தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் இந்திய அஞ்சல் துறை தேர்வு நடத்தப்படும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு
Category:
தேசிய செய்திகள்
நிருபர்களை தரக்குறைவாக நடத்திய வேப்பூர் காவல் ஆய்வாளரை கண்டித்து – WJUT- WORKING JOURNALIST UNION OF TAMILNADU – தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
நிருபர்களை தரக்குறைவாக நடத்திய வேப்பூர் காவல் ஆய்வாளரை கண்டித்து WJUT- WORKING JOURNALIST UNION OF TAMILNADU – தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ் மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் ஆர். சந்திரிகா ஆகியோர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர், அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் நிலையத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற தினகரன், மற்றும் தினமலர், செய்தியாளர்களை வேப்பூர் காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி தகாத வார்த்தைகளால் திட்டியும், தரதரவென இழுத்துச் சென்று குற்றவாளிகளை நடத்துவது போல காவல் நிலையத்தில் கீழே அமருமாறும் கூறி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் மிகவும் கவலை அளிக்கக்கூடிய வேதனைக்குரிய செயலாகும். இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காத அளவிற்கு, வேப்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மீது துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.
வேப்பூர் ஆய்வாளர் மீது துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று நமது சங்கத்தின் சார்பாக காவல் துறை தலைவர் இடத்தில் புகார் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வாளர் புவனேஸ்வரியை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை கோரியும் மாவட்டம் தோறும் பத்திரிகையாளர்களை ஒன்று திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும் தமது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அனாதை இல்லத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர்… கனவு காணுங்கள் வெற்றியடையலாம் என்பதற்கு ஒரு உதாரணம்….
by ஆசிரியர்
written by ஆசிரியர்
சிறு வயதில் குடும்ப வறுமை காரணமாக அனாதை இல்லத்தில் வளர்ந்த அப்துல் நாசர் கொல்லம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார். இவரின் ஐந்து வயதில் தந்தை மரணித்து விட இவருக்கு மூத்த மூன்று சகோதரிகளையும் காப்பாற்ற அண்டை வீடுகளில் கூலி வேலை செய்தும் போதிய வருமானம் இல்லாமல் தவிக்க, தனது மகனுக்காவது வயிராற உணவு கிடைக்கட்டும் என்று இவரது தாய் தீர்மானித்து அநாதை இல்லத்தில் சேர்த்து விட்டுள்ளார்.
தலசேரி தாருல் ஸலாம் யதீம்கானாவில் ஆரம்ப கல்வியும், திருச்சூர் இஸ்லாமிக் ஆர்பனேஜ் கல்லூரியில் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்து தேர்ச்சி பெற்ற அப்துல் நாசர், யதீம்கானா உதவியுடன் பிரண்ணன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். தொடர்ந்து பகுதி நேர வேலை செய்து கொண்டே கோழிக்கோடு பரூக் கல்லூரியில் சேர்ந்து எம.ஏ, தேர்ச்சி பெற்று, பி.எட்., மற்றும் முதுகலை சோசியல் ஒர்க் படிப்பும் தேர்ச்சி பெற்றவர். ஆரம்பத்தில் கேரள சுகாதார துறையில் ஆய்வாறராக பணியில் சேர்ந்த அப்துல் நாசர் 2006 ல் சிவில் சர்வீஸ் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று துணை ஆட்சியராக பணியை துவங்கியவர்.
பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி 2015 ல் கேரளாவில் சிறந்த துணை ஆட்சியருக்கான விருதை பெற்றவர். 2013, 2017 ம் ஆண்டுகளில் மத்திய அரசின் ஹஜ் கமிட்டி ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகித்தார். தற்போது கேரள அமைச்சரவை சிபாரிசின் பேரில் கொல்லம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார் அப்துல் நாசர்.
சிறு வயதில் 1982ம் அனாதை இல்லத்தில் வளரும் போது ஆய்வுக்கு வந்த இளம் ஐஏஎஸ் அதிகாரி அமிதாப் காந்தை பார்த்து மனதுக்குள் தானும் வளர்ந்து இதேபோல் ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவை வளர்த்தேன் என்று பெருமையுடன் கூறுகிறார.
செய்தி தொகுப்பு…அ.சா.அலாவுதீன்.
