Home செய்திகள் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது, 14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்..

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது, 14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்..

by ஆசிரியர்

மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம், IPS. உத்தரவுப்படி மதுரை மாநகரில் இருசக்கர வாகனங்கள் திருடுபவர்களை விரைவில் பிடிக்க மதுரை அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. A.D.சக்கரவர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வரப்பட்டது.

கடந்த 26.02.2019 ம் தேதி குருவிக்காரன் சாலையில் வாகன சோதனை செய்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்களை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரணை செய்தபோது அவர்களில் இருவர் சிறார்கள் மற்றும் ஒருவர் விருதுநகர் மாவட்டம், பாப்பணம், காரியாபட்டி தாலுகாவைச் சேர்ந்த சின்னப்பாண்டி மகன் மணிகண்டன் என்பதும் தெரியவந்தது. விசாரணை முடிவில் அவர்கள் மூவரும் B1-விளக்குத்தூண், B-3 தெப்பக்குளம், B-5 தெற்குவாசல், C-4 திலகர்திடல், மற்றும் விருதுநகர் மாவட்டம் காவல்நிலையங்களில் இருசக்கர வாகனங்களை திருடுபவர்கள் என தெரியவந்தது.

எனவே மேற்படி மூன்று நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 14 இருசக்கர வாகனங்கள் (1.TN 59 CC 1092 YAMAHA FZ, 2. TN65 Z 9094 BAJAJ DISCOVER, 3. TN 05 AB 5757 TVS SPORT, 4.TN 64 D 2425 H.H.SPLENDOR, 5. TN 58S 8429 H.H.SPLENDOR, 6. TN 64 A 2263, 7. TN59 U 3110 BAJAJ M80, 8. TN 64 N 6334 BAJAJ PULSAR, 9. TN 63 AE 9207 H.H.SPLENDOR, 10. TN 58 T 5757 H.H.SPLENDER PLUS, 11. TN 59 AS 7798 HH.PASSION PRO, 12.TN64 D 4286 H.H.CD DULEX, 13. TN 65 AX 9793 ROYAL ENFIELD, 14. TN 65 Z 9094 BAJAJ DISCOVER) கைப்பற்றப்பட்டது. குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு சிறார்களும் திருச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் மணிகண்டனை மதுரை மத்திய சிறைக்கும் அனுப்பப்பட்டது மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை பிடித்து, பதினான்கு இருசக்கர வாகனங்களை கைப்பற்றி சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம், IPS., பாராட்டினார்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!