வட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.விடாமல் பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப்பாதிக்கப்பட்டுள்ளது.பொது மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளனா்.கனமழையால் தெருவெங்கும் தண்ணீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.ராஜஸ்தான் மாநிலம் மதப்புா் அருகே இடியுடன் கூடிய மழை பெய்ததில் மின்னல் வெட்டி செல்போன் கோபுரம் தீப்பிடித்து எாிந்தது.தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.இதனால் அப்பகுதியில் சுமாா் 2 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.
Category:
தேசிய செய்திகள்
திருப்பதி; தெலுங்கானாவில் 9 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று கொலை செய்த வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து மாவட்ட விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
by mohan
written by mohan
தெலுங்கானா மாநிலம் வரங்கால் மாவட்டம் அனுமகொண்டாவில் ஜெகன் ரட்சனா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களின் ஒன்பது மாத குழந்தை சிரிஷாவுடன் வீட்டின் மாடியில் கடந்த ஜுன் மாதம் 18 தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு 1.30 மணிக்கு முழிப்பு வந்து பார்த்தபோது பால் பாட்டில் மட்டும் உள்ள நிலையில் குழந்தை காணவில்லை . இதனால் குழந்தையை பல இடங்களில் தேடி பார்த்துள்ளார். . அந்த பகுதியில் குழந்தையை இளைஞர் ஒருவர் எடுத்து செலவதை ஜெகன் பார்த்து சத்தம்போட்டார். இதையடுத்து குழந்தையை தூக்கி வீசிவிட்டு அந்த வாலிபர் தப்பி செல்ல முயன்ற நிலையில் பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்தனர். குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது குழந்தைக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு மூச்சு விட முடியாமல் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிடிபட்ட வாலிபர் அதே பகுதியை சேர்ந்த பிரவீன் என்பதும் மது போதையில் குழந்தையை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது.பிரவீனை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்து அனுமகொண்டா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் . இந்த வழக்கு விசாரணை வாரங்கல் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயக்குமார் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து பிரவீனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
செய்தி வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் கபினி அணையிலிருந்து வினாடிக்கு 40,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் கபினி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து கபினி அணைக்கு வினாடிக்கு 45,000 கன அடி நீர் வந்துகொண்டிருப்பதால் அணையிலிருந்து 40,000 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மறைந்த சுஷ்மா ஸ்வராஜின் உடலுக்கு பிரதமர் மோடி, குடியரசு துணை தலைவர் நேரில் சென்று அஞ்சலி
by mohan
written by mohan
மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு துணை தலைவர் வேங்கையாநாயுடு ஆகியோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். ஜந்தர்மந்தரில் உள்ள இல்லத்திற்கு சென்று சுஷ்மாவின் கணவர் கவுசல் மற்றும் மகள் பாசூரிக்கு ஆறுதல் தெரிவித்தார்.
நன்றி – ANI
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மறைந்த சுஷ்மா சுவராஜ்க்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி , பிரதமர் .தமிழக ஆளுநர், முதல்வர் .துணை முதல்வர், திமுக தலைவர் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் இரங்கல் தெரிவித்து உள்ளன.கீழை நியூஸ், சத்தியபாதை குழுமம் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்
முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமானதிருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களின் மறைவு இந்தியாவிற்கு மாபெரும் இழப்பாகும். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி செல்லும்போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் மீதும் வெளிநாடுகளில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு தாயகத்திற்கு கொண்டு வந்ததும் மற்றும் அரபு நாடுகளில் வேலைக்கு சென்று அங்கு பெரும் துயரத்திற்கு ஆளான தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்களை மீட்டெடுத்து தாயகத்திற்கு கொண்டு வந்து சேர்த்த பெருமை திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களையே சாரும். அனைவரையும் இன்முகத்துடன் அரவணைத்து செல்லும் ஆற்றல் குணம் படைத்தவர். ஒரு தலை சிறந்த நிர்வாகியை நாடு இழந்து விட்டது. அம்மையாரின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறவும் அம்மையாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் மற்றும் பாஜக தொண்டர்களுக்கும் மாபெரும் இழப்பாகும். அம்மையாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் பிரார்த்தனைசெய்கி ன்றேன்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வட மாநிலங்களில் தற்போது கன மழை பெய்து வருகிறது.தலைநகா் டில்லியில் அவ்வப்போது மழை பொழிந்தாலும் இன்று (06.08.19) நல்ல மழை பெய்து வருகிறது. புதுடெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் இன்று 06-ம் தேதி காலை 10 மணியளவில் பெய்த மழையால் குளம் போல் தண்ணீர் தேங்கி உள்ளது.
