14
இராமநாதபுரம், நவ. 13- உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளாக, நேரக்கட்டுப்பாடு உத்தரவை அமல்படுத்தி வருகிறது. அனுமதித்த நேரத்தில் உரிய பாதுகாப்புகளுடன் பட்டாசு வெடிக்க அறிவுறுத்தியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதித்த நேரத்தை விட பட்டாசு வெடித்ததாக கீழக்கரை வட்டாரத்தில் 6, ராமேஸ்வரம் வட்டாரத்தில் 5, கமுதி வட்டாரத்தில் 4, ராமநாதபுரம் வட்டாரத்தில் 2 என 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
You must be logged in to post a comment.