தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் அவசர மத்திய செயற்குழு முடிவின்படி வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (27.2.2024) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்குவதாக தெரிவித்துள்ளனர். இதில் தமிழகத்தின் 38 மாவட்டங்கள், 315 வட்டங்களில் உள்ள வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 14,000க்கு மேற்பட்ட அலுவலர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் அவர்கள் தெரிவிக்கையில் : 10 மாதங்களுக்கு முன்னதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 3 அமைச்சர்கள் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகள் மீது மேலும் தாமதமின்றி அரசாணை வெளியிடவும், 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி இளநிலை/ முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருத்த அரசாணையை உடன் வெளியிடவும், முதலமைச்சர் அவர்களால் ஆணையிடப்பட்ட பின்பும் காலதாமதம் செய்யப்படும் அலுவலக உதவியாளர் காலியிடங்களை நிரப்பிட வலியுறுத்தியும், உயிர் ஆபத்துமிக்க பல பணிகளை மேற்கொணடுவரும் வருவாய்த்துறையின் அனைத்து நிலை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வலியுறுத்தியும், பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட பணியிடங்களை உடன் வழங்க வலியுறுத்தியும், பொது மக்களுக்கான சான்றிதழ் வழங்க துணை வட்டாட்சியர் பணியிடம், 2024 நாடாளுமன்ற தேர்தல் நிதி ஒதுக்கீடு, முதலமைச்சரின் சிறப்பு திட்டங்களுக்கான கால அவகாசம்/ நிதி ஒதுக்கீடவும் , முதலமைச்சர் அவர்கள் வாக்குறுதி அளித்தபடி பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து, ஈட்டிய விடுப்பு ஒப்படை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளதாக தெரிவித்தனர். மேலும் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கை இன்னும் சில தினங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட உள்ள நிலையில், இப்பணிகளை மேற்கொள்ளவுள்ள வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. TNROA வைரவிழா ஆண்டில் அனைத்து கோரிக்கைகள் மீது தீர்வு எட்டப்படும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் (TNROA) மாநில மையம் அறிவித்துள்ளது.
Category:
உலக செய்திகள்
சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..
written by Abubakker Sithik
சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..
மதுரை கோட்டத்தில் இரயில் நிலையம் மேம்பாட்டிற்கான அடுக்கல் நாட்டப்படும் விழா நடந்தது. இதில் சாலை வாகன போக்குவரத்து பாதுகாப்பிற்கும் ரயில் கடந்து செல்லும் வரை நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், சோழவந்தான் ரயில் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் சுமார் 49 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ரயில்வே மேம்பாலத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதற்கான காணொளி நிகழ்ச்சி விழா சோழவந்தான் ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பாஜக மாவட்ட பொருளாளர் முத்துராம் ரயில்வே பள்ளி மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். மதுரை ரயில்வே கோட்ட உதவி கோட்ட பொறியாளர் முத்தையா வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் மதுரை ரயில்வே பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. பகல் 12 : 20 மணியளவில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்து பேசினார். இதில் சோழவந்தான் ரயில் பயணிகள் நலச்சங்க உதவிச் செயலாளர் சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் ஒர்க் ஷாப் முருகன், செந்தமிழன், செல்வி,ராஜா, வாசுதேவன், விஸ்வ ஹிந்து பரிஷத் முருகன், முருகேஸ்வரி, ரமேஷ், விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலை பள்ளி ராஜேஷ், கருப்பணன் சோழவந்தான் பிராமணர் சங்க நிர்வாகிகள் வெங்கட்ராமன், காசி விஸ்வநாதன், நாகேஸ்வரன், சி ஆர் பி இன்ஸ்பெக்டர் ஜெயபிரிட்டோ, வக்கீல் பாண்டுரங்கன் உள்பட ரயில்வே பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிலைய கண்காணிப்பாளர் சுந்தர் கணேஷ் நன்றி தெரிவித்தார் .சோழவந்தான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிண்ணன் மற்றும் போலீசார் பாதுகாப்பு செய்திருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரசு பேருந்து மீது கல் வீசி தாக்குதல்; மதுரை அருகே பரபரப்பு..
கரூரில் கொலை செய்யப்பட்ட ராமர் பாண்டியன் உடல் இறுதி ஊர்வலம் மதுரை, சிந்தாமணி 4 வழி சாலையிலிருந்து சிந்தாமணி திரும்பும் போது அரசு பேருந்து மீது திடீரென கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சொட்ட தட்டி சென்ற சென்ற 47 எண் கொண்ட அரசு பேருந்து மதுரை சிந்தாமணி அருகே சென்ற போது ராமர் பாண்டியன் உடல் இறுதி ஊர்வலத்தில் வந்த நபர்கள் திடீரென கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அரசு பேருந்தின் முன்பக்க மற்றும் பின் பக்க கண்ணாடிகள் சேதமடைந்தது. இதனை தொடர்ந்து போலீஸார் கல்வீச்சில் ஈடுபட்ட இளைஞர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டம்..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கு. பத்மாவதி தலைமையில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (26.02.2024) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 477 மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வக்குமார், உதவி இயக்குநர் (கலால்) நடராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சமயநல்லூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்; ஆர்பி உதயகுமார் சிறப்புரை..
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட மேற்கு தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் சமயநல்லூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அரியூர் கே ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சமயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மலையாளம் ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன் கொரியர் கணேசன், காளிதாஸ், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ், கண்ணா, பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், விவசாய அணி ராம்குமார், பேரூர் செயலாளர்கள் அழகுராஜா, முருகேசன், வி கே குமார், அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாமிநாதன், ராசு, மலர், கண்ணன், குருசாமி, ராஜேந்திரன், சோனை முத்து, சௌந்தரராஜன், முருகேசன், சரிதா பானு, ஜெகதா, ராதாகிருஷ்ணன், அம்மு, லோகேஸ்வரர் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள். கூட்டத்தில் கலந்து கொண்ட தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர் பி உதயகுமார் ஜெயலிதாவின் ஆட்சியில் நடைபெற்ற சாதனைகள் மற்றும் மக்கள் பணிகள் குறித்து பேசினார்.
கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர்கள் நடிகர் வையாபுரி, நேமம் அன்பு முருகன், முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா, மாணிக்கம், மகேந்திரன், எஸ் எஸ் சரவணன், நீதிபதி தவசி மற்றும் அதிமுக நிர்வாகிகள் செல்லம்பட்டி ராஜா, ரகு, தமிழ்செல்வன், திருப்பதி, ராமகிருஷ்ணன், ஜெயராமன், வெற்றிவேல், துரை, தன்ராஜ், தமிழரசன், ஏ கே டி ராஜா லட்சுமி, சிவசுப்பிரமணியம், விஜய பாண்டியன், சக்திவேல், ராமசாமி பிச்சை, ராஜன், அன்பழகன், எம்வி பி ராஜா, காசிமாயன், மகேந்திர பாண்டி, சரவண பாண்டியன், சிங்கராஜ பாண்டியன் மற்றும் வாடிப்பட்டி மு.கா மணிமாறன், விவசாய அணி இணைச் செயலாளர் வாவிட மருதூர் ஆர்.பி. குமார், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜெயச்சந்திரன், கூட்டுறவு சங்க துணை தலைவர் முடுவார்பட்டி முத்துகிருஷ்ணன், சேகர், மனோகரன், தென்கரை நாகமணி, வாடிப்பட்டி பாலா, சந்திர போஸ், மாவட்ட பிரதிநிதி அலங்கை முரளி மற்றும் மதுரை புறநகர் மேற்கு தெற்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் வார்டு உறுப்பினர்கள், அதிமுகவின் பிற அணி அமைப்பாளர்கள் பொதுமக்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் கூட்டுறவு சங்க துணை தலைவர் கிளைச் செயலாளர் பொதும்பு ஏ எஸ் ராகுல் நன்றி கூறினார். முன்னதாக முன்னாள் அமைச்சர் ஆர் வி உதயகுமாருக்கு மதுரை புறநகர் மேற்கு தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் வான வேடிக்கைகள் முழங்க ஆளுயர மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது . தொடர்ந்து இளைஞர் அணியின் சார்பாக வீரவாள் வழங்கப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ரயில் பெட்டியில், மேலடுக்கில் முதியோர் படுக்கை இருக்கைக்கு செல்ல அறிவியல் கண்காட்சியில் புது யுக்தியை கண்டுபிடித்த மாணவன்..
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் நடைபெற்ற 38 மாவட்டங்களிலிருந்து வந்த 64 மாணவர்களின் அறிவியல் கண்காட்சி. (சிறந்து விளங்கிய 8 மாணவர்களை தேர்வு செய்து , தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டியில் பங்கேற்க தேர்வு – இதில் பெரும்பான்மையான மாணவர்கள் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களாவர்)
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், பல்வேறு மையங்களில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள 2000 மாணவர்கள் பங்கு பெற்ற நிலையில், அதிலிருந்து சிறந்த 64 மாணவர்களை தேர்வு செய்து, 38 மாவட்டங்களிலிருந்து வந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் ரயில் பெட்டியில் மேலடுக்கில் முதியோர் சென்று அமர்வதற்கு, அதி தொழில்நுட்ப புது யுக்தியை மாணவன் கண்காட்சியில் வைத்து செய்து காண்பித்தது அனைவரையும் கவர்ந்தது. இதேபோன்று, கிணற்றில் மனிதர்களோ, விலங்குகளோ விபத்துக்குள்ளானால், அதனை வெளியேற்ற தானியங்கி கருவி அமைத்து உயிரை காப்பாற்றலாம் என்பதை கண்காட்சியில் வடிவமைத்து வைக்கப்பட்டு பார்வைக்கு செய்து காட்டியது பாராட்டை பெற்றது. இதேபோன்று சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி, இரண்டு வாகனங்கள் எதிரில் வந்தால், எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கை குறைந்த ஒளியில் ஒளிரச்செய்யும் கருவியையும் மாணவ மாணவிகள் பார்வைக்கு வைத்திருந்தனர்.
இந்த கண்காட்சியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பெரும்பாலானோர் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில் பார்வைக்கு வைத்திருந்தனர். மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம் , சென்னை, கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட 38 மாவட்டங்களில் இருந்து, 64 பேர் பங்கு கொண்டு இக் கண்காட்சியில், சிறந்த மாணவர்கள் எட்டு பேரை தேர்வு செய்தனர். அந்த 8 பேரையும் விரைவில் டெல்லியில் நடைபெற உள்ள மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டியில் பங்கேற்பதற்கு தேர்வு செய்துள்ளனர். தேசிய அளவில் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவருக்கு 15 நாள் ஜப்பான் சென்று வர அரசு செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பம் மைய நிர்வாகிகள் தெரிவித்தனர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அனைவரும் நம் கட்சியில் உள்ளனர்; ஸ்டாலின் கூட நம் கட்சியில் உள்ளார் – அதிமுக கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி பேச்சு..
written by Abubakker Sithik
இராஜபாளையம் அதிமுக வடக்கு ஒன்றியம் கழகம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76 பிறந்தாள் விழா நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுகூட்டம்; முன்னாள் அமைச்சர் K.T. ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு..
அனைவரும் நம் கட்சியில் உள்ளனர், ஸ்டாலின் கூட நம் கட்சியில் உள்ளார் என இராஜபாளையம் அதிமுக பொதுக் கூட்டத்தில் கே.டி. ராஜேந்திர பாலாஜி நகைச்சுவையாக பேசினார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முகவூர் முத்துசாமிபுரத்தில் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் குருசாமி ஏற்பாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் பால் துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி, தலைமை கழக பேச்சாளர் பேராசிரியர் கல்யாண சுந்தரம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். இந்த பொதுக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி அதிமுகவில் கட்சி தொண்டர்கள் ஈடுபாடுடன் உள்ளனர். கிளைக் கழக செயலாளர் பெயர் குறிப்பிடவில்லை என்றால் கூட உரிமையோடு கேட்கின்றனர். நம் கட்சியில் அனைவரும் உள்ளனர். ஸ்டாலின் கூட நாம் கட்சியில் உள்ளார் என நகைச்சுவையாக பேசினார் .
