இராமநாதபுரம், செப்.4-
இராமநாதபுரம் மாவட்டத்தில் 6 ஆசிரியைகள் உள்பட 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.
இதன்படி பிடாரி சேரி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை அ.தனபாக்கிய பூரண ஆரோக்கிய மேரி, ஆதம்சேரி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ச.சீதாலட்சுமி, வீரமாச்சான் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கி.சீனிவாச கணேச பிரபு, வெண்ணீர் வாய்க்கால் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெ.ஜோன்ஸ் சகாயம், நரிப்பையூர் சி.எஸ்.ஐ.தொடக்கப் பள்ளி ஆசிரியர் டி. டெக்ரிசன் ஜெபா டேரின்ராஜ், தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் இரா.மணிமொழி, உலையூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கொ. அம்பேத்கர், திருப்பாலைக்குடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியை கே. தமிழரசி, வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ச.விஐயகுமார், பிடாரி சேரி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை போ.இளமுருகு பொசெல்வி, புலியூர் லிரியோட்டின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை சீ.சித்ரா ஆகியோருக்கு 2022-23 கல்வி ஆண்டில் மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கிடைத்துள்ளது.
You must be logged in to post a comment.