மூத்த நிருபர்..கீழை நியூஸ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாலக்கோடு அடுத்த மகேந்திரமங்கலம் சுடுகாட்டில் சூதாட்டம் ஆடிய மூன்றுபேரை மகேந்திர மங்கலம் போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்து புலிக்கரை சேர்ந்த சக்திவேல் மகன் பிரகாஷ் 28 வயது. வரகூர் ஆரியன் மகன் வேடி 50 வயசு .புலிக்கரை பச்சையப்பன் மகன் முத்து 43 வயது .மூன்று பேரும் நேற்று மாலை மகேந்திர மங்கலம் அருகில் கொலசனஅள்ளி சுடுகாடு அருகில் உட்கார்ந்து மூன்று பேரும் சூதாட்டம் ஆடியதால் மகேந்திர மங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருமலையில் தமிழக முதல்வர் தனது குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது குடும்பத்துடன் நேற்று (27/05/2019) திருப்பதி திருமலைக்கு இரவு சென்றார்.
இன்று (28/05/2019) காலை சுவாமி தரிசனம் செய்தார். குடும்பத்தாருக்கு தேவஸ்தானம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. பாராளுமன்ற மற்றும் தமிழக சட்டமன்ற தேர்தல் (இடைத்தேர்தல்) நடைபெறுவதற்கு முன்பும் பின்பும் அவர் சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், பிரியங்கா, சோனியா காந்தி அஞ்சலி..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார். டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அஞ்சலி செலுத்தினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தொடர்ந்து அலைபேசி வழியாக வங்கி எண்களை பெற்று ஏமாற்றி வந்த கூட்டம் சிறிது காலம் அமைதியாக இருந்தது போல் காட்சியளித்தது. ஆனால் மீண்டும் ஏமாற்று வேலையை தொடங்கியுள்ளார்கள்.
இன்று (13/05/2019) மாலை நமது கீழை நியூஸ் நிருபருக்கு +919943735608 என்ற எண்ணில் இருந்து RBI வங்கியில் இருந்து அழைப்பதாக கூறியுள்ளார்கள். பின்னர் உங்களுக்கு CREDIT CARD தருகிறோம், வேறு வங்கி CARD விபரம் இருந்தால் தாருங்கள் அந்த விபரங்களை வைத்து புதிதாக கூடுதல் தொகையுடன் புதிய கார்டு தருவதாக கூறியுள்ளார்கள்.
பின்னர் நம் நிருபர் போலியான அழைப்பு என்பதை அறிந்து உங்களுடைய மேலாளர் யார்??, எப்படி விபரம் கிடைத்தது?,, சைபர் கிரைமில் புகார் அளிப்போம் என கூறியதுடன், உங்களுக்கு மெசேஜ் அனுப்புகிறோம் என கூறி அழைப்பை துண்டித்துள்ளார்கள். இது போன்ற ஏமாற்று பேர்வழிகளிடம் தங்கள் வங்கி மற்றும் பிற விபரங்களை கொடுத்து ஏமாந்து விட வேண்டாம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாடகர்களின் குரல் உச்சரிப்பை திருத்தி சரி செய்யும் நடுவராக, மீண்டும் தமிழக தொலைக்காட்சியில் களம் இறங்குகிறார் அறிவிப்பாளர் பி.ஹெச்.அப்துல் ஹமீது.
இலங்கையின் தெமட்டகொடையை பிறப்பிடமாகக் கொண்டவர் பி.ஹெச்.அப்துல் ஹமீது. இவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் செய்தி வாசிப்பாளர், நேர்முக வர்ணணையாளர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், நாடக கலைஞர் என, பல்லாண்டுகளாக பணியாற்றினார். அத்துடன், ‘பாட்டுக்கு பாட்டு’ என்பது போன்ற நிகழ்ச்சிகளை வானொலி மூலம் அறிமுகப்படுத்தியவரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
அப்துல் ஹமீதுவின் தெளிவான தமிழ் உச்சரிப்பும், கணீரென்ற குரலும், கடல் கடந்துவந்து தமிழக மக்களின் காதுகளில் தேனாக பாய்ந்தது. ஹமீதுவின் குரலை மட்டுமே வானொலி வாயிலாகக் கேட்டு குதூகலம் அடைந்த நேயர்கள், அவர் முகத்தை ஒரு முறையேனும் பார்த்து விட மாட்டோமா என ஏங்கிக் கிடந்த காலமெல்லாம் உண்டு.