கே.எம் வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தனி நபர்களை தீவிரவாதிகளாக பெயர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கும் மசோதா.மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாநிலங்களவையில் நிறைவேற்றம்.பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் மசோதாவுக்கு ஆதரவாக 143 வாக்குகள் கிடைத்தன,மசோதாவுக்கு எதிராக 42 வாக்குகள் கிடைத்ததாக அறிவிப்பு
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலத்தை உழுவதற்கு மாடுகள் கிடைக்காததால், விவசாயி ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏர் பூட்டி நிலத்தை உழுத சம்பவம் கிராம மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இது குறித்த விவரம் வருமாறு; கர்நாடகா மாநிலத்தின் தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா அஜ்ஜிஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நீலப்பா. விவசாயியான இவர் தனது நிலத்தில் தக்காளி, மிளகாய் போன்றவற்றை பயிரிட்டுள்ளார். தற்போது அந்த செடிகளுக்கு, நிலத்தை உழுது உரம் இட வேண்டும்.வழக்கமாக அவர், நிலத்தை உழுவதற்கு காளை மாடுகளை வாடகைக்கு எடுப்பது வழக்கம். ஆனால் தற்போது ஏராளமானோர் நீலப்பாவை போன்றே சாகுபடி செய்துள்ளதால், நிலத்தை உழுவதற்கு தேவையான மாடுகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதுடன், வாடகையும் பல்லாயிரக்கணக்கில் கேட்டுள்ளனா்.
இதனால் வேதனையடைந்த அவர், தனது மகனுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதையடுத்து, மோட்டார் சைக்கிளில் ஏர் பூட்டி நிலத்தை உழ முடிவெடுத்தனர். தொடர்ந்து, மகனுடைய மோட்டார் சைக்கிளின் பின் பக்கத்தில் ஏர் கலப்பை பூட்டப்பட்டது. பின்னர், மோட்டார் சைக்கிளை நீலப்பாவின் மகன் மெதுவாக ஓட்ட, நீலப்பா நிலத்தை உழுதார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.இது குறித்து நீலப்பா கூறியதாவது; “ஒட்டுமொத்தமாக அனைத்து விவசாயிகளும் சாகுபடியில் ஈடுபட்டுள்ளதால், நிலத்தை உழுவதற்கு மாடுகள் கிடைக்காமல் திண்டாடினேன். ஒரு சில இடங்களில், ஆயிரக்கணக்கில் வாடகை கேட்டனர். எனவே, ‘மாடுகளுக்கு பதில் மோட்டார் சைக்கிளில் ஏர் பூட்டி உழுதால் என்ன’ என்று சிந்தித்தேன். இதையடுத்து, எனது மகன் உதவியுடன் அதை செய்து பார்த்தேன். அது, குறைந்த செலவில் எளிமையாக முடிந்துவிட்டது” என்றார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முத்தலாக் தடை மசோதா மீதான வாக்கெடுப்பில் அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது என்று திமுக எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார்.