எம்ஜிஆர் இருந்த காலத்தில் அவரை கோமாளி ஏமாளி மலையாளி என கலைஞர் பேசினார். எம்ஜிஆர் இருக்கும் வரை கலைஞரால் முதல்வராக முடியவில்லை. அண்ணா திமுக தலைமையில் தான் கூட்டணி தனித்து நிற்போம் என்று பொதுச் செயலாளர் எடப்பாடி கூறினார். தனித்து நிற்கின்றோம். தேர்தல் தேதி அறிவித்தால் திமுக கூடாரம் காலி ஆகும். எங்களிடம் தேமுதிக, பாமக, சரத்குமார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக மூன்றாண்டு ஆட்சியில் என்ன செய்தார்கள். இராஜபாளையம் ரயில்வே மேம்பால பணிக்காக அடிக்கல் நாட்டியது நான் நிதி ஒதுக்கியது. நாங்கள் பணிகளை எல்லாம் முடித்து வைத்து நிலையில், பாலத்தில் கல்வெட்டு வைக்கின்றனர். நாங்கள் பெத்த பிள்ளைக்கு பெயர் வைக்க நீங்கள் யார்? நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கல்வெட்டை அடித்து நொறுக்குவோம் என ஆவேசமாக பேசினார். இந்திய வரலாற்றிலேயே ஒரே ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரி கொண்டு வந்தது நாங்கள் தான். கர்மவீரர் காமராஜர் பிறந்த விருதுநகருக்கு மருத்துவக் கல்லூரியை முதல் கல்லூரியாக கொண்டு வந்து அனைத்து பணிகளையும் நாங்கள் முடித்தோம் ஆனால் அவர்கள் வந்து திறந்து வைத்து பெயர் வாங்கிச் சென்றனர்.
திமுகவினர் பீகார் காரனிடம் மூளையை அடகு வாங்கி அவர்கள் சொன்ன வாக்குறுதி நம்பி மக்கள் ஓட்டு போட்டு ஏமாந்து விட்டனர். நமக்கு கட்டம் சரியில்லை. ஆகையால் தேர்தலில் தோல்வி அடைந்தோம். அண்ணா திமுகவை யாராலும் அழிக்க முடியாது. அண்ணா திமுகவுக்கு அழிவே கிடையாது. .மருத்துவக் கல்லூரிக்கு வெள்ளை அடித்து அவர்கள் பெயரை கல்வெட்டில் வைத்து விட்டார்கள். நாங்கள் அடிக்கல் மற்றும் நிதி ஒதுக்கிய கல்வெட்டு வைக்க வேண்டும் என அதிகாரியிடம் கோரிக்கை வைத்தோம். அதிகாரிகள் கல்வெட்டை வைத்தார்கள்.
மத்தியில் ஆளுகின்ற கட்சி (பாஜக) அதிமுகவை பார்த்து பயப்படுகிறது. அந்த அளவுக்கு ஆளுமை தன்மையுடன் எடப்பாடி செயல்படுகிறார். விருதுநகர் மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டை ஆட்சிக்கு வந்த பின் எடுப்போம். இப்பொழுது எடுத்தால் நமது மீது வழக்கு போடுவார்கள். நான் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ஓடிப் பார்த்தேன் விடாமல் என் மீது வழக்கு போட்டு விரட்டினார்கள். மக்களை ஏமாற்றி பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஓட்டு வாங்கிய கட்சி திமுக. நீட் தேர்வு ரத்து செய்வோம் என கூறினார்கள் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்வேன் என கூறிவிட்டு இன்று 50 லட்சம் பேரிடம் கையெழுத்துக்களை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்துக்கு வெளியே கேள்வி கேட்கிறார். ஐம்பது லட்சம் கையெழுத்து வாங்கி என்ன செய்யப் போகிறார்கள் என கேட்டதற்கு அதற்கு அவர்கள் வாங்கிய கையெழுத்தை கே.டி.ஆர் ஆகிய என்னிடம் கொடுப்பதாக கூறியுள்ளார்கள். அதற்கு எடப்பாடி கேள்வி கேட்டார். உன்கிட்ட கொடுக்க போறதா சொல்றாங்களே என்ன என்று என்கிட்ட கேட்டார். அதற்கு நான் கூறினேன் கையெழுத்து வாங்கின மனுவை என்னிடம் கொடுத்தால் நான் உங்ககிட்ட கொடுப்பேன். நீங்க ஆட்சிக்கு வந்து அதை பரிசிலனை செய்யுங்கள் என கூறினேன் என நகைச்சுவையாக பேசினார். எடப்பாடி மக்களுக்காக இதை செய்ய வேண்டும் என்று பேட்டி கொடுத்தால் அதை செய்கின்ற முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார். திமுக அமைச்சர்கள் சொன்னால் செய்கிறாரே இல்லையோ எடப்பாடி சொன்னால் உடனடியாக செய்கின்ற முதலமைச்சராக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார். அண்ணா திமுக கட்சி ஆரம்பித்ததே திமுகவை அழிப்பதற்காகத்தான். திமுக அதிமுகவை ஒழிக்க பார்க்கிறது. முடியாது எடப்பாடி என்ற பொதுச் செயலாளர் கையில் அதிமுக உள்ளது. அதிமுக வேற நபர்களிடம் சென்றிருந்தால் திமுகவின் கைப்பவையாக செயல்பட்டு இருப்பார்கள். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றால் தான் தமிழகத்தில் தமிழர்கள் நலனுக்காக டெல்லியில் குழு கொடுக்க முடியும்.