ஒரு காலகட்டத்தில், அப்துல் ஹமீதுவின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே, வீடியோ கேசட் பிளேயர் மற்றும் அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளின் வீடியோ கேசட் போன்றவைகளை வாடகைக்கு எடுத்து, அப்துல் ஹமீதையும் அவர் பேசும் தமிழ் அழகையும் ரசித்த நேயர்களும் உண்டு.
இந்நிலையில், தனியார் சேட்டிலைட் சேனல் தமிழில் அறிமுகமான புதிதில், ‘சன் டிவி’யில் ஒளிபரப்பான ‘லலிதாவின் பாட்டுக்கு பாட்டு’ என்ற வேடிக்கை வினோத இசைநிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அப்துல் ஹமீது. இதன் மூலம், ஒட்டுமொத்த தமிழக மக்களிடையே பிரபலமானார்.
இவருடைய தெளிவான தமிழ் உச்சரிப்பு மற்றும் வெண்கலக் குரலுக்காகவே தமிழக தொலைக்காட்சி நிறுவனங்கள் அப்துல் ஹமீதுவை போட்டி போட்டுக்கொண்டு அழைத்தன. இதையடுத்து, ‘ராஜ் டிவி’, ‘கலைஞர் டிவி’ என ஒரு ரவுண்ட் வந்ததுடன், ஏராளமான மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
இது தவிர, பல்வேறு தொலைக்காட்சி சேனல்களுக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமான திரைத்துறை பிரபலங்களையும் இவரே பேட்டிகளும் கண்டுள்ளார். அத்துடன், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் ‘தெனாலி’, மணிரத்தினத்தின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
அதன் பிறகு, இசை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதற்காக உலக நாடுகள் பலவற்றுக்கும் பறந்தபடியே இருந்ததால், தமிழக தொலைக்காட்சிகளில் அப்துல் ஹமீதுவை பார்க்க முடியவில்லை. இந்நிலையில், ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் இந்த மாதம் 18ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் ‘சரிகமப’ சீனியர் சீசன் -2 இசை நிகழ்ச்சியில் அப்துல் ஹமீது கலந்து கொள்ள இருக்கிறார்.
வழக்கம்போல் தொகுப்பாளராக இல்லாமல், பங்குபெறும் போட்டியாளர்களின் குரல் உச்சரிப்பை திருத்தி சரி செய்யும் நடுவராக அப்துல் ஹமீது களம் இறங்குகிறார். ‘சரிகமப’ சீனியர் சீசன் -2 இசை நிகழ்ச்சியின் தூதுவராக, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பொறுப்பேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாருங்கள் அப்துல் ஹமீது அவர்களே… தங்கள் முகத்தைப் பார்க்கவும் வெண்கலக் குரலைக் கேட்கவும் தமிழக நேயர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அதிவேக ரயில்களும் உலா வரும் திருடர்கள்.. பயணிகள் ஜாக்கிரதை.. வீடியோ..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
சமீபத்தில் மைசூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் விரைவு ரயில் சேலம் அருகே வரும் பொழுது சில பெட்டியகளில் 2 மர்ம நபர்கள் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்துள்ளர். இதை கண்ட பயணம் செய்த ஒரு பெண்மணி மர்ம நபர்களின் நடவடிக்கையை கவனிக்க உறங்குவது மறுபுறம் திரும்பி நோட்டமிட்டுள்ளார்.
அச்சமயம் அப்பெண்மணியின் அருகே உறங்கி கொண்டிருந்த அவர் மகனின் சட்டை காலரை உயர்த்தி தங்க ஆபரணம் ஏதும் அணிந்துள்ளாரா என்று பார்த்துள்ளனர், உடனே அருகில் இருந்த அப்பெண்மணி என்ன வேண்டும் என்று கேட்டவுடன் வேகமாக தப்பி ஓடியுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் சேலத்திற்கு முன்பாகவே நடைபெறுகிறது, காரணம் அதை தாண்டி காவல்துறை பாதுகாப்பு கடுமையாக உள்ளது.
