திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியத்தில், நிலக்கோட்டை, வத்தலகுண்டு,பட்டிவீரன்பட்டி,விருவீடு,விளாம்பட்டி,அம்மைய நாயக்கனூர், போன்ற ஊர்களில் (நிலக்கோட்டை தவிர்த்து) இருக்கும் காவல் நிலையத்தில் பணி புரியும் அதிகாரிகளுக்கு காவலர் குடியிருப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம், மகளிர் சிறைச்சாலை, முக்கியமாக நிலக்கோட்டை காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகமும் நிலக்கோட்டையில் தான் உள்ளது.இருந்தும் காவலர் குடியிருப்புகள் இல்லாத சூழ்நிலையில் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.ஆகையால் இங்கு பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களிலும் ஊர்களிலும் வசிக்கும் சூழ்நிலை உள்ளது.இந்த பாழடைந்த நிலையில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதிகளில் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் அடிக்கடி குற்றச்சாட்டு எழுவது உண்டு.அது சமயம் மட்டும் போலீசார் ரோந்து வருவது வழக்கம்; பிறகு மீண்டும் அதே பழைய சூழ்நிலை தான்.இங்கு உட்கார்ந்து மது குடிப்பதும் கஞ்சா குடிப்பதும் சில நேரங்களில் விபச்சாரங்கள் கூட நடைபெறுவதாகவும் இப்பகுதி பொது மக்கள் குற்றம் சாற்றுகின்றனர்.இப்பகுதியில் சென்றுவரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதையில் இருக்கும் சிலர் தொந்தரவு கொடுப்பதாகவும் இதனால் இப்பகுதி பெண்கள் அச்சத்தோடு தான் சென்று வருவதாகவும் கூறப்படுகிறது.எனவே இந்த பாழடைந்த கட்டிடங்களை இடித்து புதிய காவலர் குடியிருப்புகள் கட்டி தந்து இங்கு பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளுக்கு பணிச்சுமைகளை லேசாக்க வேண்டும்.அது வரையில் இந்த கட்டிடத்தை தரைமட்டமாக இடித்து சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் பாதுகாத்து பொது மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் எனவும் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Category:
செய்திகள்
மக்களின் வாழ்க்கையை தீர்மானிப்பது உள்ளாட்சித் தேர்தல்அமைச்சர் தியாகராஜன் பேசினார்.
by mohan
written by mohan
கழகத் தலைவர் முதல்வர் மு.க ஸ்டாலின் அளித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி கொள்கை மற்றும் செயலளவில் வென்றெடுப்போம்: நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.மதுரையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மதுரை மாநகர் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் முன்னிலை வகித்து உரையாற்றிய நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், செயல் அடிப்படையிலும் கொள்கை அடிப்படையிலும் இந்தத் தேர்தலில் முழு வெற்றி பெற வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு.செயல் அடிப்படையில் , நாம் பணியாற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து கழகத் தலைவரும் முதல்வருமான மு க ஸ்டாலின் தெளிவான விதிமுறைகளை ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்தில் அறிவுறுத்தி உள்ளார்.அந்த வழிமுறைகளை பின்பற்றி இந்தத் தேர்தலில் அனைவரும் வெற்றியை பெறுவதற்கு பணியாற்ற வேண்டும். வாய்ப்பு கிடைப்பவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து அதே நேரத்தில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் கழகத்தின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு செயலாற்ற வேண்டும். நிச்சயமாக தகவலின் அடிப்படையில் உரிய பொறுப்பை திராவிட முன்னேற்றக் கழகம் அவர்களுக்கு அளிக்கும். மதுரை மாநகராட்சியை நாம் கைப்பற்றியே ஆகவேண்டும். ஏனெனில் மதுரை மாநகருக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் உதாரணமாக தலைவர் கடந்த வாரம் அறிவித்த படி பல கோடியில் கோவில் உட்கட்டமைப்பு வசதி, சாலைகள், பாலங்கள் என பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற இருக்கிறது. மாமன்ற உறுப்பினர்களை வென்றெடுத்தால்தான் இந்த பணிகளை இன்னும் சிறப்பாக செய்ய முடியும். 1996-2001 காலகட்டத்தில் எனது தந்தையார் மூலமாக மதுரை அடைந்த வளர்ச்சியை விட அதிகப்படியான வளர்ச்சியை வரக்கூடிய காலங்களில் எட்ட வேண்டும் என்பது எனது நோக்கமாகும். மக்கள் வாழ்க்கையை தீர்மானிப்பது உள்ளாட்சித் தேர்தல். அதனை மையமாகக் கொண்டு தான் சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு வசதி என ஒவ்வொரு திட்டங்களும் மக்களை சென்று சேர உள்ளது. நமது கட்சியை சார்ந்த மாமன்ற உறுப்பினர்கள் வென்றால் மட்டுமே அதன் முழு பயன் கிடைக்கும் என்றார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மனைவியை நேசிக்கிறவங்க குக்கரை வேண்டாம்ன்னு சொல்ல மாட்டாங்க.., so குக்கருக்கு ஓட்டு போடுங்க.., என பெண் வேட்பாளர் ஒட்டியுள்ள போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது.
by mohan
written by mohan
தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது இந்த நிலையில் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதற்காக தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் அதன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் தீவிரம் காட்டி வருகின்றன, இந்தநிலையில் மதுரை மாநகராட்சியின் மாமன்ற பதவிக்காக 61வது வார்டின் வேட்பாளராக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் குக்கர் சின்னத்தில் போட்டியிட உள்ள பெண் வேட்பாளர் பாத்திமா பீவி வாக்காளர்களை கவருவதற்காக,”மனைவியை ரொம்ப நேசிக்கிறவங்க குக்கரை வேண்டாம்ன்னு சொல்ல மாட்டாங்க.., so குக்கருக்கு ஓட்டு போடுங்க..,” என்ற வாசகங்கள் இடம் பெற்ற போஸ்டர்களை வார்டு முழுவதும் ஒட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபடத் துவங்கியுள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உலகின் முதல் பண்பலையைக் (F.M) வானொலி ஒலிபரப்பு கண்டுபிடித்த எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங் நினைவு தினம் இன்று (ஜனவரி 31, 1954).