கண்டா வரச் சொல்லுங்க எங்க ஊரு எம்பியை கண்டா வரச் சொல்லுங்க கண்டா வரச் சொல்லுங்க எங்க ஊரு எம்பி கண்டா வரச் சொல்லுங்க இந்த பாடல் தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் பரப்பி வருகிறது. ஏனென்றால் தமிழகத்தில் உள்ள 39 எம்பிக்களை காணவில்லை. ஆகையால் பொதுமக்கள் அனைவரும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவினருக்கு வாக்களிக்க வேண்டும். மத்தியில் உள்ள ஆளுங்கட்சியே (பாஜக) அதிமுகவை பார்த்து பயப்படுகிறது. தேர்தல் தேதி அறிவித்தால் திமுக கூடாரம் காலியாகும் என பேசினார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை சேர்மதாய் வாசன் கல்லூரியில் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்..
written by Abubakker Sithik
மதுரை பெரியார் நகர் சேர்மதாய் வாசன் கல்லூரியில் குழந்தை பருவ புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி மாணவிகளிடம் குழந்தை புற்று நோய் விழிப்புணர்வு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியர் மோனிகா ராணா, மதுரை ராஜாஜி மருத்துவமனை புற்றுநோயியல் துறை தலைவர் Dr. ராஜ சேகர், குழந்தைகள் புற்றுநோய் மண்டல இயக்குநர் (Cankids) லலிதா மணி, சேர்மத்தாய் வாசன் கல்லூரி முதல்வர் கவிதா மற்றும் கல்லூரி இணைச் செயலாளர் பாலகுரு ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் நேருயுவ கேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட 4 குழந்தைகள் பங்கேற்றனர். புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை அக்க்ஷயா ஸ்ரீ (வயது6) குத்து விளக்கு ஏற்றினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியர் மோனிகா ராணா கூறுகையில், புற்றுநோயால் பாதித்தப்பட்டவர்களுக்கு நாம் இருக்கிறாம் என ஆறுதல் முக்கியம். நிராகரிக்கப்பட்டவர்கள் என மன வேதனையுடன் உள்ளவர்களை நாம் அவர்களுடன் உள்ளோம் உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என கூறுங்கள். அதுவே அவர்களுக்கு புதிய நம்பிக்கையும் பலத்தையும் கொடுக்கும். புற்றுநோய் என்பது மிகவும் கோரமானது. இதில் குழந்தைகளுக்கு புற்றுநோய் பற்றி யாருக்கும் விழிப்புணர்வு இல்லை.
புற்றுநோய், கொரோனா போன்ற உயிர் கொல்லி நோய்களை கண்டு மிகவும் பயப்படுகிறோம். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை நாம் சரிவர கவனிக்காமல் சமூகத்தில் ஒதுக்கி வைக்கின்றோம். இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அவர்களை நாம் ஆதரவோடு அரவணைத்தால் புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களை நாம் புற்று நோயிலிந்து மீட்டெடுக்க உதவும். குறிப்பாக புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களை அரவணைத்து சிகிச்சையளித்து மன ஆறுதல் வழங்கினால் அவர்கள் மீண்டு வர உதவும்.
கேன்கிட்ஸ் என்ற தன்னார்வ அமைப்பு குழந்தை நலனில் அக்கறை கொண்டு சிகிச்சை வழங்கி வருகிறது. இது போன்ற தன்னார்வ அமைப்புகள் பல்வேறு உதவிகள் வழங்கி நோயிலிருந்து மீட்டெடுக்க உதவும். இதற்கான அவசர உதவி எண் 104 இதில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் உதவி செய்து மற்றவர்களுக்கும் தெரிவியுங்கள் என கூடுதல் ஆட்சியர் .மோனிகா ராணா கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
1 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா; அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்..
written by Abubakker Sithik
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தலைமையில், ஊரக வளர்ச்சி துறையின் சார்பில், சிவகங்கை மாவட்டம் வாணியங்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 1 இலட்சத்து நூறு மரக்கன்றுகள் நடும் விழாவினை தொடங்கி வைத்தார்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர். பெரியகருப்பன் தலைமையில், ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் வாணியங்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுக் குடியிருப்பு, ஏனாபுரம், கேந்திர வித்யாலயா பள்ளி மற்றும் அண்ணாமலை நகர் அகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத், முன்னிலையில், மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் வனம் மற்றும் மரங்களின் பரப்பை அதிகரித்து, பசுமை போர்வையை மேம்படுத்தும் உன்னத நோக்கிலும், வனப்பகுதியில் மட்டுமின்றி வனத்திற்கு வெளியே இருக்கும் காலியிடங்களில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு, வளர்க்கவும் மாபெரும் மரக்கன்று நடும் திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அதன் அடிப்படையில், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடவு செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிடப்பட்டதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்று வருகிறது. இம்மரக்கன்றுகள் வனப்பகுதிகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும், அரசு மற்றும் தனியார் அலுவலக வளாகங்களிலும், சாலையோரங்களிலும், பூங்காக்களிலும், பெரிய அளவிலான குடியிருப்புகளில் நடப்பட்டு, பராமரித்து பாதுகாத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயற்கை வளத்தினை மேம்படுத்திடும் பொருட்டும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், எதிர்கால சந்ததியினரின் நலன் கருதியும், இதுபோன்று திட்டங்கள் தமிழக அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆ.ரா. சிவராமன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வி.கேசவதாசன், துணை பதிவாளர் பாலச்சந்திரன், முன்னாள் அமைச்சர் தென்னவன், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், வாணியங்குடி ஊராட்சி மன்றத்தலைவர் புவனேஸ்வரி சுரேஷ்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் பி.கோவிந்தராஜ், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கை மாறன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மாநில சிலம்பம் போட்டி; முத்து நாயகி சிலம்பம் அணி சாம்பியன் பட்டம் வென்றது..
written by Abubakker Sithik
பரவையில் மாநில சிலம்பம் போட்டி; சாம்பியன் பட்டம் பெற்ற முத்துநாயகி சிலம்பம் அணி..
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே பரவை கற்பகம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எஸ் கே.எம் உலக சிலம்பம் டிரஸ்ட் மற்றும் ஸ்ரீராம் கல்வி விளையாட்டு அகாடமியும் இணைந்து நடத்தும் நான்காம் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இந்த போட்டிக்கு சிவகங்கை ராஜ்குமார் மகேஸ் துரை தலைமை தாங்கினார். பள்ளி நிறுவனர் ராமு, வழக்கறிஞர் படேல் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி ரமேஷ் போட்டிகளை துவக்கி வைத்தார்.
இந்த போட்டியில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த 400 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டிகளில் பரவை முத்துநாயகி சிலம்பு அணி ஆசான் இளங்கோவன் தலைமையில் அதிக பரிசுகளை வென்று சுழல் கோப்பையை கைபற்றி சாம்பியன் பட்டம் பெற்றது. முடிவில் எஸ். கே.எம்.உலக சிலம்பம் டிரஸ்ட் நிறுவனர் சிலம்ப ஆசான் மாரிமுத்து நன்றி கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்ட காவல் செய்திகள்..
அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் கைது..
செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனத்துறை சோதனை சாவடி அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த ஆலங்குளம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் தங்கராஜ்(59) மீது சார்பு ஆய்வாளர் இளவரசி வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 2600 மதிப்பிலான 63 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது..
கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புங்கம்பட்டி பகுதியில் கடையில் வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த புங்கம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர் மகன் முருகேசன்(60) மீது சார்பு ஆய்வாளர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 240 மதிப்பிலான 450 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழப்பாவூர் பகுதியில் கடையில் வைத்து புகையிலை விற்பனை செய்த கீழப்பாவூர் மேட்டு தெருவை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் ஆறுமுகம்(74) மீது சார்பு ஆய்வாளர் உமா மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 2166 மதிப்பிலான 1495 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
புளியங்குடியில் பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் கைது..
புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியங்குடி கிழவன் தோப்பு பகுதியில் பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட புளியங்குடியை சேர்ந்த ஷேக் அப்துல் காதர் என்பவரின் மகன் நூர் முஹம்மது(36), முஹம்மது உசேன் என்பவரின் மகன் காதர் முகைதீன் (55), அப்துல்லா என்பவரின் மகன் சாகுல் ஹமீது(58), முஹம்மது சுல்தான் என்பவரின் மகன் முஹம்மது கனி(63) மற்றும் முகமது என்பவரின் மகன் அப்துல் ரஹீம் (42) ஆகியோர் மீது சார்பு ஆய்வாளர் சஞ்சய் காந்தி வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.
சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த ஆறு நபர்கள் கைது..
தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 06 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 68 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் பொது இடங்களில் மது அருந்தியதாக 10 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் தென்காசி மாவட்டத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 459 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 11 இடங்களில் காவல் துறையினர் ஏற்படுத்தினர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி அருகே தங்கச் செயினை பறித்து சென்ற இருவர் கைது; மாவட்ட எஸ்.பி அதிரடி..
written by Abubakker Sithik
மேலகரம் பகுதியில் பெண்ணிடம் தங்கச் செயினை பறித்து சென்ற இருவர் கைது; தென்காசி மாவட்ட எஸ்.பி அதிரடி நடவடிக்கை..
தென்காசி மாவட்டம் மேலகரம் பகுதியில் பஞ்சாயத்தில் இருந்து வந்திருப்பதாக கூறி தனியாக இருந்த பெண்ணிடம் தங்கச் செயினை பறித்து சென்ற இருவர், மாவட்ட எஸ்.பி. உத்தரவின் படி கைது செய்யப்பட்டனர். குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலகரம் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் வசித்து வரும் புவனேஸ்வரி என்பவர் வீட்டில் தனியாக இருந்த போது 25.02.24 காலை 11.30 மணிக்கு வந்த 22 வயது மதிக்கத்தக்க நபர் தான் பஞ்சாயத்தில் இருந்து வந்திருப்பதாகவும், தங்களின் வீட்டில் தண்ணீர் கனெக்சனில் மோட்டார் வைத்திருப்பதால் அதை அகற்ற வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
தனது கணவர் இல்லை அவர் வந்தது பார்த்துக் கொள்ளலாம் என்று புவனேஸ்வரி கூறியதால் மீண்டும் மதியம் 03.00 மணியளவில் அதே நபர் அவருடன் 18 வயது மதிக்கத்தக்க நபரையும் அழைத்து வந்து மோட்டாரை அகற்ற வந்துள்ளோம் பிளேடு எடுத்து வாருங்கள் என்று கூறினார். புவனேஸ்வரி வீட்டிற்குள் சென்ற போது அவரின் பின்னே சென்ற இருவரும் புவனேஸ்வரியிடமிருந்து 32 கிராம் மதிப்புள்ள தங்க தாலிச் செயினை பறித்து ரூமில் தள்ளி பூட்டிவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.
புவனேஸ்வரி செல்போன் மூலமாக எதிர் வீட்டு பெண்ணை தொடர்பு கொண்டு கதவை திறந்து வெளியே வந்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், மேற்படி இருவரையும் விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதின் படி காவல் ஆய்வாளர் அன்னலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு திருட்டில ஈடுபட்ட சிந்தாமணி தெற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் மாரிச்செல்வம் (23) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து மாரி செல்வம் என்பவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். 16 வயது சிறுவன் இளஞ்சிரார் நீதிகுழுமம் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட 32 கிராம் தங்க தாலிச் செயின் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமேஸ்வரம் மீனவர்களின் தொடர் உணரணவிரத்போராட்டம் தற்காலிகமாக வாபஸ் ! விரைவில் மீனவர்கள் தமிழக முதல்வரை சந்திக்க திட்டம் !!
by Baker BAker
written by Baker BAker
ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை வெளிக்கடை சிறையில் உள்ள ஐந்து ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 16ஆம் தேதி முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி மீனவர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் விசைப்படகு உரிமம் உள்ளிட்டவற்றை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரீடம் வழங்குவதற்காக ராமேஸ்வரம் மீன் பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தூரம் நடை பயணமாக ராமநாதபுரம் நோக்கி சென்றபோது அவர்களை தடுத்து நிறுத்திய மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு சந்திரன் மீனவர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். இதனையடுத்து நடை பயணத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்ற மீனவர்கள் நேற்று காலை முதல் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் உண்ணாவிர போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் சிறையில உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் என 150 க்கும் மேற்பட்டோர் கலந்து .கொண்டு மத்திய, மாநில மற்றும் இலங்கை அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வந்த நிலையில் இன்று மாலை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் உண்ணாவிரத மேடைக்கு நேரில் வந்து மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் மீனவர்களின் வழக்கு தொடர்பாக இலங்கை உயர் நீதிமன்றத்தில் இந்திய தூதரகம் மேல்முறையீடு செய்யப்பட்டு உடனடியாக மீனவர்கள் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் தமிழக முதல்வரை சந்திக்க பாதிக்கப்பட்ட மீனவர்களை அழைத்துச் செல்வதாகவும் உறுதியளித்தார். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறையில் உள்ள மீனவர்களுக்கு தலா 25,000 ரூபாயையும் திமுக சார்பில் பத்தாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டதுடன் முதல்வரை சந்திக்க செல்லும் செலவை சட்டமன்ற உறுப்பினர் ஏற்றுக் கொள்வதாக கூறியதையடுத்து மீனவர்கள் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேசிய அளவிலான தடகள போட்டியில் தங்க பதக்கம் வென்ற பெண் காவலர்; நெல்லை காவல் ஆணையர் பாராட்டு..
written by Abubakker Sithik
தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் தங்க பதக்கம் வென்ற பெண் காவலர்; நெல்லை காவல் ஆணையர் பாராட்டு..
தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் தங்க பதக்கம் வென்ற பெண் காவலரை நேரில் அழைத்து நெல்லை காவல் ஆணையர் பாராட்டினார். தேசிய அளவில் 44 வது மாநில மூத்தோர் தடகள போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 13-02-2024 முதல் 17-02-2024 வரை நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர காவல்துறை சார்பில் முதல் நிலை காவலர் 1515 ரேணுகாதேவி கலந்து கொண்டு 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் இடம் பிடித்து தங்க பதக்கத்தையும், 1500 மீட்டர் பிரிவில் 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளார்.
மேலும் தமிழக காவல் துறைக்கு பெருமை சேர்க்கும் விதமாக வரும் ஜூலை மாதம் ஸ்வீடன் நாட்டில், சர்வதேச அளவில் நடக்க விருக்கும் தடகள போட்டிக்கு தேர்ச்சி பெற்ற காவலர் ரேணுகாதேவி அவர்களை நெல்லை மாநகர காவல் ஆணையர் பா.மூர்த்தி 24-02-2024 ஆம் தேதி நேரில் அழைத்து தனது பாராட்டுக்களையும், மேலும் சர்வதேச அளவில் பதக்கம் வென்று வர தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அப்போது மாநகர ஆயுதப்படை காவல் ஆய்வாளர்கள் சுனை முருகன் மற்றும் பால்தாய் கலந்து கொண்டார்கள்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லையில் “கலைஞர் கண்ட தமிழ்நாடு” சிறப்பு சொற் பொழிவு; நினைவுப் பரிசு வழங்கல்…
written by Abubakker Sithik
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கலைஞரும் தமிழும் – கலைஞர் கண்ட தமிழ்நாடு சிறப்பு சொற்பொழிவு; நினைவுப்பரிசு வழங்கல்
முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் நடைபெற்று வரும் தொடர் இலக்கிய கூட்டத்தின் 32வது கூட்டத்தினை அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமையேற்று தொடங்கி வைத்தார். கலை பதிப்பகத்தின் ஆசிரியர் கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் ‘கலைஞரும் தமிழும்’ எனும் தலைப்பில் சுப்புலட்சுமியும், ‘கலைஞர் கண்ட தமிழ்நாடு’ எனும் தலைப்பில் முருகன் சுப்பையாவும் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினர். ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் எழுத்தாளர் வள்ளி சேர்மலிங்கம் வாழ்த்துரை வழங்கினார். கவிஞர் முத்துசாமி நன்றி கூறினார்.
கவிஞர் சுப்பையா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். எழுத்தாளர் நாறும்பூ நாதன் சொற்பொழிவு ஆற்றியவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் செல்லப்பா, மாணிக்கவாசகம், மாடசாமி, இருளப்பன் கோபால கிருஷ்ணன், மேகலிங்கம், ஜவகர் துரை, சங்கரம்மாள், மகாலட்சுமி, நந்தினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவருக்கு கலைஞர் குறித்த நூல் பரிசாக வழங்கப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடையநல்லூர் பகுதியில் ஜெயலலிதா 76வது பிறந்த தினவிழா; அதிமுகவினர் உறுதி மொழி ஏற்பு..
written by Abubakker Sithik
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்வதே இந்நாளின் நோக்கம்; ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுகவினர் உறுதி ஏற்பு..
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்வதே நோக்கம் என்பதை மொழிந்து ஜெயலலிதா பிறந்த தினத்தில் அதிமுக சார்பில் உறுதி ஏற்கப்பட்டது. கடையநல்லூர் நகர அதிமுக 1-வது வார்டு சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் விழா குமந்தாபுரம் பகுதியில் கொடியேற்றத்துடன் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வார்டு செயலாளர் அருண்குமார் தலைமை வகித்தார். வார்டு பிரதிநிதி பெரியசாமி, பொருளாளர் கிருஷ்ணன், நகர எம்ஜிஆர் இளைஞரணி துணை தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நகர துணை செயலாளர் ரஜினி (எ) முகைதீன் பிச்சை கொடியேற்றி வைத்தார். மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை தலைவர் ஜெயமாலன், நகர இளம்பெண் மற்றும் இளைஞர் பாசறை செயலாளர் பால்பாண்டி, நகர எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் வெங்கட் நடராஜ், 9 வது வார்டு செயலாளர் சந்தோஷ், 9 வது வார்டு ஐடி விங் மகேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் 1-வது வார்டு கழக நிர்வாகிகள் ராஜா டெய்லர், கருப்பையா, லெட்சுமணன், மாடசாமி, பண்டாரம், ராஜா, அருணாச்சலம், ராமசாமி, கிருஷ்ண முதலியார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர், நகர ஐடி விங் செயலாளர் விவேக், நகர ஐடி விங் இணை செயலாளர் சோழவராஜா, முன்னாள் வார்டு கழக செயலாளர் அமராவதி முருகன் மற்றும் நகர நிர்வாகிகள் வார்டு கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தோதலில் நிறுவனர் டாக்டர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் கழகத்தின் காவல் தெய்வம் அம்மாவின் ஆசியோடு புரட்சி தமிழர் எடப்பாடியார் காட்டும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்வதே அம்மாவின் பிறந்த நாளில் நாம் எடுக்கும் சபதம் என முன்னாள் நகர துணைச் செயலாளர் ரஜினி (எ)மைதீன் பிச்சை தலைமையில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராஜபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மற்றும் தெற்கு நகர, அதிமுக சார்பில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகர செயலாளர்கள் முருகேசன், தலைமையில் குமரன் தெரு MGR சிலை அருகில் ஜெயலலிதாவின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு மற்றும் பிரியாணி வழங்கி கொண்டாடினர். அதே போல் தெற்கு நகர செயலாளர் பரமசிவம் தலைமையில் அம்மா உணவகம் முன்பு ஜெயலிதா திருஉருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்சியில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ் MGR மன்ற துணைச் செயலாளர் பாபுராஜ் அதிமுக மாவட்ட இணைச் செயலாளர் அழகு ராணி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மகளீர் அணியினர் கலந்து கொண்டணர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கோவையில் 10 நாட்கள் ஆதியோகி ரத யாத்திரை; 35,000 கி.மீ யாத்திரை மார்ச் 6-ம் தேதி நிறைவு..