இது போன்ற அசம்பாவிதத்தை தடுக்க பாதுகாப்பை ஓசூரில் இருந்தே நீட்டித்து, துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும், பொது மக்களுக்கும் பாதுகாப்பான பயணங்கள் கிடைக்கும் என சக பயணிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
+2 தேர்வில் பின்னடைவை சந்தித்த இராமநாதபுர மாவட்டம், 10ம் வகுப்பு தேர்வில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இன்று (29/04/2019) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாநிலத்தில் முதல் மூன்று இடங்கள்.
1. திருப்பூர் 98.53%.ய
2. ராமநாதபுரம் 98.48%.
3. நாமக்கல் 98.45%.
http://www.dge.tn.nic.in என்ற இணையதள பக்கத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
6100 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எப்பொழுதும் போல்10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவியர் 3.7% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் திருத்தேர் திருவிழா மிகவும் சிரப்பாக நடைபெற்றது.
பல ஆயிரம் கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி திருதேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த கோவிலில் ஆண்டுக்கு ஆண்டு இந்த திருத்தேர் திருவிழா மிகவும் சிரப்பாக நடைபெறும். திருப்பதி வெங்கடாசலபதி தம்பி என அழைக்கபடும் சாமி கலியுக வரதராஜ பெருமாள் ஆவார்.
அரியலூர்: ராமசாமி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
டிக்-டாக் செயலியை தடை செய்வது குறித்து 24ம் தேதிக்குள் இறுதி முடிவெடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு டிக்-டாக் செயலி குறித்து 24ம் தேதிக்குள் இறுதி முடிவெடுக்காவட்டால் மதுரை உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த தடை நீக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து, அதுவரை நீதிமன்றம் பிறப்பித்தத் தடையை நீக்கவும் மறுத்துவிட்டது. ஸ்மார்ட்போன்களில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்றாக “டிக் டாக்’ மாறியுள்ளது. இந்த செயலியால், இளைஞர்கள் தவறான வழிக்கு செல்வதாகவும், சமூகத்தில் அதிக பிரச்னைகள் ஏற்படுவதாகவும், ஆபாச விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சமூக நலன், மக்கள் நலன் கருதி அந்த செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், டிக் டாக் செயலிக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று கடந்த 3-ஆம் தேதி உத்தரவிட்டது.
மேலும், டிக் டாக் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் விடியோக்களை ஊடகங்கள் ஒளிபரப்பவும் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, டிக் டாக் செயலியை அறிமுகம் செய்துள்ள சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, சீன நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி முன்வைத்த வாதம்:
டிக் டாக் செயலியை 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். தங்களது தரப்பு கருத்தை கேட்காமலேயே அந்தச் செயலிக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்திருக்கக் கூடாது. எனவே, அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அபிஷேக் சிங்வி வாதிட்டார்.
அதற்குப் பதிலளித்து நீதிபதிகள் கூறியதாவது: டிக் டாக் செயலிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இடைக்கால உத்தரவு மட்டுமே பிறப்பித்துள்ளது. இந்த வழக்கை, அந்த நீதிமன்றம், ஏப்ரல் 16-ஆம் தேதி விசாரிக்கவுள்ளது. இதேபோல், இந்த வழக்கை நாங்கள் முடிக்கவில்லை. இந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையே விசாரிக்கும். மேலும், பல்வேறு தரப்பினரின் கருத்தை அறிய விரும்புவதால், இந்த மனு மீதான விசாரணை, வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, டிக்-டாக் செயலி தொடர்பாக என்ன முடிவெடுத்தீர்கள் என்றும், வரும் 24ம் தேதி அதாவது புதன்கிழமை வழக்கில் தீர்ப்பளிக்காவிட்டால் தடை தானாகவே நீங்கிவிடும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நீதிமன்றமே மோடியை திருடன் என்று கூறிவிட்டதாக சொன்ன கருத்துக்கு மன்னிப்புக் கேட்டார் ராகுல்.! திரித்து கூறப்பட்டுள்ளதாகவும் விளக்கம்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றமே பிரதமர் மோடியை திருடன் என்று கூறிவிட்டதாக சொன்ன கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்புக் கோரினார்.
ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு குறித்த கருத்துகளுக்காக, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கோரியிருந்தது. மேலும், ராகுல் காந்திக்கு எதிரான கிரிமினல் அவமதிப்பு மனுவை பதிவு செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், பிரதமர் மோடியை திருடன் என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டதாகச் சொன்ன தனது கருத்து திரித்துக் கூறப்பட்டதாகவும், எனினும் தான் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாடு முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் டிஜிட்டல் சேவையில் இணைப்பு.!
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இந்தியாவில் உள்ள ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தபால் நிலையங்கள், டிசிஎஸ் எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் வழங்கிய புதிய சாப்ட்வேர் தொழில்நுட்பம் வாயிலாக நவீன மயமாக்கப்பட்டு இருக்கின்றன.
இதற்கான 1100 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை, 2013 ஆம் ஆண்டு தபால் துறையிடம் இருந்து டிசிஎஸ் நிறுவனம் பெற்றது. தபால் நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு வங்கி, காப்பீடு போன்ற அதிக சேவைகளை திறம்பட அளிக்கும் விதத்தில் தகவல் தொழில்நுட்பங்கள் நவீனப்படுத்த வேண்டும் என்பதே இதற்கான திட்டமாகும்.
அதன்படி, மின்னஞ்சல் இயக்கம், நிதி மற்றும் கணக்கு, மனிதவள செயல்பாடு போன்றவற்றில் தீர்வு காணப்பட்டதுடன், ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தபால்நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இதனால் உலக அளவில் மிகப்பெரிய மின் தபால் நெட்வார்க் உருவாகி உள்ளது. இந்த தொழில்நுட்பம் 5 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு உறுதுணையாக இருப்பதுடன், நாளொன்றுக்கு 30 லட்சம் தபால் பரிமாற்றங்களை டிஜிட்டல் முறையில் அளிக்க முடியும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இலங்கையைத் தகர்த்தெறியும் சூழ்ச்சிகரமான தாக்குதல்களுக்கு வெல்ஃபேர் கட்சி கண்டனம்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இந்திய வெல்ஃபேர் கட்சியின் தேசியத் தலைவரும் ஜங்கிபூர் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளருமான டாக்டர் எஸ்.க்யூ.ஆர். இல்யாஸ் இலங்கையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார்.
இலங்கைத் தீவைத் தாக்கிய அந்த தற்கொலைத் தாக்குதலில் 207 பேர் கொல்லப்பட்டுள்ளனர்., 450 பேர் காயமடைந்துள்ளனர். இந்த எட்டு தொடர் குண்டுவெடிப்புகள் மனிதநேயத்திற்கு எதிரான ஒரு நடவடிக்கையாக கருதப்படும்.
உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை வளர்த்துவதற்கும் , இலங்கையில் சமூக பிளவை தூண்டுவதற்கும் இந்த சம்பவம் துணை போகும் என அவர் தெரிவித்தார். ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்ட வேளையில் இறந்த மற்றும் காயமடைந்த கிறிஸ்துவர் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை அவர் தெரிவித்ததுடன் அவர்களோடு என்றும் தாம் துணை நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நம்மை பிரிக்கும் நோக்கத்துடன் இதற்கு பின்னால் இருந்து செயல்பட்டவர்களை தோற்கடிக்கும் வகையில் சர்வதேச சமூகம் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்பாவி மக்களை பாதிக்கும் இப்படிப்பட்ட தாக்குதல்கள் – புல்வாமா தாக்குதல் மற்றும் நியூசிலாந்து தாக்குதல் உட்பட – புலனாய்வு துறையின் தோல்விகளையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மேலும் உலகெங்கிலும் உள்ள பயங்கரவாதிகள் மதம் அல்லது பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, அவர்கள் மனித இனத்தின் எதிரிகளாக இருப்பதாக அவர் தெரிவித்தார். உலகை பயங்கரவாதத்திடமிருந்து விடுவித்து, இந்த பூமியை நிகழ்கால, எதிர்கால சந்ததிகள் நிம்மதியுடன் வாழும் சுவர்க்க பூமியாக மாற்றும் வகையில் சர்வதேச புலனாய்வுத்துறை செயல்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பத்திரிக்கையாளர்கள் தொடர் தாக்குதல் – ஜனநாயகத்தின் தூணை இடிக்க முற்படும் செயல்…பொன்பரப்பியில் செய்தியாளர் தாக்குதல் WJUT உட்பட பல தரப்பினர் கண்டனம்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் சமீப காலமாக பத்திரிக்கையாளர்களை தாக்கும் செயல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் உள்ளூர் செய்தியாளர் முதல் தேசிய அளவிளான அனைத்து பத்திரிக்கையாளர்களும் உண்மையை மக்களுக்கு கொண்டு செல்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக தாக்கப்படுவது மிகவும் வேதைனயான விசயம். பத்திரிக்கை துறை என்பது ஜனநாயகத்தின் முக்கிய தூணாகும், பத்திரிக்கையாளர்களை தாக்குவது ஜனநாயகத்தின் தூணை இடிக்க முற்படுவதற்கு சமமாகும்.
