இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோனேரி கிராமத்தில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவியுடன் நவீன முறையில் பருத்தி எடுக்கும் கருவி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதியாண்டு படிக்கும் மாணவி வீ. தாமரைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நவீன பருத்தி எடுக்கும் கருவியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் இதனைப் பயன்படுத்துவதனால் வேலையாட்கள் கூலி, போக்குவரத்துக் கூலி முதலான செலவுகள் குறைந்து, பருத்தி விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் என்று தெரிவித்தனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு லாபம் ஈட்டுவதற்கு இக்கருவி பயன் பெறும் என்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார். மேலும் செய்முறை விளக்கத்தின் போது பேசிய மாணவி தாமரைச்செல்வி, ” இராமநாதபுரத்தில் விளையும் பணப்பயிர்களுள் குறிப்பிடத்தக்க ஒன்று பருத்தி, இம் மாவட்டத்தின் தட்பவெட்ப நிலையைத் தாங்கி வளரக்கூடிய பருத்தி ரகங்களை விவசாயிகள் வளர்வித்தாலும், அதில் வருமானம் என்பது சரியாக கிடைப்பதில்லை மேலும் வயல்களில் இருந்து சப்பைகளை பறிக்க ஆட்கூலி, பஞ்சினைப் பிரித்தெடுக்க தனி ஆட்கூலி, போக்குவரத்துக் கூலி என எண்ணற்ற செலவுகள் பருத்தி விளைச்சலில் உள்ளடங்கும். இச்செலவுகளைக் குறைத்து பருத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் உயர்த்தவே, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பருத்தி எடுக்கும் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை உபயோகிப்பதன் மூலம், வயல்களில் நேரடியாகவே சப்பைகளிலிருந்து பஞ்சினை எடுத்து விட முடியும். பேட்டரி மூலம் செயல்படும் இக்கருவியானது, ஒரு நாளைக்கு 150 கிலோ பருத்தி எடுக்கும் சக்தி கொண்டது. இதனை பருத்தி அறுவடைகாலங்களில் விவசாயிகள் பயன்படுத்துவதன் மூலம், பிற செலவுகளைக் குறைத்து, அதிக வருமானம் பெறலாம்”, என்றார். இதில் கிராமப்புற விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Category:
கீழக்கரை செய்திகள்
மதுரை தோப்பூரில் அமைந்துள்ள அரசு காசநோய் மருத்துவமனையில் செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் செவிலியர் கண்காணிப்பாளர் கனகவேலம்மாள் விழாவிற்கு தலைமை வகித்தார். ஜான்சிராணி, பாத்திமா ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்டெல்லா பிரசில்லா தனலட்சுமி ஆகியோர் வரவேற்றனர். விழாவில் செவிலியர் கோமதி சுற்றுச்சூழல் மேம்படுத்தவும் மருத்துவமனை பசுமை வளாகத்தில் மரம் நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பச்சை மற்றும் நீல நிறம் நோயாளிகளுக்கு தன்னம்பிக்கையும் உற்சாகத்தை வழங்கி நோய்கள் குணமாகும். அதே போல் நமது சுற்றுச்சூழல் மேம்படுத்த மரம் நட வேண்டும். பசுமை மரங்கள் வளர்ப்பதினால் கார்பன் டையாக்சைடு உரியப்பட்டு ஆக்சிசன் அதிக அளவில் வெளியேறும். ஆகையால் சுற்றுச்சூழலை மேம்படுத்த மரம் நட வேண்டும்.
