7
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியில் காட்டுத் தீ ஏற்படுவதைத் தடுக்க வனத்துறையினர் வாகன சோதனை செய்தனர். மேலும், வனப்பகுதியை காக்க வேண்டியதன் அவசியம், காடுகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ்களும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் தீ ஏற்படுவதைத் தடுக்க இரவு நேர கண்காணிப்பு பணியில் கூடுதலாக வன அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பழனி வனசரகர் கணேவஷ்ராம் கூறியுள்ளார்.
You must be logged in to post a comment.