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் 18 அரியலூர் மாவட்ட செய்தியாளர் தோழர் கலைவாணன் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தப்படுள்ளதை தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அ. ஜெ. சகாயராஜ் மற்றும் பொதுச் செயலாளர் ஆர். சந்திரிகா ஆகியோர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாக பத்திரிகை ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.நடந்த உண்மையை செய்திகளாக வெளியிடும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகின்றனர். சில நாட்களாகவே தொடர்ந்து செய்தியாளர்கள் அரசியல் வாதிகளாலாலும் சில குண்டர்களாலும் தொடர்ந்து தாக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து கொண்டே உள்ளது மிகவும் கவலை அளிக்க கூடிய விஷயமாகும்.
தொடரும் ஊடக,பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களை அரசு கண்டும் காணாமல் இருப்பது ஏன்? நாம் பல முறை வலியுறுத்தியும் பத்திரிகையாளர்களை பாதுகாக்க தனி சட்டம் இயற்றாமல் இருப்பது ஏன்? இனி வரும் காலங்களில் இது போன்ற தாக்குதல்களை தடுத்து நிறுத்துமா? தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்குமா? எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.
பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமா மத்திய மாநில அரசுகள்?
தோழர் கலைவாணன் மீது தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது அரசும் காவல்துறையும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவருக்கு உரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும் என்று தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (WJUT) உட்பட பல்வேறு சங்கங்கள் கண்டனத்துடன் கோரிக்கையை வைத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வாக்குரிமை நமது ஜனநாயக உரிமையாகும்… ஓட்டுரிமையை தடுப்பதும்… ஓட்டை விற்பதும் குற்ற செயலாகும்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அமமுக தலைமையில் ஒரு கூட்டணியும், நாம் தமிழர் மற்றும் மநீம போன்ற கட்சிகள் தனித்தும் களம் காணுகின்றன.
தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் மத்திய மாநில ஆளும் கட்சிகளை விமர்சித்து எதிர்கட்சிகளும், எதிர்கட்சிகளை விமர்சித்து ஆளும் கட்சிகளும் தொடர் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றன.
முன்பெல்லாம் தேர்தல் களத்தில் ஆண்ட கட்சிகள் மற்றும் ஆளும் கட்சிகளின் மக்கள் விரோத நடவடிக்கை குறித்தும் மக்களின் நிகழ்கால சிரமங்கள் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்துமே பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தன.
இன்றைய தேர்தலில் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் ஒருவருக்கொருவர் சேற்றை வாரி இரைப்பதும், அவதூறுகளை மீம்ஸ்களாகவும், சமூக வலை தளங்களின் வாயிலாகவும் பரப்பி வருவதும் அதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்கி அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பது வேதனையை தருகிறது.
ஜனநாயக நாட்டில் ஜனநாயக அடிப்படையில் வாக்கு சேகரிக்கவும், பிரச்சாரம் செய்யவும் அனைத்து கட்சிகளுக்கும் முழு உரிமை உண்டு. நமக்கு ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ பிடிக்கவில்லை என்றால் நமது எதிர்ப்பினை ஓட்டு சீட்டின் மூலம் பதிவு செய்வதே அறிவார்ந்த செயலாகும்.
