அரியலூர் மாவட்டம் கோவில் எசனை கிராமத்தில் வருவாய் கோட்டாட்சியர் சத்திய நாராயணன் தலைமையில் அம்மா திட்ட முகாம் 12/10/18 இன்று நடைபெற்றது.
இம்முகாமில் அரியலூர் வட்டாட்சியர் முத்துலட்சுமி மற்றும் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திருமானூர் மண்டல துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா 15 பயனாளிகளுக்கும் இருப்புச் சான்றிதழ் 4 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை மற்றும் கண் பரிசோதனை 95 நபர்களுக்கு வெங்கனூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மூலம் வழங்கப்பட்டது. இம்முகாமிற்கான ஏற்பாடுகளை கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகிய சரவணன் , மகேஸ்வரன், சங்கிலி ராஜன் மற்றும் கிருபா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
முடிவில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வருவாய் கோட்டாட்சியர் சத்யநாராயணன் மரக்கன்றுகளை நட்டு விழாவை நிறைவு செய்தார்.
செய்தி:- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.