நாம் நகர்புறங்களில் இருந்து கிராமப்புறங்களான செல்கிறோம் மழை நகரங்களான ஊட்டி, கொடைக்கானல் போன்ற ஊர்களுக்கு சுற்றுலா செல்கிறோம். ஆனால் மலை நகரங்களில் உள்ளவர்கள் நகர்ப்புறங்களுக்கு ஆன்மீக சுற்றுலாவை தவிர மற்ற நேரங்களுக்கு வருவதில்லை காரணம் அவர்களுக்கு தேவையான பசுமையான சூழ்நிலை அங்கே உள்ளது. ஆகையால் நாம் பசுமை வளர்க்க மரம் நட வேண்டும். அந்த நடப்பட்ட மரத்தை தொடர்ந்து பராமரித்து வர வேண்டும். இதன் மூலம் சுற்றுச்சூழல் மேம்படுவதுடன் இயற்கையான காற்று, அழுத்தம் இல்லாத நல்ல மனநிலை போன்றவை நமக்கு கிடைக்கும் எனக் கூறினார்.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/IMG-20240517-WA0124-large.jpg?resize=1024%2C576&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/IMG-20240517-WA0126-large.jpg?resize=1024%2C576&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/IMG-20240517-WA0127-large.jpg?resize=1024%2C768&ssl=1)
பின்னர் மருத்துவமனைமையில் உள்ள பசுமை வளாகத்தில் செவிலியர்கள் செவிலிய உதவியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உதவியுடன் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது. செவிலியர் தின விழா நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக கோமதி தலைமையில் ஃப்ளோரோ நைட்டிங்கேல் உருவப்படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றனர். நோயாளிகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மருந்துகளை தவிர்ப்பதும் அவற்றை நோயாளிகளுக்கு வழங்காமல் பாதுகாப்பதும் நமது நோக்கமாகும். நோயாளிகளிடம் அன்பாகவும் கருணையாகவும் பேசி அவர்களின் உடல் நலனில் அக்கறையுடன் கவனித்துக் கொள்வதும் நமது கடமை ஆகும். நோயாளிகளை விருப்பு வெறுப்பின்றி சமமாகவும் அவர்களின் நலனின் அக்கறையுடனும் பாரபட்சம் இல்லாமல் கவனித்து கொள்வேன் என உறுதிமொழி ஏற்றனர்.
விழாவில் தோப்பூர் அரசு மருத்துவமனை நிலைய மருத்துவர் காந்திமதி நாதன் மற்றும் மருத்துவர்கள் ஜெய் கணேஷ், இளம் பரிதி மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்கள் செவிலிய உதவியாளர்கள் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அரங்கத்தில் செவிலியர்களின் நடனம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. செவிலியர் கோமதியின் பசுமை போற்றுவோம் என மரங்கள் வளர்பதின் நன்மைகளும் அவற்றின் சுற்றுப்புற தூய்மை உடல் நலன் மனநலன் குறித்த பேச்சு விழிப்புணர்வு ஏற்படுத்தியது. முடிவில் செவிலியர் சுதா நன்றி கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் அருகே குண்டும் குழியுமான சாலை; பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி..
written by Abubakker Sithik
சோழவந்தான் அருகே குண்டும் குழியுமான சாலை; பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி..
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து முதல் திருவேடகம் வரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டிய பள்ளத்தை சரிவர மூடாததால் தற்போது பெய்து வரும் மழைக்கு சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக தச்சம்பத்து திருவேடகம் பகுதியில் அதிக அளவில் பள்ளங்கள் இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/IMG-20240517-WA0120-large.jpg?resize=1024%2C461&ssl=1)
இது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நெடுஞ்சாலைத்துறையினர் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறிய மழை பெய்தாலே சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி விடுவதால் வாகனத்தில் வருவோர் பள்ளத்தில் விழுந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. ஆகையால் திருவேடகம் முதல் தச்சமுத்து வரை உள்ள சாலையை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டுமென இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குற்றாலம் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் குளிக்க தடை; மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் அறிவிப்பு..
written by Abubakker Sithik
கனமழை எச்சரிக்கை எதிரொலி: குற்றாலம் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் குளிக்க தடை; மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவி மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என தென்காசி மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், சென்னை வானிலை மையம் தென்காசி மாவட்டத்திற்கு 17.05.2024, 18.05.2024, 19.04.2024, 20.05.2024 மற்றும் 21.05.2024 ஆகிய தினங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் (Orange alert) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கனமழை மற்றும் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குற்றாலம் நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ய கூடும் என்பதால் குற்றாலத்திலுள்ள பிரதான அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி மற்றும் இதர அருவிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மேற்கண்ட அருவிகள், அணை பகுதிகள் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை பொது மக்கள் குளிக்க தடை விதித்து ஆணையிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கனமழை மற்றும் மிக கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் – 1077 அல்லது 04633 290548 என்ற எண்களில் பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குற்றால வெள்ளப் பெருக்கில் சிக்கிக் கொண்ட நெல்லை சிறுவன் சடலமாக மீட்பு..
written by Abubakker Sithik
குற்றால வெள்ளப் பெருக்கில் சிக்கிக் கொண்ட நெல்லை சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சோகம்..
பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நெல்லை சிறுவன் அஸ்வினை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக திருநெல்வேலியை சேர்ந்த அஸ்வின் என்ற 16 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டார். தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் தலைமையில் சிறுவனை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து சிறுவன் அஸ்வின் உடலை நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்டனர். குளிக்கச் சென்ற சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு..
பழைய குற்றால அருவியில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக திருநெல்வேலியை சேர்ந்த அஸ்வின் என்ற 16 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டார். அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை தேடும் பணி நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட எஸ்.பி.சுரேஷ்குமார் தலைமையில் சிறுவனை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவாடானை அருகே வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம் வாங்கிய சிறப்பு சார்பு ஆய்வாளர் கைது !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா பெருமாநேந்தல் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கும் அவரது உறவினர்கள் சிலருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு சம்பந்தமாக இருதரப்பினரும் கொடுத்த புகார்களுக்கு தொண்டி காவல் நிலையத்தில் வழக்கு மற்றும் எதிர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இதே சம்பவம் தொடர்பாக வேல்முருகன் மீது மற்றொரு புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. மேற்படி வழக்கில் புகார் தாரரை ஜாமீனில் விடுவித்ததற்கும் மற்றொரு புகாருக்கு வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்கும் தொண்டி காவல் நிலையத்தில் பணி புரியும் சிறப்பு சார்பு ஆய்வாளரான இராமகிருஷ்ணன் என்பவர் முதலில் ரூ.3000/- இலஞ்சமாக கேட்டு அதற்க்கு அவர் தர மறுக்கவே பின்னர் ரூ.2000/-மாவது கொடுக்கும்படி கெஞ்சி கேட்டுள்ளார். இந்நிலையி்ல் இலஞ்சம் கொடுக்க விரும்பாத வேல்முருகன் இராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலிஸில் புகார் செய்தார். இலஞ்ச ஒழிப்பு துறை போலிஸாரின் அறிவுத்தலின் பேரில் இரசாயனம் தடவிய ரூ.2,000/- கொடுத்து மேற்படி இராமகிருஷ்னை சந்திக்க அறிவுரை வழங்கி தொண்டி பகுதியில் அங்காங்கே மறைந்து இருந்தனர். இதனையடுத்து, பைக்கில் வந்து இலஞ்சம் வாங்கியதை உறுதி செய்த இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து மேலும் இச்சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் மருதமலை திரைப்பட பாணியில் லஞ்சம் கேட்டு மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது .
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செவ்வூர் அருகே தனியார் பள்ளி விண்வெளி கண்காட்சி திறப்பு விழா !
by Baker BAker
written by Baker BAker
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000972928-large.jpg?resize=1024%2C580&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000972927-large.jpg?resize=1024%2C580&ssl=1)
சிவகங்கை மாவட்டம் செவ்வூர் அருகே சிவன் ஊர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் ஸ்பேஸ் எக்ஸ்போ டி 24 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் கலந்துகொண்டு அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். பூமிகோள்களில் இருந்து விண்வெளியை பார்க்கும் விதமாகவும், செவ்வாய் மற்றும் சந்திரன் நிலப்பரப்பிலிருந்து பூமியை பார்க்கும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து மாணவ மாணவிகள் பொதுமக்கள் டெலஸ்கோப் மூலம் விண்வெளியில் கோள்கள் எவ்வாறு உள்ளது என செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. விண்வெளி மற்றும் கோள்களை பாட புத்தகத்தில் படிப்பது மட்டும் அதைவிட விண்வெளி கண்காட்சியில் பங்கேற்று அதை செயல்படுத்தி பார்க்கும் பொழுது எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது என மாணவ மாணவிகள் தெரிவித்தனர்இவ் விண்வெளி கண்காட்சியை மாணவ மாணவிகளே செய்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கத்து.