by mohan
written by mohan
மக்களவையில் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்தார். மசோதா மீது இன்று முழுவதும் விவாதம் நடைபெற்றது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.முத்தலாக் தடை மசோதா மீதான வாக்கெடுப்பு மாநிலங்களவையில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. மசோதாவுக்கு ஆதரவாக 99 பேரும், எதிர்ப்பு தெரிவித்து 84 பேரும் வாக்களித்தனர். இதன் மூலம், முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. டி.ஆர்.எஸ்., பிஎஸ்பி., தெலுங்கு தேசம், அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில் மசோதா நிறைவேறியது. இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றபட்டுள்ள நிலையில், இனி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின் மசோதா சட்டமாக மாறும்.இந்நிலையில், வாக்கெடுப்பில் அதிமுக வெளிநடப்பு செய்ததை கனிமொழி விமர்சித்துள்ளார். கனிமொழி தன்னுடைய ட்விட்டரில், ‘முத்தலாக் மசோதா வெற்றி பெறுவதற்கு வசதியாக ராஜ்ய சபாவில் அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது’ என குறிப்பிட்டுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராமேஸ்வரம் மீனவர்கள் ஏழு பேரும் விரைவில் நாடு திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று, வடமாகாண சபை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் கூறினார்.இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 28ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மல்லிகை நகரைச் சேர்ந்த ஆரோக்கியம்மாள் என்பவருக்குச் சொந்தமான படகில் இன்ஜின் பழுதானது. இதனால் அந்தப் படகு நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது. அப்போது காற்றின் வேகம் காரணமாக அந்தப் படகு இலங்கை கடற்பகுதிக்குள் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி அந்தப் படகையும், அதில் இருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் ஜோசப் பால்ராஜ் (37), பெனிட்டோ (40), நாகராஜ் (45), இன்னாசி (22), சுப்பிரமணி (35), முனியசாமி (48), சத்தியசீலன் (25) ஆகிய 7 பேரையும் சிறைபிடித்துச் சென்றனர்.இந்நிலையில், வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் 7 பேரையும் இன்று (30ம் தேதி) மதியம் சந்தித்த வடமாகாண சபை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், விரைவில் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக ஆறுதல் கூறினார்.இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது; “மதுரையிலுள்ள வழக்கறிஞர் தீரன் திருமுருகன் வேண்டுகோள் விடுத்ததன் பேரில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை நேரில் சென்று பார்வையிட்டேன். அவர்களின் விடுதலை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரனுடன் பேசியுள்ளேன். மிக விரைவில் அவர்கள் நாடு திரும்புவார்கள்” என அவர் தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, புதிய முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றுள்ளார். மேலும், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோர உள்ளார்.இதனிடையே, சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பாஜக திட்டமிட்டுள்ளது. அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 3 பேரை தகுதிநீக்கம் செய்துள்ள சபாநாயகர், மீதமுள்ள 14 எம்.எல்.ஏ-க்கள் மீது விரைந்து முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.இதையடுத்து, தகுதிநீக்க நடவடிக்கையை மேற்கொள்வதைத் தடுக்கும் வகையில், சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை வரும் திங்கட்கிழமை கொண்டுவர உள்ளதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து, புதிய சபாநாயகராக பாஜக-வைச் சேர்ந்த போப்பையா தேர்வு செய்யப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ஆலோசிக்க, இன்று பெங்களூருவில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், சபாநாயகர் ரமேஷ் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து, 14 எம்.எல்.ஏ.க்களும் (11 காங்கிரஸ் + 3 மஜத) தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.ஏற்கனவே, 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. தகுதி நீக்கம் தொடர்பான சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்ற முந்தைய உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்பையில், ரமேஷ் குமார் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நாளை எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதால் பெரும்பான்மைக்கு தேவையான எண்கள் குறையும். தற்போதைய நிலைப்படி, கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தம் 224 (நியமன எம்.எல்.ஏ தவிர்த்து) இடங்கள் இருக்கும் நிலையில், 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், தற்போது 207 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர்.இதனால், பெரும்பான்மை எண்ணாக 105 உள்ளது. பாஜகவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் எடியூரப்பாவால் எளிதாக பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். மேலும், ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ.வின் ஆதரவும் எடியூரப்பாவுக்கு உள்ளது. இதனால், அவரின் ஆட்சி நிலைப்பதில் தற்போதைக்கு எந்த சிக்கலும் இல்லை என்று கூறப்படுகிறது.