ஒரு கட்சி அல்லது கூட்டணி நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர்களை வாக்கு சேகரிக்கவோ அல்லது பிரச்சாரம் செய்யவோ விடாமல் முற்றுகையிட்டு இது எங்கள் ஏரியா உள்ளே வராதேனு கோஷம் போடுவது ஏற்புடையதல்ல.
ஒவ்வொரு கட்சிக்கும் சில இடங்களில் தனிப்பட்ட முறையில் கூடுதல் ஆதரவாளர்கள் இருக்கலாம்? அதற்காக அந்தந்த பகுதிகளில் தனக்கு பிடிக்காத கட்சிக்காரர்களின் பிரச்சாரத்திற்கு ஊறுவிளைவிக்கும் எந்த செயலையும் ஜனநாயகம் அனுமதிக்காது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அமைதியாக போய்க்கொண்டிருக்கும் தேர்தல் நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் ஆங்காங்கே சில பகுதிகளில் குறிப்பிட்ட சில கட்சிகளின் வேட்பாளர்களின் பிரச்சாரத்தை எதிர்ப்பதும், அவர்களை வாக்கு சேகரிக்க விடாமல் துரத்துவதும் ஆரோக்கியமான செயல் அல்ல என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
வாக்குரிமை எப்படி நமது ஜனநாயக உரிமையோ? அதேபோன்று வாக்கு சேகரித்தலும் ஜனநாயக உரிமை என்பதை உள்வாங்கி ஒவ்வொரு கட்சி தொண்டர்களும் தங்களின் வெற்றிக்கான அறிவார்ந்த வகையில் செயல்பட வேண்டுமேயொழிய பிற கட்சிகளின் பிரச்சாரத்தை தடுக்க நினைப்பது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல.
ஜனநாயக உரிமையை பறிக்கும் செயலை எவர் செய்தாலும் காவல்துறையும்,அரசும் கடும் நடவடிக்கை எடுத்து வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி தமிழகத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற உறுதி செய்திட வேண்டுமென்பது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைவருடைய கோரிக்கையாகும்.
ஆக்கம்:- கீழை ஜஹாங்கீர் அரூஸி Ex.Mc
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிலம்பாட்டம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி மூலம் இராமநாதபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் 2019 ஐ முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு சிலம்பாட்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையிலும், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஹெட்சி லீமா அமாலினி, வட்டாட்சியர் முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலையிலும் இராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்ற மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது .
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நள்ளிரவில் வெளியீடு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கட்சி 22.03.19 நேற்று நள்ளிரவில் திடீரென அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுள்ளதால் அனைத்து பிரதான கட்சிகளும் தங்களது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தையும் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அகில இந்திய அளவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை பல கட்டங்களாக தேர்வு செய்து அக்கட்சி அறிவித்து வருகிறது.
ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படாமல் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தான் நேற்று தமிழகம் உட்பட பிற மாநிலங்களையும் சேர்ந்து 35 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.
இதன்படி, திருவள்ளுர் தொகுதி(தனி) ஜெயக்குமாரும், கிருஷ்ணகிரியில் டாக்டர் செல்லக்குமாரும், ஆரணியில் டாக்டர் விஷ்ணுபிரசாத்தும், கரூரில் ஜோதிமணி, திருச்சியில் திருநாவுக்கரசர், தேனி தொகுதியில் ஈ வி கே எஸ் இளங்கோவன், விருதுநகரில், மாணிக்தாகூர், கன்னியாகுமரி தொகுதியில் எச் வசந்த்குமார் மற்றும் புதுச்சேரியில் வைத்திலிங்கம் ஆகியோரது பெயர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் ஹெச்.ராஜா போட்டியிடும் நிலையில், நேற்று நள்ளிரவு வெளியான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சிவகங்கை தொகுதிக்கு வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் திமுக கூட்டணி கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் பிரச்சாரம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திமுக கூட்டணி கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து கட்சியின் தலைவர் காதர்முகைதீன் பிரச்சாரம் செய்தார். இதில் கூட்டணி கட்சிகளான திமுக, விசிக, காங்கிரஸ், கம்னியூஸ்ட் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டர்.
மேலும் இப்பிரச்சாரத்தின் போது திமுக நகர் செயலாளர் SAH.பசீர், விசிக நகர செயலாளர் ஹமீது யூசுஃப் ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினர்.
You must be logged in to post a comment.