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கமுதக்குடியில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் முதலிடம் பிடித்த மூன்று மாணவர்களுக்கு பாரட்டு விழா !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்திலேயே தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது இந்த நிலையில் பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி மவுண்ட் லிட்ரா தனியார் மேல்நிலை பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் தற்போது நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மூன்று மாணவர்களுக்கு பொன்னாடை போற்றி நினைவு பரிசுகளை பள்ளி நிர்வாகிகள் வழங்கி கௌரவித்தனர் முன்னதாக பள்ளிநிர்வாக செயலாளர் நாகரெத்தினம் பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பார்த்து உணர்ச்சி பொங்க நன்றியினை தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உயிருக்கு போராடிய கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றிய அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ! கண்ணீர் மல்க உறவினர்கள் நன்றி தெரிவித்த நிகழ்வு !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் மனைவி சாரதி இந்த தம்பதியருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவது பிரசவத்திற்காக கடந்த 30-ம் தேதி என்று ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகப்பிரசவம் மூலம் ஆண் குழந்தை பிறந்த நிலையில் பிரசவத்திற்கு பின்னர் இயல்பாக சுருங்க வேண்டிய கர்ப்பப்பை சுருங்காததன் காரணமாக அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதன் காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கர்ப்பிணி தாயை மருத்துவர் தினேஷ் முகில் மற்றும் நந்தினி மற்றும் செவிலியர்கள் கடும் போராட்டத்திற்கு பின்னர் தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் போராடிய தாயும் சேயும் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய அரசு மருத்துவமனைகள் மற்றும் செவிலியர்களுக்கு அந்த பெண்ணின் உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மீன் மார்க்கெட் திடீர் ஆய்வு ! கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரத்தில் நேற்று ஒரே நாளில் அரசால் தடை செய்யப்பட்ட 800 கிலோ தேளி மீன்களை பறிமுதல் செய்து அதை அளித்த நிலையில் இன்று ராமநாதபுரம் மீன் மார்க்கெட்டில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயகுமார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சில வியாபாரிகள் லாப நோக்கில் நீண்ட நாட்களாக கெட்டுப்போன 20 கிலோ மீன்கள் விற்பனைக்கு இருப்பு வைத்திருந்தது தெரியவந்தது. அந்த மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் வியாபாரிகள் முன்னிலையில் அவற்றை பினாயில் ஊற்றி அளித்தனர். அதனைத் தொடர்ந்து கெட்டுப்போன மீன்களை விற்பனைக்கு வைத்திருந்த வியாபாரிகளுக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது . மேலும் இதுபோன்ற முறைகேடான செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இச்சோதனையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி லிங்கவேல் , ஜெயராஜ் , தர்மர் , மீன்வள ஆய்வாளர் அபுதாஹிர் , மீன்வள சார்பு ஆய்வாளர் அய்யனார் , கடல் அமலாக பிரிவு சார்பு ஆய்வாளர் குருநாதன் , காவலர் காதர் இப்ராகிம் ,மீன்வள மேற்பார்வையாளர் நடேஷ் , சரத் உட்பட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000972750-large.jpg?resize=1024%2C576&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000972749-large.jpg?resize=1024%2C576&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000972748-large.jpg?resize=1024%2C576&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000972746-large.jpg?resize=1024%2C576&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/1000972745-large.jpg?resize=1024%2C576&ssl=1)
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி நகராட்சிக்கு அஞ்சல் மூலம் கோரிக்கை; நகராட்சி தலைவருக்கு பாராட்டு..
written by Abubakker Sithik
தென்காசி நகராட்சிக்கு அஞ்சலில் வந்த மக்கள் கோரிக்கை; நடவடிக்கை மேற்கொண்ட நகராட்சி தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு..
