Home செய்திகள் இராஜபாளையம் அருகே கட்டிட தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது..

இராஜபாளையம் அருகே கட்டிட தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது..

by Askar

இராஜபாளையம் அருகே தளவாய்புரம் மாஞ்சோலை காலனி பகுதியில் கட்டிட தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது.

விருதுநகர் மாவட்ட்ம் இராஜபாளையம் அருகே தளவாய்புரம் மாஞ்சோலை காலனி பகுதியில் இசக்கி முத்து என்பவர் மனைவி மற்றும் இரண்டு மகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இசக்கிமுத்து கட்டிட தொழில் வேலைக்கு சென்றவர் இரவு வரை வீடு திரும்பாத நிலையில் கடந்த 05.06.20 அன்று அருகிலிருந்த கண்மாய் பகுதியில் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய்புரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய நிலையில் முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த அதே பகுதியை சேர்ந்த எசக்கி(எ) கோட்டையன் மற்றும் அவரது நண்பர் அட்டகத்தி (எ) கணேசன் ஆகிய இருவரையும் தளவாய்புரம் காவல் நிலைய போலீசார் கைது செய்து விருதுநகர் சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!