22
அலங்காநல்லூர் புதிய ஜல்லிக்கட்டு மைதானம் திறந்திட முதல்வர் வருகை! ஏற்பாடுகள் தீவிரம்..
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தை தமிழக முதல்வர் ஜனவரி 24 ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், திராவிட மாடல் ஆட்சியில் பண்பாட்டின் அடையாளமாய் விளங்கும் ஏறுதழுவதலுக்கென, மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை” வரும் 24-ஆம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக்கான மதுரை, அலங்காநல்லூர் – கீழக்கரைக்கு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். எனவே, முதல்வர் வருகை உறுதியானதால், திறப்பு விழாவிற்கு தேவையான பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.