தென்காசி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் டாக்டர். கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்த மாவட்ட ஆட்சியரின் செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் டாக்டர். கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசின் திட்டங்கள் குறித்து பயன் பெறும் வகையில், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தென்காசியில் 19.08.2023 அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 2.00 வரை மற்றும் கோமதி அம்மாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சங்கரன்கோவிலில் 16.09.2023 அன்று காலை 10:00 மணி முதல் மதியம்: 2.00 வரை நடைபெற உள்ளது.
எனவே அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள் அனைவரும் தங்களுக்கு தேவையான உதவிகள் பெற மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம்-5 ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன் பெறுமாறும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் இம்முகாமில் பெறலாம் எனவும், அனைத்து மாற்றுத் திறனாளிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.