இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் – வைஷ்ணவி தம்பதியரின் இரண்டு வயது மகன் ஹஷ்வ பிரணவ் யோகா கலையில் மிகச் சிறப்பான முறையில் தன் திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இந்த சிறுவன் யோகா கலையில் மட்டுமின்றி அதீத ஞாபக சக்தியும் பெற்று விளங்குகிறான் இந்த சிறுவன். இதுவரை ஏராளமான மாவட்ட,மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைப் பெற்று வருகிறான். அதுமட்டுமின்றி,இந்த சிறு வயதிலேயே சில விருதுகளையும் பெற்றுள்ளான். முதன்முதலில் 2018 ல் முகவை ரெக்கார்ட்ஸ் மூலமாக அடையாளம் காணப்பட்டான்.தற்பொழுது கீழக்கரையில் அமைந்துள்ள பியர்ல் மாண்டிசோரி பள்ளியில் ப்ரி கே ஜி படித்து வருகிறார்.
வில் மெடல்ஸ் நிறுவனத்தில் தன்னுடைய திறமைகளுக்காக 2018 முதல் 2019 வரை வருடங்களில் முகவை ரெக்கார்ட்ஸ்,வில் மெடல்ஸ் ஸ்டேட் ரெக்கார்ட்ஸ்,வில் மெடல்ஸ் நேஷனல் ரெக்கார்ட்ஸ்,வில் மெடல் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் 12 முறை இடம் பெற்றுள்ளான். இரண்டு வருடங்களில் அதிகமான முறை நிறுவனத்தில் வியப்புக்குரிய குழந்தை எந்த காரணத்திற்காக சிறுவனாக ஷோபனாவிற்கு சார்பாக மேலும் அறிய அச்சீவர் என்ற விருது ஹலோ பயின்றுவரும் பிஆர் மாண்டிசோரி பள்ளி வளாகத்தில் வழிபாட்டுக் கூட்டத்தில் வழங்கப்பட்டது. அதற்கான சான்றிதழை சிறுவனுக்கு வில் மெடல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஷேக் முஹம்மது ரஷீத் வழங்கினார் .வில் மெடல் நிறுவனம் திறமையாளர்களை ஊக்குவிக்க எப்போதும் துணை நிற்கும் என ஷேக் முகமது ரஷீது தெரிவித்தார். சாதனையாளர் விருது பெற்ற சிறுவன் ஹஷ்வ ப்ரணவை மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் உட்பட பலர் பாராட்டினர்.
You must be logged in to post a comment.