தென்காசி நகராட்சிக்கு அஞ்சல் அட்டை மூலம் வந்த மக்கள் கோரிக்கையின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்ட நகராட்சி தலைவரை பாராட்டி பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தென்காசி நகராட்சி தலைவராக ஆர். சாதிர் இருந்து வருகிறார். தென்காசி கன்னிமாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் வாறுகால்களை தூய்மைப்படுத்தி சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டும் என அஞ்சல் அட்டை மூலம் தென்காசி நகராட்சி தலைவருக்கு கோரிக்கை அனுப்பி இருந்தார். இந்த கோரிக்கைக்கு மதிப்பளித்து தென்காசி நகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/20240516_110353-large.jpg?resize=707%2C486&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/20240516_110340-large.jpg?resize=711%2C480&ssl=1)
இந்நிலையில், தென்காசி நகராட்சி தலைவருக்கு நன்றி தெரிவித்து வெற்றிவேல் எழுதியுள்ள கடிதத்தில், மதிப்பிற்குரிய சேர்மன் அவர்களுக்கு வணக்கம். 2 வாரங்களுக்கு முன்பு தென்காசி இந்தியன் வங்கி முன்புறம் காந்தி சிலை செல்லும் வழியில் இருக்கும் சந்தில் வாறுகால்களின் சுகாதாரச்சீர்கேடு பற்றிய எனது கடிதத்திற்கு மதிப்பு அளித்து உடனடியாக அதனை சுத்தப்படுத்த ஆணையிட்ட தங்களின் பண்பை எண்ணி வியக்கின்றேன். ஒரு சாதாரண அஞ்சல் அட்டைக்கும் எங்கள் தலைவர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை தங்களின் மீதான எனது மதிப்பினை பலப்படுத்தியுள்ளது. மிகவும் உயர்த்தியுள்ளது. அந்த வழியாக ஒரு நாளைக்கு பல முறை செல்கின்ற பாதசாரிகளில் நானும் ஒருவன். இந்த நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு என்பது மிகவும் இன்றியமையாதது என்பது உள்ளிட்ட தூய்மை குறித்த விழிப்புணர்வு பல பகுதிகளுக்கும் பரப்ப வேண்டும். ஒரு தெருவில் ஒரு சிலராவது விழிப்புணர்வுடன் இருந்தால் எமது நகரம் தூய்மை நகரம் ஆகும் என்ற நம்பிக்கையுடன் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் தேலி மீன் பறிமுதல் !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் பட்டினம்காத்தான் ஈசிஆர் சாலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயகுமார் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி லிங்கவேல் மற்றும் ஜெயராஜ் முன்னிலையில் நேற்று நள்ளிரவு வாகன சோதனை நடைபெற்றது . அப்போது அவ்வழியாக உச்சிப்புளி நோக்கி சந்தேகப்படும்படி சென்ற சரக்கு வாகனத்தை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் லிங்கவேல் நிறுத்தியுள்ளார். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றதால் உச்சிப்புளி காவல் நிலையத்திற்கு லிங்க வேல் தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் உச்சிப்புளி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் தேலி மீன் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த மீன்வளத்துறை ஆய்வாளர்கள் அபுதாகிர், ஐயப்பன் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி லிங்கவேல் ஆகியோர் இணைந்து அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் தேள் மீன் சுமார் 800 கிலோவை பறிமுதல் செய்தனர்.விசாரணையில் பரமக்குடி அடித்த மஞ்சூரில் இருந்து உச்சிப்புளிக்கு கோரி தீவனத்திற்காக கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட மீனை பட்டினம்காத்தான் மேம்பாலம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு அருகே குழி தோண்டி புதைத்து அழித்தனர். மேலும் இதுபோன்ற ஆப்பிரிக்கன் தேலி மீனை பொதுமக்கள் வாங்கி உணவுக்கு பயன்படுத்த வேண்டாம் என்றும், இதனால் புற்றுநோய், தோல்நோய், குழந்தையின்மை, இதய நோய் போன்ற நோய்கள் வரும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை கள்ளழகர் கோவில் மலைப்பாதை திடீரென மூடப்பட்டதால் பக்தர்கள் அவதி..
மதுரை மாவட்டம் அழகர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கள்ளழகர் திருக்கோவில். மலைமீது முருகனின் ஆறாவது படை வீடு பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் மற்றும் நூபுர கங்கை தீர்த்தம், ராக்காயி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இந்த நிலையில் மலைப்பாதையில் பாலம் வேலை நடைபெறுவதால் இன்று ஒரு நாள் பக்தர்கள் மலை மீது வாகனங்களில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/IMG-20240515-WA0155-large.jpg?resize=1024%2C768&ssl=1)
ஒரு சிலர் மலை மீது சிரமத்துடன் நடந்தே பயணிக்கும் சூழல் நிலவி வருகிறது. வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அதிகளவு பக்தர்கள் வந்திருந்த நிலையில், இந்த திடீர் அறிவிப்பால் மலைமீது ஏற முடியாமல் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் திருக்கோவில் மற்றும் மலை மீதுள்ள முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வரும் நிலையில் பக்தர்கள் மலை மீது உள்ள சுவாமிகளை தரிசனம் செய்ய முடியாமல் வாகனங்களுடன் அடிவாரத்தில் காத்திருக்கும் சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் நண்பர்கள் ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ் டிரஸ்ட் விருது விழா !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் தனியார் மஹாலில் நண்பர்கள் ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் முன்னாள் , இந்நாள் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் நண்பர்கள் ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ் டிரஸ்ட் சேர்மன் ரமேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்ட தலைவர் பரூக் அப்துல்லா முன்னிலை வகித்தார். இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் ஜோய்சா நுவன் தாரங்கா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ராமநாதபுரம் கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்ட செயலாளர் மாரீஸ்வரன், மாற்றுத்திறன் கிரிக்கெட் வீரர் சச்சின் சிவா ஆகியோர் உரை ஆற்றினர். முன்னாள் ஆல்ரவுண்டர் மாரீஸ்வரன், சத்தியேந்திரன், மகேந்திரன் உள்பட 50க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் ஜோய்சா நுவன் தாரங்கா, இலங்கை வீரர் சீக்குகெ பிரசன்னா, மாற்றுத்திறன் கிரிக்கெட் வீரர் வீரக்கோடி தனுஷ்க ஜீவக்க, பிங்கார சர்வதேச கிரிக்கெட் கிளப் பயிற்றுநர் காமகே அசெல பெரேரா ஆகியோர் விருது வழங்கினர். கிரிக்கெட் போட்டிகளின் தேசிய நடுவர் கண்ணதாசன் தொகுத்து வழங்கினார். டயுள்யு சி ஏ கிரிக்கெட் அகாடமி நிர்வாகி வாஹித் நன்றி கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை; பாதுகாப்பு முறைகளை பின்பற்ற மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்; உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றிட மாவட்ட கலெக்டர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்..
தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பின்வரும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்றிட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஏ.கே. கமல்கிஷோர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், சென்னை வானிலை மையத்திலிருந்து தென்காசி மாவட்டத்திற்கு 15.05.2024, 18.05.2024, 19.05.2024 ஆகிய தினங்களில் கனமழை மற்றும் மிக கனமழையும், 16.05.2024 மற்றும் 17.05.2024 ஆகிய தினங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்ட முழுவதும் 15.05.2024. 18.05.2024 மற்றும் 19.05.2024 ஆகிய மூன்று தினங்கள் ஆரஞ்சு Alert என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும் ஆறு மற்றும் குளங்களில் நீர்வரத்து அதிகமாக வாய்ப்பு உள்ளதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் உரிய எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருந்திட அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், தெரியாத ஆழமும் நீரோட்டமும் உள்ள தண்ணீருக்குள் செல்ல வேண்டாம். மேற்சொன்ன காலங்களில் இடி, மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதால் விவசாய தொழிலாளர்கள் ஆடு, மாடு மேய்ப்பவர்கள், இடி மின்னலின் போது வெட்ட வெளியில் நடக்க வேண்டாம் என்றும், மரங்களுக்கு கீழ் பாதுகாப்பிற்காக ஒதுங்க வேண்டாம் என்றும், பெருமழையின் போது காய்ச்சிய குடிநீரினையே பருகி நோயிலிருந்து தங்களை காத்துக் கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது. மழையினால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் – 1077 அல்லது 04633-290548 என்ற எண்களில் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொம்பூதி கிராமத்தில் விவசாயிகளுக்கு செயலிகள் பற்றி வேளாண்மை கல்லூரி மாணவியின் விழிப்புணர்வு நிகழ்ச்சி !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொம்பூதி கிராமத்தில் கிராமப்புற பணி வேளாண்மை அனுபவ திட்டத்தின் கீழ் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவி அ.சுகந்தி தலைமையில் விவசாயிகளுக்கு செயலியின் முக்கியத்துவம் பற்றியும் செயலியை பதிவிறக்கம் செய்து அதனை பயன்படுத்தும் முறை பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். மேலும் மாணவி அ.சுகந்தி தெரிவிக்கையில் ; இன்றைய காலகட்டத்தில் கிராமமக்கள் டிஜிட்டலை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருககிறார்கள். அரசால் கொண்டுவரப்பட்ட விவசாய ஆஃப்கள் வந்த பின்பு விவசாயிகளுக்கு வழிகாட்ட சுலபமானவும் ஒரு ஊடகமாகவும் மாறியுள்ளது . விவசாயிகளுக்கு பயிர் அல்லது காய்கறி, வேளாண்மை, பயிர் சாகுபடி விதைத்தல் அல்லது அறுவடை செய்வதற்கான சரியான விஞ்ஞான வழியை இது வழங்குகிறது. பூச்சி மற்றும் நோய்களுக்கான பிரச்சனைகளையும் மருந்துகளையும் சரி செய்வதற்கான சரியான வழிமுறைகளை இந்த விவசாய ஆப்கள் தருகின்றன . இந்த விவசாய ஆஃப்கள் விவசாயிகளுக்கு சிறந்த நண்பனாக விவசாயத்துக்கு உதவி புரிகிறது . இந்த ஆப்பை நாம் அன்றாட பயன்படுத்தும் மொபைலின் மூலம் எந்த ஒரு பணம் செலவு செய்யாமல் சுலபமாக கூகிள் PLAY STORE ல் டவுன்லோட் செய்யலாம்என்றும் விவசாயிகளுக்கு இதன் மூலம் நவீன தொழில்நுட்பத்தை தெரிந்து கொண்டு அதன்மூலம் பயன்பெறலாம் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மோடியிடம் வேட்பு மனுவை பெற்ற தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தேர்தல் அதிகாரி; புகைப்படம் வைரல்..
