Home செய்திகள் தண்ணீர் பழ வியாபாரியை கத்தியால் குத்திய மூவர் கைது…

தண்ணீர் பழ வியாபாரியை கத்தியால் குத்திய மூவர் கைது…

by ஆசிரியர்

மதுரை பொன்மேனி மெயின்ரோடு, காளிமுத்து நகரை சேர்ந்த சின்னவீரன் மகன் கார்த்திக் என்பவர் மதுரை டவுன் பைபாஸ் ரோடு பொன்மேனி சந்திப்பில் பழக்கடை நடத்திவந்தவரை நேற்று (02/03/2019) சொக்கலிங்க நகர் சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் சுகபிரகாஷ் 25/19, காளவாசல் சொக்கலிங்கநகரைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் செல்லப்பாண்டி 26/19 மற்றும் காளவாசல் சொக்கலிங்கநகரை சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகன் அசோக் 25/19 ஆகிய மூவரும் சேர்ந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

கார்த்திக் பணம் கொடுக்க மறுத்ததால் மூவரும் சேர்ந்து ஆயுதங்களால் தாக்கியும் அவரிடமிருந்த ரூ.800/- பறித்துக்கொண்டு ஓட்டிவிட்டதாக C3 எஸ்.எஸ். காலனி ச&ஒ. காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் திரு.ஆதீஸ்வரன் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து எதிரிகள் மூவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.

செய்தி வி. காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!