Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் பிரதான சாலை பணிகள் துவக்கம்.. வாகன ஓட்டிகளும் ,உரிமையாளர்களும் ஓத்துழைக்குமாறு ஒப்பந்ததாரர் வேண்டுகோள் ..

கீழக்கரையில் பிரதான சாலை பணிகள் துவக்கம்.. வாகன ஓட்டிகளும் ,உரிமையாளர்களும் ஓத்துழைக்குமாறு ஒப்பந்ததாரர் வேண்டுகோள் ..

by ஆசிரியர்
கீழக்கரை என்றாலே குண்டும் குழியுமான சாலை என்ற நினைவுதான் அனேகருக்கு நினைவில் வரும்.  ஆனால் கடந்த சில மாதங்களில் பல சாலைகள் செப்பனிடப்பட்டன, சில சீரமைக்கப்பட்ன.  ஆனால் பிரதான சாலையான வள்ளல் சீதக்காதி சாலை, அதாவது கீழக்கரையின் நுழைவு சாலையான முக்கு ரோடு முதல் கடற்கறைப் பகுதி வரை பல தடங்கல்களால் சாலைப் பணிகள் சீராக அமைக்கப் படாமலே இருந்து வந்தது.  கடந்த மாதம் கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு  கழகம் சார்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் நெடுஞ்சாலைகள் துறைக்கும் இச்சாலைகளின் நிலையை விவரித்து மனு அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று தேவகோட்டையைச் சார்ந்த நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் இன்று பணிகளைத் தொடங்கியுள்ளார்கள். மேலும் அவர்கள் கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு சில உதவிகளைக் கேட்டுள்ளார்கள். அதில் மிக முக்கியமானது சாலை ஓரங்களில் ஒழுங்கு இல்லாமல் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை சீர்படுத்தி தருமாறு கேட்டுள்ளார்கள்.  இது சம்பந்தமாக அதிகாரிகளிடமும் உதவி கோரப்பட்டுள்ளது.  மேலும் வாகன ஓட்டிகளும், உரிமையாளர்களும் இந்தப் பணி சிறப்பாக முழுமையடைய ஒத்துழைப்பு தருமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  மேலும் இன்னும் இரண்டு வாரங்களில் திருமண சீசன் கீழக்கரையில் ஆரம்பம் ஆக இருப்பதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!