இராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி ஆக பணியாற்றி வந்த மணிவண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய எஸ்பி ஆக ஓம்பிரகாஷ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய பணி சிறக்க கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.
இராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி ஆக பணியாற்றி வந்த மணிவண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய எஸ்பி ஆக ஓம்பிரகாஷ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய பணி சிறக்க கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் சிறுவர், சிறுமியர்களுக்கான விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 5 முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
சிறுவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி – சென்னை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. சிறுமியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி – சென்னை மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
மேற்காணும் முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் உள்ள பின்வரும் காலியாகவுள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கணையாக விளங்குவதற்கு 6-ஆம் வகுப்பு, 7-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் சிறுவர், சிறுமியர்களுக்கான மாநில அளவிலான தேர்வு வரும் 11-05-2017 அன்று காலை 8.00 மணிக்கு ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ள போட்டிக்கான விபரங்கள் கீழே.
சிறுவர்களுக்கான விளையாட்டு
1. இறகுப் பந்து 2) டேக்வோண்டா 3) குத்துசண்டை 4) ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் 5) டென்னிஸ்.
சிறுமியர்களுக்கான விளையாட்டு
1. இறகுப்பந்து 2) மேசைப்பந்து 3) ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் 4) நீச்சல்.
விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ, மாணவியர் 2017-2018ஆம் ஆண்டு சேர்க்கைக்கு உரிய படிவங்களை 30.04.2017ஆம் தேதி முதல் இராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்களை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டு விடுதிகள் தொடர்பான விவரங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கெர்ளளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 11.05.2017 தேர்வு அன்று காலை 8.00 மணிக்குள் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட தகவலை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர்.முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (GROIP II – NON INTERVIEW) போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மேற்படி பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், தங்களுடைய பெயர் மற்றும் முகவரியினை இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10.05.2017க்குள் பதிவு செய்யலாம்.
மேற்படி பதிவு செய்தவர்கள் 12.05.2017 முதல் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு 9043260689 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று இரண்டாம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மறக்காமல் தங்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்குமாறு கீழை நியூஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
தமிழகத்தில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, இன்று இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகின்றன. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 43,051 சொட்டுமருந்து மையங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கீழக்கரை நகரில் பெரும்பாலான பள்ளி கூடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சொட்டுமருந்து வழங்கும் மையங்கள், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். அனைத்து ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், கடந்த 2-ம் தேதி முதல் தவணை போலியோ சொட்டுமருந்து கொடுக்கப்பட்டது. இரண்டாம் தவணை, இன்று சொட்டுமருந்து கொடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, ஓரிரு நாள்களுக்கு முன் சொட்டுமருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாள்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாள்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தொகுதி–2-ஏ- வில் அடங்கிய (நேர்முகத்தேர்வு அல்லாத) பதவிகளுக்கான (அறிவிக்கை எண். 10/2017) 2017-2018 ஆம் ஆண்டுக்குரிய தேர்வு அறிவிக்கை, நேற்று 27.04.2017 வெளியிட்டுள்ளது. இப்பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணைய வழியில் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 1953
தமிழ்நாடு அமைச்சுப்பணிகள், தமிழ்நாடு தலைமைச்செயலகப்பணிகள் மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவைப் பணிகளில் அடங்கிய உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகளில் சுமார் 1953 காலிப்பணியிடங்கள்.
கல்வித்தகுதி :
(i) உதவியாளர் மற்றும் கணக்கர் பதவிகளுக்கு ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு / இளங்கலை சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
(ii) நேர்முக உதவியாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு இளங்கலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் – 26.05.2017
தேர்வு நாள் – 06.08.2017
தேர்வு மையங்களின் எண்ணிக்கை – 116
விண்ணப்பிக்கும் முறை :
பின் வரும் ஏதேனுமொரு லிங்கினை சொடுக்கி இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர், முன்னாள் இராணுவத்தினர் ஆகிய பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று / இரண்டு முறை தேர்வுக் கட்டணச் சலுகையை ஏற்கெனவே சமர்ப்பித்த விண்ணப்பங்களுக்கு பயன்படுத்தியிருந்தால் அவர்கள் கண்டிப்பாக இத்தேர்வுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
உண்மையை மறைத்து தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மீது விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் கூறப்பட்டுள்ளபடி நடவடிக்கை எடுக்கப்படும்.
விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில், கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பொழுது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்பப் பிரச்சனைகளோ எழ வாய்ப்புள்ளது.
மேற்கூறிய காரணங்களால், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கடைசி கட்ட நாட்களில் சமர்ப்பிக்க இயலாது போனால் அதற்குத் தேர்வாணையம் பொறுப்பாகாது.
விண்ணப்பிக்கும் முறை குறித்த சந்தேகங்களை 044-25332855, 044-25332833 மற்றும் கட்டணமில்லாத தொலைபேசி எண்: 1800-425-1002- இல் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
உங்கள் பகுதியில் குடிநீர் வினியோகம் சம்பந்தமான பிரச்சனையா இனி 9585994700 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் புகார்களைத் தெரிவிக்கலாம் என்று இரமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் முனைவர்.நடராஜன் அறிவித்துள்ளார்.
குடிநீர் விநியோகம் தொடர்பான கோரிக்கை, புகார், குடிநீரை முறைகேடாக பயன்படுத்துபவர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிப்பதற்காக 04567-230431 என்ற தொலைபேசி வசதியுடன், 18004257040 என்ற கட்டணமில்லா தொலைபேசி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தகவல் மையம் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது பொது மக்கள் குடிநீர் விநியோகம் தொடர்பான கள நிலவரத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு உள்ளபடியே தெரிவிப்பதற்கு ஏதுவாக ‘9585994700” என்ற எண்ணில் வாட்ஸ்அப் வசதி ஏற்படுத்தப்பட்டு அதில் மாவட்ட ஆட்சித் தலைவர், திட்ட இயக்குநர், குடிநீர் விநியோகத்தை செயல்படுத்தக்கூடிய அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுட வாட்ஸ்அப் வசதியுடன் கூடிய தொலைபேசி எண்களும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த வாட்ஸ்அப் குரூப்பில் பொது மக்கள், பிறதுறை அலுவலர்கள் மற்றும் நீரியல் ஆர்வளர்களால் தெரிவிக்கப்படும் புகார்களுக்கு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதன் விபரத்தை சம்பந்தப்பட் புகார்தாரருக்கு இந்த வாட்ஸ்அப் குரூப் வாயிலாகவே தெரிவித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.
நிச்சயமாக இதுபோன்ற மாவட்ட தலைவரின் செயல்பாடுகள் வரவேற்க கூடியதாகவும், மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தின்படி சுயநிதி தனியார் பள்ளிகளில் (சிறுபான்மையினர் கல்வி நிலையங்கள் தவிர்த்து) 25 சதவீத சேர்க்கை ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை பெற்றோர்கள் இருந்த இடத்திலேயே www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யலாம். பதிவு செய்தவுடன் அதை உறுதிபடுத்தக்கூடிய குறுஞ்செய்தி நாம் பதிவு செய்யும் மொபைல் எண்ணுக்கு வரும்.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் அலுவலகம் போன்ற அனைத்து கல்வி அலுவலகங்களிலும் எந்த செலவுமின்றி விண்ணப்பங்களை பதிவேற்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
அதே போல் மாநிலத்திலுள்ள 10ஆயித்திற்கும் மேற்பட்ட இ சேவை மையம் மூலமாகவும் விண்ணப்பிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஓரே பள்ளயில் 25 சதவீதத்திலும் மேலாக விண்ணப்பம் பெறப்பட்ட இருந்தால் குலுக்கல் முறையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
இந்த குலுக்கல் முறையை மாவட்ட ஆட்சித்தலைவர் நியமிக்கும் அலுவலர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மேற்பார்வையிடுவார்ரகள். மேலும் இந்த குலுக்கல் முறையில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவின் கீழ் வரும் ஆதரவற்றவர்கள், எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை குலுக்கலுக்கு முன்னரே முன்னுரிமை அளித்து சேர்க்கை வழங்கப்படும்.
