இந்திய அரசியல் சாசனத்தை வடிவமைத்த பாரத ரத்னா டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கரின் 130 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் பா.ஜ.க., மாவட்ட அலுவலத்தில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் கே.முரளிதரன் தலைமை வகித்தார்.
மாவட்ட பொது செயலர் ஜி.குமார், மாவட்ட செயலர்கள் ஆர்.மணிமாறன், முத்துச்சாமி, காயத்ரிகுகன் மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ்பாபு, இதர பிற்பட்டோர் அணி மாவட்ட தலைவர் மாரிமுத்து, தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் மலைமேகு, மாவட்ட அலுவலக செயலர் ஐ.ராகேஷ்குமார் முன்னிலை வகித்தனர்.
நகர் பொது செயலர்கள் நவநீதன், மாரிமுத்து, நகர் துணைத்தலைவர்கள் எஸ்.ராகேஷ்குமார், தர்மராஜ், நகர் செயலர்கள் பூபதிராஜா, சரவணன், முன்னாள் நகர் தலைவர் குமரன், பூசாரிகள் பேரவை மாவட்ட அமைப்பாளர் கோதாவரி நடராஜன், கிளை தலைவர்கள் கிருஷ்ணன் பஞ்சு, யோகேஷ்குமார், பாண்டிச்செல்வன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நகர் தலைவர் ஆர்.வீரபாகு செய்தார்
You must be logged in to post a comment.