டும் என்று வற்புறுத்தப்படும் ஒரு நடைமுறை பற்றி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு இது குறித்து மத்திய, மாநில, யூனியன் பிரதேசங்களின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் ஏற்கெனவே மருத்துவமனைகளில் அதீத கட்டணம் ஆகியவற்றில் தத்தளித்து வரும் போது மருத்துவமனைகளில் தாங்களே மருந்துக் கடைத் தொடங்கி அதில் நோயாளிகளுக்கான மருந்துகளை வாங்க வேண்டுமென்று வற்புறுத்தப்படுவதால் கடும் நிதி நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.
மற்ற கடைகளில், வெளியில் வாங்கினால் எம்.ஆர்.பி. விலைகளில் கழிவுகள் 10% முதல் கிடைக்கிறது, ஆனால் மருத்துவமனைகளிலேயே வைத்திருக்கும் பார்மசிகளில் இந்தச் சலுகை கிடையாது. மேலும் அதிகவிலை கொடுத்து வாங்கும் நிலைமைகளும் ஏற்படுகிறது.
ஆகவே இத்தகைய முறைகேடான லாபவேட்டை நடைமுறையையும், நோயாளிகளின் ரத்தத்தை உறிஞ்சும் முறையற்ற நடவடிக்கைகளையும் நோயாளிகள் நலன் கருதி தடை செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு வழிகாட்டு நெறிமுறை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மருந்துகள் மட்டுமல்லாது மருத்துவ உபகரணங்கள், உட்பட அங்கேயே வாங்க நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
இது தொடர்பாக தற்போது எந்த ஒரு சட்டமும் இல்லை, கொள்கைச் சட்டகமும் இல்லை. இத்தகைய சட்டங்கள் இல்லாததால் மருத்துவமனைகள் கொள்ளையடிக்கின்றன, மருத்துவமனைகள் என்ற பிற்போக்கு ஆட்சிக்கும் கொஞ்சம் கூட நியாயம், தர்மம், மனித நேயம் இல்லாமல் நடந்து கொள்ளும் மருத்துவ நடைமுறைக்கும் மக்களை நம் ஆட்சிகள் தள்ளியுள்ளன.
என் மனைவி மார்பகப் புற்றுநோயினால் அவதிப்பட்டு வந்தார். அவர் மருத்துவ சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் இதற்கான ஒரு மருந்தின் விலை ரூ.61,132, இதே நிறுவனத்தின் இதே மருந்து வெளிச்சந்தையில் கழிவுகளுடன் ஊசி மருந்து ஒன்றுக்கு ரூ.50,000 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.
மேலும் இதே ஊசி மருந்து 4 வாங்கும் போது ஒன்று இலவசமாகக் கிடைக்கிறது. இதனால் ஊசிமருந்தின் விலை ரூ.41,000 தான். ஆனால் மருத்துவமனைகளில் இதே ஊசி மருந்து ரூ.61,132 என்று விற்கப்படுகிறது.
வழக்கறிஞர் விஜய்பால் டால்மியா என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் இந்தியாவை வாட்டி எடுக்கும் ஒரு பெரிய பிரச்சினையை விவகாரமாக்கியுள்ளார், இதனையடுத்தே மத்திய, மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதீமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை சுற்றுவட்டாரத்தை சார்ந்த பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் இல்லத்தரசிகளுக்கான மாபெரும் கட்டுரை போட்டி கீழை நியூஸ் நிர்வாகம் சார்பாக கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. இந்த கட்டுரை போட்டியில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ செல்வங்களும், இல்லத்தரசிகளும் கலந்து கொண்டு கட்டுரைகளை அனுப்பி, மிக சிறப்பாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்து இருந்தனர்.