தனியார் பள்ளயில் சேரக்கபட்டவர்களின் விபரங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பங்கள் ஏப்ரல் 20 முதல் மே 18ம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் வேலை வாய்ப்பில் சம உரிமை கிடைக்க முயற்சி செய்யவேண்டும்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இராமநாதபுரம் மீன்பிடி துறைமுக திட்ட உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓர் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு நேர்முகதேர்வு நடத்தப்படவுள்ளது.
அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பதாரர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும். வயது வரம்பு 01.07.2016 அன்றுள்ளபடி கணக்கிடப்படும். சம்பள விகிதம் ரூ.4,800.00- ரூ.10,000.00, தர ஊதியம் ரூ.1300.00 ஆகும்.
இப்பணியிடத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் தவிர) – முன்னுரிமை பெற்றவர்கள் 1 நபர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
விண்ணப்பதாரரின் வயது வரம்பு 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் செயற்பொறியாளர், மீன்பிடி துறைமுக திட்ட கோட்டம், 166, வடக்கு கடற்கரை சாலை, தூத்துக்குடி. என்ற முகவரியில் விண்ணப்பங்களை நேரில் பெற்று உரிய நகல் ஆவணங்களுடன் 04.05.2017 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நேர்முக தேர்வுக்கான இடம் மற்றும் நாள் குறித்து விண்ணப்பதாரருக்கு பின்னர் தெரிவிக்கப்படும்.
இத்தகவலை இராமநாதபுரம் ஆட்சி தலைவர் நடராஜன் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழகம் முழுவதும் 303 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. தலைமைச் செயலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த மையங்களில் ஏற்கெனவே ஆதார் எண் பெற்றுள்ளவர்கள் தங்கள் ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை திருத்தம் செய்யும் வசதி இன்று 17.04.17 முதல் வழங்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் ரேகை அல்லது கருவிழியை பதிவு செய்து தங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும், புகைப்படம், கைவிரல் ரேகை மற்றும் கருவிழி ஆகியவற்றையும் புதுப்பிக்கலாம்.
இதில் ஆதார் பதிவு செய்தல், 5 முதல் 15 வயது முடிந்தவர்களுக்கான கட்டாய விரல் ரேகை மறு பதிவு செய்தல் ஆகியவற்றுக்கு கட்டணம் இல்லை. பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை திருத்தம் செய்யவும், புகைப்படம், கைவிரல் ரேகை, கருவிழி ஆகியவற்றை புதுப்பிக்கவும் ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆதார் விவரங்களை தாளில் அச்சிட்டு பெற ரூ.10 சேவைக் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது.
இந்த நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் படிவங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. மேலும், பொதுமக்கள் தவறாமல் ஒப்புகைச் சீட்டை மையத்தில் பணியாற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டரிடம் இருந்து கேட்டு பெற்றுக்கொள்ளவும். சேவை தொடர்பாக புகார் தெரிவிக்க 1800 425 2911 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்புகொள்ளலாம்.
இராமேஸ்வரம் – கோயம்புத்தூர் – இராமேஸ்வரம் புதிய விரைவு ரயில் ஏப்ரல் 22ம் தேதி முதல் ஆரம்பம் செய்யப்படுகிறது. இந்த விரைவு ரயில் வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சேவை ஜூலை மாதம் வரை செயல்படும் என்று அறியப்படுகிறது.
