கீழக்கரை வடக்கத் தெரு முகைதீனியா பள்ளியில் உலகமகளிர் தின விழா இன்று (08-03-2017) கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில்முகைதீனியா பள்ளியின் கல்விக்குழு உபதலைவர் MMS. முகைதீன் இபுராஹீம் தலைமை உரையாற்றினார். அதைத்தொடர்ந்து பொருளாளர். சேகு பசீர் அகமது மற்றும் இணைச்செயலாளர். அஹமது மிர்சா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இவ்விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் வேதியல்துறைத் தலைவர். சோபி வரவேற்றார். பின்னர் பள்ளியின்முதல்வர் N.M. சேகு சஃபான் பாதுஷா மகளிர் மேன்மை பற்றியும, அலுவலக மேலாளர் மன்சூர்தீன் மகளிர்முன்னேற்றம் பற்றியும் சிறப்புரையாற்றினார்கள். அதை தொடர்ந்து பள்ளித் துணைத் தலைவர் தலைமையில் இன்றைய நிலையில் பெண்களின் முன்னேற்றம் போற்றதலுக்குரியதா..? போராட்டத்துக்குரியதா..? என்ற தலைப்பில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் மற்றும் கல்விக் குழு உறுப்பினர்கள், ஜமாஅத் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
You must be logged in to post a comment.