by mohan
written by mohan
எட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங் (Edwin Howard Armstrong) டிசம்பர் 18, 1890ல் அமெரிக்காவின் நியூயார்க், செல்சியா என்ற இடத்தில் பிறந்தார். இவரின் அப்பா பெயர் ஜான், அம்மாவின் பெயர் எமிலி ஆகும். இவரின் அப்பா ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ்ஸில் வேலை செய்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தீட்டா ஜி பற்றிய பாடத்தை எடுத்துப்படித்தார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகச் சேர்ந்தார். அவர் படித்த கொலம்பியா பல்கலைக்கழக்கத்திலேயே முதலில் பேராசிரியராகப் பணிபுரிந்தர். அதன் பின்பு முதல் உலகப்போரின் போது சமிக்ஞை அதிகாரியாக சேவை செய்தார். எப்.எம் வானொலியைக் கண்டுபிடித்த இவர் 1935ஆம் ஆண்டு நியூஜெர்ஸி மாநிலத்தில் ஒலிபரப்பு செய்தார். அதன் பின்னர் இவரின் தயாரிப்பைப் பல தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டன. ஆனால் அதற்கான உரிமைத்தொகையைத் தராமல் அலைக்கழித்தார்கள். இதனால் நீதிமன்றம் சென்றார். நிம்மதியை இழந்தார். நீதிமன்றத்தில் இவருக்குச் சாதகமாகவே தீர்ப்பு வந்தது. ஆனாலும் எப்.எம் என்பது பற்றி யாருக்கும் புரியவில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டது.
வானொலி பயன்பாட்டின் வரலாற்றில் இவர் ஒலி பண்பேற்றம் மூலம் மறக்க முடியாதவர் ஆவார். இவர் உலகின் முதல் எப்.எம் ஒலிபரப்பிற்காக காப்புரிமை பெற்றார். இவரின் மறுமீட்டாக்க மின்சுற்றுக்காக 1941ஆம் ஆண்டு காப்புரிமை கிடைத்தது. அதன் பின் இரண்டாவது முறை மேம்பட்ட மறுமீட்டாக்க மின்சுற்றுக்காக 1933ஆம் ஆண்டும் காப்புரிமை பெற்றார். 1918ஆம் ஆண்டில் சூப்பர்ஹெடரோடைன்னை (Superheterodyne receiver) மேம்படுத்தினார். இவர் ஒரு வானொலி ஒலிபரப்பில் நவீன அதிர்வெண் பண்பலைபண்பேற்றம் (FM) கொண்டுவந்து புரட்சியை ஏற்படுத்தினார். நிதி நெருக்கடி அதிகமானதாலும், மன உளைச்சல் காரணமாகவும் தன் வேலைகளில் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டார். அதோடு மனைவி மேரின் மேக்லின் அவரின் தங்கையைப் பார்க்க வேறு குடியிருப்பிற்குச் சென்று விட்டார். உலகின் முதல் பண்பலையைக் (F.M) வானொலி ஒலிபரப்பு கண்டுபிடித்த எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங் ஜனவரி 31,1954ல் தனது 63வது அகவையில் நியூயார்க்கில் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட்டார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மாஸ்பவர் நிறமாலை கண்டுபிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற ரூடால்ஃப் மாஸ்பவர் பிறந்த தினம் இன்று (ஜனவரி 31, 1929).
by mohan
written by mohan
ரூடால்ஃப் லுட்விக் மாஸ்பவர் (Rudolf Ludwig Mössbauer) ஜனவரி 31, 1929ல் முனிச்சில் பிறந்தார். மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இயற்பியலையும் பயின்றார். அவர் ஹெய்ன்ஸ் மேயர்-லீப்னிட்ஸின் பயன்பாட்டு இயற்பியல் ஆய்வகத்தில் தனது டிப்ளோம் ஆய்வறிக்கையைத் தயாரித்து 1955ல் பட்டம் பெற்றார். பின்னர் அவர் ஹைடெல்பெர்க்கில் உள்ள மருத்துவ ஆராய்ச்சிக்கான மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்திற்குச் சென்றார். இந்த நிறுவனம், ஒரு பல்கலைக்கழகத்தின் பகுதியாக இல்லாததால், முனைவர் பட்டம் வழங்க உரிமை இல்லை என்பதால், 1958ல் முனிச்சில் பிஎச்டி தேர்வில் தேர்ச்சி பெற்றபோது அவரது அதிகாரப்பூர்வ ஆய்வுக் ஆலோசகராக இருந்த மேயர்-லீப்னிட்ஸின் அனுசரணையில் மாஸ்பாவர் இருந்தார். தனது பிஎச்டி வேலையில், காமா கதிர்களின் மீளமுடியாத அணுசக்தி ஒளிரும் தன்மையை 191 இரிடியத்தில் கண்டுபிடித்தார்.
1960 ஆம் ஆண்டில் ராபர்ட் பவுண்ட் மற்றும் க்ளென் ரெப்கா ஆகியோர் பூமியின் ஈர்ப்பு விசையில் காமா கதிர்வீச்சின் சிவப்பு மாற்றத்தை நிரூபிக்க இந்த விளைவைப் பயன்படுத்தியபோது அவரது புகழ் பெருமளவில் வளர்ந்தது. இந்த பவுண்ட்-ரெப்கா சோதனை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொதுவான சார்பியல் கோட்பாட்டின் முதல் சோதனை துல்லிய சோதனைகளில் ஒன்றாகும். இருப்பினும், மாஸ்பாவர் விளைவின் நீண்டகால முக்கியத்துவம், மாஸ்பவர் நிறமாலையில் அதன் பயன்பாடு ஆகும். ராபர்ட் ஹோஃப்ஸ்டாடருடன் சேர்ந்து, மாஸ்பவுருக்கு 1961 இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ரிச்சர்ட் ஃபெய்ன்மனின் ஆலோசனையின் பேரில், 1960 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கால்டெக்கிற்கு மாஸ்பாவர் அழைக்கப்பட்டார். அங்கு அவர் ரிசர்ச் ஃபெலோவிலிருந்து சீனியர் ரிசர்ச் ஃபெலோவாக வேகமாக முன்னேறினார். அவர் 1962ன் ஆரம்பத்தில் இயற்பியலின் முழு பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1964 ஆம் ஆண்டில், அவரது அல்மா மேட்டர், மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (TUM), ஒரு முழு பேராசிரியராக திரும்பிச் செல்ல அவரை சமாதானப்படுத்தியது.