எண். 06062 கோயம்பத்தூர் – இராமேஸ்வரம் விரைவு ரயில் திங்கள் மற்றும் வெள்ளி மட்டும் இயக்கப்படும். இந்த ரயில் பாலக்காடு, பாலக்காடு டவுன், பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, இராமநாதபுரம் வழித்தடங்களில் இயங்கும்.
இந்த ரயிலில் இருக்கை மற்றும் படுக்கை வசதிகள் உள்ளன என்பது கூடுதல் தகவலாகும்.
Coimbatore 08.15 am
Palakkad jn 09.30 am
Palghat town 09.47 am
Pollachi 11.00 am
Udumalpet 11.30 am
Palani 12.25 pm
Oddanchatram 13.00 pm
Dindigul 13.45 pm
Madurai 14.55 pm
Manamadurai 16.00 pm
Ramnad 17.15 pm
Rameswaram 18.40 pm
எண். 06061, இராமேஸ்வரம் – கோயம்பத்தூர் விரைவு ரயில் செவ்வாய் மற்றும் சனி மட்டும் இயக்கப்படும். விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
Rameswaram 08.00 am
Ramnad 09.02 am
Manamadurai 10.15 am
Madurai 11.10 am
Dindigul 12.15 pm
Oddanchatram 13.00 pm
Palani 13.30 pm
Udumalpet 14.15 pm
Pollachi 14.45 pm
Palghat town 15.50 pm
Palakkad jn 16.10 pm
Coimbatore 17.30 pm
தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் முதன்மை குறிக்கோளாக, எல்லா குடிமக்களுக்கும் குறிப்பாக ஏழை மக்களுக்கு உணவு வழங்குதல் இருக்கிறது. அதே போல் பொது விநியோக திட்டம் மூலமாக அத்தியாவசியமான பொருட்களை மலிவான விலையில் ஒவ்வொரு மாதமும் நியாய விலைக் கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு வழங்குகிறது.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள நீடித்த பட்டினி மற்றும் உணவு பற்றாக்குறையை நீக்கவும், அத்தியாவசியமான பொருட்களின் விலை உயர்வால் வரும் தவறான விளைவுகளில் இருந்து குடிமக்களை பாதுகாக்கவும், அத்தியாவசியமான பொருட்கள் வழங்குதல் மூலம், நுண் ஊட்டச்சத்து குறைப்பாட்டை குறைக்கவும், உள்நாட்டு எரிபொருள்களை (மண்ணெண்ணை மற்றும் எல்பிஜி) மலிவாக வழங்கவும் பொது விநியோக திட்டத்தின் மூலம் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது அதன் சாராம்சமாக பொதுமக்கள் தங்கள் ரேஷன் கடையில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருளைகளின் அளவுகளை குறித்தும், பொது விநியோக திட்டத்தின் மூலம் பல்வேறு சேவைகளை எவ்வாறு பெறுவது என்பது சம்பந்தமாகவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூட்டுறவுத் துறையினரின் மூலம் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இவை தமிழகத்தின் அனைத்து தாலுகாவில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளது. கீழக்கரை நகரிலும் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் இது சம்பந்தமான விழிப்புணர்வு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை ஏப்ரல் 2 முதல் தவணையாகவும், இரண்டாம் தவணை ஏப்ரல் 30 அன்றும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 43,051 மையங்களில் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
நாளை நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள். பெற்றோர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை மறக்காமல் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு இன்று ஏப்ரல் 1 முதல் வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் கீழக்கரை வட்ட வழங்கல் அலுவலகம் சார்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று முதல் ஸ்மார்ட் கார்டு படிப்படியாக வழங்கப்படும் என்றும் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவரும் செல்போன் எண்களை தந்துள்ளதால் ஸ்மார்ட் கார்டு தயாரானதும் அவர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவிக்கப்படும். அதில் ஸ்மார்ட் கார்டை எந்த தேதியில், எங்கு சென்று வாங்க வேண்டும் என்று ‘மெசேஜ்’ வரும். அதன் பிறகு மக்கள் வந்தால் போதும்.