written by Abubakker Sithik
மஹா சிவராத்திரியை முன்னிட்டு கோவையில் 10 நாட்கள் ஆதியோகி ரத யாத்திரை; 35,000 கி.மீ யாத்திரை மார்ச் 6-ம் தேதி நிறைவு..
மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் பிப்.26-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை ஆதியோகி ரத யாத்திரை கோவையில் நடைபெற உள்ளது. இந்த யாத்திரையின் மூலம் பக்தர்கள் தங்கள் வீட்டின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அவரின் அருளை பெற முடியும். கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில் 30-வது ஆண்டு மஹாசிவராத்திரி விழா வரும் மார்ச் 8-ம் தேதி மிக கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, இவ்விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பிப்.26-ம் தேதி பொள்ளாச்சியில் இருந்து புறப்படும் ஒரு ஆதியோகி ரதம், சுந்தராபுரம், குனியமுத்தூர், சிங்கநல்லூர், பீளமேடு, சின்னியம்பாளையம், சரவணம்பட்டி, பெரியநாயக்கன் பாளையம், கவுண்டம் பாளையம், கணபதி, காந்திரபுரம், ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், வடவள்ளி என கோவையில் பல்வேறு பகுதிகளில் மார்ச் 6-ம் தேதி வரை வலம் வர உள்ளது. ஈஷாவிற்கு நேரில் வந்து ஆதியோகியை தரிசிக்க முடியாத மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை சிறந்த வாய்ப்பாக உள்ளது.
முன்னதாக, 4 ஆதியோகி ரதங்களுடன் கூடிய இந்த யாத்திரையை தவத்திரு பேரூர் ஆதீனம் அவர்கள் கடந்த ஜனவரி 5-ம் தேதி தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து ஒவ்வொரு ரதமும் தமிழ்நாட்டின் 4 திசைகளிலும் பயணம் செய்தன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 60 நாட்களில் மொத்தம் 35,000 கி.மீ பயணிக்கும் வகையில் இந்த யாத்திரை வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஆயிரக்கணக்கான கிராமங்கள் வழியாக பயணம் செய்து வரும் இந்த ரதங்கள் மார்ச் 6-ம் தேதி கோவை ஈஷா யோக மையத்திற்கு வந்து யாத்திரையை நிறைவு செய்ய உள்ளன. இந்தாண்டு, கோவையை தவிர்த்து தமிழ்நாட்டின் 36 இடங்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை ஒளிப்பரப்பு மூலம் கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
3 லட்சம் வயிறுகளின் பசியாற்றிய ‘மதுரையின் அட்சய பாத்திரம்’ நெல்லை பாலு..
written by Abubakker Sithik
மூன்று லட்சம் வயிறுகளின் பசியாற்றிய ‘மதுரையின் அட்சய பாத்திரம்’ நெல்லை பாலு..
இது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மதுரையின் பரபரப்பான பகுதி. அங்கு கார் ஒன்று வருகிறது. அதன் வருகையை வழி மேல் விழி வைத்து காத்திருந்தது போல செல்கிறார்கள் சிலர். அதிலிருந்து இறங்கும் ஒரு நபர் காரில் அடுக்கி வைத்திருக்கும் உணவு டப்பாக்களை கொடுக்கிறார். வாஞ்சையோடும் கண்களில் நன்றியோடும் பசி தீர்ந்த மகிழ்வோடும் வாங்கி செல்கிறார்கள் அந்த மக்கள். உணவைக் கொடுத்த அந்த நபர் மதுரையைச் சேர்ந்த சமூக சேவகர் நெல்லை பாலு. கிட்டத்தட்ட 1,000 ஆவது நாட்களை நெருங்கி மதுரையில் சாலையோரம் இருக்கக்கூடிய முதியோர்களுக்கும், வறியோர், ஆதரவற்றோருக்கு உணவுகளை தினமும் கொடுத்து வருகிறார். இதற்காகவே ‘மதுரையின் அட்சயப் பாத்திரம்’ என்ற டிரஸ்ட் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் இந்த சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
மதுரை எஸ்.எஸ். காலனி பொன்மேனி நாராயணன் சாலையில் இவர் அனுஷத்தின் அனுக்கிரகம் என்ற பெயரில் காஞ்சிப் பெரியவர் கோயிலை நிர்வாகித்து வருகிறார். அங்குள்ள சமையல் கூடத்திலேயே இதற்காக தினமும் காலையில் பிரத்தியேகமாக புளியோதரை, லெமன் சாதம், தக்காளி சாதம், வெஜ் பிரியாணி, தயிர் சாதம் என ஒவ்வொரு நாளும் விதவிதமாக சமையல் செய்து மதுரையில் ஆதரவற்றோருக்கு வழங்கி வருகிறார். இவரது இந்த பணியினைப் பாராட்டி மதுரை மாவட்ட நிர்வாகம் உட்பட பல்வேறு சமூக அமைப்புகளும் விருதுகள் வழங்கியும் கௌரவித்து உள்ளனர்.
கொரோனா காலகட்டத்தில் இருந்து இந்த சேவையை செய்து வரும் இவர் கடந்த பல ஆண்டுகளாகவே, பார்வைத்திறன் குறைபாடு உள்ள 250 மாற்றுத்திறனாளிக் குடும்பங்களுக்கும மாதம்தோறும் அரிசியும், ஆண்டுக்கு ஒரு முறை புத்தாடைகளும் வழங்கி வருகிறார். ‘வெறுங்கை முழம் போட முடியாது!’ என்பர். தொடக்கத்தில் தனது சொந்த பணத்தை போட்டு உதவி வந்தவர் இப்போது, நண்பர்கள் தெரிந்தவர்கள் என பலரிடமும் உதவிகளைப் பெற்று சேவை செய்து வருகிறார்.