மாஸ்பவர் 1997ல் பேராசிரியர் எமரிட்டஸாக மாறும் வரை இந்த பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். அவர் திரும்புவதற்கான ஒரு நிபந்தனையாக, இயற்பியல் பீடம் ஒரு “துறை” முறையை அறிமுகப்படுத்தியது. இந்த அமைப்பு, மாஸ்பவுரின் அமெரிக்க அனுபவத்தால் வலுவாக பாதிக்கப்பட்டது. இது ஜெர்மன் பல்கலைக்கழகங்களின் பாரம்பரிய, படிநிலை “ஆசிரிய” முறைக்கு முற்றிலும் மாறுபட்டது. மேலும் இது TUM க்கு ஜெர்மன் இயற்பியலில் ஒரு சிறந்த இடத்தைக் கொடுத்தது. 1972 ஆம் ஆண்டில், புதிதாக கட்டப்பட்ட உயர்-ஃப்ளக்ஸ் ஆராய்ச்சி உலை செயல்பாட்டுக்கு வந்தபோது, இன்ஸ்டிட்யூட் லாவ்-லாங்கேவின் இயக்குநராக ஹெய்ன்ஸ் மேயர்-லீப்னிட்ஸ் வெற்றிபெற ருடால்ப் மாஸ்பாவர் கிரெனோபலுக்குச் சென்றார். 5 வருட கால அவகாசத்திற்குப் பிறகு, மஸ்ஸ்பவர் மியூனிக் திரும்பினார். அங்கு தனது நிறுவன சீர்திருத்தங்களை மிக அதிகமான சட்டத்தால் மாற்றியமைத்தார். தனது தொழில் வாழ்க்கையின் இறுதி வரை, இந்த “திணைக்களத்தின் அழிவு” குறித்து அவர் அடிக்கடி கசப்பை வெளிப்படுத்தினார். இதற்கிடையில், அவரது ஆராய்ச்சி ஆர்வங்கள் நியூட்ரினோ இயற்பியலுக்கு மாற்றப்பட்டன.
மாஸ்பவர் ஒரு சிறந்த ஆசிரியராக கருதப்பட்டார். நியூட்ரினோ இயற்பியல், நியூட்ரினோ அலைவு, மின்காந்த மற்றும் பலவீனமான தொடர்புகளின் ஒருங்கிணைப்பு மற்றும் ஃபோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் வினைத்திறன் உள்ளிட்ட பல படிப்புகளில் அவர் மிகவும் சிறப்பு வாய்ந்த சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். 1984 ஆம் ஆண்டில், இயற்பியல் பாடத்தை எடுக்கும் 350 பேருக்கு இளங்கலை விரிவுரைகளை வழங்கினார். அவர் தனது மாணவர்களிடம் கூறினார்: “அதை விளக்குங்கள்! மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் அதை விளக்க முடிகிறது! உங்களுக்கு தேர்வுகள் இருக்கும், அங்கே நீங்கள் அதை விளக்க வேண்டும். இறுதியில், நீங்கள் அவற்றைக் கடந்து செல்கிறீர்கள், உங்கள் டிப்ளோமாவைப் பெறுவீர்கள். நீங்கள் நினைக்கிறீர்கள், அவ்வளவுதான்! – இல்லை, முழு வாழ்க்கையும் ஒரு பரீட்சை, நீங்கள் விண்ணப்பங்களை எழுத வேண்டும். நீங்கள் சகாக்களுடன் விவாதிக்க வேண்டும். எனவே அதை விளக்க கற்றுக்கொள்ளுங்கள்! சக மாணவர் என்ற மற்றொரு மாணவருக்கு விளக்கி இதை நீங்கள் பயிற்றுவிக்கலாம். அவை கிடைக்கவில்லை என்றால், அதை உங்கள் தாய்க்கு – அல்லது உங்கள் பூனைக்கு விளக்குங்கள்!.”
1957 ஆம் ஆண்டில் மீளமுடியாத அணு அதிர்வு ஃப்ளோரசன்ஸைக் கண்டுபிடித்ததற்காக மிகவும் பிரபலமானவர். இதற்காக அவருக்கு 1961 இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த விளைவு, மாஸ்பவர் விளைவு என்று அழைக்கப்படுகிறது. இது மாஸ்பாவர் நிறமாலைக்கு அடிப்படையாகும். மாஸ்பவர் நிறமாலை கண்டுபிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற ரூடால்ஃப் மாஸ்பவர் செப்டம்பர் 14, 2011ல் தனது 82வது வயதில் ஜெர்மனியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த செ.சொர்ப்பணந்தல் கிராமத்தில் நேரு யுவகேந்திரா, டாக்டர் .பி.ஆர்.அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து செங்கம் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.நிகழ்விற்கு நேரு யுவகேந்திரா மாவட்ட அலுவலர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.சுவாமி விவேகானந்தர் மிஷின் தலைவர் ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் காஞ்சனா பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நேரு யுவகேந்திரா தேசிய இளையோர் தொண்டர் சூர்யா அனைவரையும் வரவேற்று பேசினார்.ஒன்றிய கவுன்சிலர் விநாயகம் திட்டத்தின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார். செங்கம் வட்டார அளவிலான நடைபெற்ற கபாடி , வாலிபால் விளையாட்டு போட்டியில் செங்கம் ஒன்றியத்தைச் சார்ந்த பரமனந்தல், அம்மாபாளையம், கொட்டகுளம் , இறையூர் , சொர்ப்பண ந்தல், மேல்பென்னாத்தூர், 40க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருந்து அணிகள் கலந்து கலந்துகொண்டு இறையூர் அணி முதலிடத்திலும்,சொர்ப்பண ந்தல் அணி இரண்டாம் இடத்திலும் அம்மாபாளையம் மூன்றாம் இடத்திலும் வெற்றி பெற்றது வெற்றி பெற்ற அணிகளுக்கு ஒன்றிய கவுன்சிலர் விநாயகம் ஊராட்சி மன்ற தலைவர் காஞ்சனா பாபு நேரு யுவகேந்திரா மாவட்ட அலுவலர் ராமச்சந்திரன் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.கிராம நிர்வாக அலுவலர் திருமால் ஊராட்சி செயலாளர் ஏழுமலை கிராம உதவியாளர் கோவிந்தன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் சி எம் பிரகாஷ் கூட்டுறவு சங்க தலைவர் சமூக ஆர்வலர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் முடிவில் தேசிய இளையோர் தொண்டர் புகழேந்தி நன்றி கூறினார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி (35).பாலாஜி ஆம்பூரில் உள்ள தாலுகா அலுவலகத்தில் நிலசர்வேயராக பணியாற்றி வருகிறார்.இவர் ஒருவரின் நிலத்தை அளந்து பட்டா, மாற்றி தர ரூ8 ஆயிரம் லஞ்சம் கேட்டு வாங்கிய போது வேலூர் விஜிலென்ஸ் போலீசார் கைது செய்தனர்.பின்பு சேண்பாக்கம் கழனிக்காட்டு தெருவில் உள்ள பாலாஜி வீட்டை சோதனை செய்தபோது கணக்கில் வராத 22 லட்சத்து 84 ஆயிரத்து 650 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் வீட்டிலிருந்து வங்கி தொடர்பான ஆவணங்கள், பத்திரங்கள், நிதிசார்ந்த பத்திரங்கள், பங்கு வர்த்தகம் தொடர்பான பத்திரங்கள் உள்ளிட்ட பலகைப்பற்றப்பட்டன.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை லாரியில் கடத்தி வந்து கொட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தென்காசி மாவட்டத்தில் பொது மக்களுக்கு நோய் தொற்று பரவும் வகையில் மருத்துவ கழிவுகளை கடத்தி வந்து கொட்டும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என தென்காசி மாவட்ட எஸ்.