33
தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு நல்நூலகர் விருது பெற்றுள்ள கடையம் நூலகர் மீனாட்சி சுந்தரம், நூலக வளர்ச்சிப் பணிக்காக இந்த ஆண்டு சிறந்த வாசகர் வட்ட விருது பெற்றுள்ள திப்பணம்பட்டி வாசகர் வட்ட தலைவர் ப. தங்கராஜ் ஆகியோரை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. ரவிச்சந்திரன் பாராட்டி நூலகம் மூலம் பொதுமக்களுக்கு அளப்பரிய சேவை செய்து வருவதற்கு வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம், நூலகர் பிரமநாயகம், சுந்தர் இளங்கோ, நூலகத்துறை பணியாளர்கள், கூட்டுறவு சிக்கன நாணய சங்க முன்னாள் தலைவர் கருப்பசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.