சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, 2016 சட்டமன்றத் தேர்தலில் மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டி போட்டது. அதன்பிறகு வந்த 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது.இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. எனினும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.இதனை அடுத்து மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என சீமான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்தார். அவ்வழக்கில், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பாரதீய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இதனையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றம், சீமான் மனுவை தள்ளுபடி செய்தது.இந்நிலையில் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.
Daily Archives
March 6, 2024
சோழவந்தான் அருகே செல்போன் திருடிய மூவர் கைது; போலீசார் விசாரணை.
சோழவந்தானைச் சேர்ந்த ஆசிரியர் ஆசீர் பிரபாகர். இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் செக்கானூரணியிலிருந்து சோழவந்தானுக்கு வந்து கொண்டிருந்த பொழுது இவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் ஆசீர்பிரபாகர் மோட்டர் சைக்கிளை வழிமறித்து அவரிடம் இருந்த செல்போனை வழிப்பறி செய்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து ஆசீர் பிரபாகர் சோழவந்தான் போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மேலக்கால் கணவாய் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் போலீசாரை கண்டவுடன் மோட்டார் சைக்கிளை திருப்பி தப்பி ஓட முயன்றனர். இவர்களை அங்கிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர்.
இதில் செக்கானூரணி அருகே கண்ணனூர் பகுதியைச் சேர்ந்த இருதயராஜ் மகன் அற்புதராஜ், பூமிராஜா மகன் இன்பராஜ், சுரேஷ் மகன் முத்துக்குமார் என்று தெரிய வந்தது. மேலும் விசாரணை செய்ததில் நேற்று இரவு ஆசிரியரிடம் வழிப்பறி செய்து செல்போனை பறித்து சென்றவர்கள் என்று தெரிய வந்தது. அவர்களிடமிருந்து ஆசிரியரிடம் வழிப்பறி செய்த செல்போன் மற்றும் அதற்குப் பயன்படுத்திய மோட்டர் சைக்கிளையும் போலீசார் கைப்பற்றினர். இதன் பேரில் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிலம்ப பட்டையம் வழங்கல்..
written by Abubakker Sithik
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, கருமாத்தூரில் மீசைகாரர் சிலம்பகூடம் நடத்திய சிலம்பாட்ட போட்டியில், வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிலம்பபட்டையம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்தப் போட்டியில், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இப் போட்டியானது, பொன் சங்கரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. போட்டியில், கலந்து கொண்ட மாணவர்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப பச்சை நீலம் மஞ்சல் பட்டையம் வழங்கபட்டது. இதில், உசிலம்பட்டி பகுதியிலிருந்து மாஸ்டர் கெளதம் தலைமையில் சுமார் 80 மாணவர்கள் கலந்து கொண்டனர். பொட்டுலு பட்டியை சேர்ந்த தாரணியா சுபாஷ், ஆ. புதுபட்டியை சேர்ந்த ஸ்ரீ பதி ஆகியோர் வெற்றி பெற்று பச்சை பட்டையம், பாராட்டுசான்று பரிசுகளை மீசைகார சிலம்பகூடம் தலைவர் பொன் சங்கர் மூர்த்தியிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
மேலும், சிவகங்கை சிவம் மார்சியல் ஆர்ட்ஸ் சிலம்பம் அகடாமி சார்பில், சிவகங்கை மாவட்டம் பேருந்து நிலையம் அருகே, தனியார் மஹாலில் மாவட்ட அளவிலான 38 வது சிலம்ப போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், மாவட்ட அளவிலான தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவிகள் 800 க்கும் மேற்பட்டோர் இந்த சிலம்ப போட்டியில் கலந்து கொண்டனர். சிலம்பம் போட்டிகளில், சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டு சிறப்பித்தார். சிவம் மர்சியல் உரிமையாளர் பரமசிவம் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தார். மேலும், சிலம்பம் ,கராத்தே மற்றும் யோகா பயிற்சி ஆசிரியர்கள், குழந்தைகள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணி வகுப்பில் பங்கேற்று திரும்பிய மதுரை கல்லூரி மாணவிக்கு பாராட்டு விழா..
