இராமநாதபுரம், நவ.13- பாம்பன் பாலத்தில் கர்நாடகா சுற்றுலா வேன் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் பரிதாபமாக பலியானார். இராமநாதபுரம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் மாலிக் ஹசன், 40. இன்று அதிகாலை 1:30 மணியளவில் இவர் தனது இரு சக்கர வாகனத்தில் பாம்பன் பாலத்தில் வந்தார். அப்போது கர்நாடகாவில் இருந்து ராமேஸ்வரம் வந்த சுற்றுலா வாகனம் மோதி விபத்திற்குள்ளானது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த மாலிக் ஹசன் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார். இவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகன பதிவெண் படி சொந்த ஊர் பெரியபட்டினம் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பாம்பன் காவல் துறையினர் தகவல் படி மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஆசிக், தங்கச்சிமடம் கிளை செயலாளர் ஆசிர் ரஹ்மான் ஆகியோர் மாலிக் ஹசன் உடலை மீட்டு தங்கச்சிமடம் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் ராமேஸ்வரம் அரசு மருத்துவனை கொண்டு சென்றனர். விபத்திற்கான காரணம் குறித்து பாம்பன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.