கீழக்கரையும் சுகாதாரமின்மையும் நகமும் சதையும் போல் பிரிக்க முடியாத ஒன்றாகி வருகிறது. எத்தனை களப் பணியாளர்கள் நியமித்தாலும், சுகாதாரம் என்பது கேள்வி குறியாகவே உள்ளது.
கீழக்கரையின் முக்கிய பகுதியான முஸ்லிம் பஜார் ரிஃபாய் தைக்கா கிட்டத்தட்ட சாக்கடையில் மூழ்கும் நிலையில் உள்ளது. எத்தனையோ தெருக்களுக்கு வலிய சென்று சுத்தம் செய்யும் நகராட்சி ஊழியர்கள், தேவையுடைய இந்த தெருவை கவனிப்பார்களா??
இதற்கு முக்கிய காரணம் அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான குப்பை கிடங்குதான் என்று அத்தெரு மக்கள் கூறுகிறார்கள். அந்த இடத்தின் உரிமையாளரிடம் பல முறை கூறியும் எந்த பலனும் இல்லை என்கிறார்கள் அத்தெருவாசிகள். நகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும்.
—————————————————-
You must be logged in to post a comment.