பி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கனாப்பேரி பகுதியில், கேரளாவிலிருந்து பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகளை டிப்பர் லாரிகளில் கடத்தி வந்து கொட்டிய வீரசிகாமணி மேட்டு தெருவைச் சேர்ந்த பாலையா என்பவரின் மகன் வேல் முருகன் என்பவரை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில், புளியங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் சூரிய மூர்த்தி அவர்களின் ஆலோசனைப்படி புளியங்குடி காவல் ஆய்வாளர் ராஜாராம் சொக்கம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் தலைமை காவலர்கள் விஜயபாண்டி, மதியழகன்,சிவராம கிருஷ்ணன் உள்ளிட்ட தனிப்படையினர் மேற்படி வேல்முருகனை கைது செய்து அவரிடமிருந்து ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள டிப்பர் லாரி ஓட்டுனர்கள் மற்றும் டிப்பர் லாரிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் மேற்படி வேல்முருகன் மீது சேர்ந்தமரம் சொக்கம்பட்டி காவல் நிலையங்களில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொது மக்களுக்கு நோய் தொற்று பரவும் வகையில் மருத்துவ கழிவுகளை கடத்தி வந்து தென்காசி மாவட்டத்தில் கொட்டும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசியில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் புதிய புறக்காவல் நிலையம்; மாவட்ட எஸ்.பி திறந்து வைத்தார்..
by mohan
written by mohan
தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லையான ஆசாத் நகரில் புதிதாக புறக் காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS (30.1.2022) ஞாயிற்று கிழமை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்த புறக்காவல் நிலையமானது 24 மணி நேரமும் இயங்கும் விதமாகவும், திருநெல்வேலி, ஆலங்குளம், பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம் மற்றும் கடையம் ஆகிய பகுதிகளில் இருந்து தென்காசி நகருக்குள் இந்த புறக் காவல் நிலையத்தை கடந்த பின்னரே நுழையும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன், தென்காசி காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலமுருகன் மேலும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க உதவிய காவலரின் மனிதநேயம்
by mohan
written by mohan
மதுரையில் பரபரப்பான பெரியார் பேரூந்து நிலையம் அருகே சாலையை கடக்க பார்வையற்றவருக்கு உதவிய தலைமை காவலரின் மனித நேயம் பலராலும் பாராட்டப்பட்டுவருகிறது.காவல் துறையினர் குற்றம் செய்பவர்களை தண்டிக்கவும் , குற்றங்களை தடுக்கவும் , அதிகாரம் படைத்த துறையாகும்.காவலர்கள் சிலர் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த காவல்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது.மதுரை திடீர்நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவர் உதயராஜன் (வயது 38).நேற்று பணியின்போது பார்வையற்ற ஒருவர் வெகு நேரம் சாலையை கடக்க சிரமப்பட்டதை பார்த்த காவலர் உதயராஜன் மனித நேயத்துடன் சாலையை கடக்க உதவினார்.” காவல்துறை நண்பனாக” இருந்தால் சமுகத்திற்கு பெருமை சேரும்.இவரை போல பல காவலர்களின் செயலால் காவல்துறை மீது கண்ணியத்தையும். மரியாதையை உயர்த்துகிறது.இன்றும் காவல்துறை உங்கள் நண்பன் என்ற சொல்லுக்கு இவரை போன்ற காவலர்களால் மரியாதை நிலைநிறுத்தப்படுகிறது எனலாம்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேரும் விவசாயின் மகள்.கல்விச் செலவுக்கு உதவ வேண்டும் என அரசுக்கு கோரிக்கை
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அடுத்த பானா மூப்பன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சன்னாசி இவரது மகள் தங்க பேச்சி இவர் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் கடந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார் தொடர்ந்து மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதினார் அதில் வெற்றி பெற்று கலந்தாய்வில் தனியார் மருத்துவக்கல்லூரி இடம் கிடைத்ததால் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் கல்வியை தொடர முடியவில்லை.இந்நிலையில் இந்த ஆண்டு தனியார் பயிற்சி வகுப்பிற்கு சென்று நீட் எக்ஸாம் எழுதி 256 மதிப்பெண் பெற்று அரசு ஒதுக்கீட்டில் கன்னியாகுமரி மாவட்டம் மூகாம்பிகை மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது அரசு கல்விக் கட்டணத்தை மட்டும் செலுத்தி விடுவதாக கூறியுள்ளது தங்கும் விடுதி உட்பட இதர செலவினங்களுக்காக எந்த ஒரு பொருளாதார சூழ்நிலையும் இல்லாத நிலையில் உள்ளதால் தமிழக அரசு அல்லது சமூக ஆர்வலர்கள் உதவ வேண்டுமென அரசுக்கு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து மாணவி தங்க பேச்சு கூறியதாவது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா பா னா மூப்பன் பட்டி கிராமம் எங்களது எனது தந்தை சன்னாசி எங்களை மிகவும் சிரமப்பட்டு பள்ளிக்கல்வி வரை படிக்க வைத்துள்ளார் நாங்கள் நான்கு பேர் பெண் குழந்தைகள் சிறுவயது முதலே எனக்கு டாக்டராக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது அதற்காக கஷ்டப்பட்டு படித்தேன் அரசு வழிகாட்டுதல்படி நீட் தேர்வில் பாஸ் செய்தேன் தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்ததால் கடந்த ஆண்டு படிப்பைத் தொடர முடியவில்லை அதற்குப் பின்பாக தமிழக அரசு கட்டணத்தைச் செலுத்தி வருவதாக தகவல் கிடைத்தது பின்பு இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டேன் அதிலும் தனியார் கல்லூரி கிடைத்தது மிகவும் பின்தங்கிய கிராமத்தில் உள்ள எனக்கு இதர செலவினங்களுக்கான கட்டணத்தைச் செலுத்த முடியாத சூழ்நிலை உள்ளது அதனால் கல்வியை தொடர முடியவில்லை. தொடர்ந்து இந்த ஆண்டு தனியார் பயிற்சி வகுப்பிற்கு சென்று நீட் எக்ஸாம் பாஸ் செய்துள்ளேன் மருத்துவ கலந்தாய்வில் எனக்கு கன்னியாகுமரி மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது அரசு கல்விக் கட்டணத்தை மட்டும் செலுத்துகிறது ஆனால் இதர செலவினங்களுக்கு என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை தந்தையும் தாயும் கூலி வேலை செய்து நான்கு பெண் பிள்ளைகளை பாதுகாத்து வருகின்றனர் எங்களின் வருமானம் குடும்பத்தை நடத்தவே பற்றாக்குறையாக உள்ளது இந்தச் சூழ்நிலையில் என்னால் இதர செலவினங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை பள்ளிப்படிப்பு செல்லும்போதே காலையில் வயலில் வேலை செய்து பின்புதான் பள்ளி செல்வேன் விடுமுறை நாட்களில் தினக்கூலி வேலைக்கு அருகாமையில் உள்ள வயல்வெளிகளில் மல்லிகைப்பூ பறிக்கும் வேலை செய்வேன் அதில்தான் நோட்டுப் புத்தகங்களை வாங்கி படித்து வந்தேன் தற்போது மருத்துவ கல்லூரிக்கு தேவைப்படும் புத்தகங்கள் அதிக விலையில் இருக்க வாய்ப்புண்டு இதனால் செய்வதறியாது திகைத்து வருகிறோம் இதுகுறித்து அரசு பரிசீலித்து இதர செலவுகளையும் ஏற்க வேண்டும் சமூக ஆர்வலர்களும் ஏதாவது உங்களுக்கு உதவ வேண்டும் என்றார்.