மதுரை ஜல்லிக்கட்டு என்ற ரோட்டரி சங்கத்தின் பட்டய தலைவராகவும் இவர் பல சேவைகளை செய்து வருகிறார் தவிர, பாரதி யுவகேந்திரா என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசுகளையும் பாராட்டுகளையும் வழங்கி ஊக்குவிப்பு பணிகளையும் செய்து வருகிறார். இவ்வாறு ஆன்மிகம், கல்வி, சமூகப் பணி என பல தலங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கிறார். 9442630815 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அவருடன் இணைந்து கொள்ளலாம்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பரவையில் தனியாருக்கு சொந்தமான இடத்தை போலி பத்திர பதிவு செய்து மாற்றியதாக பேரூராட்சி நிர்வாகம் மீது புகார்..
written by Abubakker Sithik
பரவையில் தனியாருக்கு சொந்தமான இடத்தை போலியாக பத்திர பதிவு செய்து மாற்றியதாக பேரூராட்சி நிர்வாகம் மீது புகார்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ளது ஆண்டிபட்டி பங்களா. இங்கு செல்லையா மகன் மூர்த்தி என்ற பங்களா C.மூர்த்தி என்பவர் பல்வேறு தொழில் நிறுவனங்கள் வைத்து நடத்தி வருகிறார். மேலும் நிலத்தை வாங்கி விற்கும் தொழிலான ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவர் பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட அதிசயம் தீம் பார்க் அருகில் மதுரையைச் சேர்ந்த சொக்கலிங்கம் செட்டியார் மகன் ராமச்சுந்திர மூர்த்தி என்பவரிடமிருந்து 47 சென்ட் இடத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு தனது பெயரில் வாங்கி அனுபவித்து வந்த நிலையில், அதில் உள்ள 14 சென்ட் இடத்தை தனது அனுமதி இல்லாமல் பரவை பேரூராட்சி நிர்வாகம் பேரூராட்சியின் பெயரில் மாற்றி இருப்பதாகவும், இதற்கு பரவை அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தின் உரிமையாளர் உடந்தையாக இருந்ததாகவும், மதுரை மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா கச்சை கட்டி பிரிவு சின்னமநாயக்கன்பட்டி கிராமத்தில் குடியிருப்பதாகவும், ரியல் எஸ்டேட் உள்பட பல்வேறு தொழில்கள் செய்து வருவதாகவும், அரசுக்கு வருமான வரி கட்டும் தகுதி வாய்ந்த நபராக இருந்து வருவதாகவும், கடந்த 2018 ஆம் ஆண்டு மதுரை கோபுர வாசல் சொக்கப்பநாயக்கன் தெருவில் வசிக்கும் சொக்கலிங்க செட்டியார் மகன் ராமசுந்தரமூர்த்தி என்பவரிடமிருந்து பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட அதிசயம் தீம் பார்க் அருகில் சுமார் 47 சென்ட் இடத்தை கிரையம் பெற்று தனது பாத்தியத்தில் அனுபவித்து வந்ததாகவும், அதை முறைப்படி அரசாங்கத்தில் பதிவு செய்து வந்திருப்பதாகவும், இந்த நிலையில் அதிசயம் தீம் பார்க் உரிமையாளர் சென்ட்ரல் மணி என்பவர் தனது இடத்திற்கு பொதுப்பாதை வேண்டி இரண்டாவது சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்றத்தால் கமிஷன் நியமிக்கப்பட்டு கமிஷன் அதிகாரிகள் பேரூராட்சிக்கு உட்பட்ட தீம் பார்க் அருகில் உள்ள எனது 47 சென்ட் இடத்தை பார்வையிட்டு அதில் 23 அடிபாதை விட்டு விட வேண்டும் என்றும், மீதி இடத்திற்கு அளவு கல்நட்டு நான் அனுபவித்துக் கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவு நகலில் அதிசயம் தீம் பார்க் ஜென்ரல் மணி என்பவரின் மேனேஜரும் கையொப்பமிட்டுள்ளார். இந்த நிலையில் மேற்படி இடம் நாளது தேதி வரை என்னுடைய பராமரிப்பிலும் பொறுப்பிலும் இருந்து வந்தது. அந்த நிலத்திற்கு வரியும் முறையாக எனது பெயரில் இதுவரை கட்டி வருகிறேன். இந்த நிலையில் எனது பெயரில் உள்ள 47 சென்ட் இடத்தின் ஒரு பகுதியான 14 சென்ட் இடத்தை எனக்கு தெரியாமலும், எனது ஒப்புதல் இல்லாமலும், கடந்த 12 5 2023 நாலது தேதியில் பரவை பேரூராட்சி நிர்வாகம் தனது பெயருக்கு மாற்றி உள்ளது. பட்டா மாற்றுவது சம்பந்தமாக எனக்கு எந்த ஒரு முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை. எனது ஒப்புதலையும் பெறவில்லை. என்னுடைய இடத்தை எனக்கே தெரியாமல் எப்படி பிரித்தார்கள் என்றும் தெரியவில்லை. நான் ஏற்கனவே பொது பாதைக்கு முறையான இடம் கொடுத்த பின்பும் அதிசயம் தீம் பார்க் உரிமையாளர் சென்ட்ரல் மணி தனது அதிகாரத்தை பயன்படுத்தி பேரூராட்சி அதிகாரிகளின் துணையுடன் எனது பெயரில் உள்ள இடத்தை பேரூராட்சி நிர்வாகத்திற்கு மாற்றி இருப்பதாக சந்தேகிக்கிறேன். ஆகையால் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கோட்டாட்சியர் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் முறைகேடாக எனது இடத்தை பெயர் மாற்றம் செய்த பேரூராட்சி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் எனது இடத்தை எனது பெயருக்கு மாற்றி தர வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது புகார் மனுவில் கூறியிருக்கிறார்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.