Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது…

கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது…

by ஆசிரியர்

மதுரை பொன்மேனி சிட்டாலாட்சிநகரை சேர்ந்தவர் மணிகண்டன் வயது 42/19 என்பவர் பொன்மேனி பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது இரண்டு நபர்கள் அவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூபாய்.400/- பறித்து கொண்டு தப்பி விட்டனர்.

இது குறித்து மணிகண்டன் C3 எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்ததில் மதுரை மாநகர் பொன்மேனியைச் சேர்ந்த கார்த்திக் வயது 23/19 மற்றும் பழங்காநத்தம் நீதிநகரைச் சேர்ந்த ரகுராமன் வயது 23/19 ஆகிய இருவரும் மேற்படி குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே மேற்படி இருவரையும் கைது செய்து இன்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!