தொடர்ந்து 7.5 இட ஒதுக்கீட்டால் தாம் தேர்வில் வெற்றி பெற்றதாகவும் என்னைப் போல கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் இட ஒதுக்கீட்டின் அளவை கூடுதலாக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.தங்க பேசியின் தந்தை சன்னாசி கூறும்போதுமதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி தாலுகா மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது கடந்த காலங்களில் பெண் சிசுக்கொலை அதிகம் நடைபெற்ற இடமாகும் அப்படி இருந்தும் எனது நான்கு பெண் குழந்தைகளையும் ஊராரின் பேச்சுக்கு இடமளிக்காமல் அவர்களுக்கு தேவையான கல்வியை அளித்து வந்தேன் எனது சக்திக்கு உட்பட்டு அனைத்து உதவிகளையும் செய்து வந்தேன் அதனால்தான் எனது மகள் தங்க பேச் சி நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் இது ஒருபக்கம் மகிழ்ச்சியை அளித்தாலும் இன்னொரு பக்கம் கவலையாகவும் உள்ளது மேற்படிப்பு கூடுதல் செலவாகும் என்பது அனைவரும் அறிந்ததே தினக்கூலி வேலை பார்த்துவரும் நான் அவ்வளவு கட்டணம் செலுத்த முடியாது எனவே அரசும் சமூக ஆர்வலர்களும் தங்களுக்கு உதவ வேண்டும் சமூகத்தில் ஆண்-பெண் பேதமற்ற மாற்றத்தை ஏற்படுத்த என்னால் முடிந்த உதவி செய்துள்ளேன் எனது மகள் மருத்துவராகி சேவை செய்ய காத்திருக்கிறார் ஆனால் அதற்கு பொருளாதார சூழ்நிலை இடம் கொடுக்கவில்லை இதை அரசியல் பிரமுகர்கள் மக்கள் பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் அனைவரும் உணர்ந்து எங்களுக்கு உதவ வேண்டும் என்றார். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்…9025479429
செய்தியாளர் குழு மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அவனியாபுரம்- சோபா , பஞ்சு மெத்தை உற்பத்தி செய்யும் கம்பெனியில் தீ விபத்து.
by mohan
written by mohan
மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் உமர் பரூக் இவர் அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகர் பகுதியில் சோபா மற்றும் பஞ்சு மெத்தை உற்பத்தி செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். அந்த குடோனில் இருந்து அதிகமாகப் புகை வெளியே வந்ததை அடுத்து உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே இருந்த பஞ்சால் செய்யப்பட்ட பொருள்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.இதனை அடுத்து அனுப்பானடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அடிப்படையில் அனுப்பானடி நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் மதுரை டவுன் தீயணைப்பு வாகனங்கள் மூலம் பத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். குடோனில் இருந்த சோபா மெத்தை என அனைத்து பொருட்களும் பஞ்சு மூலம் செய்யப்பட்டதால் தீ விபத்தில் மொத்தம் கருகி நாசமானது. இதனால் 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு காரணம் மின்கசிவால் அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று அவனியாபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊருக்குள் இருந்த பஞ்சு குடோனில் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் அவனியாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை – மு க அழகிரி பிறந்த தினவிழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
by mohan
written by mohan
முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினார்கள் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிரி தலைமையில் முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முத்துப்பாண்டி நிர்வாகி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் முக அழகிரி பெயரில் சிறப்பு அர்ச்சனை மற்றும் பூஜை செய்தனர் பின்னர் வெடி வெடித்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர் பேருந்தில் பயணம் செய்த மக்களுக்கும் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள் இவ்விழாவை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள் இதில் தமிழ்ச்சோலை பாலா ஊத்துக்குளி சின்னமணி கருப்பட்டி வருண் அம்மசியபுரம் கார்த்திக் தென்கரைபுதூர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர் இதேபோல் விக்கிரமங்கலம் அருகே கல்புலிச்சான்பட்டியில் பால்பாண்டி தலைமையில் முக அழகிரி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது இதில் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக காந்தி சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை
by mohan
written by mohan
தென்னிந்திய நடிகர்கள் சங்கம் மற்றும் ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி எஸ்.டி.சுப்ரமணியன் தலைமையில் குறும்பட இயக்குனரும், நடிகரும், சமூக சேவகருமான டாக்டர் ஜெ.விக்டர் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்வில் அப்பா பாலாஜி, பிரேம்ஜீ, திருமங்கலம் சரவணன், எ.எஸ்.சுரேஷ், அறிமுக நடிகர் அனுப்பானடி குமரேசன், திருமங்கலம் கவிதா, எஸ்.டி.எஸ்.மீனா, மாளவிகா, சுகந்தி, தேவகி, சித்ரா, ப்ரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டனர். செய்தி தொடர்பாளர் செந்தில்நாதன் ஏற்பாடு செய்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பள்ளிகொண்டா டோல்கேட்டில் குட்கா, புகையிலை பொருள் பறிமுதல். 3 பேர் கைது, ஒருவர் ஓட்டம்
by mohan
written by mohan
