தென்காசி குத்துக்கல் வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி முதல்வர் அன்பரசி திருமலைக்கு சிறந்த ஆசிரியருக்கான விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை தமிழக அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர் பாபு ஆகியோர் வழங்கினர். தமிழ்நாடு அரசு சார்பில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் கலை அரங்கில் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களை பாராட்டி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருது வழங்கினார்.
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் அன்பரசி திருமலைக்கு சிறந்த ஆசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர் பாபு ஆகியோர் வழங்கி பாராட்டினர். டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் அன்பரசி திருமலை கடந்த 2002ம் ஆண்டு முதல் பள்ளி முதல்வராக பணியாற்றி வருகிறார். டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற அன்பரசி திருமலையை தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முத்தையா, மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள்) ராமசுப்பு, பள்ளியின் சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே. திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால்சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், மேலாளர் குருசாமி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் க. முத்துக்கிருஷ்ண குமரன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.