9
வேலூர் மாவட்டம் பழைய காட்பாடியை சேர்ந்த கணேசனின் மகன் கருணாநிதி (42) நேற்று முன்தினம் வீட்டிலிருந்து சாலையை கடந்த போது வேகமாக வந்த டூவிலர் கருணாநிதி மீது மோதியது. படுகாயம் அடைந்த அவரை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு தீவிர சிகிச்சைக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.
கருணாநிதியின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது. காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
கே எம்.வாரியார்
You must be logged in to post a comment.