மெசேஜ் வராதவர்களுக்கு இன்னும் கார்டு ‘பிரிண்ட்’ ஆகவில்லை என்று அர்த்தம்.எனவே கார்டு கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் பதட்டப்பட வேண்டாம். கார்டு தயாரானதும் உங்கள் செல்போனுக்கு கண்டிப்பாக மெசேஜ் வரும். அதன் பிறகு ஒரு வாரத்திற்குள் ரேஷன் கடைக்கு வந்தால் போதும்.
கீழக்கரை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் கீழக்கரை வட்டக் கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பின்வரும் சங்கத்தின் உறுப்பினர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டார்கள்.
தலைவர். செல்வராஜ்,
செயலாளர். புல்லாணி,
பொருளாளர். கோகிலா,
துணைத்தலைவர். ரவிச்சந்திரன்,
இணைச்செயலாளர். ஜெயக்குமார்.
மேலும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக முருகானந்தம், செந்தில் விநாயகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள் பணி சிறக்க தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்ட மையம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. கீழை நியூஸ் சார்பாகவும், புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. இதுபற்றி உணவு வழங்கல் துறை செயலாளர் பிரதீப் யாதவ் கூறியதாவது:- பழைய ரேஷன் கார்டுகளுக்கு பதில் ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் வழங்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 50 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 1 ஆம் தேதி கொரட்டூரில் தொடங்கி வைக்கிறார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதி காரணமாக சென்னையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை ஏப்ரல் 1 ஆம் தேதி வழங்க இயலாது. அதனால் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஏப்ரல் 1 ஆம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட உள்ளது.
ஸ்மார்ட் ரேஷன் கார்டு வாங்க பொதுமக்கள் முண்டியடிக்க தேவையில்லை. குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவரும் செல்போன் எண்களை தந்துள்ளதால் ஸ்மார்ட் கார்டு தயாரானதும் அவர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவிக்கப்படும். அதில் ஸ்மார்ட் கார்டை எந்த தேதியில், எங்கு சென்று வாங்க வேண்டும் என்று ‘மெசேஜ்’ வரும். அதன் பிறகு மக்கள் வந்தால் போதும்.மெசேஜ் வராதவர்களுக்கு இன்னும் கார்டு ‘பிரிண்ட்’ ஆகவில்லை என்று அர்த்தம்.
ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் அது கிடைக்கும் வரை பழைய ரேஷன் கார்டுகளையும் 2 மாதத்துக்கு பயன்படுத்தி கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.ஸ்மார்ட் கார்டில் திருத்தம் இருந்தால் இ.சேவை மையத்துக்கு சென்று திருத்தம் செய்து கொள்ளலாம்.
ஸ்மார்ட் போனிலும் ஆப் டவுன்லோடு செய்து ஓ.டி.பி. நம்பர் மூலம் திருத்தம் செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிலர் போட்டோ கொடுக்காதது உள்பட பல்வேறு காரணத்தால் பிரிண்ட் செய்வதில் காலதாமதம் ஆனது. இப்போது அது நிவர்த்தி செய்யப்பட்டு பணிகள் வேகமாக நடைபெறுகிறது.
எனவே கார்டு கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் பதட்டப்பட வேண்டாம். கார்டு தயாரானதும் உங்கள் செல்போனுக்கு கண்டிப்பாக மெசேஜ் வரும். அதன் பிறகு ரேஷன் கடைக்கு வந்தால் போதும். இவ்வாறு அவர் கூறினார்.
கீழக்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனி நபர் வீடுகள், உணவு விடுதிகள், சிற்றுண்டி சாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தூய்மையை மேம்படுத்தி கீழக்கரை நகராட்சியை முன் மாதிரி நகராட்சியாக மாற்றிட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் கெற்கொள்ளப்பட்டு வருகிறது.