written by Abubakker Sithik
இந்திய பிரதமர் மோடியிடம் வேட்பு மனுவை பெற்ற தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தேர்தல் அதிகாரி ராஜலிங்கம்..
இந்தியப் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ராஜலிங்கம் என்பவர் பணியில் உள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி தனது வேட்பு மனுவினை தேர்தல் அதிகாரி தென்காசி எஸ்.ராஜலிங்கம் என்பவரிடம் நேற்று தாக்கல் செய்தார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/FB_IMG_1715748723014-large.jpg?resize=720%2C451&ssl=1)
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் (தேர்தல் அதிகாரி) எஸ். ராஜலிங்கம். திருச்சி என்.ஐ.டி-யில் பொறியியல் பட்டம் பெற்ற இவரது தந்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளாராக பணியாற்றியவர். தாய் கடையநல்லூர் நகராட்சி கவுன்சிலராக இருந்தவர். இவர், கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ் அதிகாரியாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து, 2009-ஆம் ஆண்டு மற்றொரு முறை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ்-ஆக வெற்றி பெற்று உத்தர பிரதேச மாநிலத்திலேயே மாவட்ட ஆட்சியராகவும் பொறுப்பேற்றார். உத்தரப்பிரதேச மக்களிடையே திறமையான அதிகாரியாக பேசப்பட்டு வரும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராஜலிங்கம், வாரணாசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக கடந்த 2022-ஆம் ஆண்டு பொறுப்பேற்றுள்ளார்.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/20240515_102426-large.jpg?resize=720%2C511&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/20240515_102456-large.jpg?resize=720%2C461&ssl=1)
இந்த நிலையில், இந்தியப் பிரதமர் மோடி தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியான தென்காசி ராஜலிங்கத்திடம் தாக்கல் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. மேலும் வேட்பு மனு தாக்கல் செய்யும் இந்திய பிரதமர் மோடி மற்றும் தேர்தல் அதிகாரி தென்காசி ராஜலிங்கம் இடம் பெற்றுள்ள புகைப்படத்தை தென்காசி மாவட்ட வாட்ஸப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி; மாவட்ட கலெக்டர் தகவல்..
written by Abubakker Sithik
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்..
தென்காசி மாவட்டத்தில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் உயர் கல்வி வழிகாட்டுதல் இரண்டாம் கட்ட நிகழ்ச்சி 16.05.2024 வியாழக்கிழமை சங்கரன்கோவில், ஸ்ரீகோமதியம்பாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன சார்ந்த மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள கல்லூரி படிப்புகளை பயின்று பயன் பெறுவதற்காக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலச்செயலகம் மற்றும் இயக்குநரகம் சென்னை உத்தரவுக்கிணங்க, மாவட்ட ஆட்சியர் தலைமையில், DON BOSCO TEAM. Mass Movement for Transformation (MMT) and Nuture Bhel) என்ற தன்னார்வ அமைப்பின் கல்வியாளர்களின் நல்வழிகாட்டுதலுடன் தொழில் சார்ந்த படிப்பும் (professional course) மற்றும் காமர்ஸ் பிரிவு மாணவர்களுக்கும் தனித்தனியாக நடைபெற இருப்பதால் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்; தென்காசி மாவட்ட பயனாளிகள் முதல்வருக்கு நன்றி..
written by Abubakker Sithik
தமிழ்நாட்டில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்; தென்காசி மாவட்ட பயனாளிகள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி..