கீழை நியூஸ் சார்பாக நடைபெற்ற கட்டுரை போட்டிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த போட்டி தலைப்புகளும், பரிசுகளும் பின் வருமாறு :
கீழை நகரின் தலைசிறந்த ஆலீம் பெருந்தகைகள் மற்றும் ஆசிரிய பெருமக்களின் மூலம் சிறந்த கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு தற்போது போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம் பின்வருமாறு:-
முதல் பரிசு : (ஒருவர்)
- சு. வஃபிக் மதார் – எட்டாம் வகுப்பு மாணவர் – முஹைதீனியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
இரண்டாம் பரிசு : (இருவர்)
- ஃபாஸிலா சமீம் – இல்லத்தரசி தெற்குத் தெரு
- அ.பாஷிமா – பத்தாம் வகுப்பு – ஹமீதியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி
மூன்றாம் பரிசு : (மூவர்)
- ஹ.பாத்திமா நுஹா – எட்டாம் வகுப்பு – இஸ்லாமியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி
- S.A.M.சாஜிதா – மதரஸத்து தர்பியா இஸ்லாமியா – சங்கு வெட்டி தெரு
- ஆமினத்து சமீரா – மதரஸத்து தர்பியா இஸ்லாமியா – சங்கு வெட்டி தெரு
ஆறுதல் பரிசுகள் :
- பொன் மாரி – 11 ஆம் வகுப்பு – ஹமீதியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி
- முஆஸ் அமீன் – ஆறாம் வகுப்பு – கண்ணாடி வாப்பா சர்வதேச பள்ளி
- நவீன் குமார் – ஒன்பதாம் வகுப்பு – முஹைதீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
- செ.முஹம்மது ரசூல்தீன் – 8 ஆம் வகுப்பு – முஹைதீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
- ஜா.இர்பானா பர்வீன் – எட்டாம் வகுப்பு – சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளி
- ஹசன் இப்ராஹீம் – ஒன்பதாம் வகுப்பு – கண்ணாடி வாப்பா சர்வதேச பள்ளி
- மு.ஹதீஜத்து சுபைரா – தீனியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
- ரிஜா ஹுமைரா – 10 ஆம் வகுப்பு – இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
- ஜெயா ஸ்ருதி – எட்டாம் வகுப்பு – தீனியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
- க கீர்த்தனா – எட்டாம் வகுப்பு – சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளி
வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினருக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். கட்டுரை போட்டியில் கலந்து கொண்ட வெற்றி பெற்ற அனைவருக்கும் கீழை நியூஸ் நிர்வாகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஜாக்டோ – ஜியோ போராட்டம்: தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது..ஒருவர் மரணம்.. புகைப்படத் தொகுப்பு
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 7 ஆவது ஊதியக்குழுவின் முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் திரும்பப் பெற வேண்டும், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், 7 ஆவது ஊதியக்குழுவின் முரண்பாடுகளை களைய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை சீரமைக்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள், அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ – ஜியோ தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.
இதன் ஒருபகுதியாக இன்று (செவ்வாய்கிழமை) சென்னையில் கோட்டையை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர். இதைத் தவிர்க்குமாறு அரசு சார்பில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும், திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்தன.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் பட்டியலை தயாரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் போலீஸார் கைது நடவடிக்கையை தொடங்கினர். இதன்படி, தமிழகம் முழுவதிலும் 250-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக, அண்ணாசாலை, சேப்பாக்கம், கடற்கரை சாலைகளில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை போலீஸார் கைது செய்தனர். அதேபோல், மெரினாவில் சென்னை பல்கலைக்கழகம் அருகே ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வண்டலூரில் வாகன சோதனையின்போது ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். கோயம்பேடு அருகே போராட்டத்தில் பங்கேற்க வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரையும் போலீஸார் கைது செய்தனர். சென்னை தவிர பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.
போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர் தியாகராஜன் மாரடைப்பால் மரணம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான இந்துத்துவ ரவுடிகளின் கொலைவெறித் தாக்குதலுக்கு SIO வன்மையான கண்டனம்…
முன்னாள் குடியரசு துணைத்தலைவர் டாக்டர் ஹமீத் அன்சாரி கலந்து கொள்ள இருந்த ஒரு நிகழ்ச்சியை சீர்குலைக்கும் விதமாக பல்கலைக்கழகத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத ஏ.பி.வி.பி, இந்து யுவ வாகினி குண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனை எதிர்த்து காவல்துறையில் புகார் கொடுக்கச் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி, இந்து யுவ வாகினி ரவுடிகளுடன் சேர்ந்து காவல்துறையினரும் கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பல்கலைக்கழக மாணவர் மன்ற தலைவர் உட்பட 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹைதராபாத், டெல்லி என்று மத்திய பல்கலைக்கழகங்களில் சிறுபான்மை மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்களின் தொடர்ச்சியாக இப்போது அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திலும் இந்துத்துவ குண்டர்களின் கொடூர தாக்குதல்கள் அரங்கேறியிருப்பது இந்தியாவில் சிறுபான்மை மாணவர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதை படம்பிடித்துக் காட்டுகின்றது. தடுக்க வேண்டிய காவல்துறையும் சேர்ந்து கொண்டு ரவுடித்தனங்களை அரங்கேற்றுவது மாணவர்களுக்கு காவல்துறை மீது இருக்கும் நம்பிக்கையை பொய்த்துப் போக செய்வதாக உள்ளது.
தேசத்தின் மதச்சார்பின்மை மீதும், அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கும் கல்வி உரிமையை பாதுகாக்கவும் இத்தகைய குண்டர்கள் மீதும், காவல்துறையினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு வலியுறுத்துகின்றது.
You must be logged in to post a comment.