நகராட்சி திடக் கழிவு மேலாண்மை விதிகள் 2016 ன் படியும், தமிழ் நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 சட்டப் பிரிவுகள் 153, 156, 157, 160 மற்றும் 161 ன் பிரகாரமும் நச்சுக் கழிவுகளையும், அழுகிய கழிவுகளையும், மலக் கழிவுகளையும் சாலைகளில் தூக்கி வீசுபவர்கள் மீது அபராதத்துடன் கூடிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மீன், கோழி, ஆடு, மாடு போன்ற இறைச்சி கடை நடத்துபவர்கள் அதன் கழிவுகளை திறந்த வெளியில் வீசக் கூடாது, பொதுமக்கள் பிளாஸ்டிக் உபயோகத்தை முற்றிலும் கைவிட வேண்டும், கட்டிட இடிபாடுகளை எக்காரணத்தை கொண்டும் ஒப்பந்ததாரர்கள் சாலைகளிலோ, தெருக்களிலோ கொட்ட கூடாது.
நகராட்சி எல்லைக்குள்பிளாஸ்டிக், ரப்பர், டயர் உள்ளிட்ட திடக் கழிவுகளை எரிக்க கூடாது, திருமண நிகழ்ச்சிகளின் போது குப்பைகளை முறையாக கையாள வேண்டும், செப்டிக் டேங்க் கழிவுகளை கழிவு நீர் வாய்க்காளிலோ அல்லது தெருக்களிலோ கொட்டக் கூடாது என்பது உள்ளிட்ட 16 அம்ச நிபந்தனைகளை நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
கீழக்கரை நகரில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் காவல் துறை துணை கண்காணிப்பாளராக சிறப்பாக பணியாற்றி வந்த DSP மஹேஸ்வரி தற்போது விருதுநகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கீழக்கரை நகருக்கு புதிய துணை கண்காணிப்பாளராக DSP பாலாஜி பொறுப்பேற்க உள்ளார். கீழக்கரை நகரில் கடந்த மூன்று ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு மற்றும் பல்வேறு வழக்குகளை திறம்பட கையாண்டு சாதனைகளை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நேர்மையான காவல் துறை அதிகாரியை கீழக்கரை நகர் இழக்கிறது என்றே கூற முடிகிறது. கீழக்கரை நகர் மக்கள் கனத்த இதயத்துடன் வழியனுப்பி வைக்கிறோம்.
எங்கு பணியில் இருந்தாலும் இறைவன் அருளால் நேர்மையின் உறுதியோடு பல்வேறு சாதனைகள் புரிந்து, வெற்றி மங்கையாய், சாதனை பெண்மணியாய் எப்போதும் மிளிர்ந்து நம் மக்களுக்கும், தேசத்திற்கும் உழைக்க வேண்டுமென கீழை நியூஸ் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி நிலவுவதால் மாநகராட்சி பகுதிகளில் வார்டுகள் தோறும் குடிநீர் வழங்கும் பணியை மேற்பார்வையிட அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக சட்டமன்றத்தில் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் வேலு மணி தெரிவித்துள்ளார்.
குடிநீர் பிரச்சனைக்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சட்டமன்றத்தில் இன்று திமுக உறுப்பினர் பிச்சாண்டி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
தமிழக வரலாற்றில், கடந்த 140 வருடங்களில் இல்லாத வகையில், இந்த வருடம், பருவமழை பொய்த்து, 62 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. அதன் காரணமாக ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, முதலமைச்சரின் தலைமையிலும், எனது தலைமையிலும், பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் இந்த அரசு, தமிழகத்தில் நகர் புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, 976 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், பழைய ஆழ்துளை கிணறுகளை புனரமைத்தல், சிறு மின்விசை பம்புகள் மற்று கைப்பம்புகள் அமைத்தல், லாரிகள் மூலம் குடிநீர் வழங்குதல், பிளாஸ்டிக் தொட்டிகள் நிறுவுதல், பழுதடைந்த மோட்டார்களை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை, போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அம்மா அவர்கள் எடுத்த தீர்க்கதரிசனமான நடவடிக்கையின் காரணமாக, நாளொன்றுக்கு 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. 2016ஆம் ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்ததன் காரணத்தாலும், கிருஷ்ணா நதி நீர்வரத்து குறைந்ததாலும், நீராதரங்களில் இருப்பு மிகவும் மோசமான நிலை அடைந்துள்ளது.
