
கார்த்திகை தீபம் ஏற்றிய போது சேலையில் தீப்பிடித்து பெண் பலியானார்.மதுரை ஆரப்பாளையம் மறவர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் மனைவி தேவி 26 .இவர் சம்பவத்தன்று, கார்த்திகை தீபம் வீட்டின் முன்பு ஏற்றிக் கொண்டு இருந்தார். அப்போது சேலையில் தீப்பிடித்து தீயில் கருகினார்.ஆபத்தான நிலையில் அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனில்லாமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார் .இந்த சம்பவம் குறித்து, அவருடைய அம்மா பூமாதேவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்