10
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் சிறப்புநிலை பேரூராட்சி, இங்கு 9 மற்றும் 10வதுவார்டுகளுக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதி பொதுமக்களுக்கு நீண்ட நாட்களாக ஆழ்குழாய் தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இதுசம்பந்தமாக இந்த பகுதி பொதுமக்கள் பேரூராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே இந்த பகுதி பொதுமக்களுக்கு ஆழ்குழாய் தண்ணீர் வினியோகத்தை வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் வழிகாட்டி இயக்கம் சார்பில் M.ஞானசேவியர் பொதுநலன் கருதி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.