written by Abubakker Sithik
மதுரைக் கல்லூரியின் NCC மாணவி செல்வி. கோபிகா சமீபத்தில் புது டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில், தமிழக NCC அணி சார்பாக பங்கேற்று திரும்பி உள்ளார். இதனை பாராட்டும் விதமாக மதுரைக் கல்லூரி NCC துறை மற்றும் NCC 7 பட்டாலியன் சார்பாக மாணவிக்கு பாராட்டு விழா மதுரைக் கல்லூரியில் நடைபெற்றது. விழாவில் NCC 7 பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி லெப்டினென்ட் கர்னல் சிவகுமார். கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கினார். மதுரைக் கல்லூரி வாரிய செயலர் நடனகோபால், பொருளாளர் ஆனந்த் சீனிவாசன், மதுரைக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் சுரேஷ் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். கல்லூரி பேராசிரியர்கள் முத்துக்குமார், ஷாகுல் ஹமீது, சிவராம கிருஷ்ணன் மற்றும் பல பேராசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினர். மதுரைக் கல்லூரியின் NCC அதிகாரி லெப்டினென்ட் கார்த்திகேயன் பாராட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நேரு நினைவுக் கல்லூரியில் இயற்கை வேளாண்மை கருத்தரங்கம்..
திருச்சிராப்பள்ளி மாவட்டம், புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி தாவரவியல் மற்றும் ஊட்டச்சத்து உணவுமுறை துறையின் சார்பாக “இயற்கை வேளாண்மை கருத்தரங்கம்” என்ற தலைப்பில் 5 மார்ச் 2024 செவ்வாய் கிழமை காலை கல்லூரி கருத்தரங்க அரங்கில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் முனைவர் M.மீனாட்சி சுந்தரம் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் பொன். பாலசுப்பிரமணியன் மற்றும் கல்லூரி செயலார் பொன்.இரவிச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். தானே உருவாகும் நோயை குணப்படுத்த இயற்கை விவசாயமே சிறந்த மருந்து என்றும், இயற்கை விவசாய உணவு அருந்த மனிதர்கள் 100 வயதுக்கு மேல் வாழ்ந்தவர்கள் என்றும் கல்லூரி முதல்வர் முனைவர் A.வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினார். இயற்கையுடன் இணைந்து வாழ வேண்டும் என்றும், இயற்கை உணவு அருந்தினால் உற்சாகமாக வலிமையாக வாழலாம் என்றும், துணை முதல்வர் K.T. தமிழ்மணி வாழ்த்துரை வழங்கினார்.
இயற்கையாக விளைவிக்கும் ஒவ்வொரு உணவுப் பொருளும் மருந்தாக செயல்படுகிறது. திருமூலர் கூற்றுப்படி உணவே மருந்தாகும் என்று 1996 முதல் 28 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வரும் தஞ்சாவூரை சேர்ந்த இயற்கை விஞ்ஞானி சித்தர் சிறப்புரை ஆற்றினார். இந்தியாவில் உள்ள 90 சதவீத விவசாய நிலம் விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாமல் வளம் குறைந்து விட்டதாக ICR அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரை இந்த மண்ணில் விளையும் பொருட்கள் சத்து குறைந்த பொருட்களாகவே இருக்கும். மனிதனுக்கு ஏற்படும் அனைத்துமே வளர சிலை மாற்ற குறைபாடு மட்டுமே, நோய் அல்ல. அரிசியில் நாம் பத்தாயிரம் வருடங்களுக்கு