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா டோல்கேட்டில் நள்ளிரவு பள்ளிகொண்டா டோல்கேட்டில் வாகன தணிக்கை செய்துகொண்டு இருந்தனர்.அதில் ஒரு கார் நிற்காமல் சென்றது. உடனே சுதாகரித்து கொண்ட காவல்துறை விரட்டினர். அப்போது கார் நின்றது. அதிலிருந்த ஒரு நபர் தப்பி ஓடினான். மற்ற 3 பேரை காவலர்கள் பிடித்தனர்.காரில் சோதனை செய்த பேரது 8 மூட்டைகளில் குட்கா பொருளும், 10 மூட்டைகளில் புகையிலை பொருள்களும் இருந்தன.விசாரணையில் திருவள்ளூவர் மாவட்டம் மணவாளன் நகரை சேர்ந்த ரமேஷ் (27), மனோரி (26) மற்றும் பெங்களூரு சுல்தான்பூர் பகுதியை சேர்ந்த சுனில் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய ராஜய்தானை சேர்ந்த சத்தியபால் என்பவனை காவல்துறை தேடிவருகிறது..கைப்பற்றப்பட்ட குட்கா, மற்றும் புகையிலை மதிப்பு ரூ1.20 லட்சமாகும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் அமமுகவினர் மாவட்ட செயலாளர் செயலாளர் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்
by mohan
written by mohan
வேலூர் மாநகரம்17 -வது வார்டு அமமுக மாவட்ட துணைசெயலாளர் மணிகண்டன் மற்றும் சிலர் அமமுகவிலிருந்து விலகிவேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமானார்கள்.உடன் பொருளாளர் எம்.மூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் உத்தரவுப்படி சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வாட்டுகள் வெளிப்புறம், அவசர சிகிச்சை பிரிவு., வங்கி, தபால்நிலையம் உள்ளிட்ட பகுதியில் தூய்மைபணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கோவிலை சுற்றி கழிவுநீர் மன அமைதியை தேடி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு நோய்த்தொற்று உடன் வீடு திரும்பும் அவலம் கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்
by mohan
written by mohan
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 79 வார்டு கூடலழகர் பெருமாள் கோவில் வடக்கு ரத வீதி அனுமார் கோவில் அருகே பல நாட்களாகவே சாலையில் கழிவுநீர் ஆறுபோல் ஓடுகிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .மாநகராட்சி அதிகாரிகளிடமும் மற்றும் அப்பகுதி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி துணை ஆணையரிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என பக்தர்களும் அப்பகுதி மக்களும் குற்றம்சாட்டுகின்றனர் .கூடல் அழகர் பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மன அமைதியைத் தேடி வரும் பொழுது வீட்டுக்குச் செல்லும் பொழுது நோய்த்தொற்றை பெறுவதாக செல்வதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர். மேலும் கூடல் அழகர் பெருமாள் கோவில் அருகே அமைந்துள்ள அனுமார் கோவில் அருகே பாதாளச் சாக்கடை உடைந்து ஆறு போல சாலையில் ஓடுகிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர் எத்தனையோ முறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெரும் குற்றம்சாட்டுகின்றனர். இனியாவது மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா எதிர்பார்ப்புடன் அப்பகுதி மக்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய 17 மாணவ மாணவியர் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எம்பிபிஎஸ் படிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.மருத்துவ படிப்புக்கான நீட் தகுதித்தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியானது. மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த 88 மாணவ மாணவியர் இதில் தேர்ச்சி பெற்றனர். இதில் மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி பி.ஆர்.பிரியங்கா 720 மதிப்பெண்களுக்கு 414 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். மதுரை மாவட்டம் எழுமலை அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஏ.ஹரிஷ்குமார் 373 மதிப்பெண் கள் பெற்று இரண்டாமிடமும், மதுரை மாநகராட்சி ஈவெரா நாகம்மையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி எஸ்.ஆஷிகா ராணி 353 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுனர். மேலும் மாவட்டத்தில் தேர்வெழுதிய அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 288 பேரில், 88 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர்.இந்நிலையில் தற்போது மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பயின்று நீட் தகுதித் தேர்வில் வென்ற 17 மாணவ மாணவியர் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளது. 14 பேர் எம்பிபிஎஸ் படிப்புக்கும் 3 பேர் பல் மருத்துவ படிப்புக்கும் தேர்வாகியுள்ளனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதல் வெற்றிகரமான விமானத்தை உருவாக்கிய அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ரைட் சகோதரர், ஓர்வில் ரைட் நினைவு தினம் இன்று (ஜனவரி 30, 1948).
by mohan
written by mohan
ஓர்வில் ரைட் (Orville Wright) ஆகஸ்ட் 19, 1871ல் டேட்டன், ஒகையோ. அமெரிக்காவில் மில்டன் ரைட், சூசன் ரைட் இருவருக்கும் பிறந்தார். இவரது சகோதரர் வில்பர் ரைட். இருவரும் விமானத்தைக் கண்டறிந்த முன்னோடிகளும் ஆவர். சாதாரணப் பொதுப் பள்ளிக்கூடத்தில் தான் இருவரும் படித்தவர்கள். தொடக்கப் பள்ளியில் படிக்கும்போது ஓர்வில் குறும்புத்தனம் செய்தார். அதற்காகவே ஒரு முறை அவர் பள்ளியைவிட்டு வெளியேற்றப்பட்டார். இருவரும் ஏனோ கல்லூரிப் படிப்புக்கு அனுப்பப்படவில்லை. சிறு வயதில் அவர்கள் அறிவாற்றல் துறைகளில் தொடரவும், ஒன்றில் ஆர்வம் எழுந்தால், அதை ஆராயும்படிப் பெற்றோர் ஊக்க மூட்டினர். சுயமாய்த் தனித்துச் சிந்தனை புரிவது, ஒரு கொள்கையைப் பின்பற்றிச் செயல்படுவது, போன்ற நற்குணங்கள் இவர்கள் தந்தையிடம் கற்றவை. இவ்விருவரும் திருமணமே செய்துகொள்ளவில்லை. தந்தையிடம் கற்றதை விடத் தாயிடம், இருவரும் அறிந்து கொண்டது அதிகம். தாய் கல்லூரிக்குச் சென்று அல்ஜீப்ரா, ஜியாமிதி கற்றுக் கொண்டவள். பையன்களுக்குப் ‘பனிச் சறுக்கி எப்படி டிசைன் செய்வது என்று சொல்லிக் கொடுத்து, படத்தைத் தாளில் வரைய வைத்து, இருவரையும் பலகையில் செய்யக் கற்றுக் கொடுத்தவள் தாய்.