ஒருவேளை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றம் சென்று, சபாநாயகர் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் (தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு போல) 17 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கும்.இந்த இடைத்தேர்தலில் 8 இடங்களில் பாஜக வெற்றி பெற்றாலே, ஒட்டுமொத்த பெரும்பான்மையான 113-ஐ எட்ட முடியும். 2013 வரை ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவும் முடியும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இனி ரயில்களில் “முன்பதிவு” அல்லாத பெட்டிகளில் ‘இருக்கை’ பதிவு செய்யலாம்: ரயில்வே புதிய திட்டம்
by mohan
written by mohan
முன்பதிவு செய்யாமல் பயணம் செல்பவர்களுக்கு உதவும் வகையில் இந்திய ரயில்வே புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.இந்திய ரயில்களில் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்வது என்பது மிகவும் கடினமான காரியம் என்பது அனைவருக்கும் தெரியும். ரயில் புறப்படுவதற்கு பல மணி நேரம் முன்னரே ரயில் நிலையம் வந்து பொது பெட்டியில் இடம்பிடிக்க காத்திருந்து இடம் கிடைக்காமல் போன கதையும் பலருக்கு நிகழ்ந்து இருக்கும். இதற்கு தீர்வு காணும் வகையில் இந்திய ரயில்வே துறை புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக, முன்பதிவு செய்யாமல் பயணம் செல்பவர்களுக்கு உதவும் வகையில் பயோமெட்ரிக் திட்டத்தை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது. முன்பதிவு செய்யாத பயணிகளுக்கும் இடங்களை உறுதி செய்வதற்காக பயோமெட்ரிக் அடையாள முறையை அமல்படுத்தியுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதன்படி, பயணிகள் பயோமெட்ரிக் இயந்திரத்தில், டிக்கெட் வாங்கியதும் தங்கள் கைரேகைகளை பதிவு செய்ததும் டோக்கன் ஒன்று வழங்கப்படும். அந்த டோக்கன்களில் உள்ள வரிசை எண் படி பயணிகள் நிறுத்தப்பட்டு, ரயில்வே காவல்துறையினர் டோக்கன்களை பரிசோதித்த பின் பயணிகள் பெட்டிக்குள் ஏற்றப்படுவார்கள். முதலில் வந்து டோக்கன் பெறுபவர்களுக்கே சீட் கிடைக்கும்.அதுமட்டுமின்றி பயோமெட்ரிக் இயந்திரத்தில் பதிவாகும் கைரேகைகள் மூலம் திருடர்களை அடையாளம் காணப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் மக்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வட இந்திய மாநிலங்களில் செயல்படுத்துவது சாத்தியமானதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
ஜெ.அஸ்கர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை அமல்படுத்தப்பட உள்ளது.
by mohan
written by mohan
ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநிலத்தை ஒருங்கிணைத்து முன்மாதிரியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஆந்திராவை இருப்பிடமாக கொண்ட 42 லட்ச ரேசன் அட்டைதாரர்கள், அண்டை மாநிலமான தெலங்கானாவின் ஐதராபாத் பகுதி ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்தத் திட்டத்தின் மூலம் இரண்டு மாநிலத்தவர்களும் தற்போது குடியிருக்கும் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளிலேயே பொருட்களை வாங்கி வருகின்றனர். இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதிமுதல் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மகாராஷ்டிராவில் கடந்த மாத இறுதியில் பருவமழை தீவிரம் அடைந்தது. இதில் தொடர்ந்து 5 நாட்கள் மழை கொட்டி தீர்த்தது. அப்போது, மலாட் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 31 பேர் பலியானார்கள். அதன்பின்னர் இயல்பு நிலை திரும்பியிருந்தது. மும்பை மற்றும் புறநகரில் நேற்று மீண்டும் கனமழை பெய்தது. நாள் முழுவதும் பெய்த மழையால் மும்பை நகரின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.கனமழையால் ரெயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிப்படைந்தது. வெளுத்து வாங்கிய மழையால் ரெயில் தண்டவாளங்களிலும் தண்ணீர் சூழ்ந்தது. பட்லாப்பூர் ரெயில் நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் அந்த மார்க்கத்தில் ரெயில்கள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் கனமழை காரணமாக கோபோலி பகுதியில் உள்ள பாலி சாலை முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் தொடர் மழையின் காரணமாக மும்பை – கோவா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முகலாயர் காலத்தைச் சேர்ந்த 698 நாணயங்களை உத்தரப்பிரதேச மாநில போலீசார் மீட்டுள்ளனர்.