மேல் சாப்பிட்டு வருகிறோம். அனைத்து நோய்களும் சமையல் அறையில் இருந்து தான் வருகிறது. நம்மை சுற்றி கிடைக்கும் உணவு பொருட்களை நமது உடம்பிற்கு ஏற்ற சிறந்த உணவாகும். பசி இல்லாமல் சாப்பிடுவது நோய்க்கு வழி வைக்கிறது. இந்தியாவில் 2 லட்சம் அரிசி வகைகள் உள்ளன. தமிழ்நாட்டில் இப்போது 500 வகை அரிசிகள் உள்ளன. இயற்கை விவசாயம் சரியாக இருந்தால் ஆரோக்கியம், சூழ்நிலை, சுற்றுப்புறம் ஆகிய அனைத்தும் சிறப்பாக இயங்க வழிவகுக்கிறது என்று சிறப்புரை ஆற்றினார். மேலும் நமது சுற்றுப்புறத்தில் விளையும் உணவுப் பொருட்களையே சாப்பிட வேண்டும் என்றும், நமது பிரச்சனைகளுக்கு தேவையான உணவு முறைகள் பற்றியும் விளக்கினார். நிகழ்வின் நிறைவாக உதவி பேராசிரியர் முனைவர் R. மாதரசி நன்றியுரை வழங்கினார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஈஷாவில் கோலாகலமாக தொடங்கிய யக்க்ஷா திருவிழா; மஹா சிவராத்திரியை முன்னிட்டு மூன்று நாள் கொண்டாட்டம்
மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் கொண்டாடப்படும் ‘யக்க்ஷா’ கலைத் திருவிழா கோவை ஈஷா யோக மையத்தில் கோலாகலமாக தொடங்கியது. கோவை ஈஷா யோக மையத்தில் 30 ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மார்ச் 8ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக நடத்தப்படும் ‘யக்க்ஷா’ கலைத் திருவிழா தொடங்கியது.
இந்நிகழ்ச்சி கலாச்சாரம், இசை மற்றும் நடனத்தின் செறிவை பறைசாற்றும் விதமாக உலகப் புகழ்பெற்ற கலைஞர்களைக் கொண்டு நடத்தப் படுகிறது. அதன் படி, இந்த ஆண்டு விழா (மார்ச் 5) தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இத்திருவிழாவின் முதல் நாளில் கங்கா மருத்துவமனையின் இயக்குனர், மருத்துவர் திரு. ராஜ சபாபதி அவர்களும், சமூக வலைதள பிரபலமும், புகழ்பெற்ற திரைப்பட நடிகையுமான அருணா முச்செர்லா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வின் தொடக்க நிகழ்ச்சியாக இந்துஸ்தானி இசை கலைஞர் பண்டிட் சஞ்சீவ் அப்யங்கரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்று தலைமுறைகளாக பாடி வரும் இவர், இதுவரையில் உலகளவில் 200க்கும் மேற்பட்ட நகரங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். சிறந்த கர்நாடக இசைக் கலைஞருக்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் நிகழ்த்திய இசைவிருந்தில் இவரோடு அஜிங்யா ஜோஷி (தபளா), அபிஷேக் ஷிங்கர் (ஆர்மோனியம்), சாய்பிரசாத் பாஞ்சல் (தம்பூரா) உள்ளிட்ட புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் பலர் பங்கேற்றனர். ‘யக்க்ஷா’ திருவிழாவின் இரண்டாம் நாளில் வித்வான் குமரேஷ் குழுவினரின் வயலின் இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த கலை நிகழ்ச்சிகள் ஈஷாவில் உள்ள சூர்யகுண்டம் மண்டபம் முன்பாக தினமும் மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அனுமதி இலவசம்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மகளிருக்கான சிறப்பு போட்டிகள்; பரிசுகள் வழங்கல்..