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற்று வரும் தென்காசி மாவட்ட பயனாளிகள் தமிழ்நாடு முதலைமச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். “காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது (குறள் -102) என்னும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க, தகுந்த சமயத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் அது உலகத்தை விட பெரிதாக மதிக்கப்படும். மகளிருக்கு சொத்துரிமையும் உள்ளாட்சி அமைப்புகளில் தனி இட ஒதுக்கீடு அளித்தது முதல் தற்போது கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கியது வரை மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் இரண்டு நோக்கங்களைக் கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு அவர்கள் வாழ்வதற்கு சமூகத்தில் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதாகும்.
மகளிரின் சமூக பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்பது குடும்பத் தலைவிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள் என பல்வேறு வகைகளில் தங்கள் விலை மதிப்பில்லா உழைப்பைத் தொடர்ந்து வழங்கி வரும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயள்பெறுவார்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்காகவும், அவரவர் குழந்தைகளின் கல்வி, உடல் நலம் காக்கவும் இந்தச் சமூகத்திற்காகவும், வீட்டிலும், வெளியிலும் ஒரு நாளைக்குப் பல மணி நேரம் பெண்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரித்திடவே பெண் உரிமையை நிலைநாட்டிய கலைஞர் பெயரால் இந்த மகளிர் உரிமைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெண்களின் உழைப்பு ஆண்களுக்கு நிகராகவே அமைந்திருந்தது. இன்றளவும் பல குடும்பங்களில் குறிப்பாக பொருளாதாரத்தைச் சுமக்கும் முதுகெலும்பாகவும் பெண்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. குறைவாக மதிப்பிடப்படும் பெண்களின் உழைப்புக்கான பொருளாதார மதிப்பை அங்கீகரிக்கவும், விவசாயம், வீட்டு வேலை போன்ற குறைந்த ஊதியம் பெறும் வேலைகளில் ஈடுபட்டுள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கிடவும் இந்த மாபெரும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான 15.09.2023 அன்று காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு உரிய விதிமுறைகளைப் பின்பற்றி மாதந்தோறும் 1000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் 1 கோடியே 15 இலட்சம் குடும்பத் தலைவிகள் பயனடைந்துள்ளனர்.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/05/ஆவுடையம்மாள்-தென்காசி._20240513_184027_0000-large.jpg?resize=1024%2C576&ssl=1)
தென்காசி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இத்திட்டத்தின் வாயிலாக 1,82,656 குடும்பத் தலைவிகள் பயன் பெற்றுள்ளனர். கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் குடும்பத் தலைவிகள் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு: (ஆவுடையம்மாள், தென்காசி) : என் பெயர் ஆவுடையம்மாள். சொந்த ஊர் தென்காசி. முதலமைச்சர் அவர்கள் மகளிருக்காக உரிமைத்தொகை ஆயிரம் ரூபாயை அறிவித்து வழங்கி வருகிறார்கள். இந்த பணம் குடும்பத்திற்கு மிகவும் உதவியாக உள்ளது. இதனால் எங்கள் எங்கள் குடும்பத்திற்கு அத்தியாவசியத் தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் இதர சில்லரைச் செலவுகளை எங்களால் சமாளிக்க முடிகிறது. இதனால் எங்களுக்கு மாதம் 1000 ரூபாய் சேமிக்க முடிகிறது. ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் கிடைப்பதால் எங்கள் குழந்தைகளுக்கு தேவையானவற்றை எங்களால் வாங்க முடிகிறது. இதனால் எங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நிதியை ஒதுக்கிய முதலமைச்சர் அவர்களுக்கு மிக்க நன்றி.
பார்வதி தென்காசி மாவட்டம் அழகப்பபுரம்: என் பெயர் பார்வதி. சொந்த ஊர் தென்காசி மாவட்டம் அழகப்பபுரம் கிராமம். முதலமைச்சர் அவர்கள் மகளிருக்காக உரிமைத்தொகை ஆயிரம் ரூபாயை அறிவித்து இருக்கிறார்கள். மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் கிடைப்பதால் எங்கள் குடும்பச் செலவுகளுக்கு இந்த பணம் பயன்படுகிறது. எந்த ஒரு அரசும் இது போல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கியது இல்லை. எங்களைப் போல் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இந்த தொகை மிகவும் உதவியாக உள்ளது. எங்கள் குழந்தைகளின் சின்னச் சின்ன தேவைகளை நிறைவேற்றவும், அத்தியாவசியத் தேவைக்கும் இத்தொகை உதவியாக உள்ளது. இந்த நிதியை எங்களுக்கு வழங்கிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன், தென்காசி மாவட்டம்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.