சென்னை மாநகர மக்களுக்கு, ஏரிகள், கிருஷ்ணா நதி நீர், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள், வீராணம் திட்டம், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளின் நிலத்தடி நீராதாரங்கள், பூண்டி மற்றும் தாமரைப்பாக்கம் கிணற்றுத் தளங்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
வருகிற மே மாதத்தில் சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளில் நீர் வற்றிப்போகும் சூழ்நிலையை எதிர்பார்த்து, வறட்சி நிவாரணப் பணிகள் சுமார் 100 கோடி மதிப்பீட்டில் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னையைத் தவிர்த்து இதர பகுதிகளில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் 553 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலம், 4.21 கோடி மக்கள் பயன்பெறும் வகையில், நாளொன்றுக்கு 1,565 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்துத் தலைமை நீர்த்தேக்க மையங்கள், தலைமை நீர் உந்து மையங்கள், நீரேற்று மையங்களை நல்ல முறையில் பராமரிக்கவும், ஆணையர்கள், மாநகராட்சி பொறியாளர்கள், நகராட்சி பொறியாளர்கள் ஆகியோர் தங்கள் பகுதிகளில் உள்ள வார்டுகளுக்கு ஒரு பொறுப்பான அலுவலரை நியமனம் செய்தும்,
அன்றாடம் குடிநீர் வழங்கல் பணிகளை காலை 6 மணி முதல் நேரில் ஆய்வு செய்தும், மாலையில் அனைத்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டும், குடிநீர் வராத பகுதிகளுக்கு குடிநீர் வழங்க அனைத்து அலுவலர்களும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழாய் மூலம் குடிநீர் செல்லாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இன்று உலக தண்ணீர் நாள். இந்த நாளில் மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் தங்களது தொகுதியில் உள்ள பொது மக்களை சந்தித்து, குடிநீரை வீணாக்காமல் சிக்கனமான முறையில் குடிநீர் பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என உங்கள் அனைவரையும் மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கருப்புப் பணப் புழக்கத்தை ஒழிக்க மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பரில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என திடீரென அறிவித்து திண்டாட்டத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து ரொக்க பணப்பரிமாற்றத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு தொடர்ந்து விதித்து வருகிறது.
மத்திய பட்ஜெட் அறிவிப்பின் போது 3 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்க பணப் பரிவர்த்தனையில் ஈடுபடக் கூடாது என நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்து இருந்தார். அவ்வாறு பண பரிவர்த்தனை செய்தால் அதே அளவு தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று கூறப்பட்டது. தற்போது இந்த தொகை இரண்டு லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்க பரிவர்த்தனையில் ஈடுபட்டால் அதே அளவு தொகை அபராதமாக விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக தான், இது போன்ற கட்டுப்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.
இராமநாதபுரம் மாவட்ட வருவாய்த்துறை அறிவுறுத்தலின் படி கீழக்கரை தாலுகாவில் சமூக நல திட்ட அலுவலகத்தின் மூலமாக முதியோர் ஓய்வூதிய திட்டம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம், திருமணமாகாத ஏழை பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம்,
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் உதவி பெறுவதற்கான தகுதிகள் மற்றும் வழிமுறைகளுக்கான தகவலை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தமீம் ராசா நம்மிடையே பகிர்ந்துள்ளார். இது குறித்த மேலதிக விபரங்கள் தேவைப்படுபவர்கள் கீழக்கரை தாலுகாவில் இயங்கும் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.
You must be logged in to post a comment.