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மகளிருக்கான சிறப்பு கலைப் போட்டிகள் நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தலைமையில் நடத்தப்பட்டன. 18 வயதிற்கு மேற்பட்ட ஏராளமான பெண்கள் மிகவும் ஆர்வத்துடன் இப் போட்டிகளில் கலந்து கொண்டனர். ஒரு நிமிட நட்சத்திரம் என்கிற போட்டியில் பல்வேறு பெண்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஒரு நிமிடத்திற்குள் நடனம், பாடல், தனிநடிப்பு, சிலம்பம் சுற்றுதல், கவிதை வாசித்தல் போன்ற பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து நடைபெற்ற பசுமை சமையல் போட்டியில் அடுப்பில்லாத முறையில் வீட்டிலே தயாரிக்கப்பட்ட உணவுகளை கொண்டு வந்து காட்சிப்படுத்தி அவற்றின் முக்கியத்துவங்களை எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற ஒரு நிமிட பேச்சுப் போட்டியில் “மகளிர் மேம்பாட்டில் கலைஞரின் பங்கு” என்கிற தலைப்பில் பேசினர். “கையிலே கலைவண்ணம் கண்டோம்” என்கிற தலைப்பில் நடத்தப்பட்ட கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் கலைப் பொருள்கள் போட்டியும் நடைபெற்றது. போட்டிகளின் நடுவர்களாக சு.நாகஜோதி, வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர், முனைைர் சு. பொன்னி, பரத நாட்டிய கலைஞர் நெ. சுபதுர்க்கா, அ. பிரேமலதா, உதவிப் பேராசிரியர், செல்வி. மோதிதா பால், தூய சவேரியார் கல்லூரி, வேதிகா மனவளக்கலை பேராசிரியை, கவிஞர். உமா, முனைவர். கங்கா, செல்வி. இ.சுவஸ்மதி, கலை ஆசிரியை ஆகியோர் இருந்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இட்டாலியன் பேக்கரி உரிமையாளர் பாத்திமா கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். நிகழ்ச்சிகளை சூர்யா தொகுத்து வழங்கினார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை என்.பி.என்.கே கலை பண்பாடு மன்ற ஒருங்கிணைப்பாளர் மூவெ ரா, ஸ்டார் கோச்சிங் சென்டர் உரிமையாளர் ரஹமது நிஷா பேகம், சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பேராசிரியை முனைவர் பிரியதர்ஷினி, அகல்யா, சுப்புலட்சுமி ரம்யா, கவிஞர் சுப்பையா ஆகியோர் செய்திருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இரயில் விபத்தை தடுத்த புளியரை தம்பதியினர்; கடையநல்லூர் எம்எல்ஏ நேரில் சென்று பாராட்டு..
written by Abubakker Sithik
இரயில் விபத்தை தடுத்த தென்காசி மாவட்ட தம்பதியினர்; கடையநல்லூர் எம்எல்ஏ நேரில் சென்று பாராட்டு..
இரயில் விபத்தினை உரிய நேரத்தில் தடுத்து நிறுத்திய புளியரை பகுதி தம்பதியினரை கடையநல்லூர் எம்எல்ஏ குட்டியப்பா நேரில் சென்று பாராட்டி சன்மானம் வழங்கி கெளரவித்தார். தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், புளியரை கிராமத்தில் ’எஸ்’ வளைவு என்ற தமிழக-கேரள எல்லைப் பகுதியில், கடந்த பிப். 25-ஆம் தேதி நள்ளிரவு திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி செங்கோட்டை-கொல்லம் ரயில் மார்க்கத்தில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அதே நேரத்தில், செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி பயணிகள் ரயில் ஒன்று, அதே தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. இதனை அறிந்து கொண்ட சண்முகையா-வடக்குத்தியாள் தம்பதியினர் உரிய நேரத்தில் இந்த ரயிலை டார்ச் லைட் அடித்துக் கொண்டே ஓடிச்சென்று நிறுத்தி ஏற்படவிருந்த விபத்தை தடுத்தனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி 5 லட்சம் வெகுமதிகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் இத்தம்பதியரை பாராட்டி தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் C. கிருஷ்ண முரளி (என்ற) குட்டியப்பா சண்முகையா – வடக்குத்தியாள் தம்பதியினரை நேரில் சென்று சந்தித்து பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு சால்வை அணிவித்து சன்மானம் கொடுத்து கௌரவித்தார். இந்நிகழ்வில் செங்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்லப்பன், புளியரை ஊராட்சி மன்ற பத்தாவது வார்டு உறுப்பினர் சரவணன், ஒன்றிய மாணவரணி செயலாளர் முருகேசன், அங்கன் காலாடி கிளைக் கழக செயலாளர் இசக்கி துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் 11 புதிய அரசு பேருந்துகள்; போக்குவரத்துத் துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் 11 புதிய அரசு பேருந்துகள்; போக்கு வரத்துத் துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.