by mohan
written by mohan
மொராதாபாத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரரான குலாம் நபி என்பவர் தனது பணியாளர்களுடன் சேர்ந்து மத்தியப் பிரதேச மாநிலம் சிம்லாவில் ஒப்பந்தப் பணி ஒன்றுக்காக குழி தோண்டும் போது சுமார் 8 கிலோ எடையுள்ள இந்த வெள்ளி நாணயங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறதுஇந்நிலையில் பணி முடிந்து மொராதாபாத்துக்கு திரும்பிய அவர்களிடையே அந்த நாணயங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டதையடுத்து, அக்கம்பக்கத்தினரால் இந்த விவகாரம் காவல்துறையினரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர் நாணயங்களை கைப்பற்றினர்16 மற்றும் 17-ஆம் நூற்றாண்டு காலகட்டத்துக்கு இடைப்பட்ட இந்த நாணயங்களில் பேரரசர்கள் அக்பர், அவுரங்கசீப் ஆகியோர் காலத்து நாணயங்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மகாராஷ்ட்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மும்பையில் 15 செ.மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் பதல்பூர் பகுதியில் சென்று கொண்டு இருந்த மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளத்தில் சிக்கியுள்ளது. இதனால் ரயில் உள்ள 700 பயணிகள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்பு, ராணுவம்,காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் பயணிகளை மீட்டு வருகின்றனர். படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் இதுவரை 20க்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மாநில மக்களுக்கு, பாஜக எம்எல்ஏ ஒருவர் தனது சொந்த செலவில் உணவு தயாரித்து, அதை படகு மூலம் கொண்டுசென்று விநியோகித்து வருகிறார்.அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக பிரம்மபுத்ரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், அசாம் அம்தய் தொகுதி பாஜக எம்எல்ஏ மிரினால் சாய்கியா என்பவர், தனது சொந்த செலவில் உணவு சமைத்து, அதை படகு மூலம் கொண்டுசென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகித்து வருகிறார். இதற்காக அவர் வாகனம் ஒன்றையும் வாங்கியுள்ளார். அதில், உணவு சமைப்பதற்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்துள்ளார். மேலும், இந்த வாகனம் மூலம் நடமாடும் மருத்துவ முகாமிற்கும் ஏற்பாடு செய்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக சொந்தமாக வாகனம் வாங்கினேன். முதல்நாள் சொந்த செலவில் உணவு சமைத்து விநியோகம் செய்தேன். இது சமூக வலைதளங்களில் பரவியது. இதைப் பார்த்த பலர், தாமாகவே முன்வந்து மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். தற்போது, தேவைக்கும் அதிகமாக பணம் சேர்ந்துள்ளதால், ‘நன்கொடையாளர்கள் பணம் கொடுப்பதை நிறுத்த வேண்டும்’ என கூறியுள்ளேன்.
பாதிக்கப்பட்ட மக்களின் பசியை அமர்த்த வேண்டும் என்பதே எனது நோக்கம்; அவர்களுக்கு அரிசியும், பருப்பும் இலவசமாக வழங்க முடியும். ஆனால், அதை சமைத்து சாப்பிடுவதில் அவர்களுக்கு சிக்கல் ஏற்படும் என்பதற்காகவே சமைத்து எடுத்துச் செல்கிறேன்.அத்துடன், வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவார்கள். இதனால், நடமாடும் மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிட்டேன். இதற்காக, அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உதவினர். அரசே, மருந்துகளை விநியோகம் செய்தது” என்றார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சற்றுநேரத்தில் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் எடியூரப்பாஇன்று காலை 10 மணி அளவில் ஆளுநரை சந்திக்க உள்ளதாக எடியூரப்பா அறிவிப்பு.இன்றே பதவி ஏற்பு நிகழ்வை நடத்த ஆளுநரிடம் கோரிக்கை விடுக்க முடிவு – எடியூரப்பா.கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா இன்று மாலை 6 மணிக்கு பதவி ஏற்கிறார்.பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த நிலையில், ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் ஆளுநர் வஜுபாய் வாலா.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பீகாரில் கனமழை பெய்து வருவதுடன் அண்டை நாடான நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பீகாரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதே போல் அஸ்ஸாமிலும் மக்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இரு மாநிலங்களில் சேர்த்து மழை வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சண்டிகரில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டல் 2 வாழைப்பழத்தை ரூ.440 க்கு வாங்கியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ராகுல் போஸ் பகிர்ந்துள்ளார்.பிரபல பாலிவுட் நடிகரான ராகுல் போஸ் தனது ஷூட்டிங்கிற்காக சண்டிகரில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியுள்ளார். அதிகாலை உடற்பயிற்சிக்கு பிறகு ஹோட்டல் நிர்வாகத்திடம் 2 வாழைப்பழங்கள் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் வந்த வாழைப்பழத்திற்கான பில்லை பார்த்தவர் ஒரு கணம் அதிர்ச்சியடைந்தார்.2 வாழைப்பழங்களுக்கு ரூ.442க்கு பில்லடித்து கொடுத்துள்ளது ஹோட்டல் நிர்வாகம். வாழைப்பழங்கள் 375 ரூபாயும், ஜிஎஸ்டியாக 67 ரூபாயும் என கணக்கிடப்பட்டு கொடுக்கப்பட்டது.இதுகுறித்து செல்பி வீடியோவுடன் ஹோட்டல் நிர்வாகத்தை நினைத்து அவர் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்
ஜெ:அஸ்கர்
You must be logged in to post a comment.