Home செய்திகள் பரமக்குடி விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள்….

பரமக்குடி விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள்….

by ஆசிரியர்

ராமநாதபுரம், செப்.4- ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வேளாண் பொறியியல் துறை மூலம் பயனாளிகளுக்கு பவர் டில்லர் இயந்திரம் மற்றும் விசை எடுப்பான் கருவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் முன்னிலை வகித்தார். 13 பயனாளிகளுக்கு பவர் டில்லர் மற்றும் விசைகளை எடுப்பான் கருவிகளை பிற்படுத்தப்பட்டோர் நலம் கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

அமைச்சர் பேசியதாவது:-ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றிய ஒன்றியத்தில் உள்ள விவசாயிகளுக்கான வறட்சி நிவாரண நிதி மாவட்ட நிர்வாகம் மூலம் வங்கிகள் வழியாக விவசாயிகளுக்கான நிவாரணத்தொகை வழங்கும் பணி நாளையில் இருந்து நடைபெறுகிறது. இவ்வாறு விவசாயிகளுக்கான திட்டங்கள் அனைத்தும் தடையின்றி வழங்கப்படுகிறது என்றார். பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், வேளாண் துறை இணை இயக்குநர் (பொ) தனுஷ்கோடி, பரமக்குடி நகர் மன்றத்தலைவர் சேது கருணாநிதி, வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்கள் நாகராஜன், திவ்யநாதன், குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!