மேல்பெண்ணாத்தூர் அரசு பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் நினைவு பரிசு வழங்கினார்.
மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அடுத்த மாதம் முடிவடையும் நிலையில் உள்ளது. இதையொட்டி எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் ஒன்றுதிரண்டு தங்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கும் நினைவு பரிசாக ட்ரம்ஸ் தலைமை ஆசிரியர் ஜெயந்தி அவர்களிடம் வழங்கினார்கள். நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் வேல்முருகன், தனலட்சுமி ,சங்கீதா, நாராயணன் ,அரசு, மகேஸ்வரி ,ராஜா, ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
You must be logged in to post a comment.