தென்காசி மாவட்டத்தில் 11 புதிய பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார். தென்காசி திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் 05.03.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் முன்னிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் 11 புதிய பேருந்துகளை புதிய வழித்தடங்களில் துவக்கி வைத்து பணியாற்றிய ஓட்டுநர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
விபத்தின்றி நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்ததாவது, அமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3000 புதிய பேருந்துகளை வாங்க அனுமதி வழங்கியுள்ள நிலையில், முதற்கட்டமாக, 100 பேருந்துகளை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் கொடியசைத்து துவக்கி வைத்தார். சட்டமன்ற கூட்டத் தொடரில் நிதிநிலை அறிக்கையில் 2000 புதிய பேருந்துகள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 309 பேருந்துகள் திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்கப்பட உள்ளது. முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட மகளிர், மாற்றுத் திறனாளிகள், உதவியாளர் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் விடியல் பயண திட்டம் 08.05.2021 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு சராசரியாக 5.65,760 மகளிரும், 3,342 மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறனாளிகளின் உதவியாளர்கள் மற்றும் 285 திருநங்கைகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டம் ஆரம்பிக்கும் போது தமிழ் நாட்டிலுள்ள மாவட்டங்களிலேயே மிக அதிக அளவாக 70 % மகளிர் பயணம் செய்தனர். தற்போது 80% அளவில் மகளிர் பயணம் செய்து வருகின்றனர். மேலும், மற்ற சகோதர போக்குவரத்து கழகங்களை காட்டிலும் இப்போக்குவரத்துக் கழகத்தில் மகளிர் அதிக அளவு பயணம் செய்து வருகின்றனர். இதற்கு அரசு மானியமாக திருநெல்வேலி போக்குவரத்து கழகத்திற்கு மாதம் ஒன்றிற்கு சுமார் 27.00 கோடி ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் விபத்தின்றி 25 வருடங்கள் பணியாற்றிய 2 ஓட்டுநர்களுக்கு தலா 4 கிராம் தங்க நாணயங்கள் மற்றும் 10 வருடங்கள் விபத்தின்றி பணியாற்றிய 43 ஓட்டுநர்களுக்கு தலா 100 கிராம் வெள்ளி நாணயங்களும் வழங்கப்பட்டுள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் அரசு நிதியுதவி ரூ.1 இலட்சத்திலிருந்து ரூ.2 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பொது மக்கள் சாலை விதிகளை பின்பற்றி விபத்துகளைக் குறைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்..
தொடர்ந்து, தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வலுவலகத்தின் மூலம் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே வாகனம் ஓட்டுநர் உரிமத்தினை எளிதாக பெற்றுக் கொள்ள முடியும். வரும் காலங்களில், இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் வசதிக்கேற்ப சொந்த கட்டடம் அமைக்கப்படும். அதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருகிறது என பேசினார்.
இவ்விழாவில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பழனிநாடார் (தென்காசி), ஈ.ராஜா (சங்கரன்கோவில்), பி.எச்.மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்), மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், நகர்மன்ற தலைவர்கள் ஆர்.சாதிர் (தென்காசி), ஹபிபுர் ரகுமான் (கடையநல்லூர்), தென்காசி நகர்மன்ற துணைத்தலைவர் கே.எல்.என்.சுப்பையா, தென்காசி ஒன்றியக்குழு தலைவர் ஷேக் அப்துல்லா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் காவேரி சீனித்துரை (கீழப்பாவூர்), திவ்யா மணிகண்டன் (ஆலங்குளம்), தென்காசி ஒன்றியக்குழு துணைத் தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் கு. இளங்கோவன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் தி.வே.சரவணன், துணை மேலாளர் (வணிகம்) சுப்பிரமணியம், துணைப் போக்கு வரத்து ஆணையர் (திருநெல்வேலி) நா.ரவிச்சந்திரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (தென்காசி) எஸ்.கண்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராஜன், மணிபாரதி, கனகவள்ளி, அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -6
(கி.பி 1299-1922)
உஸ்மான் அவர்களின் மூத்த மகன் அலாவுதீன் மிகுந்த இறைபக்தி உடையவராக இருந்தார்.