முதலில் தாளில் துள்ளியமாக வரைந்தால், பின்னல் அதைச் செய்யும் போது, முறையாக அமைக்கலாம் என்று சிறு வயதிலேயே சிறந்த செய்முறை வழியைப் புகட்டியவள் தாய். அதைப் பின்பற்றி இருவர் அமர்ந்து செல்லும் பனிச்சறுக்கி ஒன்றைப் பலகையில் செய்து, போட்டியில் கலந்து கொண்டு முதலாவதாகப் பனியில் சறுக்கி வெற்றியும் அடைந்தனர். ஒரு சமயம் தாயுடனும், தம்பியுடனும் டேடன் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற போது, பறவை ஒன்று வானிலிருந்து நீரில் பாய்ந்து, ஒரு மீனோடு மீண்டதைக் கண்டு, பதினொரு வயதுச் சிறுவன் வில்பர் பேராச்சிரியம் அடைந்தான். பறவை எப்படிப் பறக்க முடிகிறது, அம்மா? என்று வில்பர் கூர்மையாகக் கேட்டான். இறக்கைகளால் பறக்கிறது என்று கூறினாள் தாய். வில்பருக்குத் தாயின் பதில் திருப்தி அளிக்கவில்லை. எப்படி அம்மா? பறவை நீரில் பாயும் போதும், மீனோடு மேல் எழும் போதும், அதன் இறக்கைகள் அசையவே இல்லை அம்மா என்று தாயைக் குறுக்குக் கேள்வியில் மடக்கினான் வில்பர். தாயால் அவனுக்கு விளக்கம் தர முடியவில்லை. நமக்கும் இறக்கைகள் இருந்தால் நாமும் பறக்கலாம், இல்லையா அம்மா? என்றான் வில்பர்.
கடவுள் நமக்கு இறக்கைகள் அளிக்கவில்லை என்றாள் தாய். இறக்கைகளை நாமே தாயாரித்து மாட்டிக்கொள்ளலாம், அம்மா என்று தர்க்கத்தைப் பூர்த்தி செய்தான், வில்பர். 1878ல் அவருடைய தந்தை சர்ச் ஆஃப் தி யுனைடெட் பிரெத்ரென் இன் கிறிஸ்ட்டில் ஆயராக இருந்தார். பணிநிமித்தமாக அவர் அடிக்கடி பயணம் செய்தார். அவ்வாறு ஒருமுறை அவர்தம் பயணத்தின்போது எலிகாப்டர் பொம்மை ஒன்றை அவ்விரு குழந்தைகளுக்கும் வாங்கிவந்தார். வான்வழி தொலையளவு முன்னோடியான அல்ஃபோன்ஸ் பேனாட் என்ற பிரஞ்சு நாட்டவரின் கண்டுபிடிப்பை அடிப்படையாகக்கொண்டு காகிதம், மூங்கில், கார்க்கு, இரப்பர் வளையம் ஆகியவற்றால் ஒரு அடி நீளத்திற்கு அப்பொம்மை செய்யப்பட்டிருந்தது. அது உடையும் வரை வில்பரும் ஓர்வில்லும் விளையாடினர். பிறகு அவர்களாகவே அதனை மீளமைத்தனர். அந்தப் பொம்மைதான் தங்களுக்கு பறப்பதற்கான ஆர்வத்துக்கான ஒரு தொடக்கப் பொறியாக இருந்தது என்று பிற்பாடு அவர்கள் தங்கள் அனுபவம் பற்றிச் சுட்டிக்காட்டினர்.
தம் யூகிப்பில், திறமையில் ஆழ்ந்த நம்பிக்கையும், தீர்மானமான முடிவில் தளராத உறுதியும் கொண்டவர்கள். ஏமாற்றம், ஏலாமை, இல்லாமை எதுவும் மனதைக் கலைக்காத விடாமுயற்சி. இரு பையன்களும் சிறு வயதிலிருந்தே பொறிநுணுக்க அறிவும், ஒப்பில்லாத இயந்திரச் செய்திறமையும் கொண்டிருந்தார்கள். தாமே படித்து அறிந்த ஞானத்துடன் முதலில் அச்சு இயந்திரங்களைப் (Printing Machines) புதிதாய் உருவாக்கி, உற்பத்தி செய்தார்கள். அடுத்து சைக்கிள் வண்டிகளை உருவாக்கி, உற்பத்தியும் செய்து விற்றார்கள். இந்த வர்த்தகங்களில் சேர்த்த பணத்தொகையே பின்னால் அவர்கள் விமானத் துறை ஆராய்ச்சிகளுக்கு மிகவும் உதவின. 1896ல் ஆக்டேவ் சனூட்ஸ் (Octave Chanutes) எழுதிய பறக்கும் இயந்திரங்களின் வளர்ச்சி (Progress in Flying Machines) வெளியீடுகளை, ஆழ்ந்து படித்து அறிந்ததுதான், அவர்களது அடிப்படையான ஆரம்பப் பாடம். அறுபது வயதான பிரென்ச் அமெரிக்கன், சனூட்ஸ் தன் சகாகக்களுடன் சிகாகோவுக்கு அருகில் மிச்சிகன் ஏரியின் மணற்பாங்கான தளத்தில், ஐந்து விதப் பொறியிலா ஊர்திகளை (Gliders) ஆயிரம் முறைக்கு மேல் பறக்க விட்டு முயன்றிருப்பவர். 1900ல் ரைட் சகோதரர்கள் டேடனில் தம் ஊர்திச் சோதனைகளை ஆரம்பித்த போது, சனூட்ஸ் அவரது ஆழ்ந்த தோழனாகி, அடிக்கடி கடிதம் எழுதித் தொடர்பு கொண்டிருந்தார்.
