17
பாராளுமன்ற தேர்தலையொட்டி ஆட்சியாளர்கள் மற்றும் தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் அனேகமான ஆட்சியர் அலுவலகத்தில் அரசின் ஆணையை எதிர்த்து ஆர்ப்பாட்டமும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக கீழக்கரை வருவாய் துறை அதிகாரிகளும் மொத்தமாக பணிகள் ஏதும் செய்யாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே மந்தமான பணிகளுக்கு பெயர் பெற்ற கீழக்கரை நகராட்சி நிர்வாகம், இப்பொழுது பணிகள் ஏதும் நடைபெறாமல் ஸ்தம்பித்து போய் உள்ளது. இதனால பாதிக்கப்பட்டவர்கள் பொது மக்களே..
You must be logged in to post a comment.