வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மொத்தமாரிகுப்பத்தை சேர்ந்த விஜயகுமார். இவரின் மகன் வினித் (23) ஒசூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார்.புத்தாண்டு முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார்இதே கிராமத்தை சேர்ந்த அசோக் (41) இவரது மகன் ஆகாஷ் (20)இந்த பகுதியில் புத்தாண்டு அன்று 30 மேற்பட்டவர்கள் கேக் வெட்டி ஆட்டம் – பாட்டம் செய்து உள்ளனர். அப்போது ஆகாஷ் ஒரு பெண்ணை கிண்டல் செய்து உள்ளான். இதை வினித் தட்டு கேட்டு உள்ளான்.இதனால் ஆத்திரம் அடைந்த ஆகாஷ்தான் மறைத்து வைத்திருந்தகத்தியை எடுத்து வினித்தை மார்பில் குத்தி உள்ளான். ஆகாஷின் தந்தையும் வினித்தை சரமாரியாக தாக்கி உள்ளான்.உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து அசோக் மற்றும் அவரது மகன் ஆகாஷை கைது செய்தனர்.
49
You must be logged in to post a comment.