தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை அவதூறு பேசிய திமுக .எம்பி., ஆ.ராசா உருவ பொம்மையை அதிமுக., வினர் ராமநாதபுரம் அரண்மனை முன் இன்று (08.12.2020 காலை எரித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அதே பகுதியில் நின்று கொண்டிருந்த திமுக.வினர் எதிர் கோஷத்தில் ஈடுபட்டனர்.
அதை தொடர்ந்து கூட்டத்தில் இருந்து கற்கள், காய்கறி, கல், காலணியை வீசி திடீர் வன்முறையில் ஈடுபட்டனர். சம்பவத்தை போட்டோ எடுத்துக்கொண்டிருந்த செய்தியாளர் மார்பில் காயம் ஏற்பட்டது, அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி கண்காணிப்பாளர் அரவிந்த், வெள்ளைத்துரை தலைமையில் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். மோதலில் ஈடுபட்ட திமுக., வினரை வாகனத்தில் ஏற்றிச்சென்றனர். இதையடுத்து, காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.
You must be logged in to post a comment.