Home செய்திகள் கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை; தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு..

கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை; தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு..

by mohan

கடந்த 2012 ஆம் ஆண்டு கொலை செய்த தந்தை மகன் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலங்காதகண்டி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். அதே பகுதியை சேர்ந்த ராஜ் மற்றும் அவரது மகன் துரை ஆகியோரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரமடைந்த தந்தை மகன் இருவரும் கனகராஜை 31.10.2012 ஆம் ஆண்டு அரிவாளால் தாக்கி உள்ளனர். இதில் கனகராஜ் 01.11.2012 அன்று இறந்துள்ளார். பின்பு இதுகுறித்து செங்கோட்டை காவல் ஆய்வாளர் முனிஸ்வரன் மேற்படி குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார். இந்த வழக்கை 11.04.2022 நேற்று தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அனுராதா விசாரணை மேற்கொண்டார். மேற்படி கனகராஜை கொலை செய்த ராஜ் மற்றும் துரை ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். வழக்கில் திறம்பட செயல்பட்ட அரசு வழக்கறிஞர் வேல்சாமி மற்றும் செங்கோட்டை காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!