10
கீழக்கரை முழுவதும் ஏற்பட்டுள்ள சுகாதார கேடு சம்பந்தமாக எஸ்டிபிஐ கட்சியின் மேற்கு நகரத் தலைவர் நகர் தலைவர் ஹமீது பைசல் தலைமையில் கீழக்கரை நகராட்சி ஆணையாளரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.
அனைத்து தெருக்களிலும் உள்ள குப்பைகள் சாக்கடைகள் வாறுகால் மூடிகள் நாய்கள் சம்பந்தமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது நகராட்சி நிர்வாகம் சரி செய்யாத பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் களம் காண்ப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதில் தொகுதி துணை தலைவர் அஹமது நதீர் நகர் செயலாளர் அஷ்ரப் துணைத் தலைவர் முஹம்மது ஜலீல் தாஜுல் அமீன் சுல்தான் சிக்கந்தர் சுக்குர் சாதிக் அலி ஃபாருக் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
You must be logged in to post a comment.