Home செய்திகள் வேலூர் மாவட்டத்தில் தொடரும் திமுக பிரமுகர்களின் அட்டகாசம்.வைரலில் சப் -இன்ஸ்பெக்டர் ஆடியோ

வேலூர் மாவட்டத்தில் தொடரும் திமுக பிரமுகர்களின் அட்டகாசம்.வைரலில் சப் -இன்ஸ்பெக்டர் ஆடியோ

by mohan

-வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வேப்பங் கும்பம் காவல்நிலையத்தில் உதவி-ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சீனிவாசன் (50).இவர் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில்தான் தற்கொலை செய்துகொள்வதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் பேசியதாவது:குட் ஈவ்னிங் சார், நான் வேப்பங்குப்பம் எஸ்.ஐ.சீனிவாசன் பேசுகிறேன்.டி.சி.குப்பத்தில் துளசி என்ற பெண் சுமார் ரூ 10 லட்சத்துக்கு சீட்டு பிடிக்கிறாங்க! தள்ளு போக எடுக்கிறாங்க, மீதி பணத்தை கேட்கிறாங்க, அதுக்கு ஆயிரத்து 8 காரணங்கள் சொல்லாறங்க, இதை இன்ஸ்பெக்டர் உலகநாதன் விசாரிக்கிறார். அவர் அதை சரியாக விசாரிக்கவில்லை.பணம் துளசியிடம் கேட்டபோது ஒருத்தரை ஒருத்தர் அடித்து கொள்கின்றனர்.துளசி அம்மா அடுக்கம்பாறை ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிறாங்க,நான் போய் அவரிடம் வாக்குமூலம் பெற்றேன்.அவங்க மீது வழக்குபதிவு செய்யலாம்னு பார்க்கும்போது டி.சி.குப்பத்தை சேர்ந்த திமுக பிரமுகர் மிஸ்டர் மணிமாறன், வழக்கு பதிவு செய்யக்கூடாது என்று என்னை டார்ச்சர் செய்கிறார். நான் திமுக பிரமுகர் வழக்குபதிவு செய்யக்கூடாது என்று மிரட்டுகிறார்.இந்த பக்கம் பாபு (வேலூர் மாவட்ட ஒன்றியக்குழு தலைவர் மு.பாபு (திமுக) இந்த பக்கம் கணபதி, திமுக பிரமுகர்களின் தொல்லை தாங்கமுடியவில்லை.அதனால் நான் தற்கொலை செய்யப்போகிறேன், மணல் திருடுறாங்க, போன் பண்ணி நான் பாபு பேசுகிறேன்.கணபதி பேசுகிறேன் அவங்களை விட்டுவிடுங்க என்று சொல்கிறார். நான் என்ன பண்ண முடியும்..மனஉளச்சல் ஜாஸ்தியாக உள்ளது, என்னால வாழ முடியல, நான் போயிடுகிறேன். ஒழுங்கா பணத்தை வாங்கி என் குடும்பத்திடம் கொடுத்திடுங்க! வணக்கம் என்று ஆடியோவில் பேசி வெளியிட்டு உள்ளார்.இதனை விசாரித்த வேலூர் எஸ்.பி.சீனிவாசனை வேப்பங்குப்பம் காவல்நிலையத்திலிருந்து வேலூர் வடக்கு காவல்நிலையத்திற்கு மாற்றி உள்ளார்.ஆனால் புகார் கூறியுள்ள திமுக பிரமுகர்கள் மீது வழக்கம்போல் போலீஸ் தரப்பில்எந்த நடவடிக்கையும் எடுக்க இல்லை.இதுதான் திமுக ஆட்சி என்று புலம்புகின்றனர் அதிமுகவினர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com