சூஃபி ஞானமும் தனிமையில் தவம் இருத்தல் எனவும் அரசின் பொறுப்புகள் மீது ஆர்வம் இல்லாதவராக இருந்தார்.
ஆகவே அவர் இளவரசர் பொறுப்பை ஏற்காமல் தனது தம்பி உர்கானை இளவரசராக அறிவிக்க செய்தார்.
பதவிக்கு கொலைகள் நடக்கும் அரசியல் மரபில் இதுவொரு விநோதமான நிகழ்வாகும்.
உர்கான் பதவியேற்றதும் தனது அண்ணனை
தலைமை அமைச்சராக வற்புறுத்தி நியமித்தார்.
தான் போருக்கு வெளியில் சென்று விட்டால் ஆட்சியாளராகவும்
செயல்படும் புதிய பதவி ஒன்றை
உருவாக்கி அலாவுதீன் அவர்களை நிர்வாகங்களில் ஈடுபடத் செய்தார்.
அலாவுதீன் தலைமை அமைச்சராக செயல்பட்டு ஏராளமான சீர்திருத்தங்களை செய்தார்.
செல்ஜூக்கியர்
களின் நாணயங்களை தடை செய்துவிட்டு உஸ்மானிய நாணயங்களை புழங்க செய்தார்.
இது பொருளாதாரத்தில்
மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கி வெற்றிகளை பெற்றது.
மக்களிடையே பணப்புழக்கங்கள் அதிகரித்தது.
தனித்தனி
துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு கீழ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
இதனால் நிர்வாகம்
சீராகவும்,
துல்லியமாகவும்
நடைபெற்றது.
உர்கான் காலத்தில் உஸ்மானிய அரசு பேரரசாக விரிந்தது.
உஸ்மானியர்கள் வெற்றி பெற்ற பகுதிகளில் எல்லா மதத்தினர்களும் சமமாக நடத்தப்பட்டனர்.
வேறு பிரதேசங்களுக்கு
செல்ல விரும்புபவர்கள்
தங்கள் பொருட்களோடு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
உஸ்மானிய ராணுவம் மிக வலுவாக கட்டமைக்கப்பட்டது
பல லட்சம் வீரர்கள் கொண்ட படையாக உஸ்மானிய ராணுவம் பலம் பெற்றது.
அதுவரை மன்னருக்கு சொந்தமாக மெய்க்காவல் படை இல்லாமல் இருந்தது.
ராணுவ வீரர்கள் மன்னருக்கு எதிராக திரும்பினால் நிலைமை சிக்கலாகுமே என யோசித்த உர்கானும்,
அமைச்சர் அலாவுதீனும் ஒரு ஆலோசனை செய்து,
கிறிஸ்தவ மதத்திலிருந்து
முஸ்லீமாக மாறியவர்கள் வேறு போக்கிடம் இல்லாததால் விசுவாசமாக இருப்பார்கள் என ஆலோசிக்கப்பட்டது.
அப்படிப்பட்ட வீரர்களை தேர்ந்தெடுத்து மன்னரின் உள்வட்டப்படை சிறிதுசிறிதாக வலுவாக உருவாக்கப்பட்டது.
இந்த வீரர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
மன இயல் பயிற்சியாளர்கள் அளிப்பதற்கு சூஃபி ஞானி ஹாஜி பக்தாஸ் அவர்களிடம்
அனுப்பப்பட்டனர்.
இந்த படைப்பிரிவுக்கு
துருக்கிய மொழியில்
“எனிச்சாரி” என பெயரிடப்பட்டது.
புதிய போர்களின்போது எனிச்சாரி படைகள் மின்னல் வேகத்தில் எதிரிப்படைகளை தாக்கி அழிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டது.
எனிச்சாரி பிரிவு படைகள் வந்தாலே வெற்றிதான் என்னும் நிலைமை உருவானது.
“எனிச்சாரி” படைப்பிரிவில் ஐந்து லட்சம் வீரர்கள் இருந்தனர்.
எனிச்சாரி பிரிவு படைகள் எல்லைமீறி அட்டூழியங்கள் செய்ய ஆரம்பித்தனர்.
அதன் விளைவுகள் என்ன..?
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
You must be logged in to post a comment.