ரைட் சகோதரர்கள் விமானத் துறையில் அடி வைத்த காலம், அவர்கள் முன்னேறத் தகுந்த தருணமாக இருந்தது. 1896ல் தான் ஹென்ரி ஃபோர்டு தனது முதல் மோட்டார் காரைச் செய்தார். அப்போதுதான் டீசல் எஞ்சின், பெட்ரோல் எஞ்சின் புதிதாகத் தோன்றி வளர்ச்சி பெற்ற காலம். விமான நகர்ச்சி (Aerodynamics), கட்டமைப்புப் பொறித்துறை (Structural Engineering) ஆகிய பொறியியல் ஆக்க நுட்பங்கள் விருத்தியான காலம். இவற்றை எல்லாம் ஒன்றாய் இணைத்து வானத்தில் விமானத்தைப் பறக்க விடுவது, ரைட் சகோதரருக்கு ஓர் அரிய பெரிய வாய்ப்பாக அமைந்தது. ஜெர்மன் நிபுணர், ஆட்டோ லிலியென்தால் ‘பொறியிலா ஊர்தியில் வெற்றிகரமாய்ச் செய்த பல சோதனைகளை ஆழ்ந்து படித்த, வில்பர்தான் முதலில் பறக்கும் இயந்திரத்தில் மோக முற்றார். 1896ல் லிலியென்தால் தனது சோதனையின் போது, ஊர்தி கீழே விழுந்து மரணம் அடைந்தார். 1899 ஆண்டு ஒரு சமயம், வில்பர் கழுகு பறப்பதை ஆழ்ந்து ஆராய்ந்த பின், விமானம் விழாமல் சீராய்ப் பறந்து செல்ல, மூன்று அச்சு முறையில் (Three Axes) இயங்கும் பொறியமைப்பு இருக்க வேண்டும், எனக் கண்டு பிடித்தார். அதாவது, முன் நகர்ச்சி (Thrust), மேல் எழுச்சி (Lift), திசை திருப்பி (Turning) ஆகிய ‘முப்புறக் கட்டுப்பாடு‘ என்ற புதிய பறப்பியல் நியதியைச் சிந்தித்து உருவாக்கினார்.
பறவையைப் போன்று, பறக்கும் இயந்திரம் பக்க வாட்டில் மிதக்க முடிய வேண்டும். மேலே உந்தி ஏறிச் செல்லவோ, கீழே இறங்கி நிற்கவோ இயல வேண்டும். இடப் புறமோ, வலப் புறமோ திரும்ப முடிதல் வேண்டும். தேவைப்பட்டால், இவற்றில் இரண்டு அல்லது மூன்று வித இயக்கங்களையும் ஒரே சமயத்தில் நிகழ்த்த வசதிகள் இருக்க வேண்டும். முன்னகர்ச்சிக்கு வலுவான பளுவற்ற எஞ்சின் தேவைப்பட்டது. எழுச்சி அளிப்பதற்கு ‘தூக்கிகள் (Elevators) வேண்டியிருந்தன. பக்க வாட்டில் திருப்ப திருப்பி (Rudder) வால்புறம் மாட்டப்பட்டது. விமான இயக்கத்தில் ரைட் சகோதரருக்குப் ‘பறப்பியல் கட்டுப்பாடு ‘ (Flight Control) மிகப் பிரதானம் என்று தோன்றியது. கழுகு, பருந்துகள் உருளும் போது இறக்கைகள் சுழல்வதைக் கண்டார்கள். 1899ல் முதன் முதல் அவர்கள் சோதனை செய்த ‘இரு தளப் பட்டத்தில் (Bi-Plane Kite) சுழலும் இறக்கைகளை பிணைத்திருந்தார்கள். அவ்வாறு இறக்கைகளில் அமைத்ததால் விமானம் திரும்பிடும் போது, ஒருபுறம் எழுச்சி உயர்ந்தும், மறுபுறம் எழுச்சி இணையாகத் தாழ்ந்தும், காற்றை எதிர்த்துச் சீராகத் திரும்ப முடிந்தது.
எஞ்சின் பொருத்திய முதல் விமானத்தை இயக்கியதோடு, முப்புற அச்சுக் கட்டுப்பாடுப் பொறியமைப்பைக் கண்டுப்பிடித்து வெற்றிகரமாய்ப் பயன்படுத்திப் பறப்பு இயந்திரவியலைச் (Aerodynamics) செப்பனிட்டுச் சிறப்பித்த பெருமை ரைட் சகோதரர்கள் இருவர்களுக்கு மட்டுமே சாரும். டிசம்பர் 17, 1903ல் 12 H.P. பெட்ரோல் எஞ்சின் கொண்ட ‘கிட்டி ஹாக் (Kitty Hawk) என்னும் Flyer பூமிக்கு மேல் முதலில் 12 வினாடிகள், கடைசியில் 30 mph வேகத்தில், 59 வினாடிகள் 852 அடி தூரம் பறந்தது. விமானத்தின் எடை 750 பவுண்டு. இறக்கையின் நீளம் 40 அடி 4 அங்குலம். சரித்திரப் புகழ் பெற்ற இந்தப் பயணத்தைச் செய்த முதல் வீரர், ஆர்வில் ரைட். பிறகு இரண்டு ஆண்டுகள் செம்மைப் படுத்தப்பட்டு, சிறப்பிக்கப்பட்டு, 1905ல் உலகின் முதல் பறக்கும் விமானம், Flyer III உருவானது. அது வானில் 38 நிமிடங்கள் நேரம் பறந்து, 24 மைல் கடந்தது. சிரமமின்றி எட்டாம் எண்போல் வட்ட மிட்டது, பக்க வாட்டில் திரும்பியது. 1908ல் ஐந்து மாதங்களில் வில்பர் மட்டும், 100 தடவைக்கும் மேல் 25 மணி நேரங்கள் பறந்து காட்டியிருக்கிறார். தொடந்து நீண்ட நேரம் பயணம் செய்தது, 2 மணி 20 நிமிடங்கள் பயணம் தடைப் பட்டதற்குப் பெரும்பான்மையான காரணம், எஞ்சினில் பெட்ரோல் தீர்ந்து போனதுதான், எஞ்சினும் சிறியது, பெட்ரோல் கலனும் சிறியது.
1909ல் அமெரிக்கா செப்பனிடப்பட்டு சீர் செய்யப்பட்ட முதல் யுத்த விமானத்தை ரைட் சகோதரர் உதவியில் தயார் செய்து உலகிலே முதன்மையானது. திருமணம் செய்து கொள்ளாமல், வாழ்நாள் முழுதும் விமானத்துறைப் படைப்புக்கே தங்களை அர்ப்பணித்த பிரம்மச்சாரி வில்பர் ரைட் 1912ல் ஒரு முறை தொழில்முறைப் பயணமாகப் போஸ்டன் சென்றிருந்த போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. டேய்டனுக்குத் திரும்பிய பிறகு டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். நோயின் தீவிரத்தால் தன்நினைவின்றி பல நாட்கள் இருந்தார். முதல் வெற்றிகரமான விமானத்தை உருவாக்கிய ஓர்வில் ஜனவரி 30, 1948ல் தனது 76வது அகவையில் டேட்டன், அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
You must be logged in to post a comment.